புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தமிழச்சியின் கத்தி! Poll_c10 தமிழச்சியின் கத்தி! Poll_m10 தமிழச்சியின் கத்தி! Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
 தமிழச்சியின் கத்தி! Poll_c10 தமிழச்சியின் கத்தி! Poll_m10 தமிழச்சியின் கத்தி! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
 தமிழச்சியின் கத்தி! Poll_c10 தமிழச்சியின் கத்தி! Poll_m10 தமிழச்சியின் கத்தி! Poll_c10 
3 Posts - 6%
prajai
 தமிழச்சியின் கத்தி! Poll_c10 தமிழச்சியின் கத்தி! Poll_m10 தமிழச்சியின் கத்தி! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
 தமிழச்சியின் கத்தி! Poll_c10 தமிழச்சியின் கத்தி! Poll_m10 தமிழச்சியின் கத்தி! Poll_c10 
2 Posts - 4%
Rutu
 தமிழச்சியின் கத்தி! Poll_c10 தமிழச்சியின் கத்தி! Poll_m10 தமிழச்சியின் கத்தி! Poll_c10 
1 Post - 2%
சிவா
 தமிழச்சியின் கத்தி! Poll_c10 தமிழச்சியின் கத்தி! Poll_m10 தமிழச்சியின் கத்தி! Poll_c10 
1 Post - 2%
viyasan
 தமிழச்சியின் கத்தி! Poll_c10 தமிழச்சியின் கத்தி! Poll_m10 தமிழச்சியின் கத்தி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தமிழச்சியின் கத்தி! Poll_c10 தமிழச்சியின் கத்தி! Poll_m10 தமிழச்சியின் கத்தி! Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
 தமிழச்சியின் கத்தி! Poll_c10 தமிழச்சியின் கத்தி! Poll_m10 தமிழச்சியின் கத்தி! Poll_c10 
2 Posts - 15%
Rutu
 தமிழச்சியின் கத்தி! Poll_c10 தமிழச்சியின் கத்தி! Poll_m10 தமிழச்சியின் கத்தி! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழச்சியின் கத்தி!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 06, 2012 6:25 am

பாவேந்தரின் ‘தமிழச்சியின் கத்தி’ ஒரு புரட்சிக் காப்பியம் தமிழர் இனமான உணர்வு மிக்க எழுச்சிக் காப்பியம், தமிழர்களை, தமிழர் மாண்பை, தமிழ் பண்பை, தமிழர் நலத்தைத் தீய்த்திட்ட தீயவன் தேசிங்கின் ஆட்சியில் நடைபெற்ற கொடுங் கோன்மையை எடுத்துரைக்கும் வரலாற்று நூல் இது. கவின் மிகு கற்புக் காப்பியம், மறத்தி ஒருத்தி மன்னனை எதிர்த்து கருத்தூட்டி இழிந்தோர் ஆட்சியை எரித்திட வழிகாட்டும் அரசியற் காப்பியம்.

ஆர்க்காடு 172 பாளையப் பட்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலர்க்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தொழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று வளவனூர் வழியாக வருகையில், வளவனூர்ப் புறத்துத் தென்னந் தோப்பொன்றில் திம்மனைக் காணுகிறார்கள். இப்படியாக ஆரம்பிக்கிறது இந்தக்காவியம். காவியத்தின் இறுதியில் தமிழச்சியின் வீராவேச முழக்கத்தில் இருந்து ஒரு பகுதி:

'தமிழரெல்லாம் வாழார்கள் நீதான் வாழ்வாய்;
தமிழர்க்கு மறமில்லை; நன்று சொன்னாய்.
இமயமலைக் கல்சுமந்த வடநாட் டான்பால்
சேரனார் இயல்புதனைக் கேள்விப் பட்ட
உமதுநாட் டானிருந்தால் கேட்டுப் பார்ப்பாய்!
உயிர்பதைப்பார் தமிழ்மகனைக் கனவில் கண்டால்!
எமதருமைத் தமிழ்நாட்டின் எச்சி லுண்டாய்;
எச்சிலிட்ட கையைநீ இகழ்ச்சி செய்தாய்.

யாமெல்லாம் சாகத்தான் வேண்டும் போலும்!
இருந்தாலோ வடநாட்டார் வாழார் போலும்!
நீமற்றும் உன்நாட்டார் வளர்ச்சி எய்தி
நீளும்நிலை யைத்தானே எதிர்பார்க் கின்றோம்!
தூய்மையில்லை; நீங்களெல்லாம் கலப்ப டங்கள்
துளிகூட ஒழுக்கமில்லாப் பாண்டு மக்கள்!
நாய்மனப்பான் மைஉமக்கு! வளர்ச்சி பெற்றால்
நடுநிலைமை அறிவீர்கள்! அடங்கு வீர்கள்!

வஞ்சகத்தைத் தந்திரத்தை மேற்கொள் ளாத
வாய்மையுறு தமிழ்நாட்டார் தோற்றார். அந்த
வஞ்சகத்தைத் தந்திரத்தை உயிராய்க் கொண்ட
வடநாட்டார் வென்றார்கள்; இதன்பொ ருள்கேள்:
நெஞ்சத்தால் தமிழ்நாட்டார் வென்றார்; அந்த
நிலைகெட்டார் தோற்றார்கள் என்று ணர்வாய்.
கொஞ்சமுமே உயர்நோக்கும் தறுகண் வாய்ப்பும்
கொள்ளாத வாழைக்குக் கீழ்க்கன் றேகேள்.

ஆட்சிஎனில் ஐம்பொறியை ஆள்வ தாகும்!
அடுக்காத செயல்செய்தோன் ஆளக் கூடும்;
காட்சியிலே காணுமுகில் ஓவி யந்தான்
கலைந்துவிடும் ஒருநொடிக்குள்; நிலைப்ப தில்லை!
காட்டிலொரு முயற்குட்டி துள்ளக் கூடும்;
கருஞ்சிறுத்தை கண்விழித்தால் தெரியும் சேதி!
தோட்டத்துப் புடலங்காய் தமிழர் நாடு
தூங்கிவிழித் தால்உடையோன் உரிப்பான் தோலை!

அறம்எனுமோர் அடிப்படைகொண் டதுதான் வீரம்!
அவ்வீரம் தமிழரிடம் அமைந்த தாகும்.
பிறவழியால் வெற்றியொன்றே கருத்தாய்க் கொண்ட
பிழைபட்ட ஒழுக்கத்தைத் தமிழர் ஒப்பார்!
முறைதெரியா முட்டாளே! திருந்தச் சொன்னேன்
முன்இழைத்த குற்றத்தை இனிச்செய் யாதே.
சிறையோடா? கொலையோடா? எனக்குத் தண்டம்
செப்படா' என்றுரைத்துத் தீப்போல் நின்றாள்.



இனி காவியத்தை முதலில் இருந்து படிப்போம்.
(தொடரும்)


avatar
Guest
Guest

PostGuest Sat Oct 06, 2012 11:56 am

சூப்பருங்க நன்றி சாமி அண்ணே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 07, 2012 7:01 am

1. சுதரிசன் சிங்க் துடுக்கு

அகவல்

தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்;
ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி
நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது.
நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு
பாளைய மாகப் பகுக்கப் பட்டது;
பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்;
பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த்
தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள்.
தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்;
தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்;
தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது.
சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன்
இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர்.
சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத்
தேசிங் கிடத்தில் செல்வாக் குண்டு.

புதுவைக் கடற்கரை போனான் சுதரிசன்;
வருகையில் இடையில் வளவனூர்ப் புறத்தில்
தென்னந் தோப்பில் திம்மனைக் கண்டான்.
தெளிவிலாத் தமிழில் திம்மனைக் கேட்டான்:
உன்னதா இந்தத் தென்னந் தோப்பென்று!
திம்மன் ஆம்என்று செப்பி வரவேற்றுக்
குளிர்ந்த இளநீர் கொடுத் துதவினான்.
சுதரிசன் உன்வீடு தொலைவோ என்றான்.
அருகில் என்றான் அன்புறு திம்மன்.
சுதரிசன் அவனின் தோழன் ரஞ்சித்தும்
திம்மன் வீடு சேர்ந்தனர்; இருந்தார்!
மாடு கறந்து வழங்கினான் பாலும்;
ஆடு சமைத்தும் அருத்தினான் திம்மன்.
திண்ணையில் சுதரிசன் திம்மன் ரஞ்சித்
உண்ட இளைப்பொடும் உட்கார்ந் திருந்தனர்.
திம்மன் மனைவி 'சுப்பம்மா' என்பவள்
எம்மனி தனையும் ஈன்ற பிள்ளையாய்க்
கொள்ளும் உள்ளம் கொண்டவள்
பிள்ளை இல்லாதவள் ஆத லாலே!

(தொடரும்)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sun Oct 07, 2012 10:11 pm

தேசிங்கு ராஜா நம்மாளு என்று அல்லவா நினைத்தேன்!!!
நம்ம ஆளுங்க கதையெல்லாம் குழி தோண்டி புதைச்சிட்டான்களா?



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 08, 2012 10:16 pm

2. சுதரிசன் சூழ்ச்சி
எண்சீர் விருத்தம்
சுதரிசன்சிங்க் திம்மனிடம் பேசு கின்றான்;
தோகைமேல் அவன்உளத்தைச் செலுத்து கின்றான்.
எதையோதான் பேசுகின்றான் சுப்பம் மாமேல்
ஏகியதன் நெஞ்சத்தை மீட்டா னில்லை!
இதையறியான் திம்மன்ஒரு கவட மில்லான்;
இளித்தவா யால்"உம்உம்" எனக்கேட் கின்றான்!
கதைநடுவில் சுதரிசன்சிங்க் தண்ணீர் கேட்பான்;
கனிஇதழாள் வரமகிழ்வான்; போனால் நைவான்!

உளம்பூத்த சுதரிசனின் ஆசைப் பூவும்
ஒருநொடியில் பிஞ்சாகிக் காயும் ஆகித்
தளதளத்த கனியாகிப் போன தாலே
தாங்காத நிலையடைந்தான். சூழ்ச்சி ஒன்றை
மளமளென நடத்தஒரு திட்டம் போட்டான்;
'வாஇங்கே திம்மாநீ விரைவிற் சென்று
குளத்தெதிரில் மரத்தினிலே கட்டி வைத்த
குதிரையினைப் பார்த்துவா' என்று சொன்னான்.

'விருந்தினரை வரவேற்பான் தமிழன்; அந்த
விருந்தினர்க்கு நலம்செய்வான் தமிழன்; சாவா
மருந்தேனும் வந்தவர்கள் பசித் திருக்க
வாயில்இடான் தமிழன்;இது பழமை தொட்டே
இருந்துவரும் பண்பாகும். எனினும் வந்தோன்
எவன்அவனை ஏன்நம்ப வேண்டும்' என்று
துரும்பேனும் நினையாத தாலே இந்நாள்
தூய்தமிழன் துயருற்றான்! வந்தோர் வாழ்ந்தார்!





[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Oct 10, 2012 4:32 pm

'குதிரைகண்டு வருகின்றேன்' என்று திம்மன்
குதித்துநடந் தான்!சென்றான்; சுதரி சன்சிங்க்
முதிராத பழத்துக்குக் காத்தி ருந்து
முதிர்ந்தவுடன் சிறகடிக்கும் பறவை யைப்போல்
அதிராத மொழியாலே அதிரும் ஆசை
அளவற்றுப் போனதோர் நிலைமை யாலே
'இதுகேட்பாய் சுப்பம்மா சும்மா வாநீ
ஏதுக்கு நாணுகின்றாய்' என்று சொன்னான்.

'ஏன்'என்று வந்துநின்றாள். 'சுப்பம் மாநீ
இச்சிறிய ஊரினிலே இருக்கின் றாயே
நானிருக்கும் செஞ்சிக்கு வருகின் றாயா?
நகைகிடைக்கும் நல்லநல்ல ஆடை யுண்டு.
மான்அங்கே திரிவதுண்டு மயில்கள் ஆடும்
மகிழ்ச்சியினை முடியாது சொல்வ தற்கே;
கானத்தில் வள்ளிபோல் தனியாய் இங்கே
கடுந்துன்பம் அடைகின்றாய்' என்று சொன்னான்.

'இல்லையே! நான்வேல னோடு தானே
இருக்கின்றேன் உளமகிழ்ச்சி யாக' என்று
சொல்லினாள்; சுதரிசனின் வஞ்சம் கண்டாள்;
துயரத்தை வௌிக்காட்டிக் கொள்ள வில்லை;
இல்லத்தின் எதிரினிலே சிறிது தூரம்
எட்டிப்போய் நின்றபடி 'போனார் இன்னும்
வல்லை' என்று முணுமுணுத்தாள். சுதரி சன்சிங்க்
வந்தவழி யேசென்றான் தோழ னோடே!

(தொடரும்)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Oct 11, 2012 12:57 pm

'சுப்பம்மா வுக்கிழைத்த தீமை தன்னைச்
சுப்பம்மா திம்மனிடம் சொல்லி விட்டால்
தப்புவந்து நேர்ந்துவிடும்; கொண்ட நோக்கம்
சாயாதே' எனஎண்ணிச் சுதரி சன்சிங்க்
அப்போதே எதிர்ப்பட்ட திம்ம னின்பால்
அதைமறைக்கச் சிலசொற்கள் சொல்லு கின்றான்:
'அப்பாநீ இங்கிருந்து துன்ப முற்றாய்.
அங்கேவந் தால்உனக்குச் சிப்பாய் வேலை

தரும்வண்ணம் மன்னரிடம் சொல்வேன்; மன்னர்
தட்டாமல் என்பேச்சை ஒப்புக் கொள்வார்.
திரும்புகின்ற பக்கமெலாம் காட்டு மேடு
சிற்றூரில் வாழ்வதிலே பெருமை இல்லை;
விருந்தாக்கிப் போட்டஉன்னை மறக்க மாட்டேன்
வீட்டினிலே சுப்பம்மா தனிமை நன்றோ?
கரும்புவிளை கொல்லைக்குக் காவல் வேண்டும்.
காட்டாற்றின் ஓட்டத்தில் மான்நிற் காதே.

இளமங்கை உன்மனைவி நல்ல பெண்தான்
என்றாலும் தனியாக இருத்தல் தீது!
'குளக்கரைக்குப் போ'என்றேன் நீயும் போனாய்
கோதையொடு தனியாக நாங்கள் தங்க
உளம்சம்ம தித்ததா? வந்தோம் உன்பால்!
உனக்குவெளி வேலைவந்தால் போக வேண்டும்.
இளக்கார மாய்ப்பேசும் ஊர்பெண் ணென்றால்
உரைக்கவா வேண்டும்?நீ உணர்ந்தி ருப்பாய்.

ஒருமணிநே ரம்பழகி னாலும் நல்லார்
உலகம்அழிந் தாலும்மறந் திடுவ தில்லை.
பருகினேன் உன்வீட்டுப் பசும்பால் தன்னைப்
பழிநினைக்க முடியுமா? திம்மா உன்னை
ஒருநாளும் மறப்பதில்லை. செஞ்சிக் கேநான்
உனைக்கூட்டிப் போவ'தென முடிவு செய்தேன்.
வருவாய்நீ! சிப்பாய்என் றாக்கி உன்னை
மறுதிங்கள் சுபேதாராய்ச் செய்வேன் உண்மை.

இரண்டுநா ளில்வருவேன் உன்க ருத்தை
இன்னதென்று சொல்லிவிட வேண்டும். செஞ்சி
வருவதிலே உனக்குமிக நன்மை உண்டு!
வரவழைத்த எனக்குமொரு பேரு முண்டு!
கருதாதே நம்நட்பைப் புதிய தென்று!
கடலுக்குள் ஆழத்தில் மூழ்கி விட்டேன்;
பெரிதப்பா உன்அன்பு! கரையே இல்லை!
பிறகென்ன? வரட்டுமா? என்றான்; சென்றான்.

(தொடரும்)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Oct 11, 2012 8:20 pm

கருதாதே நம்நட்பைப் புதிய தென்று!
கடலுக்குள் ஆழத்தில் மூழ்கி விட்டேன்;
பெரிதப்பா உன்அன்பு! கரையே இல்லை!

துரோகிகள் இனிக்க இனிக்கத்தான் பேசுவார்கள்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 13, 2012 9:35 pm

3. திம்மன் பூரிப்பு
தென்பாங்கு-கண்ணிகள்

'நற்காலம் வந்ததடி பெண்ணே - இங்கு
நாமென்ன நூறுசெல விட்டோம்?
சொற்போக்கில் வந்தவிருந் தாளி - அவன்
சூதற்ற நல்லஉளம் கொண்டோன்;
பற்காட்டிக் கெஞ்சவில்லை நாமும் - நம்
பங்கில்அவன் நல்லஉள்ளம் வைத்தான்.
புற்காட்டில் நாளும்உழைத் தோமே - செஞ்சி
போய்அலுவல் நான்புரிய வேண்டும்.

என்றுபல திம்மன்உரைத் திட்டான் - அவன்
இன்பமனை யாளும்உரைக் கின்றாள்:
'தென்னைஇளந் தோப்புமுதி ராதா? - நம்
தெற்குவௌிப் புன்செய்விளை யாதா?
சின்னஎரு மைவிலைக்கு விற்றால் - கையில்
சேரும்பணம் ஏர்அடிக்கப் போதும்.
என்னஇருந் தாலும்சுபே தாரை - நான்
என்வரைக்கும் நம்பமுடி யாது.

நம்குடிக்கு நாம்தலைமை கொள்வோம் - கெட்ட
நாய்ப்பிழைப்பில் ஆயிரம்வந் தாலும்
பங்கமென்று நாமும்அறி வோமே - இதில்
பற்றுவைக்க ஞாயமில்லை' என்றாள்.
'தங்கமயி லேஇதனைக் கேட்பாய் - என்சொல்
தட்டிநடக் காதிருக்க வேண்டும்.
பொங்குதடி நெஞ்சில்எனக் காசை - செஞ்சிப்
பொட்டலில் கவாத்துசெய்வ தற்கே!

(தொடரும்)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Oct 16, 2012 4:12 pm

தின்றதனை நாடொறுமே தின்றால் - நல்ல
சீனியும் கசக்குமடி பெண்ணே.
தென்னையையும் குத்தகைக்கு விட்டுப் - புன்
செய்தனையும் குத்தகைக்கு விட்டுப்
பின்னும் உள்ள காலிகன்று விற்று - நல்ல
பெட்டையையும் சேவலையும் விற்றுச்
சின்னதொரு வீட்டினையும் விற்று - நல்ல
செஞ்சிக்குடி ஆவமடி' என்றான்.

நாளைஇங்கு நல்லுசுபே தாரும் - வந்து
நம்மிடத்தில் தங்குவதி னாலே
காளைஒன்றை விற்றுவரு கின்றேன் - உன்
கைந்நிறையக் காசுதரு கின்றேன்.
வேளையொடு சோறுசமைப் பாயே - அந்த
வெள்ளரிப்பிஞ் சைப்பொரிக்க வேண்டும்;
காளிமுத்துத் தோட்டத்தினில் பாகல் - உண்டு
கட்டிவெல்லம் இட்டுவை குழம்பு!

கார்மிளகு நீர்இறக்கி வைப்பாய் - நல்ல
கட்டித்தயிர் பாலினில் துவைப்பாய்;
மோரெடுத்துக் காயமிட்டுத் தாளி - நல்ல
மொச்சைஅவ ரைப்பொரியல் வேண்டும்.
சீருடைய தாகிய தென்பாங்கு - கறி
செய்துவிடு வாய்இவைகள் போதும்.
நேரில்வட பாங்கும்மிக வேண்டும் - நல்ல
நீள்செவிவெள் ளாட்டுக்கறி ஆக்கு.

பாண்டியனின் வாளையொத்த வாளை - மீன்
பக்குவம் கெடாதுவறுப் பாயே.
தூண்டிலில் வரால்பிடித்து விற்பார் - பெருந்
தூணைஒத்த தாய்இரண்டு வாங்கு;
வேண்டியதைத் தின்னட்டும் சுபேதார்' - என்று
வெள்ளைமனத் திம்மன்உரைத் திட்டான்.
தாண்டிநடந் தார்இரண்டு பேரும் - உண்ணத்
தக்கபொருள் அத்தனையும் சேர்க்க!

(தொடரும்)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக