புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
68 Posts - 49%
heezulia
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
5 Posts - 4%
prajai
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
4 Posts - 3%
Jenila
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
2 Posts - 1%
jairam
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
2 Posts - 1%
kargan86
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
9 Posts - 5%
prajai
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
6 Posts - 3%
Jenila
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
4 Posts - 2%
Rutu
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
2 Posts - 1%
jairam
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
2 Posts - 1%
manikavi
மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_m10மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 24, 2011 5:37 pm



காதெல்லாம் இனிக்கும் உங்கள் கரவொலிக்கு மகிழ்ச்சி
தன்னை நோக்கி வீசப்படும் வெள்ளிக் காசுகளைவிட
கரவோசையைத்தான் ஒரு கவிஞன் நேசிப்பான்
கரசேவை செய்ய வந்தவர்களே......., மகிழ்ச்சி!
கல் இல்லாத கரசேவை கவியரங்கில் மட்டும்தான்

நீங்கள், இவர்கள், நான், நாம் எல்லாம் மகிழப்பிறந்தவர்கள்
நிலவின் ஒளியை குடிக்கப் பிறந்தவர்கள்
நீலவான் வெளியை இழுக்கப் பிறந்தவர்கள்
பூமியை வியந்து புகழப் பிறந்தவர்கள்
மரிக்கும் வரைக்கும் மகிழப் பிறந்தவர்கள் - காரணம்
ஓர் ஆணின், பெண்ணின் மகிழ்ச்சியில் பிறந்தவர்கள்

கனி உண்ண வந்த பறவைகள் நாம் - வெறும்
மரம்கொத்தி கொத்தியா மரித்துப்போவது
இந்தப் பூமியென்ன மண்ணின் திரடசியா
மகிழ்ச்சியின் திரட்சி
மகிழ்ச்சி இல்லையேல் அலைகள் கொண்டு
ஜலதரங்கம் பாடுமா கடல்
இடிகள் கொண்டு தம்பட்டம் தட்டுமா வானம்
வீட்டுக்குத் திரும்பிவருமா வெளியூர் போன காற்று

உதிர்ந்து உதிர்ந்து இலைகள் உதிர்ந்து
நலிந்து நலிந்து வெயிலில் நலிந்து
மெலிந்து மெலிந்து கிளைகள் மெலிந்து
அளந்து அளந்து கொழுந்து எழுந்து
வளர்ந்து வளர்ந்து அரும்பு வளர்ந்து
மலர்ந்து மலர்ந்து மடல்கள் மலர்ந்து
சித்திரை மாதம் தாவர வர்க்கம்
முத்திரை காட்டி முகிழ்ப்பது எல்லாம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஐந்தே புலன்கள் ஆயினும் என்ன
ஒவ்வொர் புலனின் வாசல் வழியே
ஆயிரம் லட்சம் கோடி மகிழ்ச்சி
பூமியைச் சுற்றும் கடலைப் போல
சுற்றிச் சுற்றிச் சுற்றி மகிழ்ச்சி
அதை அறிந்துகொண்டவன் ஞானியாகிறான்
அனுபவிப்பவன் கலைஞன் ஆகின்றான்

கண்ணுக்கு மகிழ்ச்சி எது?
விடிகாலைச் சோலை..? இல்லை
வெற்றிலை போட்ட வானம்..? இல்லை
தூங்கும் குழந்தையின் தூங்காத புன்னகை..? 'ஊகும்";
கண்ணுக்கு மகிழ்ச்சி.. .. ஆனந்தக் கண்ணீர்

காதுக்கு மகிழ்ச்சி எது?
மழைபாடும் சங்கீதம்..? இல்லை
மைத்துனியின் கொலுசோசை..? இல்லை
காதுக்கு மகிழ்ச்சி.. .. வேலைக்குச் சென்று
வீடுவந்து அமர்கையில் மடிமீதேறி
குழந்தைபேசும் மழலைத் தமிழ்

வாய்க்கு மகிழ்ச்சி எது?
புதுமனைவியின் முதல் சமையல்..? இல்லை
முதல் காப்பியின் இளம் கசப்பு..? இல்லை
முரட்டு இருட்டில் திருட்டு முத்தம்..? இல்லை
வாய்க்கு மகிழ்ச்சி.. ..தப்பின்றி உச்சரிக்கும் தாய்மொழி

உடலுக்கு மகிழ்ச்சி தகிக்கும் காய்ச்சலில் தாயின் ஸ்பரிசம்
நாசிக்கு மகிழ்ச்சி நேசிக்கும் பெண்ணின் குழல்கொண்ட பூக்கள்
மண்ணுக்கு மகிழ்ச்சி மழையூட்டும் வாசம்
பெண்ணுக்கு மகிழ்ச்சி மதிக்கின்ற நேசம்
வார்த்தைக்கு மகிழ்ச்சி காலத்தால் உதிராத கவிதைக்குள் நிற்பது
வாஜ்பாய்க்கு மகிழ்ச்சி.. ..?
சாதுக்கள் எப்போதும் சாதுவாய் இருப்பது..!

மகிழ்ச்சி என்பது வேறொன்றும் இல்லை.. மனசின் கொள்ளளவு..!
மழைகொண்டு வருகிறது சமதர்ம மேகம்
குவளையில் பிடித்தால் ஒருவேளை மகிழ்ச்சி
குடத்தில் பிடித்தால் ஒருநாள் மகிழ்ச்சி
குளத்தில் பிடித்தால்.. வருடமெல்லாம் மகிழ்ச்சி
எது உன் மனசு..?
குவளையா? குடமா? குளமா? இல்லை.. குழப்பமா..?

குழந்தைபோல் மனம் இருந்தால் குழப்பமே இல்லை
உன்னை சண்டையிட்டு, மண்டியிட்டு கேட்கிறேன் காலமே...
உன் எலும்புகளுக்கும், திசுக்களுக்கும் வயசாகட்டும்
மனசுமட்டும் எப்போதும் குழந்தையாய் இருக்கட்டும்..!

குழந்தையாய் இருப்பது எத்தனை வசதி
கூப்பிட்ட குரலுக்கு நிலா வரலாம்
பல் இல்லாத வாயில் நட்சத்திரம் மெல்லலாம்
தொட்டிலில் கிடந்தாலும் தொட்டியில் கிடந்தாலும்
அழுகை கேட்டதும் ஆள் ஓடி வரலாம்
தனக்கு வந்த காதல் கடிதங்களில் கூட
தப்புக்களை மன்னிக்காத தமிழாசிரியர்
மன்னித்து மகிழ்வது மழலையிடம் மட்டும்தான்..

ஒரு சந்தேகம் எனக்கு.. ..!
குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றார் - ஒன்றா..?
இன்று உள்ள சூழலில் ஒப்பிடுதல் நன்றா..?
குழந்தைகள் மணல் வீடு கட்டியதுண்டே தவிர
சர்ச்சைக்குரிய இடத்தில் மதவீடு கட்டியதுண்டா?
கருத்துச் சுளை போன்ற குழந்தையொன்றை நிறுத்திக் கேட்டேன்
உன் மதம் என்ன குழந்தாய்..? தெரியாது
உன் ஜாதி ஏதும் சொல்லாய் பிள்ளாய்? தெரியலையே..
தப்புத்தப்பாய் பேசும்போது சரியாய் பேசிய மனிதன்
சரியாய் பேச தெரிந்த பிறகு தப்புத்தப்பாய் பேசுகிறான்
பிறை நிலாவுக்கு கறையில்லை எல்லாம் வளர்ந்த பிறகுதான்
குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை எல்லாம் நிமிர்ந்த பிறகுதான்

அறிவூட்டும் ஆசான்களே.. ..
குழந்தைகளை குழந்தைகளாய் இருக்கவிடுங்கள்
வந்தவன் போனவன் வைக்கோல் திணிக்க
பிள்ளையின் மூளையென்ன.. முச்சந்தித் தொட்டியா..?
பட்டாம்பூச்சி பிடிக்கவிடாத பாடத்திட்டம் எதற்கு?
பணக்கார மணமகளாய் இருக்கலாம்
முத்தமிட இடமில்லாமல் மொத்த நகை எதற்கு?
கனவுகாணவிடாத கணிதம்
இரசனை குறைக்கம் இரசாயனம்
சிறகு விற்ற காசில் சிலுவைகள்.. ..ஐயகோ..
வண்டலூரில் இருந்தாலும் தப்பித்திருக்கலாம்
வண்டலூரைவிட வகுப்பறை கொடியது

அதோ..
பெற்றுப்போட்ட பெருமாக்களே..!
10 வயதுவரை குழந்தைகளுக்கு நீங்கள் வேலைக்காரர்கள்
15 வயதுவரை உங்களுக்கு வேலைக்காரர்கள்
16 வயதுமுதல் பாகம் பிரிக்கும்வரை தோழர்கள்
பிறகு தூரத்து உறவினர்கள்

இளைஞர்களே..! உங்களை நம்புங்கள்
உங்கள் கால்கள் சிறகுகள், கண்கள் சூரிய சந்திரர்கள்
அதிஸ்டத்தை நம்பாதீர்கள் அது சீட்டில் கட்டிய பணம்
வந்தாலும் வரலாம்.. வராமலும் போகலாம்..
இங்கேதான் வாழ்க்கை, தற்கொலை
இரண்டுமே கடினம்.. கொலை சுலபம்
போட்டி உலகம் இது போராடு
நீயென்ன அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயா?
நாளும் நாளும் ஏன் நம்பிக்கை குறைகிறாய்
நீ முலிகையாய் இரு....
எங்கிருந்தோ காதல் வரும் உள்ளிருந்து குயில் கூவும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் விளங்கும் இளமையில்...

ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம்
ஆண்! அரசனாய் வந்து அடிமையாகிறவன்
பெண்! அடிமையாய் வந்து அரசியாகிறவள்
ஆண் பெண்ணின் பூரணம்..
பெண் ஆணின் பூரணம் - காரணம்
குறையும் குறையும் சேரணும்

திருமணம் என்பது இந்தியா மாதிரி
வேற்றுமையில் ஒற்றுமை முரண்பாடுகளில் உடன்பாடு
இருளை ஒளியை சேர்க்க முடியாத இயற்கை
கிழக்கை மேற்கை சேர்க்க முடியாத இயற்கை
சொர்க்கம் நரகம் சேர்க்க முடியாத இயற்கை
ஆணையும் பெண்ணையும் சேர்த்தே விட்டது
ஆணும் பெண்ணும் சேருவது இயற்கை
அழுகை, கண்ணீர், வலிகள் செயற்கை

இளமையில் அன்புசெய் அது முதுமைக்கு மூலதனம்
இளமையில் உழைப்பு முதுமையில் அறுவடை
முதியோர் மீது பாசம் எனக்கு...
அந்த வாழ்வின் வஞ்சிகளைக்
கண்டால் வணங்கத்தோன்றும் எனக்கு
ஒவ்வொரு பழமும் ஞானப்பழம்
நரை! மனிதக் குதிரை மூச்சிரைக்க மூச்சிரைக்க ஓடிவந்த நுரை
சுருக்கங்கள்! காலக் கவிஞன் எழுதி முடித்த
ஞானக் கவிதையின் கிறுக்கல்கள்
தலையாட்டம்! வரமாட்டேன்.. வரமாட்டேன்..
காலனுக்கு எதிரான அகிம்சை ஆர்ப்பாட்டம்

இளைஞர்களே..!
முதியவர்களை மட்டும் அழவிடாதீர்கள்
முதியவர்கள் அழுகின்ற தேசத்தில் மேகங்கள் அழுவதில்லை
ஒரு முதியவர் சொல்லும் மொழி வைரத்தைவிட மேலானது
முதியவர் சிந்தும் கண்ணீர் சூரியனைவிட சூடானது
வாழ்க்கை ஒரு நெல்லிக்காய்.. மேல்தோல் கசப்பு
ஆழம் ஆழம் போனால் உள்ளே உறங்கும் இத்துணுண்டு இனிப்பு
இனிப்பு வேண்டுமா..? கசப்பை விழுங்கு..!

எங்கள் பிராத்தனை எல்லாம் இதுதான்..
மண்ணகம் எல்லாம் மகிழ்ச்சியில் நிற்க
ஓரறி உயிரோ, ஆறறி உயிரோ
எல்லா உயிர்களும் இன்பம் எய்துக
சமுத்திர மேகம் மேலே எழுந்து
சமத்துவ மழையை தரையில் எறிக
நிலமோ கடலோ சிந்திவிடாமல்
உலக உருண்டை ஒழுங்காய்ச் சுற்றுக
இரங்கல் தீர்மானம் ஏதுமின்றி
நாடாளுமன்றம் நன்கு கூடுக
பள்ளிவாசலின் சாளரத்திலும்
பழைய கோவிலின் கோபுரத்திலும்
புறாக்கள் கட்டிய கூடுகள் வாழ்க
எங்கள் கவிதை கேட்போர் யாவரும்
இரயிலோ, மெயிலோ எதில் சென்றாலும்
வீடுதிரும்பி வீடுபேறடைக....... மகிழ்ச்சி....!!!!

கவிப்பேரரசு வைரமுத்து



மகிழ்ச்சி - கவிப்பேரரசுவின் கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 24, 2011 6:14 pm

சூப்பருங்க நல்ல கவிதை நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக