புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
2 Posts - 3%
jairam
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
2 Posts - 3%
சிவா
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
13 Posts - 4%
prajai
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
9 Posts - 3%
jairam
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_m10பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 15, 2012 11:36 pm


ஊழலை எதிர்த்து அண்ணா ஹசாரே கொடுக்கும் குரல் புதிதாகத் தெரிவதால், நாடு முழுவதும் ஆதரவு பெருகுகிறது. உண்மையில் இவர் கூறுவதைவிடக் கடுமையான சட்டங்கள் நம் நாட்டில் இருந்திருக்கின்றன. இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்த மிகப் பழைமையான சட்டம்.

இதைக் கேட்கும் அரசியல்வாதிகள் வயிற்றில் கண்டிப்பாகக் கிலி கிளம்பும். அந்தச் சட்ட நெறிமுறைகளின்படி, ஜனநாயக மன்றங்களில் கணக்குக் காட்டாத முன்னாள் உறுப்பினர்களும், பொதுச் சொத்தைச் சுரண்டுபவர்களும் தமது ஆயுள்காலம் முழுவதும் தேர்தலில் நிற்க முடியாது. இவர்களுடன் சேர்த்து அந்த முன்னாள்களின் உறவினர்களுக்கும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அன்றுபோல் இன்று இருந்தால், அரசியல் கட்சிகள் அதை இழுத்து மூடிவிட்டு வேறு வேலை பார்க்க வேண்டி இருக்கும்.

ஜனநாயக நாடான நம் இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆங்கிலேயர் காலத்தில் நடைமுறைக்கு வந்தது என நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தென் இந்தியாவில் மட்டும் உண்மை அதுவல்ல எனத் தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகள் கூறுகின்றன. இதில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம்போல் "சபை' என்ற பெயரில் ஒரு முன்னோடி அமைப்பு இருந்ததற்கான பல சுவையான குறிப்புகள் உள்ளன.

இந்தியாவின் பூர்வீகக் குடிகளான திராவிடர்கள், நம் நாட்டில் நீதி, நேர்மையை நிலைநாட்டும் வகையில் சட்டம் இயற்றி, ஆட்சி புரிந்தவர்கள் என்பதற்கான முக்கிய வரலாற்று ஆதாரம் இது.

கி.மு. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய மூன்று கல்வெட்டுகள் மிக முக்கியமானவை. இதில் இரண்டு உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன. சுமார் 8 முதல் 16-ம் நூற்றாண்டு வரை தென் இந்தியாவில் சபை என்ற அமைப்பு செயல்பட்டு வந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, பிராமணர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட இடங்களான பிரம்மதேயம் எனப்படும் கிராமங்களில் இன்றைய ஜனநாயக மன்றங்கள்போல் சபைகள் பணியாற்றியுள்ளன.

குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரைப்போல் சோழ, பாண்டியர், பல்லவர் மற்றும் விஜயநகர மன்னர்களின் ஆட்சியின் கீழ் இயங்கி வந்த சபைகளுக்கு முதல் அமைச்சரைப்போல் ஒரு தலைவர் இல்லையே தவிர, கிராமங்களைப் பல பிளாக்குகளாகப் பிரித்து அதற்கு எம்எல்ஏவைப்போல ஓர் உறுப்பினர் இருந்துள்ளார். இவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தாலும், அதற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் இன்றைக்குத் தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்கும் விதிகளுக்குப் பொருந்தும்படியாக அமைந்திருந்தன.

இந்தச் சபையின் உறுப்பினர்கள் செய்யும் குற்றங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பிராமணர்களைக் கொன்ற கொலையாளி, போதை தரும் பானத்தைக் குடித்தவன், திருட்டு செய்தவன் மற்றும் தனது குருவின் மனைவியுடன் பாலியல் குற்றம் செய்தவன் ஆகியவர்கள் முதல் வகை குற்றவாளிகளாகக் கருதப்படுகிறார்கள்.

இரண்டாம் வகை குற்றங்களாக, கடந்த முறை கிராம சபையின் உறுப்பினராக இருந்தபோது செய்த செலவிற்கான கணக்கைக் காட்டாதவர்கள் மற்றும் தன் பதவிக் காலத்தில் பொதுச் சொத்தைக் களவாடியவர்கள் ஆகியோர் கருதப்படுகிறார்கள்.

மூன்றாவது வகை குற்றங்களில் கீழ்ச் சாதியினருடன் சாதாரண பழக்கவழக்கங்களில் தொடர்பு வைத்திருப்பவர்கள் மற்றும் சாதியில் இருந்து விலக்கப்பட்டோர் வருகின்றனர்.

இதில், முதல் வகையினர் தங்கள் ஆயுள்காலம் முழுவதும் தேர்தலில் பங்கு கொள்ளும் தகுதியை இழக்கிறார்கள். மூன்றாவது வகையினர், அதற்கான சில பரிகாரங்கள் செய்துவிட்டு மீண்டும் போட்டியிடலாம். ஆனால், இவை அனைத்தையும்விட இரண்டாம் வகையினருக்கான தண்டனை மிகவும் அதிகம்.

இவர்களின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, "கிராமத் துரோகிகள்' என்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்டனர். இது மிகப்பெரிய குற்றமாகக் கணக்கில் எடுக்கப்பட்டு, இவர்களுடன் சேர்த்து அந்த முன்னாள் உறுப்பினர்களின் தந்தை, சகோதரர்கள், தாய், தந்தையுடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் சித்தி, அத்தை ஆகியோரின் கணவன்மார்கள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் என மூன்று தலைமுறைகளுக்கு நீளும் பட்டியலில் எவருமே நிரந்தரமாகத் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தலில் போட்டியிட நிர்ணயிக்கப்பட்ட இத் தகுதிகளை இப்போது நாம் அமல்படுத்த நினைத்தால் கனவிலும் அது நடக்காத செயலாகும்.

அந்தக் காலத்திலேயே தேர்தலில் போட்டியிடும் பிராமணர்கள் ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களில் ஒன்றைக் கண்டிப்பாகப் படித்திருக்க வேண்டும் எனத் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் சொந்தமாக வீடு மற்றும் ஒன்றரை ஏக்கர் நிலம் வரி கட்டக் கூடிய நிலையில் இருக்க வேண்டும். ஆனால், இவை வரதட்சிணையாகப் பெற்றிருக்கக் கூடாது.

சேவை மனப்பான்மையில் உறுப்பினர்களாக வருபவர்கள், சுரண்டல் செய்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கடுமையான தகுதி.

அதேபோல், ஒரே குடும்பம் ஆட்சி செய்யாதபடி ஒரு சட்டம் இயற்றப்பட்டிருந்தது. அதன்படி, கடைசி உறுப்பினராக இருந்தவர்கள் இரண்டு முதல் பத்து ஆண்டுகள் வரையிலான இடைவெளிக்குப் பிறகுதான் போட்டியிட முடியும். இவர்களின் உறவினர்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடாது.
இத்துடன் புதியவர்களுக்குக் கட்டாய வாய்ப்பளிக்கும் வகையில், அனுபவமில்லாத உறுப்பினர்கள் இருவர் கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியும் உண்டு.

ஆளும் கட்சியில் நடக்கும் தேர்தல், அவர்களுக்குச் சாதகமாகத்தான் அமையும் என இன்று இருக்கும் பொதுவான புகாருக்கு அந்தக் காலத்தில் வழியில்லை. காரணம், தேர்தல் நடத்துவதற்கு முன்பாக சபைகள் கலைக்கப்பட்டு, ஊர் கணக்கு மற்றும் மத்தியஸ்தன் ஆகியோர் தலைமையில் தேர்தல் நடைபெறும்.
கிராமத்தின் பிளாக்குகள் வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். இது "குடஓலை' முறை என வரலாற்றாளர்களால் அழைக்கப்படுகிறது.

ஜனநாயக நாடான நம் இந்தியாவில் தவறு செய்யும் அரசியல்வாதியைத் தண்டிப்பது அல்லது அபராதம் விதிப்பது என்பது பெரும்பாலும் நடப்பதில்லை. ஆனால், இது 10-ம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் நடந்திருக்கிறது.

திருநெல்வேலியில் உள்ள மண்ணூர் கிராமத்தில் கிடைத்த கல்வெட்டுகளின்படி, சபை நடப்பு விதிமுறைகளில் உறுப்பினர்கள் தவறு செய்தால் அபராதம் எனக் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. இந்த முறையை தற்போது கடைப்பிடித்தால் சபை ஒத்திவைப்பு, வெளிநடப்பு மற்றும் மைக் உடைப்பு போன்ற கலாட்டாக்களுக்கு வழியில்லாமல் போய்விடும். அதேநேரத்தில் அரசு கஜானாவும் நிரம்புவது உறுதி.

பிரச்னைகளைக் கையிலெடுக்கும் எதிர்க்கட்சிகள் சபைகளை நடத்த விடாமல் மக்கள் பணத்தை வீண் செய்வதைத் தடுக்கவும் நம் முன்னோர்கள் வழிவகுத்துள்ளனர். தங்களுக்குள் கோஷ்டி அமைத்துக்கொண்டு, சபையின் அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தடையாக இருப்பவர்கள் மீது, ஒருமுறைக்கு ஐந்து பணம் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அதேசமயம் சபை நடவடிக்கைகளில் தொடர்ந்து கலந்துகொள்ளும் பொருட்டு அவர்கள் சபையில் இருந்து வெளியேற்றப்படவில்லை. மாறாக, கட்டாயமாக சபை நடப்புகளில் கலந்து கொள்ளும்படியான நிலை இருந்தது.

தற்போது கிளப்பப்படும் அரசியல்வாதிகளுக்கான ஓய்வு வயது அப்போதே நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் 35 முதல் 70 வயது வரையிலானவர்கள் மட்டும் தேர்தலில் போட்டியிட விதி இருந்தது. இதில் குறைந்தபட்ச வயதை பிறகு இரண்டு வயது அதிகமாக்கி 37 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பை 75 எனவும் மாற்றி அமைக்கப்பட்டது.

இன்று ஆளும் அரசு அமல்படுத்தும் மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரிடம் அனுமதி பெறுவதுபோல், அந்தக் காலங்களில் மன்னரால் போடப்பட்ட ஆணைகளைச் சபைகளில் அமலாக்கினர்.
எந்த ஒரு விஷயத்துக்கும் வெளிநாடுகளை முன் உதாரணமாகக் காட்டிப் பழகிய நாம், சற்று நம் காலடி மண்ணின் வரலாற்றைத் தோண்டினால், உலகுக்கே நாம்தான் வழிகாட்டிகளாக இருக்க முடியும். இதை மீண்டும் அமல்செய்ய ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் தற்போதைய அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா?

(கட்டுரையாளர்: அலிகர் முஸ்லிம்
பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்
துறையின் உதவிப் பேராசிரியர்).



தினமணி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 15, 2012 11:51 pm

உண்மையில் வியப்பாக இருக்கிறது. இதில் நல்ல நெறிமுறைகள் பல உள்ளன. ஆனால் ஒரே குறை சாதி அடிப்படையில் தவறுகளை பிரித்தது.

பகிர்வுக்கு நன்றி பகவதி.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 16, 2012 12:07 am

சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, "கிராமத் துரோகிகள்' என்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்டனர். இது மிகப்பெரிய குற்றமாகக் கணக்கில் எடுக்கப்பட்டு, இவர்களுடன் சேர்த்து அந்த முன்னாள் உறுப்பினர்களின் தந்தை, சகோதரர்கள், தாய், தந்தையுடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் சித்தி, அத்தை ஆகியோரின் கணவன்மார்கள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் என மூன்று தலைமுறைகளுக்கு நீளும் பட்டியலில் எவருமே நிரந்தரமாகத் தேர்தலில் போட்டியிட முடியாது.


சூப்பருங்க அருமையிருக்கு





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பழங்கால இந்தியாவில் ஊழல் தடுப்புச் சட்டங்கள் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக