புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_m10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10 
72 Posts - 53%
heezulia
தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_m10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_m10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_m10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_m10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_m10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_m10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_m10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10 
12 Posts - 92%
T.N.Balasubramanian
தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_m10தமிழர் எழுச்சிப் பெருவிழா! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் எழுச்சிப் பெருவிழா!


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 16, 2011 9:15 am

தமிழர் களத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் நாளை தமிழர்
எழுச்சிப் பெருவிழாவாக நிகழ்த்துவது வழக்கம் . இந்த ஆண்டு நவம்பர் முதல்
நாள் அல்லாமல் பனிரெண்டாம் நாள் புதுவையில் முதன் முறையாக நிகழ்த்தப்
பட்டதற்கு தொடர் மழையும் ஒரு காரணம் .

மற்றொன்று தமிழர் களத்தின்
வேர்கள் பதிந்து புதுவையில் சில மாதங்களே ஆன நிலையில் புதிய தலைமுறையினரால்
நிகழ்த்தப் பட இருந்ததால் சில நாட்கள் தள்ளிப் போய்விட்டது . அதற்காக
அங்கு பணியாற்றியவர்களின் உழைப்பு வீண்போகவில்லை. அதன் அதிர்வுகள் இனிதான்
தொடரும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை. இனி களத்தில் ....

அந்த இனிய
மாலை நேரத்தில் புதுவையின் நடுவில் புயலாய் ஆர்பரித்துக் கிளம்பிய தமிழர்
பண்பாட்டுக் கலை குழுவினரின் அதிரடி ஆட்டத்தில் ஒரு கணம் திகைத்து நின்றது
புதுவை .நிகழ்வை திரு தமிழர் களத்தின் பன்னாட்டு செய்தி தொடர்பாளர் திரு
சங்கர் தாமொஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார் .ஆய்வறிஞர் குணா , ந.மு.தமிழ்மணி .
பேரா.சாம்சன், கரூர் அரசு, நீலமேகம் , புலவர் கி த பச்சையப்பன், புலவர்
செம்பியன், பறம்பை அறிவன் , தமிழாலயன் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வு திரு
அழகர் (எ) பிரகாசு அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கியது. அடுத்ததாக உரை
நிகழ்த்திய திரு. தமிழ்மணி அவர்கள் பேசுகையில் இந்தநாள் தமிழ்நாடு மொழிவழி
மாநிலமாக பிரிந்த நாள் மட்டுமல்ல .

புதுவையும் தனி மாநிலமாக பிரிந்த
நாள் என்றும், இந்திய விடுதலை போராட்டம் என்பது மக்களுடைய விடுதலைக்கான
போராட்டம் அல்ல . இந்தியா என்ற கற்பனை நாட்டை வெளி நாட்டவர்கள் சுரண்டுவதை
தடுத்து தாங்கள் சுரண்ட இங்கிருந்த பெரு முதலாளிகள் தான் விடுதலை
போராட்டத்தை கையிலெடுத்தனர். இந்த நாட்டின் வளங்களை கொள்ளையிட்டனர் .
இங்கிருந்த தேசிய இனங்களின் உரிமைகளை பறித்துவிட்டனர் .

அதேபோல்
மொழிவழி மாநில போராட்டங்களை ஒடுக்கியதும் இந்த இந்திய பேராய கட்சிதான் .
இந்தியா என்றும் இந்தியர் என்றும் நம்மை நம்பவைத்து பலிகடாவாக்கியது இந்த
இந்திய பேராய கட்சிதான் என்றும் இந்திய முதலாளிகளின் , வந்தேறிகளின் கபட
நாடகத்தை அம்பலப் படுத்துவதே தனது குறிக்கோள் என்றும் துவக்க உரை
நிகழ்த்தினார் .

அடுத்ததாக பேசிய புலவர் பாவிசைகோ கூடங்குளம் அணு
உலை கட்டியதில் நடந்திருக்கும் ஊழல்களை தனது நகைசுவையான பேச்சில் அம்பலப்
படுத்தினார். தமிழர்களின் சொத்துகளை கொள்ளையடித்த இந்த இழவெடுத்த இந்திய
ஒருமைப்பாடு நமக்கு வேண்டாம் . தமிழர்களுக்கான பூக்காடாக தனி தமிழ்நாடு
பிறக்கட்டும் என்றும் பேசினார் .

தமிழர் களத்தின் தெற்கு மண்டல
பொறுப்பாளர் திரு மை பா சேசுராசு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம்
குறித்தும் , இந்திய அரசு தமிழர்களின் போராட்டத்தை எப்படி கொச்சை
படுத்துகிறது என்றும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் நடக்கிறது என்றும்
விரிவாக எடுத்துரைத்தார் . தமிழக அரசும் தமிழர்களை மாற்றான் தாய்
மனப்பான்மையோடு நடந்துகொள்கிறது என்றும். அணுகுண்டோடு வாழச் சொல்லும்
இந்தியா எங்களுக்கு தேவையில்லை. தமிழர்களின் இறையான்மைதான் எங்களுக்கு தேவை
. அடிவாங்கும் தமிழர்கள் திருப்பி அடிக்கும் காலம் வரும் என்று
எழுச்சியுரை நிகழ்த்தினார். அணு உலைக்கு எதிரான எழுச்சி முழக்கத்துடன்
அவரின் உரை முடிந்தது .

அடுத்ததாக தலைமை உரை நிகழ்த்திய
தமிழர்களத்தின் பொதுசெயலாளர் திரு அரிமாவளவன் பேசுகையில் இந்திய தேசிய
அடிமையாக வாழும் நாராயண சாமி போன்ற தமிழர்கள் வாழ்வதுதான் வேதனை என்றும்,
கூடங்குளம் அணு மின் உற்பத்திக்கான திட்டம் அல்ல மக்களின் வரிபணத்தை
கொள்ளையடிப்பதற்கான திட்டம் என்றார். அப்துல் கலாம் தமிழினத்திற்கு
நல்லவராக நடந்துகொள்ளவில்லை என்பதை விளக்கினார் .

தேர்தலின் போது
மட்டும் தமிழர்களாக தெரிந்தவர்கள் இன்று கூடங்குளத்தில் போராடும் போது
மீனவர்களாகவும், கிறித்துவர்களாகவும் தெரிகின்றனர் .கமிசன் பணத்திற்காக ஹச்
சி எல் நிறுவனம் தரமில்லாத கட்டிடத்தை கூடன்குளதிற்காக கட்டி
கொடுத்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது என்றார் .

பல லட்சம்
தமிழர்களை கொன்றொழித்த இலங்கைக்கு மின்சாரம் வழங்கவும் , தமிழினத்தை
சுரண்டிப் பிழைக்கும் அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கவும் இத்தாலி
சோனியா அரசு இந்த திட்டத்தை தமிழர்கள் தலையில் திணிக்கப் பார்க்கிறது
என்றும் , சங்க பரிவார அமைப்புகளின் எடுபிடியாக தினமலர் நாளேடு நடந்து
கொள்வது கண்டிக்கத்தக்கது என்றும் சுட்டிகாட்டினார் . அதே சமயம் உயர் கல்வி
இன்று தமிழ் மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது அதற்காக தமிழர்கள்
தொடர்ந்து போராடுவோம் என்றார். மேலும் தமிழர் களம் அமைப்பானது வெறும்
புத்தகங்கள் படித்துவிட்டு மட்டும் துவங்கப்பட்டதல்ல . 1991 இல்
கர்நாடகாவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது தானும் நேரடியாக அந்த கொடுமையை
அனுபவித்ததன் விளைவே தமிழர் களம் தோன்ற காரனமாயிருந்தது. இருப்பத்திஒரு
ஆண்டுகளாக எவ்விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் தமிழின விடுதலையை நோக்கி
களப் பணியாற்றும் ஒரு இயக்கம்தான் தமிழர் களம் என்றார் . எனவே இனி இதுதான்
தருணம் இது தமிழர் களத்தின் காலம் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி களமாட
வாருங்கள் தமிழராய் வாருங்கள் !என்று பேசிய அவர் இந்த நிகழ்வின் எழுச்சி
தீர்மானங்களை வாசித்தார்.

அவை
1. பேரிடர் விளைவிக்கும் அணு
உலைகளை தில்லி அரசு தமிழகத்தின் மீது திட்டமிட்டே திணித்த சதியை இம்மாநாடு
வன்மையாக கண்டிக்கிறது. தமிழக மக்களின் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை
தமிழர் களம் முழுமையாக ஆதரிக்கிறது. கூடங்குளம் அணுஉலையை உடனே மூடவேண்டும்
என்று மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுகொள்கிறது.

2.
திருவள்ளூர் மாவட்டம் தேர்வாகண்டிகையில் இயற்கை வளங்களை அழித்து,
அடித்தட்டு மக்களின் வாழ்வாதரங்களை பாழாக்கி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு
தாரை வார்க்கும் கொடுமையை தமிழர் களம் வன்மையாக கண்டிக்கிறது.
மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட இடங்களை அவர்களிடமே திருப்பி தரவேண்டும்.

3.
மக்களின் வரிபணத்தில் நடத்தப்படும் நடுவண் அரசின் உயர்கல்வி
படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளும் மாற்று மொழியில் இருப்பதால் தமிழ்
மாணவர்கள் பாதிக்கபடுகின்றனர். இது இந்தி வெறியையும் , இன வெறியையும்
காட்டுகிறது. எனவே பொதுவான நுழைவுத் தேர்வுகள் அந்தந்த மாநில மொழியிலேயே
நடத்தபடவேண்டும் என தமிழர் களம் கோருகிறது.

4.ராசீவ் காந்தி கொலை
வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதோடு மட்டுமல்லாமல்
அப்பாவித் தமிழர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோரை உடனடியாக
விடுதலை செய்யவேண்டும் எனவும் இம்மாநாடு கோருகிறது.

5.13500 மக்கள்
நலப் பணியாளர்களை தமிழக அரசு பணி நீக்கம் செய்ததை இம்மாநாடு வன்மையாக
கண்டிக்கிறது. உடனே பணி நீக்க ஆணையை திரும்ப பெற்று அப்பணி யாளர்களை
மீண்டும் பணியிலமர்த்த வேண்டுகிறது.

6.இந்திய திராவிட கூட்டுச்
சதியால் தமிழர்களின் மரபு வழிச் சொத்தான கச்சத் தீவை சிங்களர்களுக்கு தாரை
வார்த்துக் கொடுத்தது வரம்பு மீறிய செயலாகும். அப்பாவி தமிழ் மீனவர்கள் 550
கும் மேற்பட்டவர்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்டுள்ளனர் தமிழ்
மீனவர்களின் மீதான தாக்குதல் தொடர் கதையாகி வருகிறது. இது உடனே தடுக்கப்பட
வேண்டியதாகும். அல்லது இந்திய கடற்படையானது தமிழர்களின் சோழக் கடற்கரையினை
விட்டு விலக வேண்டும். கட்சத்தீவை மீட்டு மீண்டும் அதை தமிழர்களிடம்
ஒப்படைக்கவேண்டும்.

7. தமிழர் நாடு வந்தேறிகளின் வேட்டை காடாக
மாறிவருகிறது. இந்த சூழலில் புதுவையில் அமைந்திருக்கும் புரட்சிப் பாவலர்
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் கல்லறை எவ்வித பராமரிப்பும் இன்றி குப்பை
மேடாக மாறி கிடப்பது வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவதுபோல் உள்ளது. எனவே
புதுவை அரசானது அவரின் கல்லறையை புதுப்பித்து பராமரிக்க வேண்டும் எனவும்
இம்மாநாடு கோரிக்கை வைக்கிறது.

இறுதியாக எழுச்சியுரை நிகழ்த்திய
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் அவர்கள் பேசுகையில்
விடுதலைக்கு முன்பிருந்தே இந்திய அரசியலாளர்கள் தமிழர்களை ஏமாற்றிதான்
வந்துள்ளனர் என்றும் நீண்ட காலம் அடிமையாக வாழ்ந்த தமிழினம் மொழி வழியாக
பிரிந்த நாள் மற்ற மாநிலங்களுக்கு கொண்டாட்டமான நாள் என்றால் தமிழர்களுக்கு
அது ஒரு இழப்பை உணர்த்தும் நாளாகும் .

தமிழகம் வந்தேறிகளின்
வேட்டைக்காடாகி விட்டது. மார்வாடி குஜராத்தி, மலையாளிகளால் சுரண்டப்பட்டு
வரும் தமிழகத்தை மீட்க தமிழர்கள் சாதி கடந்து மதம் கடந்து ஒரே இனமாய்
ஒன்றிணைய வேண்டும் . அப்போதுதான் தமிழர்களுக்கான நாடாக தமிழ்நாடு இருக்கும்
என்று தனது கருத்தை ஆழமாக விதைத்தார்.

நிகழ்வில் சென்னையிலிருந்து
வந்து மேடை நாடகம் நிகழ்த்திய கல்லூரி மாணவர்கள் திராவிடத்தால் நாம்
வீழ்ந்ததை சுட்டிக் காட்டியதும . தமிழகத்தில் தமிழர்கள் ஏதிலியாக தவிக்கும்
சூழல் நிகழ்வதை கண்முன் நிறுத்தினர்.

நிகழ்வில் அரிமாவளவன் எழுதிய
நெருப்பு விதைகள் புத்தகம் வெளியிடப்பட்டது. நூலை ஆய்வறிஞர் திரு குணா
அவர்கள் வெளியிட திரு .தமிழ்மணி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இறுதியாக
தமிழர் களத்தின் புதுவை மாநில செய்தி தொடர்பாளர் திரு .சு.அன்பழகன் அவர்கள்
நன்றியுரை நிகழ்த்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட தமிழர்
எழுச்சிப் பெருவிழா வானது நிறைவு பெற்றது.

தமிழர் களம்
கரூர்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Nov 16, 2011 10:01 am

வாழ்த்துகள்.

நல்ல தகவல் பதிந்தமைக்கு நன்றி.

வாழ்க தமிழ், வளர்க தமிழனால்........



சதாசிவம்
தமிழர் எழுச்சிப் பெருவிழா! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Nov 16, 2011 10:03 am

நன்று

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக