புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_c10 
21 Posts - 66%
heezulia
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_c10 
63 Posts - 64%
heezulia
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 09, 2011 12:11 pm


"தனக்கு ஒரு கண் போனால், எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்'' என்று நினைப்பவர்கள் நமக்கு மிக அருகில் கூட இருப்பார்கள்.


பழிவாங்குவது என்பது மனிதனை மிருகமாக்கும் குணம். பயம், கோபம், வெறுப்பு ஆகியவையே இந்த பழி வாங்கலின் பின்னால் ஒளிந்து கிடக்கும் தீய உணர்வுகளாகும்.

நமது எண்ணங்களில் ஏற்படும் அபிப்பிராய பேதமே மற்றவர்களை தப்பாக புரிந்து கொள்ள வைக்கிறது. நமக்கு தேவையானவர் என்றால் நாம் அணுகும் விதம் வேறாக இருக்கிறது, நமக்கு தேவையற்றவர் என்றால் நாம் அணுகும் விதம் இன்னும் வேறுபடுகிறது.

பணக்காரரை, படித்தவரை ஒரு கோணத்திலும், படிக்காதவரை, ஏழையை ஒரு கோணத்திலும் நாம் பார்க்கிறோம். பார்க்கும் கோணத்தை நாமே மாற்றி வைத்துக் கொண்டு, தவறான அபிப்பிராயம் கொள்கிறோம். இந்த பேதமே பயமும், வெறுப்பும் உருவெடுக்க அடிப்படைக் காரணமாகும். இது நாளடைவில் கோபத்தை கூட்டி பழிவாங்கலைத் தூண்டி விடும்.

மேலதிகாரி பற்றி தப்பெண்ணம் எழுந்தால் அவர் மீது பயமும், வெறுப்பும் சேர்ந்து வரும். பிறகு கோபமும் தொற்றிக் கொள்ளும். எளியோரிடம் அபிப்பிராய பேதம் ஏற்பட்டால் நேரடியாக கோபமே வந்துவிடும். இந்த மூன்று தீய உணர்வுகளில் எது தொற்றினாலும் ஒன்று மற்றொன்றை துணைக்கு அழைத்து உங்களை பழிவாங்கும் மிருகமாக மாற்றி விடும்.

பழிவாங்கலை கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் நன்றாகப் புரியும். நாம் நம்மைவிட பலவீனமானவர்களை மட்டுமே பழிவாங்க முயல்கிறோம். வலிமையானவர்கள் முன்பு நாம் பலவீனமாக இருந்து விடுகிறோம். ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் என்று நம்மைவிட பலம் மிகுந்தவர்களை நாம் எப்போதும் எதிர்ப்பதில்லை. ஏனெனில் அதற்கு பின்விளைவுகள், பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் அதிகம் எதிர்க்காமலேயே நாம் வலியையும் காயத்தையும் தாங்கிக்ë கொள்கிறோம். ஆனால் எளியவர் நம்மிடம் சிக்கினால் அல்லது நமக்கு வசதியான சமயம் கிடைத்தால் மட்டும் பழி வாங்கக் கிளம்பிவிடுகிறோம்.

வெறுப்பு ஏற்படும்போதும், பழி வாங்கும்போதும் நம் உடலில் தோன்றும் விஷம் நம்மை சிறிது சிறிதாக கொல்வதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆழப் புதைந்த வெறுப்பினால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், படபடப்பு, வயிற்றுப்புண், நரம்புத் தளர்ச்சி, இதய நோய்கள் போன்றவை அடக்க முடியாதகோபம், பழிவாங்கும் வெறி போன்றவற்றால் தூண்டப்படுகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

பழ வாங்கும் உணர்ச்சியால் நாம் நமது வேலை செய்யும் திறனை இழந்து, பழி வாங்குதலிலேயே காலத்தையும், வாழ்வையும் வீணாக்கி விடுகிறோம். பழிவாங்குவதால் உறவுகளும் பாதிக்கும். ஒரு குடும்பச் சண்டை தந்தையிடமிருந்து மகனுக்கும், அவனிடம் இருந்து அவனது மகனுக்கும் பரவுகிறது. கொஞ்சம் மிச்சமிருக்கும் நல்ல எண்ணத்தையும் இந்த பழிவாங்கும் எண்ணம் அழித்து விடுகிறது.

ஆழ்ந்து யோசித்தால் பழி வாங்குவது என்பது நமது தகுதியிலிருந்து கீழிறங்கும் செயல் என்பது புரியும். உயர்ந்த லட்சியங்கள் உடையவர்கள் பழி வாங்குவதில்லை.

கடவுளும், நம்மால் காயம்பட்டவர்களும் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் நாம் மட்டும், யாரையும், எதையும் மன்னிக்கத் தயாராக இல்லை. இப்படி இரட்டைத் தரங்களில் செயல்பட்டால் நமக்கு பழி சேராமல் நல்ல கதியா கிடைக்கும்?

`கண்ணுக்கு கண்' கொள்கையை கண்களைத் திறந்துகொண்டே பின்பற்றினால் இந்த உலகமே குருடாகிவிடும்' என்று சொல்வார்கள். `பழிவாங்க வேண்டுமானால் நாம் மன்னிக்க வேண்டும். மன்னிப்பதால் மட்டுமே நீங்கள் எதிரியையும் அடிமையாக்க முடியும்' என்பது மகான்களின் வாக்கு.

உலகத்தில் எதைச் சேர்த்தாலும் வன்மத்தையும், பழிச்சொல்லையும் சேர்க்காதீர்கள். அது மற்றவரையும் அழித்து, உங்களையும் அழித்து விடும்.

மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம். மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும். மற்றவரிடம் நல்லதையே தேட வேண்டும். மற்றவர் தெரியாமல் செய்த தவறுகளை கருணையோடு காணப் பழக வேண்டும். இதுவே தொடர்ந்தால் உங்களுக்குள்ளும் ஒரு மகான் வந்து விடுவார்.

தினதந்தி



உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 09, 2011 12:13 pm

மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம். மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும். மற்றவரிடம் நல்லதையே தேட வேண்டும். மற்றவர் தெரியாமல் செய்த தவறுகளை கருணையோடு காணப் பழக வேண்டும். இதுவே தொடர்ந்தால் உங்களுக்குள்ளும் ஒரு மகான் வந்து விடுவார்.
நல்ல கட்டுரை சிவா
முதலில் ஒரு நல்ல மனிதனாக வாழ வேண்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 09, 2011 12:16 pm

கடவுளும், நம்மால் காயம்பட்டவர்களும் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் நாம் மட்டும், யாரையும், எதையும் மன்னிக்கத் தயாராக இல்லை. இப்படி இரட்டைத் தரங்களில் செயல்பட்டால் நமக்கு பழி சேராமல் நல்ல கதியா கிடைக்கும்?


எல்லோரும் எல்லா நேரங்களிலும் மற்றவர்களை மன்னிக்கும் முடிவினை எடுப்பதில்லை. அதையும் மீறி ஒரே முடிவில் இருப்பவர்களை தான் சாதனையாளர்கள் என்கிறோம்.

நன்றி சிவா !



உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 09, 2011 12:17 pm

மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம். மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும். மற்றவரிடம் நல்லதையே தேட வேண்டும். மற்றவர் தெரியாமல் செய்த தவறுகளை கருணையோடு காணப் பழக வேண்டும். இதுவே தொடர்ந்தால் உங்களுக்குள்ளும் ஒரு மகான் வந்து விடுவார்.

இதுவரை அப்படிதானே நடந்து கொண்டு இருக்கிறேன். ஜாலி
Code:
அப்போ நானும் மகான் தான்
, சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 09, 2011 12:20 pm

உமா wrote:
இதுவரை அப்படிதானே நடந்து கொண்டு இருக்கிறேன். ஜாலி
Code:
அப்போ நானும் மகான் தான்
, சிரி

திருநீறும்,, ஆசீர்வாதமும் வாங்குறதுக்கு மக்கள் வந்துறப்போராங்க !



உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 09, 2011 12:21 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உமா wrote:
இதுவரை அப்படிதானே நடந்து கொண்டு இருக்கிறேன். ஜாலி
Code:
அப்போ நானும் மகான் தான்
, சிரி

திருநீறும்,, ஆசீர்வாதமும் வாங்குறதுக்கு மக்கள் வந்துறப்போராங்க !

நான் போலி சாமியார் ஆக போறேன்.அப்போ நிறைய பணம் சம்பாதிக்கலாமே. ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 09, 2011 12:23 pm

உமா wrote:
நான் போலி சாமியார் ஆக போறேன்.அப்போ நிறைய பணம் சம்பாதிக்கலாமே. ஜாலி

இருக்கிற சாமியர்களுக்கே பதில் சொல்ல முடியல ..

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 09, 2011 12:27 pm

சிவா wrote:[b]
மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம். மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும். மற்றவரிடம் நல்லதையே தேட வேண்டும். மற்றவர் தெரியாமல் செய்த தவறுகளை கருணையோடு காணப் பழக வேண்டும். இதுவே தொடர்ந்தால் உங்களுக்குள்ளும் ஒரு மகான் வந்து விடுவார்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 09, 2011 12:28 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உமா wrote:
நான் போலி சாமியார் ஆக போறேன்.அப்போ நிறைய பணம் சம்பாதிக்கலாமே. ஜாலி

இருக்கிற சாமியர்களுக்கே பதில் சொல்ல முடியல ..

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிரி சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 09, 2011 12:32 pm

எனக்கு பழிவாங்கும் குணம் இல்லைப்பா ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக