புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_m10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10 
57 Posts - 55%
heezulia
மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_m10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_m10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_m10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_m10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10 
99 Posts - 58%
heezulia
மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_m10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_m10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_m10மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Fri Jul 15, 2011 7:49 pm

ஆசிரியையைத் திருமணம் செய்துவிட்டு போலி பொறியாளர் தலைமறைவானார். விசாரணையில் அவருக்கு ஏற்கனவே மனைவி மற்றும் குழந்தை உள்ளது தெரியவந்தது.


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ளது கருத்தப்பிள்ளையூர் கிராமம். இந்த ஊர் புனித சூசைதெருவைச் சேர்ந்த ஸ்டீபன் தேவதாசன்-லில்லிபுஷ்பம் தம்பதியினரின் மகள் சந்தியா பெனிட்டோமேரி. இவர் பிஎஸ்சி பிஎட் பட்டதாரி ஆவார். இவருக்கும் அதே ஊர் காமராஜர் தெருவைச் சேர்ந்த அருள்தாஸ்-இந்திரா ஆகியோரின் மகன் பிரவீன்சுந்தர் என்பவருக்கும் கடந்த 23-12-09 அன்று திருமணம் நடைபெற்றது.

மாப்பிள்ளை டிஎம்இ(டிப்ளமோ இன்ஜினியர்) படித்துவிட்டு திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பெண்வீட்டார் ரூ.75 ஆயிரம் ரொக்கம், 25 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரத்திற்குச் சீர்வரிசை செய்து விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்தனர்.

திருமணம் முடிந்த சில நாட்களில் சந்தியாவின் சகோதரர்கள் அவர்களைத் திருப்பூருக்கு அழைத்துச்சென்று தனிக்குடித்தனம் வைத்தனர். பிரவீன்சுந்தரும் காலையில் வேலைக்குச் செல்வதுபோல் வெளியே சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புவார். ஒருவாரம் கடந்த நிலையில் அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார். இதை பார்த்த மனைவி, ஏன் வீட்டில் உள்ளீர்கள் என கேட்டதற்கு, "அந்த கம்பெனியில் வேலை பிடிக்கவில்லை; அதனால் வேலையை விட்டுவிட்டேன். வேறு கம்பெனியில் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இப்படி 2 மாதமாக பிரவீன்சுந்தர் வேலைக்குச் செல்லவில்லை.

இதனால் கணவன், மனைவி இடையே சிறிய அளவில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஒருநாள் பிரவீன்சுந்தர், நீ பைக் வாங்கி தந்தால்தான் வேலைக்குச் செல்லமுடியும் என்று மனைவியிடம் கூறியுள்ளார். இது ஒரு பக்கம் மனைவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், கணவருக்குத்தானே என கருதி சந்தியா ஊரில் உள்ள பெற்றோரிடம் கூறினார். அவர்களது சகோதரர்கள், புதுபைக் வாங்கி அதை திருப்பூரில் கொடுத்துவிட்டு வந்தனர்.

அதற்கு பிறகும் பிரவீன்சுந்தர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். மேலும் புது பைக்கில் ஊர் சுற்றி, குடித்துவிட்டு வந்து தகராறும் செய்துள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் இரவு செல்போனில் வந்த எஸ்எம்எஸ் சந்தியா வாழ்க்கையைப் புரட்டிபோட்டது. அந்த எஸ்எம்எஸ்சில் இருந்த செய்தியில், ''உங்கள் அன்பு மனைவி ஷைலா'' என்று குறிப்பிட்டிருந்தது. இதைபார்த்த சந்தியா அதிர்ச்சியடைந்தார். அதோடு அந்த செல்லில் அந்த பெண்ணின் படம் மற்றும் குழந்தை படம் ஆகியவையும் இருந்துள்ளது. உடனே கணவரிடம், "யார் அந்த ஷைலா?" என்று கேட்டார்.

அதற்கு அவர், "அது எனது மனைவிதான். ஊட்டியைச் சேர்ந்த அவருக்கும் எனக்கும் திருமணமாகி 3 வயதில் சுசிமோனிகா என்ற குழந்தை உள்ளது. இது எனது பெற்றோருக்கும் தெரியும்" என்றார். "முதல் மனைவி இருக்கும்போது ஏன் இப்படி என்னை ஏமாற்றி திருமணம் செய்தீர்கள்?" என்று அவரிடம் சந்தியா சண்டை போட்டார்.

இந்நிலையில் திடீரென்று ஒருநாள் பிரவீன்சுந்தர் தலைமறைவாகிவிட்டார். பல நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் பதறிப்போன சந்தியா அவரது செல்போனில் தொடர்புகொண்டார். நான் வெளியூரில் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன் வர ஓரிரு மாதம் ஆகும் என்று கூறியுள்ளார். இது சந்தியாவுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே கருத்தப்பிள்ளையூரில் உள்ள மாமனார் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர்களும் "வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பான் எப்படியும் வந்துவிடுவான்" என்ற கூறியதால் சந்தியா பல்லைக் கடித்துக்கொண்டு நாட்களை நகர்த்தியுள்ளார்.

ஆனால் கணவர் ஊட்டியில் உள்ள முதல் மனைவியுடன்தான் உள்ளார் என சந்தியாவுக்குத் தெரியவந்தது. இனியும் இங்கு தனியாக இருந்தால் தனக்கு பாதுகாப்பு இருக்காது என கருதிய சந்தியா பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

ஊருக்கு வந்த சந்தியா நேராக மாமனார் வீட்டிற்குச் சென்று கணவர் பற்றி கேட்டார். அதற்கு அவர்கள், "வரதட்சணையாக மேலும் ரூ.1 லட்சம் தரவேண்டும். தந்தால்தான் சேர்த்துவைப்போம். இல்லாவிட்டால் அவனுக்கு வேறு கல்யாணம் செய்து வைப்போம்" என்று மிரட்டி இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து ஊர் பஞ்சாயத்திற்கு விவகாரம் சென்றது. அங்கும் சந்தியாவின் மாமனார் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் பிரவீன்சுந்தர் வேலை பார்த்ததாக கூறிய திருப்பூர் கம்பெனியில் சந்தியா தரப்பினர் விசாரித்தனர். அப்போதுதான் பிரவீன் பற்றிய குட்டு அம்பலமானது. அவர் இன்ஜினியர் அல்ல என்றும், சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்தார் என்பதும் அந்த வேலையை விட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓராண்டுக்கு மேல் போராடி பார்த்த சந்தியா இனி கணவர் சரிப்பட்டு வரமாட்டார் என்று முடிவெடித்து அவர்கள் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி நேற்று அம்பையில் உள்ள மகளிர் காவல்துறையில் புகார் செய்தார். மேற்கண்ட தகவல்களை அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சந்தியா கூறும்போது, "இனிமேல் அவருடன் வாழ முடியாது. முதல் மனைவி இருப்பதை மறைத்து என்னைத் திருமணம் செய்துள்ளார். இன்னொரு பெண் பாவத்தைச் சுமக்க நான் தயாராக இல்லை. எங்களை ஏமாற்றிய கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதோடு திருமணத்தின்போது கொடுத்த ரூ.75 ஆயிரம் ரொக்கம், நகை மற்றும் சீர்வரிசைகளைத் திருப்பி தரவேண்டும்" என்று கூறினார்.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Aமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Bமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Dமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Uமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Lமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Lமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Aமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 15, 2011 7:54 pm

இனி சந்தியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகுமே சோகம்

எப்போதும் பெண்ணுக்கு திருமணம் செய்யும்போது மாப்பிள்ளை வீட்டார் பற்றி அவர் வேலை செய்யும் இடத்திலும் அக்கம் பக்கத்திலும் தீர விசாரித்து செய்ய வேண்டும். கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் ஹூம் பாவம் சந்தியா சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Fri Jul 15, 2011 8:00 pm

என்ன செய்ய முடியும். ஆண்டவன் அவளுக்கு விதிச்சது அவ்வளவு தான் போலிருக்கிறது.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Aமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Bமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Dமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Uமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Lமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Lமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Aமன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  H
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 15, 2011 8:11 pm

மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  440806 நான் அவன் அல்ல கதை மாதிரியே இருக்கு

என்ஜீனியர் சொன்னதுமே திருமணம் ஓகே சொல்லி இருப்பாங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 15, 2011 10:53 pm

ஒரே ஊராக இருந்தும் இந்த ஏமாற்றம்.இந்த மாதிரி சில பெண்களின் திருமண வாழ்க்கை அமைவது வருத்தத்துக்கு உரியது.பெற்றோர்கள் தீர விசாரித்து திருமணத்தை ஏற்பாடு செய்யவேண்டும். சில பெற்றோர்கள் அவர்களுடைய மகளின் வாழ்க்கை இந்த மாதிரி அமைய அவர்களே ஒரு காரணமாக இருக்கிறார்கள்

இனி அந்த பெண்ணின் நிலைமை .......................... கொஞ்சம் கஷ்டம் தான்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மன்னார் & கம்பெனி மாப்பிளை - ஆசிரியைக்கு அல்வா  Image010ycm
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 15, 2011 11:13 pm

சோகம் சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Fri Jul 15, 2011 11:24 pm

அநியாயம்



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 16, 2011 8:09 am

அடடா. எப்படித்தான் ஏமாத்துராங்களோ?

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 16, 2011 9:56 am

நாயனார் வடிவில் ஒரு அப்துல்லாஹ் கலக்கறிங்க சார் அநியாயம்
உங்கள் உடை பற்றி சொன்னேன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 16, 2011 10:21 am

பாவம் அந்த பெண்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக