புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
32 Posts - 56%
heezulia
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
17 Posts - 3%
prajai
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
9 Posts - 1%
jairam
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_m10ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்....


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 02, 2012 12:10 pm

ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்....

ஒவ்வொருவரின் விதி, பிறவி எண்கள்.... 852_1

எண்-1

ஓரறிவு ஜீவன் முதல் ஆறறிவு மனிதன் வரை அனைத்து உயிர்களும் சூரியனின் ஒளியும் உஷ்ணமும் இன்றி உயிர் வாழ முடியாது என்பது உலகறிந்த உண்மை. ஆக, உலக உயிர்கள் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவது சூரியனே.


இச்சூரியனைக் குறிக்கும் எண்-1 என்றால், இந்த எண்-1 எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறாகவே 1-ஆம் எண்ணில் இம்மண்ணில் பிறக்கும் மனிதர்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகத் திகழ்கின்றனர்.

நமது முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களின் பிறந்த தேதி 19-11-1917 என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், அவர் 19-ஆம் தேதி எப்படி பிறந்தார்? எங்கிருந்து வந்தது இந்த அமைப்பு என்று வினா எழுப்புவோமே யானால், அதற்கு எண்ணியல் (நியூமராலஜி) மூலமாகவே விடையளிக்க இயலும்.

திருமதி. இந்திராகாந்தி அவர்களின் தந்தையாகிய நமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தேதி 14-11-1889. இதில் அவரது பிறவி எண்-5. விதி எண்-6. ஜவஹர்லால் நேரு அவர்களின் துணைவியார் திருமதி. கமலா அவர்களின் பிறந்த தேதி 1-8-1899. இதில் அவரது பிறவி எண்-1, விதி எண்-9. திருமதி. இந்திராகாந்தி அவர்களின் பிறந்த தேதியான 19-11-1917-ல் பிறவி எண் அம்மாவின் எண்ணாகவும், விதி எண்-3 ஆகவும் உள்ளது. இந்த 1-ஆம் எண் அவரது தாயார் கமலா அம்மையாரின் பிறவி எண்ணுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளதைக் காணலாம்.

பிறவி எண், விதி எண் இரண்டுமே இயற்கையாக அமையப் பெற்றது. இவை இரண்டும் தாய்- தந்தையரின் பிறவி எண் மற்றும் விதி எண்ணுக்கு உட்பட்டது என்பதைக் கண்டோம். ஆனால், பெயர் எண்ணை அவரவர் பிறவி எண் மற்றும் விதி எண்ணுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள இயலும். உதாரணமாக 1-ஆம் எண்ணில் பிறந்த ஒரு அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனித உயிர்களைக் காக்கும் மருத்துவராகவும் மாறலாம்.

எனவே, மண்ணில் பிறந்த அனைவருக்கும் அவரவர் பெற்றோரின் பிறந்த தேதியின் அடிப்படையிலும், பெற்றோரின் திருமணத் தேதியின் அடிப்படையிலும்தான் பிறவி எண்ணும், விதி எண்ணும் அமைகிறது என்பது திண்ணமாகிறது. ஆனால், அறுவை சிகிச்சைமூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு இது பொருந்தாது.

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் எண்-1-க்கு சொந்தக்காரர்கள். இவர்கள் சூரியனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். இவர்கள் பொதுவாக வெளிப்படையாகப் பேசக் கூடியவர்கள். மனதில் பட்டதை பட்டென சொல்லிவிட்டு, பின்னர் பரிதாபத்திற்குரியவராகின்றனர். மன சாட்சிக்குக் கட்டுப்பட்டவர்கள். ஏதேனும் சிறு தவறு செய்தாலும், அவர்களின் மனசாட்சியே தண்டித்து விடும். இத்தகைய குணங்கள் கொண்ட 1-ஆம் எண்ணின் ஆதிக்கர்களில் அநேகர் இரக்க சுபாவத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்து விட்டு, அதனால் உபத்திரவப்படுபவர்களும் இவர் களே. ஆனால், 1-ஆம் எண்ணில் பிறந்தவர் களின் ஆதரவு மற்றவர்களுக்குத் தேவைப் படுகிறது. அதனால் இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். தொழில்களைப் பொறுத்தவரை மக்களைத் தன்வசப்படுத்தும் அரசியல், பத்திரிகை நடத்துதல், எழுத்தாளர், கதாசிரியர், கவிஞர், மின்சாரம் தொடர்புடைய அனைத்து துறை, மற்றும் அரசுத்துறையில் உயர்பதவி முதல் கீழ்மட்டப் பதவி வரை அனைத்து பதவிகளிலும் பணி புரிகின்றனர். இவர்களில் ஜோதிடம், எண்ணியல் (நியூமராலஜி), கைரேகை போன்றவற்றிலும் வெற்றியடைந்துள்ளனர். இத்தகையவர்களின் கைரேகையை ஆராய்ந்தோமேயானால் இதய ரேகைக்கும், புத்தி ரேகைக்கும் இடைப்பட்ட செவ்வாய் வெளியில் ஒரு தனிப்பட்ட கூட்டல் குறியோ அல்லது பெருக்கல் குறியோ இருந்தால் இவர்கள் கூறும் பலன்கள் அனைத்தும் பலிதமாகும்.

1-ஆம் எண்ணில் ஆதிக்கத்தின்கீழ் வரும் சூரியனின் முழு பலம் பெற்றவர்களுக்கு திருமண வாழ்க்கை சிக்கலாக இருக்கும். மற்றபடி அனைத்தும் மேலோங்கியே காணப்படும். சூரியனின் ஆதிக்கம் அதிகமாக உள்ளவர்கள் அடிக்கடி கோபப்படுதல், நினைத்த காரியம் நிறைவேறாமல் காலதாமதம் ஆகிறதேயென்ற ஆதங்கம், படபடப்பு, மற்றவர்கள் செய்யும் சிறு தவறுக்கும் கடிந்து கொள்ளுதல் போன்ற குணாதிசயங்களுடன் காணப்படுவர்.

அப்படிப்பட்டவர்கள் தங்களின் ஆதிக்க பலத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக ஒருவரின் பிறந்த தேதி 1-12-1959 என வைத்துக் கொண்டால், அவரின் பிறவி எண்-1, விதி எண்-1. பெயர்-

M. S E L V A K U M A R
4 3 5 3 6 1 2 6 4 1 2 = 37-10-1

என்று வருமேயானால், இதை எளிமை யாகப் புரிந்து கொள்ள 1-1
1
என்ற சமன்பாடு வரும்படி அமைத்துக் கொள்வோம். இந்த ஆதிக்கர் மேற்கூறிய குணங்களுடன் கடுகடுப்பான மனிதராகவே எப்போதும் காணப்படுவார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெயர் மாற்றம் ஒன்றினால் மட்டுமே தீர்வுகாண முடியும். பிறவி எண்-1, விதி எண்-1 என்று அமையப் பெற்றவர்களுக்கு 4-ஆம் எண் நன்மை செய்கிறது. அது சூரியனின் ஆதிக்க பலத்தை சமமாக்கி, சமுதாயத்தின் போக்கில் நடந்து கொள்ள வழிவகுக்கிறது. மேலும், 4-ஆம் எண் வரிசையில் 31-ஆம் எண்ணையும், 13-ஆம் எண்ணையும் முக்கியமாகக் கொள்ள லாம். வேறு தேதியில் பிறந்தவர்கள் 13-ஆம் எண்ணையும், 31-ஆம் எண்ணையும் பெயர் எண்ணாக வைத்துக் கொள்ளக்கூடாது. ஒருவேளை வேறு எண்ணில் பிறந்தவர்களின் விதி எண்-1 என அமையுமேயானால் மேற்சொன்ன 31, 13 எண்ணில் பெயர் அமைத்துக்கொண்டால் நன்மையை அளிக்கும். அதேசமயம் 28-ஆம் தேதி பிறந்த ஒருவரின் கூட்டு எண் 2- ஆகவோ, அல்லது 3- ஆகவோ, 4 மற்றும் 8- ஆகவோ அமைந்திருப்பின், அவரது பெயர் எண்ணை சூரியனின் ஆதிக்க பலம் மிகுந்த 19, 37, 46, 55, 64 போன்ற எண்களில் மாற்றம் செய்து கொள்ளலாம். அல்லது கூட்டு எண்ணின் வலிமைக்கேற்ப பெயரை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

1-ஆம் எண் வரிசையில் 1, 19-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு சூரியனின் முழு ஆதிக்க பலம் அமைந்து காணப்படும். பொதுவாக இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் பொறுமையற்றவர்களாகவும், பிறர் கூறும் அறிவுரையை எளிதில் ஏற்க மறுப்பவர் களாகவும் காணப்படுவர். வரவேற்பது, புறக்கணிப்பது இவர்களின் பார்வை மூலமே வெளிப்படும். மிக எளிதாக காதல் வசப்படக் கூடியவர்கள். அதில் சிலருக்கு பெரும் சிக்கல்களும் வந்துசேரும். மேலும், துடுக்கான பார்வையும், மிடுக்கான நடையும் எண் 1-ன் ஆதிக்கர்களின் வெளி அடையாளங்கள். உதாரணமாக நடிப்புலக இமயம் மறைந்த நடிகர் சிவாஜிகணேசன் அவர்கள் பிறந்த தேதி 1-10-1928. இதில் இவரது பிறவி எண்-1, விதி எண்-4, பெயர் எண்-5.

S H I V A J I G A N E S A N
3 5 1 6 1 1 1 3 1 5 5 3 1 5 = 41.

இதை ஒரு சமன்பாடாக எடுத்துக் கொண்டால் 1-4

5

என்று அமைந்துள்ளதைக் காணலாம்.

19-2-1630-ல் பிறந்துள்ள மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி அவர்களின் சமன்பாட்டினை ஆராய்ந்தால் பிறவி எண்-1, விதி எண்-4, பெயர் எண்-4.

C H A T H R A P A T H I S H I V A J I
3 5 1 4 5 2 1 8 1 4 5 1 3 5 1 6 1 1 1 - 58- 13 - 4

என அமையுமானால் 1-4
4
என்ற சமன்பாட்டில் அமைந்துள்ளதைக் காணலாம்.

1-4
5
என்ற சமன்பாட்டில் சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்புலகின் முடிசூடா மன்னனாகவும்; 1-4
4

என்ற சமன்பாட்டில் சத்ரபதி சிவாஜி அவர்கள் மராட்டியத்தின் வீர மன்னனாகவும் வாழ்ந்து மறைந்ததைக் காணலாம்.
அடுத்ததாக 1-ஆம் எண் வரிசையின் 10-ஆம் தேதி பிறந்தவர்களின் ஆதிக்க பலன்களைக் காண்போம். இவர்கள் சூரியனின் ஆதிக்கத் தோடு. 0 ஆகிய புவியின் ஈர்ப்பு சக்தியினாலும் பெருமளவு ஈர்க்கப்படுகின்றனர். பெயர் எண்-10-ஆக வந்தாலும், மேற்கூறியபடியே புவியின் ஈர்ப்புக்குட்படுகின்றனர்.

புவிவாழ் உயிர்களின் அக்கறையும், கருணையும் உடையவர்கள். இரக்க குணம் இவர்களிடமே சரணடைந்து காணப்படும். இதற்கு உதாரணமாக அன்னை தெரசாவைக் கூறலாம். இவரது பிறந்த தேதி 10-8-1910. இவரது இயற்பெயர்.

A G N E S G O N X H A B O J A X H I U

1 3 5 5 3 3 7 5 5 5 1 2 7 1 1 5 5 1 6 -71

அதாவது 1-2
8
என்ற சமன்பாடாக இருந்தது. அதன்பிறகு

T E R E S A
4 5 2 5 3 1 - 20

1-2
2-ஆக அமைந்தது.

M O T H E R T E R E S A
4 7 4 5 5 2 4 5 2 5 3 1 -47 - 2

1-2
2

மேற்கண்ட சமன்பாடுகளின் மூலமாக உலகில் எவரும் அநாதையாக இருக்கக் கூடாது என்று முடிவு கட்டி, அநாதைகளுக்கு எல்லாம் அன்னையாக வாழ்ந்தவர்; கருனை யும், இரக்கமும் இவரிடம் சிறைப்பட்டு இருந்தது எனலாம்.
1-ஆம் எண்ணில் 28-ஆம் தேதி பிறந்த வர்கள் சூரியனின் ஆதிக்க பலம் குறைந்த வர்கள். மென்மையானவர்கள். கோபமும், கூடவே நிதானமும் இவர்களின் உடன் பிறந்தவை. சற்று தன்னம்பிக்கையற்றவர்கள். பிறரைச் சார்ந்தே செயல்படுவார்கள். பெயர் எண்ணை வலிமையாக்கிக் கொண்டால், இத்தகையவர்களின் வாழ்வில் தங்குதடை யின்றி வெற்றிகள் வந்துசேரும். 28-1-1920-ல் பிறந்த விட்டலாச்சார்யா மற்றும் 28-6-1915-ல் பிறந்த சாண்டோ சின்னப்பா தேவர் அவர் களையும் உதாரணமாகக் கூறலாம்.

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் 4, 13, 22, 31, 8, 17, 26, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த எதிர்பாலரிடம் காதல் வசப்படு கின்றனர். இதில் 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களை மணம் புரிந்தால், இருவரும் ஒரே மனநிலையில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையின்றி காணப்படுவதால் திருமண வாழ்க்கை மிகுந்த வெற்றியை அளிக்காது. எனவே, அவர்களது திருமணத்தைத் தடுப்பது நல்லது. மற்றபடி 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் 3, 12, 21, 30, 6, 15, 24, 5, 14, 23 போன்ற தேதிகளில் பிறந்தவர்களை மணக்கலாம். அவர்களது வாழ்க்கை கணவன்- மனைவி என்ற கடமை உணர்வுடன் நடக்கும். மேற்கூறிய எண்களைப் போல் ஈர்ப்புடையதாக இருக்காது. திருமணத் தேதியைப் பொறுத்த வரை 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் திருமணம் செய்து கொள்ளலாம். மற்றபடி அன்றைய தினத்தின் கூட்டு எண்-5 அல்லது 8 வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்! காரணம், திருமணத் தேதியை அனுசரித்தும் குழந்தைகள் பிறக்கின்றனர்.

ஆக, திருமண நாளின் தேதி எண், அன்றையதின கூட்டு எண்ணும் பெற்றோர் களின் பிறவி எண், விதி எண்ணுக்குட்பட்டது. இதன் அடிப்படையில் ஆராய்ந்தால், குழந்தை பிறக்கப்போகும் தினத்தையும் முன்கூட்டியே எண்கணிதம் மூலம் கணிக்கலாம் என்பதும் தெளிவாகிறது.

1-ஆம் எண்காரர்களுக்கு திருமணத் தடை ஏற்பட அவர்களின் பெயர் எண்களே முக்கிய காரணமாக அமைகிறது. மற்றும் பெற்றோரின் பிறவி மற்றும் விதி எண், பெயர் எண் இவை ஒவ்வொன்றிற்கும் தொடர்பு உடையதாகவும், அதிர்ஷ்டகரமாகவும் அமைந்திருந்தால், தங்கள் பிள்ளைகளின் திருமணம் தடைப்படாது நன்கு நிறைவேறி விடும். பெயர் எண் துரதிர்ஷ்டகரமாக அமையுமானால் பிள்ளைகளின் திருமணமும் தடைப்படும். ஆராய்ச்சிப் பூர்வமாக தந்தையின் பெயர் எண்-8-ல் அமைந்திருந் தாலோ அல்லது அவரின் பிறவி எண்-8-ல் அமைந்திருந்தாலோ அவர் துயரப்பட வேண்டியவராகிறார். அத்துயரத்தில் தன் பிள்ளைகளுக்குத் தகுந்த காலத்தில் தகுந்த வரன் அமையவில்லையே என்ற துயரமும் அடங்கும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் பெயரை அதிர்ஷ்டகரமாக மாற்றி கையெழுத்து போட்டு வந்தாலே, தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமைந்து வாழ்க்கை பிரகாசமாக அமையும்.

எண்-1-ல் பிறந்தவர்கள், காதல்வசப் படுபவர்களின் பெயர் எண், விதி எண் மற்றும் பிறவி எண்களும் ஒன்றுக்கொன்று ஈர்ப்பு உடையதாக அமையும். அப்படி ஈர்ப்பு உடையதாக அமைந்தாலே அவர்களின் திருமணப் பொருத்தம் சரியானதாகவே அமையும். ஆனால், ஜாதக முறைப்படி பொருத்தம் பார்த்தோமானால் மாறுபாடாக அமையக் கூடும். ஆகவே, காதலர்கள் எண்கணித முறைப்படியே (நியூமராலஜி படியே) நல்ல அதிர்ஷ்டகரமான தேதியில் திருமணம் செய்து கொண்டால் நன்மையே நடைபெறும். காதலர்கள் திருமணத்திற்குப் பிறகு பெயர் மாற்றம் செய்து கொள்ளக் கூடாது. குறிப்பாக, கணவனின் முதல் எழுத்தை மனைவி இன்ஷியலாகப் பயன் படுத்தக் கூடாது; அப்படி பயன்படுத்தி னாலும் பொருத்தம் மாறுபடும்.

கணவன் பெயரின் முதல் எழுத்தை இன்ஷியலாகப் போட்டுக் கொள்ள விரும்பு பவர்கள் எண்கணித நிபுணர் ஒருவரின் ஆலோசனைப்படியே திருத்தம் செய்து கொள்ளவேண்டும். அப்படி திருத்தம் செய்து கொள்ளும்பட்சத்தில் பொருத்தம் மாறு படாது என்பது திண்ணம்.

(தொடரும்)
செல்: 99400 78841

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT - நன்றி பாலஜோதிடம்...
http://www.nakkheeran.in/users/frmMagazine.aspx?M=3

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Feb 02, 2012 12:13 pm

சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக