புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_m10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10 
64 Posts - 50%
heezulia
திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_m10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_m10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_m10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_m10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_m10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_m10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_m10திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 2:31 pm

சென்னை: திமுகவின் அசகாய சூர வியூகங்கள், கூட்டணி அமைத்த விதம், வலுவான வாக்கு வங்கிகளை வைத்திருந்த பாமக உள்ளிட்டவற்றின் துணை ஆகியவற்றையும் தாண்டி அதிமுக அபாரமாக வெற்றி பெற்றிருப்பது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

திமுகவின் தோல்விக்குப் பல காரணங்கள் இருப்பது போல அதிமுகவின் வெற்றிக்கும் நிறைய காரணங்களைச் சொல்ல முடியும்.

விஜயகாந்த் வருகை:

விஜயகாந்த்தின் தேமுதிகவை தனது கூட்டணிக்குள் ஜெயலலிதா இழுத்ததே அவருக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

கட்சி ஆரம்பித்தது முதலே அதிமுகவின் வாக்கு வங்கியைத்தான் தொடர்ந்து அரித்துக் கரைத்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். இதை ஆரம்பத்தில் ஜெயலலிதா சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சோ உள்ளிட்டவர்கள் தொடர்ந்து இதை எடுத்துக் கூறி, விஜயகாந்ததுடன் கூட்டணி சேருவதே அதிமுகவுக்கு நல்லது என்று எடுத்துக் கூறினர்.

இதையடுத்தே அதிமுக கூட்டணிக்குள் விஜயகாந்த்தை இழுத்தார் ஜெயலலிதா. இன்று அதை அறுவடை செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:

முதல்வர் கருணாநிதி குடும்பத்தினருக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்த பங்குகளை மிகப் பெரிய அளவில் அம்பலப்படுத்தி, அதை தொடர்ந்து மக்கள் மனதில் பதிய வைக்கும் முயற்சியில் ஜெயலலிதாவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள், படித்தவர்கள், முற்பட்ட வகுப்பினர் மத்தியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் திமுக மீது மிகப் பெரிய அதிருப்தியும், ஆவேசமும், கோபமும் கிளம்பியது. இந்த வாக்குகள் எல்லாம் அப்படியே அதிமுகவுக்கு ஆதரவாக திரும்பி விட்டன.

கருணாநிதி குடும்ப ஆதிக்கம்:

கருணாநிதி குடும்பத்தினர் ஆட்சியிலும், சினிமாத் துறையிலும் செய்து வந்த ஆதிக்கத்தை மிகப் பெரிய அளவில் விளக்கி, அதை பிரசார விஷயமாக ஜெயலலிதா மாற்றியது அவருக்கு உதவியுள்ளது.

பிரசார வியூகம்:

கடைசி நேரத்தில் வடிவேலுவை வைத்து திமுக வித்தை காட்ட முயன்றபோதும் அந்த திசை திருப்பும் வலையில் சிக்கிக் கொள்ளாமல், திமுக அரசின் தவறுகளையும், திமுக அரசால் மக்கள் பாதிக்கப்பட்ட விதத்தையும் தொடர்ந்து அழுத்தம் திருத்தமாக பிரசாரத்தின்போது ஜெயலலிதா கூறி வந்தது அதிமுகவின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மணல் கொள்ளை, திமுகவினரின் கட்டப் பஞ்சாயத்து ரவுடியிசம், போலீஸார் துணையோடு திமுகவினர் நடத்தி வரும் சமூக விரோத செயல்கள், திரைத் துறையினரை மிரட்டி அழிப்பது என்பது போன்றவற்றை அவர் தொடர்ந்து பிரசாரத்தின்போது எடுத்து வைத்தது மக்களிடையே போய்ச் சேர்ந்துள்ளது.

சீமான் -விஜய்:

ஈழத் தமிழர் பிரச்சினையில் பெரும் அதிருப்தியுடன் இருந்து வந்த தமிழ் உணர்வாளர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஜெயலலிதா திருப்பியதும் அவருக்கு உதவியாக அமைந்தது.

குறிப்பாக சீமான் செய்த பிரசாரத்தால் காங்கிரஸ் கட்சி அடியோடு காலியாகிப் போயுள்ளது. இதைத்தான் ஜெயலலிதாவும் எதிர்பார்த்தார்.

அதேபோல திமுகவினரிடம் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட நடிகர் விஜய்யை இழுத்ததன் மூலம் அவரது ரசிகர்களின் வாக்குகளை அதிமுக பெற்று பலம் அடைந்துள்ளது.

தேர்தல் அறிக்கை:

இதை விட இன்னொரு முக்கியக் காரணம் உள்ளது. அது அதிமுகவின் தேர்தல் அறிக்கை. திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை பெரும் பரபரப்பாக, ஆச்சரியமாக பேசப்பட்டாலும் கூட மிக்சி, கிரைண்டருடன், பேனும் இலவசம் என்று அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஏழை மக்களை திமுகவிடமிருந்து இழுத்துக் கொண்டு வந்துவிட்டது.

குறிப்பாக பெண்கள் மத்தியில், அதிமுகவின் தேர்தல் அறிக்கைதான் பெரிதாக பேசப்பட்டது.

பணம்

மேலும் இன்னொரு முக்கிய விஷயமாக இந்த முறை திமுகவுக்கு கடும் போட்டியைத் தரும் வகையில் அதிமுக தரப்பிலும் பெருமளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவும் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்காளர்கள் திரும்ப ஒரு முக்கியக் காரணம்.

மக்களின் அமைதிப் புரட்சி!

அதேசமயம், திமுக அரசின் மீதான ஒட்டுமொத்த அதிருப்தியையும் மிக மிக அமைதியாக, வெளிக்காட்டி அமைதிப் புரட்சியை தமிழக மக்கள் நிகழ்த்தியுள்ளனர் என்றே கூற வேண்டும். காரணம், தேர்தல் முடிவு வெளியாகும் வரை அதிமுக ஆதரவாக பெரிய அளவில் எந்த அறிகுறியையும் காண முடியாமல் போனதால், திடீரென வந்துள்ள இந்த மிகப் பெரிய வெற்றி அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

தட்ஸ்தமிழ்!



திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 13, 2011 2:57 pm

அண்ணா ஒருமுறை கூட்டத்தில் பேசும்போது நான் முன்னுரை எழுதுகிறேன். பின்னால்
என் தம்பி வந்து முடிவுரை எழுதுவான் என்று பேசினார். கலைஞர் குடும்பத்தோடு
(தயாளு அம்மாள் உட்பட) சேர்ந்து முடிவுரை எழுதியுள்ளார். திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? 440806



திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Aதிமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Aதிமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Tதிமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Hதிமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Iதிமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Rதிமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Aதிமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri May 13, 2011 2:59 pm

Aathira wrote:அண்ணா ஒருமுறை கூட்டத்தில் பேசும்போது நான் முன்னுரை எழுதுகிறேன். பின்னால்
என் தம்பி வந்து முடிவுரை எழுதுவான் என்று பேசினார். கலைஞர் குடும்பத்தோடு
(தயாளு அம்மாள் உட்பட) சேர்ந்து முடிவுரை எழுதியுள்ளார். திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? 440806

சூப்பருங்க



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 13, 2011 3:03 pm

சூப்பருங்க அக்கா சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri May 13, 2011 3:06 pm

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி


திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? E973cb2ab862ea9c943ad74fe7f858b7

மே13' நிகழ இருப்பது
ஆண்டவன் கட்டளை..
ஈழத்து வேதனையின்
ஏக்க விளைச்சல்.
கோபப்படாமல் ஐயா
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

வெளியில் நீங்கள் வேசமிட்டு
நாடகம் ஆடினாலும்
உங்கள் கள்ளமான
உள்ளுணர்வில்
இப்படித்தான் நடக்கும் என்று
கருக்கட்டி
ஊற்றெடுத்த உண்மை
உத்தியோக பூர்வமாக
பிரசவமாகப்போகும் பொழுது.

காலதேவன் உங்களுக்கு
கட்டை இறுக்கப்போகும்
கனிவான கடைசி நாள்.

சங்கடங்கள் நிறைந்த சகதிக்குள்
இப்போதே நீங்கள் தத்தளிப்பது
தெரிகிறது
இருந்தும்
இது சிறிய ஆரம்பம் மட்டுமே.
தொடர இருப்பது பெருங்கதை
.
நவீன நரசிம்மர் உங்களுக்கு
இனி நிரந்தர ஆட்சி விடுமுறை
ஆனாலும் நீங்கள்
தொடர்ந்து அரச விருந்தினர்
அதற்கான மூலங்கள்
உங்களை சுற்றி படர்ந்து விட்டன.



இதன் பின்னும்
நச்சு பாஷாணமான
உங்கள் நாக்கு
நிச்சியம் உறங்க மறுக்கலாம்
என்ன செய்ய
உங்கள் குடும்பத்தலைவிகள்
குஞ்சம்மா பொன்னம்மா தவிர
கேட்பதற்கு இனி எவரும் வரப்போவதில்லை.

எச்சில் சிதற நீங்கள் எடுத்துவிட்ட
பத்தடுக்கு பொய் எல்லாம்
திரும்பி நின்று கும்மியடிக்கப்போகும்
கோரப் பொழுது.
இப்பொழுதே பத்திரிகைகள்மேல்
நீங்கள் எரிந்து விழுவது
சிரிப்பூட்டுகிறது.

அரை நாள் உண்ணாவிரதம்
அபத்தம் என்று
நீங்களே உணர்ந்துகொண்டதால்
இனி காற்றாடக்கூட
கடற்கரைக்கு போகமுடியாது.
சில நேரம்
கம்பி எண்ணவேண்டிய காலம்.

வெட்கமாக இருக்கிறதா
உதவிக்கு ஒத்தூதிய குஞ்சாமணியும்
குதிப்பேன் நிமிர்வேன் என்று
கோசமிட்ட தருமர்களும்
செத்த மாட்டின் உண்ணிபோல
மெல்ல விட்டகலப்போகும்
விகாரப்பொழுது.

இதே மே மாதம்
இரண்டாயிரத்து ஒன்பது
பதின் மூன்றளவில்.
ஒரு அதிகாலைப் பொழுது
ஆறு நாட்கள் அன்ன ஆகாரம்
இல்லாமல் கிடந்த
என் அன்னையையும்
இரண்டு தங்கைகளையும்
உன் அன்னை சூனியாவின்
எரி குண்டுக்கு இரையாக்கிய தினம்.

திகதி என்னவென்று தெரியாத
திகிலடைந்த பொழுதுகள்.

குடிநீர் இல்லாத கோடை வெய்யில்.
நடுநிசியிலும் குண்டுமழை.
உப்புக்கடற்கரையில்
பதுங்கு குழிக்குள் பனித்த
உவர்ப்பு நீர்கூட
இரத்தமும் மலமும் கலந்த கலவையாக.

ஆறு பொழுதுகள்
அந்த உப்பு நீரே உணவாகி
கோரக்குண்டில் சிதறி
என் தாயும் சகோதரிகளும்
செத்து மடிந்ததை அறிவீரோ?

காலை ஒரு கண்மணியிடம்
கோப்பியும் இட்லியும்
மாலை ஒரு மங்கையிடம்
மணக்கும் புறியாணி
செமியாக்குணம் போக்க
சுற்றி கதை அளந்து சிரிப்பூட்டும்
ஒரு செலுக் கூட்டம்.

நல்லெண்ணெய் தோசை
நாட்டுக்கோழி சூப்பு
பல்லிடுக்கில் தங்கிவிடா
மெல்லிய மீன் பொரியல்
சில்லென்று பருகிவிட
சிறப்பான மினரல் நீர்
பாலும் பழமும்
படுத்தவுடன் பெருத்த குசு.

இப்படியா ஐயா எங்கள் வாழ்வு
எரிகுண்டை எதிர்கொண்டு
இழவுகளை மடிதாங்கி
பட்டினியில் பாய்விரித்து
செத்து மடிந்த கதை
சத்தியமாய் அறியீரோ

நல்லதோர் வீணை செய்து-அதன்
நலன் கெடுத்து புழுதியில்
எறிந்தீர் கண்டோம்-நிச்சியம்
பதில் சொல்லுவாள் சிவசக்தி
சூத்திரம் என்னென்று
காண்பீர் என்பேன்,

பொல்லா எம் வாழ்வு-ஒரு
பொறியளவு புரிந்தீரோ-அதன்
வல்லமை காண்பீர் காண்
வரும் பொழுதுகளில்.

நல்லவை எல்லாம் போக
நடைப்பிணமாக நீர்-வண்டியில்
தள்ளிட ஆளில்லாமல்
தவித்திட நேரும் சொல்வேன்
சத்தியம் இதுவே யென்பேன்
சாவிலும் சபித்தே நிற்போம்.

உன் வாழ்வினில் குறுக்கே நாங்கள்
வந் திடர் செய்ததுண்டோ
ஏனென்று கேட்டு யாரும்
இன்னலை தந்ததுண்டோ
மூவிரு மணம் புரிந்தீர்
முலைப்பாலை மருந்தாய் கொண்டீர்
கோடியில் ஊழல் கண்டீர்
குடும்பமே கழகம் என்றீர்
மானுடம் காணா பொய்யும்
மலைபோல நஞ்சும் தாங்கி
போராடி களத்தில் நின்ற-என்
பிறப்பையே அழித்தாய் நேற்று.

எங்களை கொன்றொழித்தீர்
இனமானம் காக்க வெந்த-முத்து
குமரனையும் லூசன் என்றீர்
தீ சுட்ட வேதனையால்
சினங்கொண்ட சீமான் தன்னை
வல் வினை சாட்டி பொல்லா
செல்லினில் அடைத்தீர் கண்டோம்.

பதவியை விட்டுச்சென்று-நீ
பாடையில் போனாலும் காண்-என்
தாயவள் வயிற்றெரிவும்
தங்கையர் ஏம்பலிப்பும்
கூடவே எரிந்து மாண்ட
குழந்தைகள் விடலை பெண்கள்
காவலாய் நின்று காத்து
காவியமாகிப்போன
வீரரின் அழிவில் எல்லாம்
வினையாகிப் போனீர் ஐயா.

நாசமாய் போவீர் என்று
நான் மட்டும் சொல்லவில்லை.
ஊரெல்லாம் சொல்லக்கண்டேன்
உலகமே திட்ட கண்டேன்.

இனி எம்மிலும் கீழாய் உம்மை-நீர்
உணர்ந்திடும் நாளை காண்பீர்.
நல்லவை எல்லாம் உன்னை
நாடிடா தென்பேன் கொள்வீர்.
புத்திர சோகம் கொண்டு
புண்பட்ட எம்மைப் போலே
சத்தியமாக நீரும்
தண்டனை கொள்ள வேண்டும்
நிச்சியம் நடக்கும் நாளை
நிமிர்ந்து நாம் ஈழம் காண்போம்.......... ..

நன்றி சவுக்கு



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 13, 2011 3:57 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri May 13, 2011 4:02 pm

பொதுவாக ஒரு கட்சி ஆட்சி நடத்துகிற 5 ஆண்டு காலத்தில் முதல் இரண்டு அல்லது மூன்றாண்டு அந்த கட்சி என்ன செய்தது என்பது மக்கள் மனதில் இருக்குமா என்பது சந்தேகம் ஆனால் கடைசி இரண்டு குறிப்பாக கடைசி வருடம் என்ன செய்தது என்பதுதான் மக்கள் மனதில் நிற்கும் அந்தவகையில் திமுக வின் கடைசி நேரத்தில், அந்த கட்சி இலங்கை பிரச்சனையில் நடந்து கொண்ட விதம், ஊழல், தனது சொந்த மக்களுக்காக அவர் டெல்லி வரை சென்று போராடியது, அதேவேளையில் இலங்கை விஷயத்தில் அமைதியாக இருந்தது, எல்லா இடங்களிலும் அவரின் குடும்ப ஆதிக்கம் என்பது போன்ற விஷயங்களில் மக்களை முகம் சுளிக்க வைத்தது, குறிப்பாக படித்த, அன்றாட நிகழ்வுகளை பார்க்கிற மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால்தான் இந்த அதிர்ச்சி தோல்வி என்பது என் கருத்து

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri May 13, 2011 5:57 pm

kitcha wrote:பொதுவாக ஒரு கட்சி ஆட்சி நடத்துகிற 5 ஆண்டு காலத்தில் முதல் இரண்டு அல்லது மூன்றாண்டு அந்த கட்சி என்ன செய்தது என்பது மக்கள் மனதில் இருக்குமா என்பது சந்தேகம் ஆனால் கடைசி இரண்டு குறிப்பாக கடைசி வருடம் என்ன செய்தது என்பதுதான் மக்கள் மனதில் நிற்கும் அந்தவகையில் திமுக வின் கடைசி நேரத்தில், அந்த கட்சி இலங்கை பிரச்சனையில் நடந்து கொண்ட விதம், ஊழல், தனது சொந்த மக்களுக்காக அவர் டெல்லி வரை சென்று போராடியது, அதேவேளையில் இலங்கை விஷயத்தில் அமைதியாக இருந்தது, எல்லா இடங்களிலும் அவரின் குடும்ப ஆதிக்கம் என்பது போன்ற விஷயங்களில் மக்களை முகம் சுளிக்க வைத்தது, குறிப்பாக படித்த, அன்றாட நிகழ்வுகளை பார்க்கிற மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால்தான் இந்த அதிர்ச்சி தோல்வி என்பது என் கருத்து

சரியாக சொன்னீங்க நண்பா!!!!

சுகுமார்
சுகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Postசுகுமார் Fri May 13, 2011 6:02 pm

positivekarthick wrote:
kitcha wrote:பொதுவாக ஒரு கட்சி ஆட்சி நடத்துகிற 5 ஆண்டு காலத்தில் முதல் இரண்டு அல்லது மூன்றாண்டு அந்த கட்சி என்ன செய்தது என்பது மக்கள் மனதில் இருக்குமா என்பது சந்தேகம் ஆனால் கடைசி இரண்டு குறிப்பாக கடைசி வருடம் என்ன செய்தது என்பதுதான் மக்கள் மனதில் நிற்கும் அந்தவகையில் திமுக வின் கடைசி நேரத்தில், அந்த கட்சி இலங்கை பிரச்சனையில் நடந்து கொண்ட விதம், ஊழல், தனது சொந்த மக்களுக்காக அவர் டெல்லி வரை சென்று போராடியது, அதேவேளையில் இலங்கை விஷயத்தில் அமைதியாக இருந்தது, எல்லா இடங்களிலும் அவரின் குடும்ப ஆதிக்கம் என்பது போன்ற விஷயங்களில் மக்களை முகம் சுளிக்க வைத்தது, குறிப்பாக படித்த, அன்றாட நிகழ்வுகளை பார்க்கிற மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால்தான் இந்த அதிர்ச்சி தோல்வி என்பது என் கருத்து
திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? 678642 திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? 678642 திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? 359383 திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக? 359383

சரியாக சொன்னீங்க நண்பா!!!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 13, 2011 7:17 pm

கறாராக சிறப்பாகவும் அமைதியாகவும் நடத்தி காட்டிய தேர்தல் ஆணையம் மதிப்பு பல கோடி உயர்ந்து விட்டது.

ரமணீயன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக