புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 6:55 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 6:54 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 6:53 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 6:52 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 6:50 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
51 Posts - 65%
Dr.S.Soundarapandian
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
9 Posts - 11%
ayyasamy ram
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
prajai
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Rutu
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
227 Posts - 22%
sugumaran
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
18 Posts - 2%
prajai
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Rutu
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_m10மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதி மயங்கும் மாலைவேளை (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 30, 2011 6:16 pm

மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Raniw


மதி மயங்கும் மாலைவேளை


அழகிய சோலை. அதனூடே இரு உருவங்கள் காணப்படுகின்றன ஒருத்தி மன்னர் புரத்து
மாதேவி. மற்றவள் அவள்தோழி இருவரின் முகங்களிலும் சோகமுற ஏதோ உரையாடல்
நடக்கிறது என்னவென பார்த்திடுவோம் வாருங்கள்



தோழி:
மாமரச் சோலையிலே - மடி
மீது தலைய ணைந்து
மாமகள் நீயிருந்தாய் - மனந்
தானும் மகிழ்வு கொண்டாய்
தாமரைப் பூவிரிய - புனல்
தாவிக் கயல் குதிக்க
தேமதுரச் சுவையிற் - கனி
தின்று களித்தனை காண்

சாமரை வீசிநிற்க - இன்பஞ்
சார்ந்த மலர் முகத்தில்
சோகமிழையக் கண்டேன் - நின்
சுந்தரமென் னுடலும்
பூமரம் போல் புயலில் - பட்டுப்
போய் விழுமா மதுபோல்
நீமனம் மாறியதேன் - உந்தன்
நிம்மதி போனதெங்கே?

பொன்முடி வேந்தன் வர - அவர்
புன்னகை செய்வதெல்லாம்
நின்மனம் பேதலித்தோ - அவை
நீசமென உரைத்தாய்
என்னடி நின்நினைவு - அன்பு
எத்தனைஆழமென
என்மனம் தானறியும் - ஆயின்
ஏனிந்த கோபமெலாம்

புன்னை மரத்தடியில் - எழில்
பூக்கள் உதிர்ந்து நிற்க
பன்னெடும்வேளை அவர் - பெரும்
பாசமுரைத்து நின்றாய்
பின்னர் அவரருகில் - நீயும்
பேசிட ஏகும்கணம்
புன்மை மனமெடுத்தே - பல
பொல்லா துரைத்த தென்ன?


தலைவி:
என்ன நினைத்தென துள்ளம் வருந்திடும்
ஏதும் புரியவில்லை - இரு
கன்னம் வழிந்திடும் கண்களின் நீர்வரும்
காரணம் தோன்றவில்லை
இன்னும் மனதினில் சின்னவள் நானெனச்
சொல்லத் தெரியவில்லை - ஏனோ
இன்னலை கண்டதென் றின்பமிழந்திடும்
என்நிலை மாறவில்லை

பென்னம் பெரிதொரு சோலை எழில்த் தரு
பேசரும் பொன்நிழலாம் - அதில்
சின்னக் குருவிகள் சேர்ந்துமகிழ்வது
சொல்லப் பெருங் கதையாம்
மின்னி இரவினில் விண்ணொளி மீன்களை
மேனியணிந்த பெண்ணாய் - அந்தப்
பொன்னொளி வான்மதி பூத்தமரத்திடை
புள்ளியிற் கோலமிட

நீலக்கரு விண்ணில் நீந்துவெண் மேகமும்
நேசமிழை தென்றலும் - பல
கோலமிடு மிசைகூடும் கருவிகள்
கொண்டவை போல்நிதமும்
காலம் பொழுதுயர் காற்றெழும் புள்ளினம்
கூடி இசை படிக்க - பெரும்
சீலமுடன் சுவை சேர்ந்திடவே அதன்
சூழல்தனை வியந்தேன்

சோலை மலர்மணம் சொல்லித் திரிந்திடும்
சுந்தரமென் வளியும் - நல்ல
பாலை பழித்திடும் பஞ்சு வண்ணமுகில்
பக்கமணை மதியும்
ஓலை படித்தும் அறியேனடி எந்தனுள்ளம்
உவகைகொள்ள - இன்பம்
நூலை விடமிக நுண்ணியதாய் மனம்
நேரக் களித்திருந்தேன்

ஓடித் திரிந்திடும் மேகங்களில் பல
உற்ற உருவமது - கணம்
ஆடியெனைக் கொல்லும் ஆவியெனப் பகை
ஆவது போலுணர்ந்தேன்
தேடி திரிந்தென்னைத் தீண்டுவதாய் ஒரு
தீங்கெனும் எண்ணமிட - மனம்
வாடிக் கணந்தன்னில் வாழ்வு முடிவதாய்
வார்த்தை தவறிவிட்டேன்

காடு நடந்திடும் வேழம் மென முகில்
கன்னியென ஒருத்தி - அத
னூடு சிறுபிள்ளை ஓடிவரப் பெரும்
ஓங்கியெழும் அருவி
போடுஎன உயிர்போக்கும் அரக்கரும்
பூதங்கள் போற்பலவும் - விழி
மூடும்பொழுதிலும் ஊடுவர மனம்
முற்று மிழந்து விட்டேன்

கண்ட கனவு விழித் தெழுந்தேன் என்ன
காரணம் ஏதறியேன் - அதில்
கொண்டதென்ன உளங் கூறிய தென்னொரு
கோலம் புரிவதிலேன்
மண்டபமும் மலர் மாமரமும் நிழல்
தந்திட நானிருந்தேன் - அங்கு
கண்டது மோர்கன வென்ன உரைத்திடக்
காலையில் நான் மறந்தேன்

கற்பனையில் எனக்காணவைத்த தென்ன
காதலின் வேதனையோ - எனை
சிற்பமெனச் சிலையென்று நினைத்தவர்
சென்றதன் காரணமோ ?
அற்புதவேந்தன் அருகிருந்தால் இது
ஆகிடுமோஅதுவே - இந்த
சொற்புயல் தந்தெனைச் சீண்டி மகிழ்வதின்
செய்கை புரியேனடி!
*********************

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 30, 2011 9:28 pm

ஓடித் திரிந்திடும் மேகங்களில் பல
உற்ற உருவமது - கணம்
ஆடியெனைக் கொல்லும் ஆவியெனப் பகை
ஆவது போலுணர்ந்தேன்
தேடி திரிந்தென்னைத் தீண்டுவதாய் ஒரு
தீங்கெனும் எண்ணமிட - மனம்
வாடிக் கணந்தன்னில் வாழ்வு முடிவதாய்
வார்த்தை தவறிவிட்டேன்

நல்ல கவிதை அகநானூறு படிப்பது போல ve இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Ila
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jan 06, 2012 10:00 pm

மதிமயங்கும் மாலை வேளை (தொடர்ச்சி) 2 வது பகுதி

தலைவியின் சோகங்கண்டு தோழி உரைத்தமை

சீரும்செறிவாய் சிந்தைகொள்
சேருமன்பு பொலிவானால்
போருமூடே உண்டாகும்
புண்ணாய் மனதும் நோவாகும்
தேரும் மனதில் நல்லன்பும்
தெளிவைத் தாரும் கணமாக
நீரும் வற்றும் விழிமீது
நெஞ்சின் கருணை ஒளிகூடும்

யாரு மற்றேன் நானென்று
யாதும் எண்ணல் வேண்டாமென்
சேரும் அன்புச் செல்வமடி
சிற்றூர்தேசத் திளவரசி
பாருன் அன்பைப் புரிவாருன்
பக்கங் காணும் துயர்தானும்
நீரும்வற்றும் வெய்யோன்முன்
நேர்நிற் கும்பனி யாய்வற்றும்

தலைவியின் ஆற்றாமை தோழியின் சொற்களால் தீரவில்லை,
தலைவன் தன்னைப்பிரிந்துவிட்டான். இனி தனைக்காண
வரமாட்டான் என்றெண்ணித் தொடர்கிறாள்

நீர்வற்றிப் போகலாம் நீள்வான் வெயில்பட்டு
நெஞ்சத்தின் ஈரமும் வற்றுவதோ
காயொன்று வீசுவர் கல்லும்பட்டுக் கனி
யாகிடமுன் நிலம் வீழுவதோ
வாய்விட்டுப்பேசிட வண்ணம் கலைந்துமே
வாழ்வெட்டா தூரம் இருப்பதுவோ
போய் எட்டிதொட்டிட பொன்னொளி வானமும்
பொய்த்துவிடும் இதுஅப்படியோ

சேய் விட்டுப் போஎன்று சொல்லுவளோ தாயும்
சேராது எட்டி யிருப்பதுண்டோ
பூமொட்டு தன்னை பறிப்பதுண்டோ அது
பூத்திடும் வண்ணம்சி றப்பல்லவோ
மைதொட்டுபூசிடும் கண்களை மூடுமி
மைவிட்டு மூடா திருந்திடுமோ
பொய்சொட்டும் பேசாதோர் நீதியின்முன்ஏதும்
போய்மதி கெட்டுப் புழுகுவரோ

தெய்வத்தில் பட்டிடப்பூ எறிந்தால் வரம்
தெய்வஞ் சினந்து மறுப்பதுண்டோ
எய்அம்பி னோடுவில் லேந்திய வேடனும்
மெய்யன்பினால் வென்ற ஈசனல்லோ
தெய்யெனப் பாடிக் குதித்திடினு மவர்
தேருங்கலை தனும் பார்வையிலே
நெய்விட்ட தீபமென் றேஒளிர்ந்தால் அதை
நீர்விட்டு பார்ப்பது நேசமென்றோ?

அந்தவேளை தலைவன் திடீரென தோன்றுகிறான். தவிக்கும் மனதுடன்
காணப்பட்ட தலைவியின் பூமுகம் படும் வேதனையைப்புரிந்து கொண்டவனாக
கூறுகிறான்!

கண்களில்நீருடன் பொன்முகம் ஆனதென்
காண்பதென்ன மனம்வேதனையோ
வெண்பனி போய்விடும் இன்பமென்காலையில்
வந்ததுயாது இளம்புயலோ
தண்ணொளி வீசிடும்சூரியனின்கதிர்
தானும் மலர்முகம் சுட்டதுண்டோ
விண்நிறை மாயஇருள்கலைந்தால் பின்னர்
வேறெது காலை புதிதல்லவோ

சிறிதுநேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டவன்
அவள்துயரம் நீங்க....

பூக்கும் மலர்களைக் காண்புது நெல்வயல்
புன்னகைக்கும் கதிர் புள்ளினம்காண்
தீக்குள் எரிந்திடும் வீறினைப்பார் எங்கள்
தேகம் படைத்தவர் கோவிலைக்காண்
மாக்கள் மனிதன்மரம் செடிகாண் இந்த
மாபெரும் மண்ணும் மதிவெயில் காண்
ஆக்கும் கடவுளின் நோக்கமும்பார் இனி
அன்புகொண்டே என்றும் வாழ்வினைக் காண்!

****************************
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Jan 06, 2012 10:51 pm

நீர்வற்றிப் போகலாம் நீள்வான் வெயில்பட்டு
நெஞ்சத்தின் ஈரமும் வற்றுவதோ
காயொன்று வீசுவர் கல்லும்பட்டுக் கனி
யாகிடமுன் நிலம் வீழுவதோ
வாய்விட்டுப்பேசிட வண்ணம் கலைந்துமே
வாழ்வெட்டா தூரம் இருப்பதுவோ
போய் எட்டிதொட்டிட பொன்னொளி வானமும்
பொய்த்துவிடும் இதுஅப்படியோ

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு பன்முக தன்மை சுடரும் வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2012 10:54 pm

அழகிய கவிதைப் படைப்பு அண்ணா! சூப்பருங்க



மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jan 07, 2012 12:30 am

சிவா wrote:அழகிய கவிதைப் படைப்பு அண்ணா! சூப்பருங்க

நன்றிகள் !சும்மா இருக்க முடியவில்லை. இதைத் தவிர வேறெதிலும் மனம் போகவுமில்லை அதனால் எழுதிக்கொண்டிருக்கிறேன்!!
மீண்டும் தங்களுக்கும்

அனந்தம் ஜிவ்னி அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக!

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Jan 07, 2012 12:58 pm

நீர்வற்றிப் போகலாம் நீள்வான் வெயில்பட்டு
நெஞ்சத்தின் ஈரமும் வற்றுவதோ
காயொன்று வீசுவர் கல்லும்பட்டுக் கனி
யாகிடமுன் நிலம் வீழுவதோ
வாய்விட்டுப்பேசிட வண்ணம் கலைந்துமே
வாழ்வெட்டா தூரம் இருப்பதுவோ
போய் எட்டிதொட்டிட பொன்னொளி வானமும்
பொய்த்துவிடும் இதுஅப்படியோ

சேய் விட்டுப் போஎன்று சொல்லுவளோ தாயும்
சேராது எட்டி யிருப்பதுண்டோ
பூமொட்டு தன்னை பறிப்பதுண்டோ அது
பூத்திடும் வண்ணம்சி றப்பல்லவோ
மைதொட்டுபூசிடும் கண்களை மூடுமி
மைவிட்டு மூடா திருந்திடுமோ
பொய்சொட்டும் பேசாதோர் நீதியின்முன்ஏதும்
போய்மதி கெட்டுப் புழுகுவரோ


....................சங்க கால இலக்கியம் படித்ததுபோன்ற உணர்வுகள்.
தமிழ் இவர்வழி சங்க நாதம் முழங்கிக்கொண்டுதான் இருக்கிறது.
வாழ்க, வளர்க கிரிகாசன் இந்த உலகு உள்ளமட்டும்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 08, 2012 8:46 am

Kaa Na Kalyanasundaram wrote:நீர்வற்றிப் போகலாம் நீள்வான் வெயில்பட்டு..

....................சங்க கால இலக்கியம் படித்ததுபோன்ற உணர்வுகள்.
தமிழ் இவர்வழி சங்க நாதம் முழங்கிக்கொண்டுதான் இருக்கிறது.
வாழ்க, வளர்க கிரிகாசன் இந்த உலகு உள்ளமட்டும்.

தங்கள் வாழ்த்தை பெரும் வெகுமதியாக ஏற்றுக்கொள்கிறேன்.
நன்றிகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 08, 2012 12:57 pm

kirikasan wrote:
சிவா wrote:அழகிய கவிதைப் படைப்பு அண்ணா! சூப்பருங்க

நன்றிகள் !சும்மா இருக்க முடியவில்லை. இதைத் தவிர வேறெதிலும் மனம் போகவுமில்லை அதனால் எழுதிக்கொண்டிருக்கிறேன்!!
மீண்டும் தங்களுக்கும்

அனந்தம் ஜிவ்னி அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக!

படைப்பாளன் சும்மா இருந்துவிட்டால் அதன் இழப்பு சமுதாயத்திற்குத்தானே! தொடர்ந்து எழுதுங்கள்.



மதி மயங்கும் மாலைவேளை (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக