புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
62 Posts - 57%
heezulia
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
104 Posts - 59%
heezulia
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :(


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:40 pm

ட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் திருவிழாக்களில்... சுகாதாரப் பணிதான் கோயில் நிர்வாகத்துக்கு சவாலானது. பிரச்னைகளை சமாளிப்பதற்காக, விழாக் காலத்தில் தற்காலிகத் துப்புரவுப் பணியாளர்களை நியமிப்பார்கள். அப்படிப்பட்ட ஊழியர்களை, அரசு தொடர்ந்து கேவலமாக நடத்தி வருவதுதான் வேதனை அளிக்கிறது!

'தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் எண்ணுக்கு (044-42890005) தகவல் வரவே, ஸ்பாட்டில் ஆஜரானோம்.
தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, தண்ணீர்க் குடம் எடுத்தல் என ஆயிரக்கணக்கான பக்தர்கள், கௌமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய​வண்ணம் இருந்தனர். கோயில் அருகே முல்லை ஆற்றங்கரையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தின்பண்டம், வாட்டர் பாட்டில், உணவுப் பொட்டலங்​களை சாப்பிட்டு எச்சில் இலைகளை ஆங்காங்கே வீசி இருந்தனர். சிதறிக்கிடந்த குப்பைகளைத் துப்புரவுப் பணி​யாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( S28
போதுமான கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால், பக்தர்கள் கோயிலைச் சுற்றி மலஜலம் கழித்து இருந்தனர். பெண் துப்புரவுப் பணி​யாளர்கள், அதையும் கைகளால் அள்ளி சுத்தம் செய்து வந்தனர். ஆற்று ஓர தென்னந் தோப்பில் பலர் கிடாக்கறி பந்தி நடத்திக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் இருந்து உணவு கிடைக்குமா என்று நிறையப் பிச்சைக்காரர்கள். ஒரு கையில் பாத்திரம், மற்றொரு கையில் விளக்குமாறுடன் சில பெண்களைப் பார்த்தபோது, நமக்கு அதிர்ச்சி. ஏனென்றால், அவர்கள் துப்புரவுப் பணியாளர்கள்தான். பந்தி நடத்துபவர்கள் அடிக்காத குறையாக சுற்றி இருந்தவர்களை விரட்ட, ''சாமி சின்னதுக.... பசிக்கு அழுகுது...'' எனப் பெண்கள் கெஞ்சினர்.

அந்தப் பணியாளர்களைத் தனியே அழைத்து விசாரித்தோம்.
''வீரபாண்டி, மதுரை, தாயமங்கலம், விருதுநகர், சிவகாசின்னு எங்கெல்லாம் திருவிழா நடக்குதோ அங்கெல்லாம் வேலைக்கு ஆள் எடுப்பாங்க. எங்களை யாரும் கூப்பிட்டு விட மாட்டாங்க. திருவிழா நாளைத் தெரிஞ்சுக்கிட்டு, ஒவ்வொரு வருஷமும் நாங்களே போயிடுவோம். ஒரு நாளைக்கு திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Rupee_symbol 132 சம்பளம் தருவாங்க. சாப்பாடுக்குத் தனியா காசு கிடையாது. அதனால, நேர்த்திக்கடன் செய்றவங்ககிட்ட கெஞ்சிக் கூத்தாடி வாங்கி சாப்பிடுவோம்...'' என்று வெள்ளந்தியாகச் சொன்னார்கள்.

திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( S28a
ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, திண்டுக்கல், போடி, தேவதானப்பட்டி, நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த குறவர் மற்றும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தத் தொழிலுக்கு வருகின்றனர்.

''மாரியாத்தாவுக்கு கூழு ஊத்துற சனங்க, அவங்க மலத்தை அள்ளுற எங்களை மனுஷங்களாவே மதிக்கறதில்லை...'' என ஒரு பணியாளர் கண்ணீர் வடித்தார். தொடந்து பேசிய அந்தப் பெண், ''எங்க கூட வேலை செய்கிற முருகன் சாப்பாடு வாங்கப் போன இடத்தில கறி கேட்டு இருக்கான். 'ஏண்டா ...பயலே உனக்கு கறி கேக்குதா?’ன்னு சொல்ல, வார்த்தை முத்திப் போய் அடிதடி ஆகிடுச்சு. முருகன் மேல திருட்டுப் பட்டம் கட்டி போலீஸ்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க!'' என்று கதறினார்.

போலீஸ், துப்புரவு ஆய்வாளர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு எல்லாம், திருவிழா காலத்தில் அரசு செலவிலேயே உணவு வழங்கப்படுகிறது. ஆனால், துப்புரவுப் பணியாளர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?
கூடை முடைவது, சவுரிமுடி கட்டுவது, அம்மி கொத்துவது, மாட்டுக்கு மசால் உருண்டை போடுவது, கயிறு திரித்தல், பச்சை குத்துவது என, அந்த மக்களின் பாரம்பரியத் தொழில்கள் நசிவடைந்து விட்டதால், இவர்கள் கூலி வேலை தேடி அலைகின்றனர்.

தேரோட்டத்தைத் துவக்கிவைக்க வந்திருந்த தேனி கலெக்டர் (பொறுப்பு) பிருந்தா தேவியிடம் விஷயத்தைச் சொன்னோம். துப்புரவுப் பணியாளர்களை அழைத்து விசாரித்தார். ''ஆரம்பத்திலேயே இது என் கவனத்துக்கு வந்திருந்தால், இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து இருப்பேன். அடுத்த ஆண்டு முதல் துப்புரவுப் பணியாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க அரசுக்குப் பரிந்துரை செய்து கடிதம் எழுதுகிறேன்!'' என்றார்.

இவர்களது கோரிக்கையை முதல்வர் நிறை​வேற்றுவார் என்றே நம்புவோம்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 1:47 pm

ரொம்ப வேதனையான செய்தி

கையேந்தும் பழக்கம் இருக்கும் வரை கைநீட்டி அடிப்பவர்களும் இருப்பார்கள் திருப்பி அடிக்க நினைத்துப் பாருங்கள் அவர்கள் ஓடிவிடுவார்கள்

எங்கே திருப்பி அடிப்பது பிள்ளைகளோ பட்டினியில் நாம் என்ன செய்வது கையேந்தி அடி வாங்கியாவது சோறு போட வேண்டுமே திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 2:14 pm

முதலில் அந்த கோவில் நிர்வாகம் சரி இல்லை பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அமைத்து கொடுக்காமல் திருவிழா நடத்துகிறார்கள் பாவம் அந்த துப்புறவு பணியாளார்கள் வருமையினால் இது போன்ற நிலைகளுக்கு தள்ளப்படுகிறார்கள் சோகம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக