புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
38 Posts - 49%
heezulia
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
32 Posts - 42%
jairam
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
2 Posts - 3%
சிவா
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
13 Posts - 4%
prajai
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
9 Posts - 3%
jairam
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_m10இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவனுக்கு இணையாக யாரும் இல்லை !


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Jan 23, 2012 7:02 pm


பகவான் மாஹாவிஷ்ணு பல்வேறு அவதாரங்கள் எடுத்திருந்தாலும் குறிப்பாக பத்து அவதாரங்கள் சிறப்பித்து கூறப்படுகின்றன அவற்றில் மிக முக்கியமாக ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பரிபூரண அவதாரம் என்று போற்றப்படுகிறது அறத்தின் வடிவான ஸ்ரீ ராமனை விட ஸ்ரீ கிருஷ்ணன் எப்படி உயர்ந்தவனாக கருதப்பட முடியும்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை யாரோடும் ஒப்பிட முடியாது இமயமலை எப்படி என்றும் இமயமலையோ அதே போலவே ஸ்ரீ கிருஷ்ணன் என்றும் கிருஷ்ணன் தான் அவனுக்கு நிகர் எவருமே கிடையாது கிருஷ்ணனை நீங்கள் கடவுளாக அவதாரபுருசனாக பார்க்க வேண்டாம் எலும்பும் சதையும் உள்ள சாதாரண மனிதனாக அவனை நீங்கள் பார்த்தால் கூட அவனுக்கு இணையான ஒரு மனிதன் கூட இது வரை உலகத்தில் பிறக்கவே இல்லை


கிருஷ்ணன் பழையகால ஆசாமி அவனது கருத்துக்கள் கட்டுப்பட்டி தனமாக பழம் பஞ்சாங்கள் என்று எவரும் ஒதுக்கி விட முடியாது அவன் மிக தொன்மை காலத்தில் வாழ்ந்தவனாக இருந்தாலும் கூட அவனது வாழ்வு அவனது வாக்கு நமது சமகாலத்தையும் தாண்டி வருங்காலத்தாலும் நிறப் பபடுமா என்ற கேள்வி குறியோடு நிற்பதாகும் கண்ணனை முழுமையாக புரிந்து கொள்வதற்கு கூட இன்று வரை நம்மால் இயலாது வரும் ஆயிரம் ஆண்டுகளில் அவனது இயல்பு கால்பங்கு மனிதனுக்கு விளங்கினால் கூட அது மிகப்பெரும் அதிசயம்

கோவர்த்தன கிரியை குடையாக பிடித்து ஆயர்களை காத்த கோபாலன் அவதாரங்களில் சிறந்த அவதாரம் பரிபூரணமான அவதாரம் என்று கூறுவதற்கு காரணம் இருக்கிறது மஹாவிஷ்ணு பரசுராம அவதாரத்தில் கோபக்கனலாக தகித்தார் வாமன திருவிக்ரம நரசிம்ம அவதாரங்களை அறிவுக் கண் கொண்டு ஆய்ந்து பார்த்தால் உலகத்தோடு ஒட்டிவராத எதோ ஒரு குறை தெளிவாகத்தெரியும் ஸ்ரீ ராம அவதாரத்தில் அவன் குறைவற்ற நிறை மனிதனை போல தெரிந்தாலும் சந்திரனில் களங்கம் இருப்பது போல சிற்சில குறைகள் அவனிடம் தென்பட்டன அதனால் தான் அவன் இராமச்சந்திரன் என்று அழைக்கபட்டான்

ஆயிரம் சமாதானம் சொன்னாலும் வாலியை மறைந்திருந்து தாக்கியது ராமனுக்கு களங்கம் தான் சீத்தா இல்லாத போது அவள் பிரிவை எண்ணி வருந்தியதும் அவள் முகம் போல் தெரிந்த மலர்களையும் அவள் விழிகள் போல் தெரிந்த மான்களின் கண்களையும் கண்டு பிரிவு துயரத்தில் வருந்தியது சராசரி மனிதனுக்கு சரியே தவிர சாதனை படைக்கும் அவதார புருசனுக்கு அது சரியல்ல


கிருஷ்ணன் பிறந்தது ஒரு இடம் வளர்ந்தது ஒரு இடம் என்றாலும் கூட அதற்கு அவன் வருந்தியது இல்லை குழந்தை எப்படி ஆடவேண்டுமோ அப்படியெல்லாம் ஆடிகளித்தவன் அவனை மற்றவர்கள் போற்றியபோதும் சரி தூற்றிய போதும் சரி இரண்டையும் சிரித்த முகத்தோடே ஏற்றுக்கொண்டான்

தன்னை தாக்கவரும் எதிரியை கூட கோபம் கொண்டு அவன் விழ்த்தியது இல்லை சிரித்து கொண்டே இருப்பான் அவன் சிரிப்பின் முன்னால் எதிரி தானாக வீழ்ந்து விடுவான் தனக்கு அபாயம் வந்தபோதும் தன்னை நம்பியவர்களுக்கு அபாயம் வந்தபோதும் சிரித்த முகம் மாறாமல் இருந்தானே தவிர பதற்றத்தோடு எப்போதும் அவன் காணப்பட்டது இல்லை தீர்க்கவே முடியாது என்று மற்றவர்கள் எல்லாம் புறமுதுகு காட்டிய போது கூட மலர்ந்த முகம் மாறமல் சிக்கலை தீர்ப்பதற்கு கிருஷ்ணனை விட்டால் யாருமே கிடையாது

யுத்த களத்தில் ஆயிர கணக்கான உயிர்கள் பலியான போது ரத்த வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியபோது சம்மந்தமே இல்லாமல் சலனமே இல்லாமல் ஒரு சாட்சியாக நின்று கொண்டு எப்படி புன்முறுவல் பூத்தானோ அதே போல தான் வேடன் ஒருவன் தன மீது அம்பு எரிந்து உடலை சாய்த்த போது புன்னகை உடனே இருந்தான் சிரித்து கொண்டே பிறந்தவன் சிரித்து கொண்டே மரணத்தை வரவேற்ப்பது எவ்வளவு பெரிய அற்புதம்


ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்வில் துயரங்கள் வந்தாலும் அவன் துன்பபட வில்லை சிரித்த முகத்தோடு சந்தோசங்களை எப்படி வரவேற்றனோ அப்படியே துயரத்தையும் வரவேற்றான் கிருஷ்ணனிடம் கோபம் இல்லை கிருஷ்ணனிடம் துயரம் இல்லை கிருஷ்ணனிடம் ஆசை இல்லை கிருஷ்ணனிடம் மோகம் இல்லை கிருஷ்ணனிடம் உயர்வு தாழ்வு என்ற பாகுபாடு இல்லை ஆடுமேய்க்கும் இடையர்களோடு எப்படி பழகினானோ அப்படியே நாடு மேய்க்கும் அரசர்களோடும் பழகினான்

கிருஷ்ணன் அவதாரங்களில் மட்டும் பரிபூரணமானவன் அல்ல மனிதர்களிலும் அவன் தான் பரிபூரணமானவன் அதனால் தான் அவன் புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறான் இந்த உலகில் இது வரை பிறந்த ஞானிகளை விட கிருஷ்ணன் தான் தலை சிறந்த ஞானி அவன் ஒருவனே உண்மையான தேவன் தேவ குமாரன் இறை தூதன் மற்றவர்கள் அனைவரும் அரைகுரையானவர்களே

ஏசு நாதரின் ஓவியங்களை பார்த்திருக்கிறோம் அவைகள் மிகவும் அழகானவைகள் என்பதில் சந்தேகம் இல்லை அவர் முகத்தில் அமைதி தழுவும் சாந்தம் நிலவும் சத்தியம் ஜொலிக்கும் ஆனால் அவைகலுக்குள்ளே ஒரு சோகம் இருக்கும் அதை ஆழ்ந்து பார்க்கும் போது நமக்கு வாழ்க்கையின் மீது விரக்தி வருமே தவிர தைரியம் தன்னம்பிக்கை மன துணிச்சல் போராட்ட குணம் வராது


மிகப்பெரும் ஞானியான கெளதம புத்தரும் இனம் புரியாத நுணுக்கமான மாஹா சூன்யமான ஒரு நிலைக்கு மனிதன் போகவேண்டிய வழியை சொல்கிறாரே தவிர ஆனந்தமயமான வாழ்க்கைக்கு வழி சொல்லவில்லை அவர் உபதேசங்கள் அச்சத்தை ஏற்படுத்தி வைராக்கியத்தை தருகிறதே தவிர இயல்பான ஞான வைராக்கியத்தை தரவில்லை

அகிம்சையின் வடிவமான மகாவீரரும் உடலை துன்பபடுத்தி மனதை செம்மை படுத்த சொல்கிறாரே தவிர ஸ்ரீ கிருஷ்ணனை போல் உடலையும் மனதையும் ஆனந்த சாகரத்தில் நிலைநிறுத்த வழிகாட்ட வில்லை உயிர்களை வதைப்பது ஹிம்சை என்றால் தன் உடலை வதைப்பதும் அதே போன்ற ஹிம்சை தானே என்பதை மகாவீரர் உணரவே இல்லை

வேறு சிலரோ அதை செய்யாதே இதை செய்யாதே இப்படி செய்தால் மறுவுலகம் உனக்கு கிடைக்காது இன்னின்ன காரியங்களை செய்தால் சொர்க்கத்தில் உனக்கு பாலும் தேனும் கிடைக்கும் என்று வேறு உலக வாழ்க்கையை பற்றி கூறுகிறார்களே தவிர இந்த உலக வாழ்க்கையை செம்மையாக்கி கொள்ளும் வழிவகையை காட்டவில்லை


ஒரு மனித ஆத்மா யாருக்கும் இடைஞ்சல் இல்லாத நற்காரியங்களை செய்து இவ்வுலக வாழ்வை இனிமை படுத்தி கொள்ளவும் வேண்டும் மறு உலக வாழ்வு என்னும் இறைவனின் திருவடி நிழலை பெறுவதற்கு தன்னை நல்ல எண்ணங்களாலும் தூய்மை படுத்தி கொள்ள வேண்டும் அதை விட்டு விட்டு மறு உலக வாழ்வை மட்டுமே பிரதானமாக கருதி செயல்படுவோமானால் அந்த வாழ்க்கை ரத்த சோகை பிடித்ததாக நோய்வாய் பட்டதாக சுரணை அற்றதாக இரக்கமே இல்லாததாக இருக்குமே தவிர உயிரோட்டம் உடையதாக இருக்காது

அதனால் தான் கிருஷ்ணன் உடலையும் மனதையும் தனது பரிபூரண கல்யாண குணங்களோடு சம்மந்தம் படுத்த சொல்கிறான் நீ ஆசையை அடக்கவேண்டும் என்று ஓடினால் அது உனக்கு முன்னால் ஓடி உன் எதிரே பூதம் போல் நின்று வழிமறிக்கும் எனவே ஆசையோடு உனது போராட்டத்தை நடத்தாமல் எல்லாவற்றையும் என்னிடத்தில் அற்பணிக்க கற்றுக்கொள் ஆசையை வெல்ல அதுவே சுலப வழி என்கிறான்

நான் கொண்டது தான் சரியான வழி எனது கருத்து தான் உண்மையானது நான் கண்டது தான் சத்தியம் அதை தான் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் அப்படி அவர்கள் பின்பற்ற மறுத்தால் நான் சொல்வதை நம்ப தயங்கினால் என் கருத்தை குறை என்று வாதிட்டால் அவர்கள் சாத்தனின் மைந்தர்கள் இந்த உலகில் வாழ தகுதி இல்லாதவர்கள் என்று மற்றவர்களை கட்டாயப்படுத்த மாற்ற முயற்சித்தால் இந்த உலகம் செங்குருதியை சேமிக்கும் கிடங்காக இருக்குமே தவிர அமைதி பூங்காவாக ஆனந்த கீதம் முழங்கும் சொர்க்கமாக இருக்காது


எனவே முதலில் உன்னை மாற்று உனக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை மாற்று இந்த உலகத்தில் காணுகின்ற உயிர்கள் எல்லாமே பொருட்கள் அனைத்துமே ஸ்ரீ கிருஷ்ணனின் அம்சமே என்பதை உணர்ந்து கொள் தன்னை மாற்றாமல் தான் மாறாமல் மற்றவர்களை மாற்ற நினைப்பவன் மாறும்படி சொல்பவன் அறிவுடையவன் ஆக மாட்டான் என்று ஸ்ரீ கிருஷ்ணன் அமுத மொழி தருகிறான்

கீதையை ஒரு முறை படித்து பாருங்கள் மறுமுறை படித்து ஆழமாக சிந்தனை செய்யுங்கள் இன்னொரு முறை படித்து அதன் வழியில் சிறிது நடந்து பாருங்கள் அப்போது தெரியும் கிருஷ்ணன் மட்டுமே பரிபூரணமானவன் என்பதன் ரகசியம் நான் சொல்கிறேன் நம்பினால் நம்புங்கள் இந்த உலகம் வெகுவிரைவில் கிருஷ்ணனை உணர்ந்து அவன் வழியில் திரும்ப போகிறது காரணம் இந்த உலக முழுவதும் போட்டி பொறாமை நிறைந்து விட்டது துயரகாற்று சுவாசிக்க முடியாமல் மனிதனை மூச்சி திணற வைக்கிறது மனிதனுக்கு மனிதன் வைக்கின்ற பாசம் மறைந்து பொருளே பிரதானம் என்ற நிலை உலக மக்கள் அனைவரையும் அச்சம் கொள்ள வைத்து கொண்டிருக்கிறது

மனிதன் மனிதனாக வாழ்ந்து பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட ஆரம்பித்து விட்டான் மனிதனை மனிதனாக வாழவைக்கும் மந்திர கோல் ஸ்ரீ கிருஷ்ணனிடம் மட்டுமே இருக்கிறது அதனால் தான் அவன் பரிபூரணமான அவதாரம் பரிபூரணமான ஞானி பரிபூரணமான மனிதன்.

http://www.ujiladevi.blogspot.com/2012/01/blog-post_23.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! 1357389இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! 59010615இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Images3ijfஇவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 24, 2012 1:03 am

முதலில் உன்னை மாற்று உனக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை மாற்று இந்த உலகத்தில் காணுகின்ற உயிர்கள் எல்லாமே பொருட்கள் அனைத்துமே ஸ்ரீ கிருஷ்ணனின் அம்சமே என்பதை உணர்ந்து கொள் தன்னை மாற்றாமல் தான் மாறாமல் மற்றவர்களை மாற்ற நினைப்பவன் மாறும்படி சொல்பவன் அறிவுடையவன் ஆக மாட்டான் என்று ஸ்ரீ கிருஷ்ணன் அமுத மொழி தருகிறான்


சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இவனுக்கு இணையாக யாரும் இல்லை ! Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக