புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
1 Post - 14%
Manimegala
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
11 Posts - 4%
prajai
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
2 Posts - 1%
jairam
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_m10உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 18, 2011 8:30 am

உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Newsஉச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  UCHITHANAI-750x1024ஒரு பேட்டியின்போது புனிதவதிக்கு என்ன நேர்ந்தது என்று சொன்னதைக் கேட்டு நீங்கள் சிந்திய கண்ணீர்த் துளியிலிருந்துதான் இந்தப் படத்தின் பயணம் தொடங்கியது. இன்று, முன்னோட்ட (பிரிவியூ) காட்சிகளில் அந்தப் புனித நதியின் அமைதியான நகர்வைப் பார்த்துக் கண்ணீர் சிந்தும் ஒவ்வொருவரின் கண்ணீரிலும் உங்கள் கண்ணீரைத் தான் பார்க்கிறேன் ஏகலைவன்.

நேற்று, லண்டன் வானொலிக்காக சகோதரி ரூபிகுமார் எடுத்த பேட்டியின்போது, உரிமையோடு ஒரு வேண்டுகோள் வைத்தேன். “உச்சிதனை முகர்ந்தால் – மூலம் எங்கள் இனத்துக்குச் செய்யவேண்டிய கடமையை நாங்கள் செய்திருக்கிறோம். இந்தப் படத்தை முன்பதிவு (ரிசர்வ்) செய்து குடும்பத்தோடு சென்று பார்ப்பதன் மூலம், உங்கள் கடமையை நீங்கள் செய்யவேண்டும். இந்தப் படத்தின் வெற்றிதான் இதுபோன்ற இன்னும் நூறு படங்கள் வர வழிவகுக்கும்” என்று ரூபிகுமார் மூலம் நான் வைத்த வேண்டுகோள், உலகெங்கும் இருக்கிற தமிழ்ச் சொந்தங்களுக்கு மட்டுமல்ல ஏகலைவன், இங்கேயிருக்கிற தமிழர்களுக்கும் பொருந்தும்.

படம் வெளியாவதிலிருந்து முதல் பத்துநாட்கள் – டிசம்பர் 16 முதல் 26வரை – முன்பதிவு செய்து குடும்பத்தோடு படத்தைப் பார்ப்பதன் மூலம், குத்துப்பாட்டுகளிலேயே குடியிருக்கும் தமிழ் சினிமாவின் தலையில் ரெண்டு தட்டு தட்டவேண்டாமா தமிழினம்? இந்தப் படத்தை முன்பதிவு செய்து பார்க்காமல் வேறெந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்கள் நம் சொந்தங்கள்! இந்தக் கேள்வியைக் கேட்பதற்கான தகுதியை – காற்றுக்கென்ன வேலி – எனக்குக் கொடுத்திருக்கிறது ஏகலைவன். அந்த உரிமையோடும் தகுதியோடும் தான் உலகெங்கிலும் இருக்கிற தமிழ்ச் சொந்தங்களுக்கும், இங்கேயிருக்கிற நம் தமிழ் உறவுகளுக்கும் இதைச் சுட்டிக்காட்டினேன். லண்டனிலிருந்தும் கனடாவிலிருந்தும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, புதன்கிழமையே முன்பதிவு செய்து விடுவதாக சொல்கிற உறவுகளின் குரலைக் கேட்கும்போது கண்கலங்கி விடுகிறேன் ஏகலைவன். அவர்கள் நேசிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன சம்பாதித்திருக்கிறேன்? இதுபோதும் ஏகலைவன்.

சென்ற வாரம் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அபஸ்வரம் மாதிரி ஒலித்த நக்கீரன் நிறுவன நிருபரின் குரல் கூட – உச்சிதனை முகர்ந்தால் – படத்துக்குத் தரப்பட்ட நற்சான்றிதழ் என்றே நான் நினைக்கிறேன் ஏகலைவன். “புலிகள் உங்களுக்கு 25 கோடி கொடுத்தார்களாமே” என்று அந்த அன்புத் தம்பி அதிமேதாவித்தனத்துடன் கேட்டபோது, காற்றுக்கென்னவேலி – நாட்களிலிருந்து தடம்மாறாமல் தடுமாறாமல் தெளிவான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்ற பெருமித உணர்வுதான் ஏற்பட்டதே தவிர, அந்தத் தம்பியின் மீது கோபம் வரவில்லை. “சொல்வதுதான் சொல்கிறீர்கள், 500 கோடி ஆயிரம் கோடி என்று சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்” என்று சிரித்தபடியே நான் திருப்பிக் கேட்டபோது, அந்தப் பரபரப்புப் பத்திரிகைத் தம்பியின் முகம் போனபோக்கை நீங்கள் பார்த்திருந்தால் ரசித்திருப்பீர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் விட்டால் நமக்கு வேறென்ன அடையாளம் இருக்கமுடியும் ஏகலைவன்? எனக்கும் உங்களுக்க்கும் மட்டுமல்ல, நக்கீரன் நிறுவனத்தின் அந்தப் பரபரப்புத் தம்பிக்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் அண்ணன் கோபாலுக்கும் அன்புத் தம்பி காமராஜுக்கும் கூட பிரபாகரனை விட்டால் வேறென்ன அடையாளம்? உச்சிதனை முகர்ந்தால் – படத்துக்காக விடுதலைப் புலிகள் கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்திருப்பார்கள் என்று அந்தப் பரபரப்புத் தம்பி நினைக்கிறாரென்றால் – உச்சிதனை முகர்ந்தால் – தன்னுடைய கடமையை நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கிறது என்றுதானே பொருள்! அதற்காகப் பெருமைப்படாமல் நாம் கோபப்பட முடியுமா?

பொழுதுபோக்க அல்ல… அழுது தீர்க்க… என்று தமிழக பண்பலை வானொலிகளில் உச்சிதனை முகர்ந்தால் பற்றிய விளம்பரத்தின்போது அறிவிக்கப்படுவதைப் பற்றியும் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. அழுவதற்கு மட்டுமா – என்று கேட்கிறார்கள் நண்பர்கள். இல்லை ஏகலைவன்.. பெண் போராளிகளுடன் புனிதவதிக்கு இருக்கிற நட்பைப் பார்த்து மகிழ்வீர்கள். “எங்க அக்காமார் துவக்கு வைச்சிருப்பாங்க… அவர்களைப் பார்த்தால் ஆர்மி கூட நடுங்கும்” என்று அந்தக் குழந்தை சொல்வதைக் கேட்டு சிலிர்ப்பீர்கள். என்றாலும் படம் முடியும் போது புனிதவதி என்கிற குழந்தைக்காக அழுவீர்கள். அந்தக் கண்ணீர்.. ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் கோபாவேசத்தை எழுப்பும். இன்னும் 3 நாளில் உலகம் இதை உணரும் ஏகலைவன். அந்த நாளுக்காக – டிசம்பர் 16ம் தேதிக்காக உங்களைப் போலவே நானும் தவிப்புடன் காத்திருக்கிறேன்.

என்னுடைய படத்தைப் பாருங்கள் – என்று கெஞ்சிக் கேட்கவேண்டிய நிலைக்கு உங்களில் எவரும் என்னைத் தள்ளிவிடவில்லை ஏகலைவன். இந்தப் படத்தை முன்பதிவு செய்து பாருங்கள் – என்று உரிமையுடன் சுட்டிக்காட்டும் இடத்தில் வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த அன்பும் பாசமும்தான் என்னை இயங்கவைக்கிறது. அதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நான் நன்றி சொல்லவேண்டியிருக்கிறது.

எனக்கு ஒரு கனவு இருக்கிறது ஏகலைவன். புனிதவதி என்கிற அந்தப் புனித நதி எவருடைய குழந்தையோ அல்ல.. நம் ஒவ்வொருவரின் குழந்தை. அந்தக் குழந்தை இங்கே வரும்போது ஒட்டுமொத்தத் தமிழகமும் அந்தக் குழந்தையை அன்புடன் அணைக்கும். அவளது கைகளைப் பற்றி நம்முடைய கண்களில் ஒற்றிக்கொள்ளும் போது, அந்தப் பிஞ்சுக் கரங்களை நம்முடைய கண்ணீர் நனைக்கும். அந்தக் கண்ணீர், 26 கிலோமீட்டர் இடைவெளியைக் கூட இணைக்கும். எந்தக் கனவையும் நிறைவேற்ற முடிகிற நம்மால் இந்தக் கனவை நிறைவேற்ற முடியாதா ஏகலைவன்?

- என்றும் அன்புடன்,
புகழேந்தி தங்கராஜ்
12.12.2011.

தமிழீழ புரட்சிகர மாணவர்கள் தளம்

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 18, 2011 8:32 am

"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்!

உச்சிதனை முகர்ந்தால் என்ற திரைப்படம் ஈழத்து தயாரிப்பாளர்களால் படமாக்கப்பட்ட திரைப்படமாகும். 13 வயதுச் சிறுமி ஒருவரை இலங்கை இராணுவம் பாலியல் வல்லுறவுகு ஈடுபடுத்திய உண்மைச் சம்பவத்தை இயக்குனர் புகழேந்தி அவர்கள் தத்துரூபமாகப் படமாக்கியுள்ளார். இப்படத்தைப் பார்ப்பவர்கள் அனைவரது கண்களிலும் கண்ணீர் கசியும் என காசி ஆனந்தன் ஐயா அவர்கள் தெரிவித்துள்ளார். இத் திரைப்படம் 16ம் திகதி வெளியாக உள்ள நிலையில் இப் புகைப்படம் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் பின்வருமாறு:

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் நச்சு இனவெறிச் சிங்கள ஆட்சியாளரை வெளிச்சத்தில் நிறுத்தி தோல் உரிக்கிறது. அடக்குமுறைச் சிங்கள இனவெறியர்களின் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை மட்டுமல்ல- அக்கொடுமைகளின் மிகக்கொடிய விளைவுகளையும் இத்திரைப்படம் அலசுகிறது. தென்தமிழ் ஈழமான மட்டக்களப்பில் பிறந்த புனிதவதி- சிங்கள படைவெறியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாள் என்பது உண்மைச் செய்தி. அனால் அவள் வாழ்க்கை பின்பு என்ன ஆகி இருக்கும் என்னும் கேள்வியை இயக்குனர் புகழேந்தி தங்கராசா திரைப்படம் ஆக்கித் தந்திருக்கிறாரே- இது சிங்கள இனவெறியர் கொடுமை அல்ல- அக்கொடுமையின் பொல்லா விளைவு. தேம்பித் தேம்பி நம்மை அழவைக்கும் திரை ஒவியம்.

Is Paris Burning (பாரீசு நகரம் எரிகிறது) என்னும் திரைப்படம் எப்படி இனவெறியன் இட்லரின் கொடிய முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதோ- Omar Muktar (உமர் முக்தார்) என்னும் திரைப்படம் எப்படிக் கொடுங்கோலன் முசோலினியின் முகமூடியைக் கிழித்து எரிந்ததோ- அப்படி- உச்சிதனை முகர்ந்தால் என்னும் திரைப்படம் சிங்கள இனவெறியன் மகிந்த ராஜபக்சேவின் கொடிய கொலைவெறி முகத்தை உடைத்தெரிகிறது.

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய முதல் திரைப்படத்தை (காற்றுக்கு என்ன வேலி) உருவாக்கியவ்ர் புகழேந்தி தங்கராசா. இப்போது அவர் உருவாக்கி தந்துள்ள உச்சிதனை முகர்ந்தால் தொடர்நது தமிழீழ விடுதலைப் போரில் அவர் கொண்டுள்ள ஈடுபாட்டையே காட்டுகிறது.அவர் படைப்புகளான இந்த இரு திரைப்படங்களுக்கும் நிகராக தமிழ்நாட்டில் இதுவரை ஈழம் குறித்த திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது பச்சை உண்மை. படை மட்டுமல்ல- ஒரு படமும் தமிழீழத்திற்காக போராட முடியும் என்பதை இயக்குனர் புகழேந்தி தங்கராசா தன் திரைப் படைப்பினால் நிறுவியிருக்கிறார்.

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் ஒவ்வொரு கட்டமும் தமிழீழ விடுதலைக்கான உரத்த போர் முழக்கமே அன்றி வேறில்லை. கடல்நீர் தமிழ்நாட்டையும் தமிழீழத்தையும் பிரிக்கலாம்- ஆனால், தமிழனின் கண்ணீர் இவ்விரு நாடுகளையும் எப்போதும் இணைக்கும் என்பதையும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் நமது கவனத்தை பதிக்கிறது. கொடுமைக்கு இரையாகும் ஒரு பெண்ணாக அல்ல. கொடுமைக்கு இரையாகும் ஒரு தேசிய இனமாக புனிதவதி இத்திரைப்படத்தில் வடிவம் கொள்கிறாள். உலகெங்கும் வாழும் தமிழீழ மக்கள் தங்கள் உரிமைப் போராட்ட உணர்வினை மேலும் கூர் தீட்டிக்கொள்ள உச்சிதனை முகர்ந்தால் நிச்சயமாக உதவும். தமிழீழ மக்களின் கண்ணீரை இத்திரைப்படம் நெருப்பாக்கும். தமிழீழ மக்களின் பெருமூச்சை இத்திரைப்படம் புயலாக்கும்.தமிழருவி மணியன் இயல்பான-சூடான திரை உரையிலும், இசையமைப்பாளர் இமானின் நெஞ்சைப் பிழியும் தமிழிசையிலும் உச்சிதனை முகர்ந்தால் தனி மிடுக்குடன் தமிழுலகில் உலா வருகிறது.

ஈழவிடுதலையில் எப்போதும் தனி ஆர்வம் கொண்டுள்ள நடிப்பின் செல்வர் சத்யராஜ் இத்திரைப்படத்தில் ஈடிணையற்ற பங்களிப்பினை நல்கி உள்ளார்.சீமான், சங்சீதா, நாசர்,லட்சுமி போன்றோரின் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பை சீராட்டாமல் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நீக்கமற திரைப்படம் பார்த்த தலைவர் நெஞ்சிலும் நிறைந்திருக்கிறாள் புனிதவதியாக நீநிகா.

உலக விருது பெறும் இத்திரைப்படம் என்று உறதியாக கூறலாம். புகழ் அனைத்தும் புகழேந்திக்கே.

காசி ஆனந்தன்.
சென்னை. தமிழ்நாடு.
வன்னி ஆன்லைன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 18, 2011 2:06 pm

நிச்சயம் நல்ல விருதுகள் கிடைப்பதுடன் சிங்கள் கிழித்து ஏறிய வேண்டும் என்று விரும்பிகிறேன். நன்றி தம்பி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 2:12 pm

படம் பார்க்கணுமே அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உச்சிதனை முகர்ந்தால் - பேரினவாதத்தின் கோர முகம் - இப்போது திரையில்  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக