புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
3 Posts - 3%
manikavi
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Rutu
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
216 Posts - 42%
heezulia
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
194 Posts - 38%
Dr.S.Soundarapandian
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
18 Posts - 3%
sugumaran
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10கவிதையில் யாப்பு - Page 3 Poll_m10கவிதையில் யாப்பு - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதையில் யாப்பு


   
   

Page 2 of 29 Previous  1, 2, 3 ... 15 ... 29  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 08, 2012 8:38 am

First topic message reminder :

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.





ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Nov 10, 2012 12:00 pm

கவிதையில் யாப்பு: பயிற்சி விடைகள்
3.4. அகவற் பயிற்சி
பயிற்சி 1. விடை

கல்வி செல்வம் வீரம் கொண்ட
நல்லோர் இன்று கானல் நீரே.


கல்/வி செல்/வம் வீ/ரம் கொண்/ட
நல்/லோர் இன்/று கா/னல் நீ/ரே.

நேர்நேர் நேர்நேர் நேர்நேர் நேர்நேர்
நேர்நேர் நேர்நேர் நேர்நேர் நேர்நேர்

பயிற்சி 2. விடை

வருவது உரைத்திடும் அரியதோர் கலைதனில்
கரையறு புலமையை உடையவர் மிகச்சிலர்.


வரு/வது உரைத்/திடும் அரி/யதோர் கலை/தனில்
கரை/யறு புல/மையை உடை/யவர் மிகச்/சிலர்.

நிரைநிரை நிரைநிரை நிரைநிரை நிரைநிரை
நிரைநிரை நிரைநிரை நிரைநிரை நிரைநிரை

’புலமையை’ என்பதில் ஐகாரக் குறுக்கம்
பயில ஈரசைச் சீராகும் அறிக. ... [புலமையை -> புலமயை]

பயிற்சி 3. விடை

காற்றினும் கடுகிச் சென்றது புரவி.
பாட்டினில் அதனைச் சொல்வது எளிதோ?


காற்/றினும் கடு/கிச் சென்/றது புர/வி.
பாட்/டினில் அத/னைச் சொல்/வது எளி/தோ?

நேர்நிரை நிரைநேர் நேர்நிரை நிரைநேர்
நேர்நிரை நிரைநேர் நேர்நிரை நிரைநேர்

பயிற்சி 4. விடை

குளிர்பனிக் காற்றின் பெயராம் ஊதை
வடக்கில் இருந்து வருவது வாடை
கிழக்கில் கொண்டல் மேற்கில் கோடை
தெற்கில் தென்றல் சுழன்றால் சாரிகை.


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Nov 10, 2012 1:41 pm

பயிற்சி 5. செப்பலிலிருந்து அகவல்

செப்பல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளின்
மூவசைச் சீர்களை ஈரசை யாக்கி
முதற்சீர் எதுகையும் பொருளும் தங்கி
அகவல் ஓசை கேட்க எழுதுக.

கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட
மாடியில் போட்ட வடாம்.


பயிற்சி 6. துள்ளலிலிருந்து அகவல்

துள்ளல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளின்
மூவசைச் சீர்களை ஈரசை யாக்கி
மூன்று அடிகளில் வந்திடு மாறு
அகவல் ஓசை கேட்க எழுதுக.

வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்து
இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.


பயிற்சி 7. உரைநடை வாக்கியத்திலிருந்து அகவல்

கீழ்வரும் உரைநடை வாக்கியம் வைத்து
ஈரசைச் சீர்கள் மட்டுமே பயின்று
மூன்று அடிகளில் வந்திடு மாறு
அகவல் ஓசை கேட்க எழுதுக.

இரண்டு மருங்குகளிலும் பரந்த மணல் இருக்க, கரை ஓரத்தில் கையகலத்துக்கு நீர் ஆடிடும் வறண்ட காவிரி.

பயிற்சி 8. கலைந்த சொற்களிலிருந்து அகவல்
கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
மூன்று அடிகளில் வந்திடு மாறு
அகவல் ஓசை கேட்க எழுதுக.

மகிழ்ந்த துள்ளலில் கேட்டு சிரித்து துள்ளிய குட்டி பாப்பா பயந்தது கன்றுக் உறுமல் நன்றாய்ச் பன்றியின்

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Nov 11, 2012 7:41 am

பயிற்சி 5. விடை

கண்ணால் பார்த்தால் காக்கை பறக்குமா?
மண்காற் றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடு பட்டு வாழ்க்கை நடக்க
மாடியில் உலர்த்திய வடகம் அன்றோ?

பயிற்சி 6. விடை

குறைந்தது மூன்று விதத்தில் எழுதலாம்.
இறுதி அடியினில் அகவல் ஓசை
சொற்கள் சுருங்க மாறுதல் காண்க.

வீட்டின் உள்ளே ஓடிடும் குழந்தையைப்
பிடித்து இழுத்து இடுப்பில் இருத்தி
நிலவினைக் காட்டியே உணவினை ஊட்டினாள்.

வீட்டின் உள்ளே ஓடும் குழந்தையைப்
பிடித்து இழுத்து இடுப்பில் இருத்தி
நிலவைக் காட்டி உணவை ஊட்டினாள்.

வீட்டின் உள்ளே ஓடும் குழந்தையைப்
பிடித்து இழுத்து இடுப்பில் இருத்தி
நிலவு காட்டி உணவூட் டினாள்.

பயிற்சி 7. விடை

இரண்டு பக்கமும் மணலே பரந்து
கரையின் ஓரம் ஒருகை அகலமே
நீரென நிற்கும் வரண்ட காவிரி.

இருபுறம் மணலே பரந்து இருக்கக்
கரையின் விளிம்பில் கோவண அகலமே ... [’கையின் அகலமே’]
நீரது நிற்கும் வரண்ட காவிரி.

பயிற்சி 8. விடை

கன்றுக் குட்டி துள்ளிய துள்ளலில்
நன்றாய்ச் சிரித்து மகிழ்ந்த பாப்பா
பன்றியின் உறுமல் கேட்டு பயந்தது.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Nov 11, 2012 7:11 pm

பயிற்சி 9. மறைந்துள்ள பழமொழிகள்
கீழ்வரும் பெயர்வினைச் சொற்களில் நான்கு
பழமொழிகள் உள்ளன மறைந்து. அவற்றைத்
தேடி அந்தாதி போலமைத்து நான்கு
அடிகளில் அகவல் ஒலிவர எழுதுக.

மலை, பனி, குளம், கிணறு, தவளை, உலகு
வந்தது, நீங்கும், பெய்தால், நிரம்பும், போட்டு, தேடினான், அறியுமோ


பயிற்சி 10. காளமேகத்தின் சிலேடை அகவலில்

எள்ளும் பாம்பும் ஒன்றெனக் காளமேகம்
வெள்ளிய பாவில் சிலேடையாய்ச் சொன்னதை
அடிகளின் சீர்களில் ஈரசை பயின்று
அகவல் ஓசை கேட்க எழுதுக.

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் -- தேடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடும்பாம் பெள்ளெனவே யோது.
---காளமேகப் புலவர், பாம்பும் எள்ளும் சிலேடை


*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 12, 2012 7:20 am

3.6. செப்பல் ஓசை

செப்புதல் என்றால் பதில்சொற் கூறுதல்
தானே இயல்பாக மறைவின்றி மொழிவது.

"மறைத்துக் கூறாது செப்பிக் கூறுதல்"
என்பார் நச்சினார்க் கினியர் உரையில்.

"இசைகுறித்து வருதலின்றி செப்புத லாகிய
வாக்கியம் போன்ற ஓசை" என்று
கூறுவார் இளம்பூ ரணர்தம் உரையில்.

வெண்பா யாப்பது செப்பல் ஓசையில்
வெண்பாவில் வராது அகவல் ஓசை
செப்பலை விளக்கும் கீழ்வரும் வெண்பா.

வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமெனக் காண்.

செப்பல் ஓசை பயின்று வருகிற
வெண்பா வுக்கோர் உதாரணம் காண்போம்:

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம்.
--விளம்பி நாகனார், நான்மணிக்கடிகை ௧௧


இன்னொரு உதாரணம் பாரதி தருவது:

நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்---உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே, இம்மூன்றும் செய்.

---பாரதியார், விநாயகர் நான்மணி மாலை ௨௫

3.7. செப்பல் முயற்சி

நாமும் செப்பல் புனைந்திடு வோமா?
செப்பல் ஓசையின் தேவைகள் என்ன?

மாமுன் நிரையும் விளம்முன் நேரும்
காய்முன் நேரும் சீரிடை அடியிடை
வந்தால் செப்பல் தானே பயிலும்.

காய்ச்சீர் என்பது நேரில் முடியும்
மூவசைச் சீரென நினவிற் கொள்வோம்.

தானே இயல்பாக மொழிவது மற்றும்
வாக்கியம் போல அமைவது செப்பல்.

கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடக்க
மாடியில் போட்ட வடாம்.


(இந்த அடிகளில் வருவது வெண்பா.
வெண்பாவின் தேவைகள் பின்னர்க் காண்போம்.)

இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
கண்/ணோ/டு கண்/ணோக்/கின் காக்/கை பறக்/குமா?
மண்/ணோ/டு காற்/றடித்/தால் உள்/ளம் பத/றுமே!
பா/டுபட்/டுக் கா/யவைத்/து வாழ்க்/கை நடக்/க
மா/டியில் போட்/ட வடாம்.

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்-நேர்-நேர் நேர்-நேர்-நேர் நேர்-நேர் நிரை-நிரை
நேர்-நேர்-நேர் நேர்-நிரை-நேர் நேர்-நேர் நிரை-நிரை
நேர்-நிரை-நேர் நேர்-நிரை-நேர் நேர்-நேர் நிரை-நேர்
நேர்-நிரை நேர-நேர் மலர்.

மூன்றாம் நான்காம் அடிகளைப் பிணைத்து
நேர்-நேர் எனவரும் தளைமுரண் கண்டீரோ? ... [நடக்க--மாடியில்]
இம்முரண் போக்கிட இப்படி மாற்றுவோம்.

கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட ... [’நடக்க’ என்பதை மாற்றி]
மாடியில் போட்ட வடாம்.


எதுகை மோனை முயற்சிகள் இன்றி
இன்றைய பேச்சு வழக்கில் பயிலும்
சொற்கள் பயன்படுத்தி இன்னொரு வெண்பா.

இந்த வரிகளை அலகிட்டுப் பார்த்து
செப்பல் ஓசை சீரிடை அடியிடை
வருவது கண்டு உறுதி செய்யவும்.

நேரம் தவறாமல் வேளைக்குச் சாப்பாடு
நாயர் கடைடீ நினைத்தபோது சூடாக
வாரம் ஒருமுறை மாட்டினி மூவிகள்
பேச்சிலர் வாழ்க்கையே வாழ்வு!


*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 12, 2012 6:25 pm

பயிற்சி 9. விடை

மலைபோல் வந்தது பனிபோல் நீங்கும்.
பனியது பெய்தால் குளமது நிரம்புமா?
குளத்தில் போட்டுக் கிணற்றில் தேடினான்.
கிணற்றுத் தவளை அறியுமோ உலகு?

பயிற்சி 10. விடை

ஆடிக் குடம்புகும், ஆடையில் இரையும்,
மூடித் திறக்கின் முகம்காண், மண்டையில்
தேய்த்தால் பரபர, பிண்ணாக் குமுண்டு;
ஆய்ந்தால் பாம்பும் எள்ளும் ஒன்று.

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 13, 2012 8:08 am

3.8. செப்பல் பயிற்சி

கீழ்வரும் வெண்பாக்கள் செப்பல் ஓசை
அடிகள் இயற்றத் துணை கொள்க.

வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.

வெண்பாவின் ஈற்றசை நாள்,மலர் காசு,
பிறப்பு எனப்பட்ட வாய்பாடில் ஓரசையாய்
நேரோ நிரையோ இவற்றுடன் குற்றுகரம்
சேர்ந்தோ வருமெனக் காண்.

பயிற்சி 1. வெண்பா வரத் திருத்துதல்

கீழுள்ள அடிகளை அலகிட்டுப் பார்த்து
தளைதட்டும் நான்கசைச் சீரையும்
அடியிடைத் தளைதட்டும் சீரையும்
தக்கபடி மாற்றிச் சரியாக எழுதவும்.

எல்லோரும் தூங்கும்போது எனக்கு விழிப்பு
பகலே இரவு இரவே பகலாம்
யாரெது சொன்னாலும் கேட்க வேண்டும்
அபார்ட்மென்ட் வாச்மேன் நான்.


பயிற்சி 2. அகவலில் இருந்து செப்பல்

கீழ்வரும் அகவல் அடிகளை மாற்றி
இரண்டடி யில்வரும் குறள்வெண்பா வாகச்
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

கல்வி செல்வம் வீரம் கொண்ட
நல்லோர் இன்று கானல் நீரே.


பயிற்சி 3. அகவலில் இருந்து செப்பல்

கீழ்வரும் அகவல் அடிகளை மாற்றிச்
செப்பலில் குறள்வெண்பா ஒன்று எழுதுக.

வருவது உரைத்திடும் அரியதோர் கலைதனில்
கரையறு புலமையை உடையவர் மிகச்சிலர்.


பயிற்சி 4. அகவலில் இருந்து செப்பல்

கீழ்வரும் அகவற் செய்யுளைக் குறள்வெண்பா
வாக்கிச் செப்பல் கேட்க எழுதுக.

காற்றினும் கடுகிச் சென்றது புரவி.
பாட்டினில் அதனைச் சொல்வது எளிதோ?


பயிற்சி 5. துள்ளலிலிருந்து செப்பல்

துள்ளல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளை
மூன்று அடிகளில் சிந்தியல் வெண்பா
வாக்கிச் செப்பல் கேட்க எழுதுக.

வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்து
இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.


*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 14, 2012 6:45 am

3.8. செப்பல் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. விடை

கொடுத்துள்ள அடிகள்:
எல்லோரும் தூங்கும்போது எனக்கு விழிப்பு
பகலே இரவு இரவே பகலாம்
யாரெது சொன்னாலும் கேட்க வேண்டும்
அபார்ட்மென்ட் வாச்மேன் நான்.


அடிகளை அலகிட:
எல்/லோ/ரும் தூங்/கும்/போ/து எனக்/கு விழிப்/பு
பக/லே இர/வு இர/வே பக/லாம்
யா/ரெது சொன்/னா/லும் கேட்/க வேண்/டும்
அபார்ட்/மென்ட் வாச்/மேன் நான்.

சீர்களின் அசைகள் நோக்க:
நேர்-நேர்-நேர் நேர்-நேர்-நேர்-நேர் நிரை-நேர் நிரை-நேர்
நிரை-நேர் நிரை-நேர் நிரை-நேர் நிரை-நேர்
நேர்-நிரை நேர்-நேர்-நேர் நேர்-நேர் நேர்-நேர்
நிரை-நேர் நேர்-நேர் நேர்

1. ’தூங்/கும்/போ/து’ என்று வரும் சீரில் நான்கு அசைகள் காண்க.
இதைத் ’தூங்/க’ (நேர்-நேர்) எனத் திருத்தினால்,
முன்வரும் மூவசைச்சீர் ’எல்/லோ/ரும்’ என்ற (நேர் கடைவரும்) காய்ச்சீருடனும்,
பின்வரும் ’எனக்/கு’ என்ற (நிரை முதல் நேர் கடைவரும்) மாச்சீருடனும்
தளையில் (வெண்டளையெனப்) பொருந்துவது காண்க.

2. ’பக/லாம் -- யாரெது’ என்று (அடியிரண்டின் இறுதி அடிமூன்றின் முதல் சீர்கள்) வருவது
(நேர் முன் நிரை வராததால்) தளைதட்டும்.
இந்தச் சொல்லை ’எவ/ரெது’ என்று திருத்தினால் (இரண்டாம் மூன்றாம்) அடியிடையும்,
அடுத்து வரும் சீருடனும் தளையில் ஒன்றும்.

3. அடிமூன்றில் ’கேட்/க -- வேண்டும்’ என்று வருவது நேர் முன் நேர் வந்து தளைதட்டும்.
இதை ’கேட்/டிட -- வேண்டும்’ என்று திருத்த, நிரை முன் நேர் வந்து தளையில் ஒன்றும்.

4. இறுதி அடியில் ’அபார்ட்/மென்ட் -- வாச்/மேன் -- நான்’ என்று வருவது நேர் முன் நேர் வர,
இரண்டாம் சீரின் முன்னும் பின்னும் தளை தட்டும்.

’அபார்ட்மென்ட்டின் -- வாச்/மேன் -- நான்’ என்று திருதினால் முதலிரு சீர்கள் தளையில் ஒன்றும்.
ஆயினும் சிர்கள் இரண்டும் மூன்றும் (இப்போதும் நேர் முன் நேர் வர) சேரும்போது தளை தட்டும்.
’அபார்ட்/மென்ட்/டின் கா/வலா/ளி நான்’ என்று திருத்தினால் சீரிரண்டில் ’வாச்மேன்’ என்பது ’காவலாளி’ என்று
மூவசைச் சீராகி, இருபுறமும் தளையில் ஒன்றும் காண்க.

திருத்தியபின் வெண்பா:
எல்லோரும் தூங்க எனக்கு விழிப்பு
பகலே இரவு இரவே பகலாம்
எவரெது சொன்னாலும் கேட்டிட வேண்டும்
அபார்ட்மென்ட்டின் காவலாளி நான்.


பயிற்சி 2. விடை

கல்வியும் செல்வமும் வீரமும் கொண்டுள்ள
நல்லவர்கள் கானல்நீர் இன்று.

பயிற்சி 3. விடை

வருவது கூறும் அரிய கலையில்
கரையில் புலமை சிலர்க்கு.

வருவது கூறும் அரிய கலையில்
கரையறு வல்லோர் சிலர்.

பயிற்சி 4. விடை

காற்றினும் வேகமாகச் சென்ற புரவியது.
பாட்டில் உரைப்ப தெவண்?

பயிற்சி 5. விடை

வீட்டினுள் ஓடும் குழந்தையைப் பற்றிழுத்துத்
தூக்கி இடையில் இருத்தி நிலாக்காட்டி
ஊட்டினாள் அன்னை உணவு.


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 15, 2012 9:04 am

பயிற்சி 6. துள்ளலிலிருந்து செப்பல்

துள்ளல் ஒலிக்கும் கீழ்வரும் செய்யுளை
இரண்டு அடிகளில் குறளியல் வெண்பா
வாக்கிச் செப்பல் கேட்க எழுதுக.

படியளக்கப் பெருமாளின் வரம்தரும்கை இருக்கிறதே!
அடிநோக்க நதிகங்கா அமுதூற்றாய்ப் பொழிகிறதே!


பயிற்சி 7. கலைந்த சொற்களிலிருந்து மா-முன்-நிரை வரும் செப்பல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
நான்கு அடிகளில் முதலிரண்டில் ஒலியியைபும்
இறுதி யிரண்டில் எதுகையும் அமைந்து
சீர்கள் அனைத்தும் மாமுன் நிரைவந்து
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

கிடக்கும் இருளில் மறைக்க மனையில் முகத்தில் படிந்து திகில். சிதைந்த சிலந்தி விழியை
நுழைந்தால் அகத்தில் வலைகள் உறைந்து


பயிற்சி 8. கலைந்த சொற்களிலிருந்து விளம்-முன்-நேர் வரும் செப்பல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
முதல்நிரல் வைத்து இரண்டு அடிகளும்
பின்னிரல் வைத்து ஈற்றடி யிரண்டும்
அடிகள் இரண்டில் ஓரெதுகை அமைந்து
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

கொய்துநீ நித்திய பூத்திடும் மல்லிகை அந்தியில் மாலையாய்க் முந்தியே மொட்டுகள்
பூமணம் கட்டவுன் தங்கிநீ தொட்டிடப் பூக்குமே நார். கைகளில்


பயிற்சி 9. கலைந்த சொற்களிலிருந்து காய்-முன்-நேர் வரும் செப்பல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்து
இரண்டு அடியில் காய்முன் நேர்வர
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

தாய். தூங்கிவிட்டாள் தூங்காத தூளியாட்டித் தாலாட்டித் பாப்பாவைத் தூளியாட்டித்

பயிற்சி 10. உரைநடை வாக்கியத்திலிருந்து செப்பல்

கீழ்வரும் உரைநடை வாக்கியம் வைத்து
இரண்டு அடிகளில் வந்திடு மாறு
செப்பல் ஓசை கேட்க எழுதுக.

பெருமாள் படி அளந்ததால் தம் பாவங்களைப் பணமாக்கி உண்டியலில் போட்டனர்!

*****


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Nov 15, 2012 3:29 pm

மிகவும் பிரயோசமானதும், என்போன்ற மரபுக்கவி விரும்பிகளுக்கு கைதந்து உயர வைக்கும்
பணியையும் போற்றி வாழ்த்துகிறேன் வாழ்க!!!
அன்புடன்
கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 29 Previous  1, 2, 3 ... 15 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக