புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_m10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_m10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_m10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_m10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_m10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_m10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_m10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_m10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_m10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_m10டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Oct 01, 2011 10:36 am

டாஸ்மாக்' மதுபான கடைகளில் விற்பனை குறைந்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. போலி சரக்குகள் விற்பனை மற்றும் அண்டை மாநில சரக்குகள் விற்பனை ஆகியவற்றால், விற்பனை குறைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பல்வேறு குறைபாடுகள் தெரியவந்தன.

தமிழகத்தில், 7,434 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கான மது சப்ளை, அந்த மண்டல குடோன்களில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், மொத்தம் உள்ள "டாஸ்மாக்' கடைகள் ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் இரு மண்டலங்கள் என, செயல்பட்டு வருகின்றன."டாஸ்மாக்' துவக்கப்பட்டதிலிருந்து, சரக்குகளின் விற்பனை ஆண்டுதோறும், சராசரியாக 17 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. தற்போது, முதல் முறையாக சரக்குகள் விற்பனை, 12 சதவீதமாகக் குறைந்துள்ளது, சமீபத்தில், மண்டல வாரியாக நடந்த மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் தெரிய வந்துள்ளது.

இதற்கு, தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலம் மற்றும் ஈரோடு, திருப்பூர், உதகை, கோவை மாவட்டங்களைக் கொண்ட கோவை மண்டலம் ஆகியவற்றில், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், சரக்கு விற்பனை குறைந்தது காரணமாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர் ஒருவர் கூறும் போது, ""இதே காலத்தில், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட, "ஹாட்' வகை மதுபானங்களின் விற்பனை, அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் ஆந்திராவில், 6 லட்சம் மற்றும் 3 லட்சம் பெட்டிகள் வரை அதிகரித்துள்ளது. சென்னை, கோவை மண்டலங்களில், "டாஸ்மாக்' சரக்கு விற்பனை குறைந்ததற்கு, அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்படும் சரக்கு, "டாஸ்மாக் பார்'களில் விற்கப்படுவது முக்கிய காரணம்'' என்றார்.

அதிரடி சோதனை:மதுபான பாட்டில்கள் விலையை, குவார்ட்டருக்கு ஐந்து ரூபாய் என்ற வீதத்தில் உயர்த்திய பின், அரசுக்கு வர வேண்டிய விற்பனை வரி, ஆயத்தீர்வை போன்றவை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், இவை குறைந்ததால், ஏதோ முறைகேடு நடப்பதாக அரசுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து, "டாஸ்மாக்' கடைகளில் இரண்டு நாட்களாக, பறக்கும் படையால், தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.இதில், ஒரு மண்டலத்திற்கு விற்பனை அடிப்படையில், சராசரியாக ஐந்து முதல் ஆறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு மண்டலத்திற்கு, 15 பறக்கும் படை என, ஆறு மண்டலங்களுக்கு பறக்கும் படையினர் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பறக்கும் படையில், ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.சோதனையின் போது, கடைக்கு சரக்கு வந்த தேதி, கடையின் இருப்பு சரக்கு, விற்பனையான சரக்கு, அதற்கான பணம் சரியாக உள்ளதா என கணக்கிடப்படுகிறது. அது மட்டுமன்றி, "பார்'களில் போதிய வசதி செய்யப்பட்டுள்ளதா, பாருக்கான குறுமத் தொகை முறையாக செலுத்தப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் மேற் கொள்ளப்படுகிறன.

இந்த ஆய்வில், பெரியளவில் தவறுகள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அது குறித்து மாவட்ட, மண்டல மேலாளர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. சிறிய அளவிலான குறைகள், ஆய்வு அறிக்கையாகத் தயார் செய்து, உடனுக்குடன் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.மது குடிப்பவர்களின் எண்ணிக்கையோ, குடிக்கும் அளவின் எண்ணிக்கையோ குறையாத நிலையில், விலை உயர்த்தப்பட்ட பின்பும், அரசுக்கு வருவாய் குறைந்து வருவதற்கு, அதிகளவில் போலி மதுபானங்கள் புழக்கமே காரணம் என்று கூறப்படுகிறது. "பார்'கள் மூலம் போலி மதுபானங்களை விற்பதால், டாஸ்மாக் கணக்கில் விற்பனை அளவு குறைந்துள்ளது.

போலி மதுபானங்களால், போதை ஏறாமல், இன்னும் அதிகமாக குடிக்கும் நிலைக்கு தான் குடிமகன்கள் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை, கோவை மண்டலங்களில், அண்டை மாநில சரக்குகள் விற்பனையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சில நிறுவனங்கள், டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது வகைகளை அனுப்பாமல், நேரடியாக கடைகளுக்கு அனுப்பி வரி ஏய்ப்பு செய்வதாலும், விற்பனை அளவு குறைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

"டாஸ்மாக்' விற்பனை சரிவு ஏன்?டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் ஊழல் அதிகரித்ததே, பல்வேறு முறைகேடுகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. "டாஸ்மாக்' சில்லறை விற்பனையை தமிழக அரசே துவக்கிய போது, அரசுக்கு வருவாய் அதிகரிக்கத் துவங்கியது. அப்போது, எம்.பி.ஏ., பட்டதாரிகளை மாவட்டத்துக்கு ஒருவர் வீதம், ஒப்பந்த அடிப்படையில் நியமித்து, அவர்கள் மூலம் விற்பனை கண்காணிக்கப்பட்டு வந்தது. இதனால், நிர்வாகத்தில் லஞ்சம் என்பது இல்லாமல் இருந்தது.இந்நிலையில், தி.மு.க., ஆட்சி 2006ல் அமைந்ததும், எம்.பி.ஏ., பட்டதாரிகள், வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். டாஸ்மாக் கடைகளை கண்காணிக்கும் பொறுப்பு, வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல், ஊழல் அதிகரிக்கத் துவங்கியது. ஒவ்வொரு அதிகாரியும், தங்களுக்கு மாதம் தோரும் கடைகளில் இருந்து, இவ்வளவு தர வேண்டுமென, தொகையை நிர்ணயித்தனர்.

படிப்படியாக வளர்ந்த ஊழல் : இதை கடைகளின் மேலாளர்கள், கடைக்காரர்களிடம் சுமத்தினர். கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தினர். இதனால், குவார்ட்டருக்கு இரண்டு ரூபாய் கூடுதல் விலைக்கு விற்கும் பழக்கம், தமிழகம் முழுவதும் துவங்கியது. இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்க ஆரம்பித்ததால், உள்ளூர் போலீசார், ரவுடிகள், ஆளுங்கட்சியினர், கவுன்சிலர் ஆகியோர், டாஸ்மாக் விற்பனையாளர்கள், பார் உரிமையாளர்களிடம் மாமூல் வசூலிக்கத் துவங்கினர். இதுவே, நாளடைவில் பெரிய ஊழல் வளர காரணமானது. தமிழக அரசு தனது வருவாயை பெருக்க, குவார்ட்டருக்கு ஐந்து ரூபாய் வீதம் விலையை உயர்த்தியதால், வழக்கத்தை விட, அரசுக்கு விற்பனை வரி மற்றும் ஆயத்தீர்வை மூலம் வருவாய் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், விலையை உயர்த்திய பின், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், வரி வருவாய் குறைந்தது. இதனால் தான், அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் சிறியதாக துவங்கிய ஊழல், தற்போது போலி சரக்கு அதிகளவில் விற்பனை செய்தல், அண்டை மாநில சரக்கு விற்பனை செய்தல் என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது.

நிறுவனங்களே ஊழல்? மேலும், மதுபான நிறுவனங்களே, டாஸ்மாக் குடோன் மூலம் சரக்கு வழங்காமல், நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்கின்றனவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவ்வாறு விற்பனை செய்வதன் மூலம், அரசுக்கு செலுத்த வேண்டிய ஆயத்தீர்வை, விற்பனை வரி என, சரக்கின் விலையில் பாதிக்கும் மேல் மிச்சப்படுத்த முடியும். இதனால் கூட அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகம் முழுவதும், தற்போது ஆளுங்கட்சியினர் வசம், "பார்' உரிமம் சென்றுள்ளதால், போலி சரக்கு போன்றவற்றில், அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் உள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறையவில்லை. குடிப்பவர்களின் எண்ணிக்கையும், அளவும் குறையவில்லை. ஆனால், விற்பனை குறைந்து வந்துள்ளது. எனவே, அதிகாரிகள் மட்டத்தில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தால், விற்பனையாளர்கள் மட்டத்தில் முறைகேடுகள் தானாகவே குறைந்துவிடும்.

அடுக்கடுக்கான விதிமீறல்கள் - "டாஸ்மாக்' அதிகாரிகள் அதிர்ச்சி : தமிழகம் முழுவதும், "டாஸ்மாக்' அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஊழியர்களின் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், அதிர்ச்சியான அதிகாரிகள், சம்பந்தப்பட்டோருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளனர். 32 தனிப்படை அதிகாரிகள், "டாஸ்மாக்' கடைகளில் அதிரடிசோதனை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களாகத் தொடரும் இந்த சோதனை, இன்றுடன் முடியும். இதில், "டாஸ்மாக்' ஊழியர்களின் பல்வேறு விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.



பதிவேடே பராமரிக்கவில்லை!
பல இடங்களில் விற்பனைப் பதிவேடு, இருப்புப் பதிவேடு, பில் புக், சரக்குத் தேவைக்கான பதிவுப் புத்தகம் உள்ளிட்டவை, பராமரிக்கப்படாமல் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பெரும்பாலான இடங்களில், குடிமகன்கள் வாங்கும் சரக்குகளுக்கு, ரசீது தரப்படவில்லை. பல கடைகளின் ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. சில இடங்களில், "டாஸ்மாக்' தாலுகா அதிகாரிகளும், ஊழியர்களின் விதிமீறல்களுக்கு, உடந்தையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.



குடிமகன்களிடம் கறவை: பல இடங்களில், அதிகபட்ச விற்பனை விலையை விட, கூடுதல் விலைக்கு சரக்கு விற்றுள்ளனர். குறைந்த விலை சரக்குகளைத் தான், பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றுள்ளனர். இதேபோல், பல இடங்களில், "பார்'களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில், "பீர்' பாட்டில்களைக் குளிர்வித்து, அதிக விலைக்கு விற்றதையும், அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.பல இடங்களில், கடைகளில் விற்பனைப் பணம் குறைவாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில கடைகளில், ஊழியர்களே பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட்கள் வாங்கி வைத்து, அதிக விலைக்கு விற்று சம்பாதித்துள்ளனர். சோதனை குறித்து, "டாஸ்மாக்' பொது மேலாளரிடம் கேட்டபோது, ""வழக்கமாக ஆண்டுதோறும் நடத்தும் சோதனையைத்தான் இப்போதும் நடத்துகிறோம். விதிமீறலில் ஈடுபட்டோருக்கு அபராதம் விதிக்கப்படும். அந்தந்த கடைகள் இருக்கும் பகுதிக்கு பொறுப்பான, அதிகாரிகளுக்கும் அபராதம் விதிப்போம்,'' என்றார்.

dinamalar





தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் 154550 டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் 154550 டாஸ்மாக் கடைகளில் போலி "சரக்கு'கள்? விற்பனை சரிவால் திடீர் ரெய்டு நடத்தியதில் அம்பலம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக