புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_m10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10 
306 Posts - 42%
heezulia
''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_m10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_m10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_m10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_m10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_m10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_m10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10 
6 Posts - 1%
prajai
''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_m10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_m10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10 
4 Posts - 1%
manikavi
''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_m10''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat May 07, 2011 8:29 am

விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும்
விமர்சனங்கள் உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்,
பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், எஞ்சி இருக்கும் நம்பிக்கையாக இவரைத்தான்
இலங்கைத் தமிழர்கள் பார்க்கிறார்கள்.

இலங்கை அரசு எப்படியாவது
இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத்
துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான
உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களில் கில்லாடி.
நியூயார்க்கில் இருந்தபடியே தன்னுடைய அமைப்பை இயக்குகிறார்.

முள்ளிவாய்க்கால்
பேரழிவின் இரண்டாம் ஆண்டு நிறைவு, இலங்கை இறுதிப் போர் தொடர்பான ஐ.நா
சபையின் அறிக்கை, உலகிலேயே இனப் படுகொலைகள் அதிகம் நடந்த சூடானில் இப்போது
நடந்திருக்கும் பிரிவினை ஆகியவற்றின் பின்னணியில் உருத்திரகுமாரன், ஆனந்த
விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

''முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இந்த இரு ஆண்டுகளில் தமிழினம் கற்றுக்கொண்டு இருப்பது என்ன? கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?''

''முள்ளிவாய்க்காலுக்குப்
பிந்தைய கடந்த இரு ஆண்டு களில், அனைத்துலக அரசுகளின் நலன்களையும் தமிழர்
நலன்களையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கவைக்க வேண்டிய அவசியத்தை நாம்
மேலும் உணர்ந்து இருக்கிறோம். சுயநலன்களின் அடிப்படையில், தமது புவிசார்
அரசியல் தளத்தில் இயங்கும் உலக அரசுகளிடம், நீதியையும் நியாயத்தையும்
அறத்தின் அடிப்படையில் மட்டுமே எதிர்பார்க்க முடியாது என்பது யதார்த்தம்.
இந்த நிலையில், நாடு கடந்த சமூகமாக வாழும் தமிழர்களாகிய நாம், கீழிருந்து
மேல் எழும் சக்தியாக மிளிர்ந்து, நீதியின்பால் பற்றுகொண்ட உலக மக்கள்
சமூகத்தின் உதவியுடன் நமது விடுதலையை வென்றெடுக்கும் வாய்ப்பு களை மேலும்
துல்லியமாகக் கண்டறிந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்!''

''இறுதிப் போர் தொடர்பான ஐ.நா குழுவின் அறிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?''

''இந்த
அறிக்கை அனைத்துலகச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும். கொடூரமான முறையில்
நடத்தப் பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக மட்ட விசாரணைதேவை
என்ற குரலை மேலும் வலுவடையச் செய்யும். நீதியை மதிக்கக்கூடிய உலகச்
சமூகத்தின் மத்தியில், களங்கப்பட்ட அரசாக சிறீலங்கா அரசு கூனிக் குறுகும்
நிலையைத் தோற்றுவிக்கும். இலங்கைத் தீவில் இன்னும் ஒரு முறை இனப் படுகொலை
நடக்காமல் இருப்ப தற்கான மாற்று வழி கருத்துப் பரி மாற்றத்தை சர்வதேச
சமுதாயத்தில் ஏற்படுத்தும். தென் சூடான்,கொசாவோ, கிழக்கு திமோர் ஆகிய
நாடுகள் தொடர்பாக எடுத்திருக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில், இலங்கைத்
தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு சுதந்திரத் தனி நாடே அவசியம்
என்ற முடிவை சர்வதேச சமுதாயம் எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அதே
சமயம், இந்த அறிக்கை ஒரு வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வியையும்
வெளிப்படுத்துவதாகக் கருதுகிறோம். இது ஐ.நா சபையின் மறுசீரமைப்பு குறித்த
விவாதங்களைத் தோற்றுவிக்கலாம். இத்தகைய மறுசீரமைப்பு, ஐ.நா சபையை நீதியின்
ஆலயமாக மாற்ற வேண்டுமே தவிர, அதிகார அரசியலின் பலிபீடமாகத் தொடர வழி
செய்யக் கூடாது!

போரின் இறுதிக் காலகட்ட இன அழிப்பின்போது
கொல்லப்பட்ட 80,000-க்கும் மேற்பட்ட நமது மக்களுக்கு நீதி கிடைக்கும் நாள்
விரைவில் வந்தடைய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்!''

''தமிழ்
மக்களை மனிதக் கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக அறிக்கையில்
குறிப்பிடப்பட்டு இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?''


''ஈழத்
தமிழ் மக்களை ஆக்கிரமிப்புக்கும், படுகொலைகளுக்கும், பாலியல்
கொடுமைகளுக்கும், கொடூரமான வாழ்க்கைச் சூழலுக்கும் உள்ளாக்கியது யார்
என்பதை நமது மக்கள் நன்கு அறிவார்கள். அனைத்துலக விசாரணைகள் இதனை
உறுதிப்படுத்தும்!''

''இறுதிப் போரின்போது தமிழகத்தில் வைகோ,
நெடுமாறன் போன்றோரின் தவறான வழிநடத்தலால் தான், புலிகள் தலைமையைக்
காப்பாற்ற முடியாமல் போனதாகச் சொல்லப்படுவதுபற்றி..?''

''தமிழீழ
விடுதலைப் போராட்டத்தின் மீதும் தேசியத் தலைமையின் மீதும் நெடுமாறன் ஐயா
மற்றும் வைகோ அண்ணனுக்கு இருக் கும் விசுவாசம் குறித்து நாம் அப்பழுக்கற்ற
நம்பிக்கை கொண்டு இருக்கிறோம்!''

''இப்போதைய சூழலில் தமிழகத் தமிழர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?''

''ஈழத்
தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்னைக்கு, தமிழீழத் தனியரசே தீர்வாக அமைய
முடியும். இதை வலியுறுத்தியும், தமிழீழத் தனிஅரசை அங்கீகரித்தும்,
தமிழகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபையில் தீர்மானம் ஒன்றை
நிறைவேற்றச் செய்ய வேண்டும்.

சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்களை
சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு
வழங்குமாறு இந்திய அரசை வலியுறுத்தும் வகையில், தமிழக சட்டசபையில்
தீர்மானம் நிறைவேற்றச் செய்ய வேண்டும்.

சுதந்திரத் தமிழீழ அரசை
அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக மக்களின் சார்பில், இந்திய
அரசிடம் முன்வைத்து அதை வென்றெடுக்க வேண்டும்.

தமிழகத்தில்
அகதிகளாகத் தஞ்சம் அடைந்துஉள்ள ஈழத் தமிழ் மக்களின் கௌரவமான, பாதுகாப்பான
வாழ்வை உறுதிப்படுத்தப்படுவதுடன், இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம்
அடைந்துள்ள திபெத் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும், ஈழத்
தமிழ் மக்களுக்கும் வழங்கப் படுவதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழீழ
விடுதலைப் போராட்டத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி, இந்தியச்
சிறைக் கூடங்களிலும் சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும்
தமிழர்களை மனிதாபி மான அடிப்படையில் விடுவிக்க, மாநில, மத்திய அரசுகளைத்
தூண்ட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்டு உள்ள ஈழத் தமிழ் மக்களின்
வாழ்க்கை மீளக் கட்டியெழுப்பத் தேவையான உதவிகள், நம் மக்களை நேரடியாகச்
சென்று அடைவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசின் ஊடாகவும், மற்றும் ஏனைய
அனைத்துலக நிறுவனங்கள் ஊடாகவும் முன்னெடுக்க வேண்டும்.

இவையே எமது எதிர்பார்ப்புகள்!''

''பிரபாகரன் - பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றனரா?''

- தொடரும்...

நன்றி : ஆனந்த விகடன் ''உலகின் மனசாட்சியை உலுக்கட்டும்!'' - தமிழீழ அரச தலைவரின் உருக்கமான பேட்டி 1772578765

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக