புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும் Poll_c10முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும் Poll_m10முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும் Poll_c10 
42 Posts - 63%
heezulia
முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும் Poll_c10முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும் Poll_m10முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும் Poll_c10முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும் Poll_m10முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும் Poll_c10முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும் Poll_m10முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jan 07, 2013 4:42 pm

கடந்த சில நாள்களுக்கு முன், இரு சக்கர வாகனத்தில் இரவு 7 மணி அளவில் அவிநாசி சாலையில் சென்றுகொண்டிருந்தேன். "கலெக்டர் கேம்ப்' அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்புறம் திடீரென்று ஏதோ வண்டி விழும் ஓசை கேட்டது. அதைத் தொடர்ந்து அங்கே பெருங்கூட்டம் கூடிவிட்டது.

அந்த விபத்து நடக்கக் காரணம் அப்போது சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததே. அந்த நேரம் மின்தடையால் ஏற்பட்ட இருட்டில் இந்த விபத்து நடந்தது. கிட்டத்தட்ட 10 நிமிடமாகியும் சுற்றி இருப்பவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர அடிபட்டவரைத் தூக்கவோ, உதவி செய்யவோ இல்லை. உடனே அருகில் சென்றேன். 108 ஆம்புலன்ûஸப் பலரும் ஒரே சமயத்தில் அழைத்துக் கொண்டிருந்தனர்.

"யாராவது ஒருவர் அந்த வேலையைச் செய்யுங்கள்' எனச் சொல்லி, கூட்டத்தை விலக்கினேன். சாலையில் வாகன நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அதை ஓரளவு சரிசெய்துவிட்டு, அடிபட்டவரை வெளிச்சம் படும்படியான இடத்திற்கு பத்திரமாக தூக்கிச் சென்று ஓரமாக படுக்க வைத்தோம்.

அடையாளம் தெரியாத அளவு முகத்தில் அடிபட்டு ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

ஒருவழியாக "108' வந்து அடிபட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. சாலையில் விபத்து ஏற்பட்டவுடன் அனைவருக்கும் அதைப்பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படுவது இயல்புதான். அதற்காக மீட்புப்பணிகள் செய்வதற்கு இடையூறு செய்வது, மீட்புப் பணிகள் செய்யாமல் வேடிக்கை பார்ப்பது கூடாது.

அடிபட்டவர் பேசும் நிலையில் இருந்தால் அவரிடமே அவரைப் பற்றியும் யாருக்குத் தகவல் சொல்வது என்றும் கேட்கலாம். அப்படி இல்லாதபோது அவருடைய சட்டைப் பையிலோ பர்ஸிலோ அடையாள அட்டை இருக்கிறதா என்று பார்ப்பதில் தவறில்லை. (ஆனால் சிலர் அதையே சாக்காக வைத்து பணம், மோதிரம் போன்றவற்றையும் எடுக்கக்கூடும். இது மிகவும் அவலமான நிலைமை.)

இதைவிட மனிதாபிமானமற்ற ஒரு தகவலைக் கேள்விப்பட்டபோது அதிர்ந்தே போனேன். அடிபட்டவரை தங்களது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் அதற்காக 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்குத் தனியாகப் பணம் தரும் செயல்களில் சில தனியார் மருத்துவமனைகள் ஈடுபடுகின்றனவாம். அருகில் அரசு மருத்துவமனை இல்லாவிடில் வேறு வழியில்லாமல் தனியாரிடம்தான் அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சில வேளைகளில் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வதே புத்திசாலித்தனமும் கூட; ஏனென்றால் நோயாளியை உடனே கவனிப்பார்கள். ஆனால் காயத்தின் தன்மை, காயம்பட்டவரின் பொருளாதார நிலைமையையும் நாம் அறிந்து செயல்படுவதே நல்லது.

அதே சமயம், அதிகம் கமிஷன் தருகிறார்கள் என்று தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கோ, அதிக அனுபவமும் மருத்துவ வசதிகளும் இல்லாத தனியார் மருத்துவமனைக்கோ ஆம்புலன்ஸ் டிரைவர் அழைத்துச் சென்றுவிட்டால் என்னாவது?

அடிபட்டவருக்கு முழு அளவிலான மருத்துவ உதவி கிடைக்கும்வரை உள்ள நேரத்தை "கோல்டன் ஹவர்' என்பார்கள். அந்த நேரத்தில் தகுந்த முதலுதவி சிகிச்சை அவசியம். நன்கு பயிற்சிபெற்ற, துணிச்சல்மிக்க, நிதானப் போக்கு கொண்டவர் இச் செயலை மேற்கொள்ள வேண்டும். அடிபட்டவர் மீது கருணையும் அக்கறையும் கொண்டு முதலுதவியைச் செய்ய வேண்டும். அவசரமோ பதற்றமோ வீண் சந்தேகமோ அப்போது கூடாது.

அடிபட்டவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அதை நிறுத்த வேண்டும். அடிபட்டவரின் நிலை எப்படி என உணர வேண்டும். அவரால் பேச முடிகிறதா என முதலில் அறிந்து அவரைப் பேசவைக்க வேண்டும். சில விபத்துகளில் அடிபட்டவருக்குக் குடிக்கத் தண்ணீர் தரக்கூடாது. ஆனால் பலர், யார் அடிபட்டாலும் உடனே எப்படியாவது அவர்களுக்குக் குடிக்க தண்ணீர் தரவேண்டும் என்று அவசரப்படுவார்கள்.

அதேபோல அடிபட்டவருக்கு உடனே உதவ வேண்டும் என்கிற நோக்கில் உடனடியாகத் தூக்கவும் கூடாது. எலும்பு அல்லது மூட்டுகளில் அடிபட்டிருந்தால் அதை சரியாகக் கணிக்காமல் தூக்கக் கூடாது.

சாலை விபத்துகளிலும் பலவகை உண்டு. அவர்களாகவே மயங்கி விழுபவர்கள், யாராவது மோதி விழுபவர்கள், ஏதாவது அதிர்ச்சி செய்தி கேட்டு மயக்கம் அடைபவர்கள்.

சாலை விபத்து என்றவுடன் 108 ஆம்புலன்ûஸ அழைப்பவர்கள் விபத்து நடந்த இடத்தைப்பற்றித் தெளிவாகச் சொல்ல வேண்டும். இல்லையேல் வாகனம் வந்து சேரத் தாமதமாகிவிடும். விபத்து நடந்த இடத்தில் கூடும் கூட்டம்கூட சிலநேரம் தேவையற்ற தாமதத்தை உண்டாக்கி விடும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லி மீட்பு நடவடிக்கைகள் தாமதமாக வாய்ப்புண்டு. வாகனம் ஓட்டுபவரோ வேறு யாராக இருந்தாலும் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது தனது பாக்கெட்டில் தன்னைப் பற்றிய விவரம் வைத்திருத்தல் நலம். அடையாள அட்டை, முகவரி அட்டை, வீட்டு தொலைபேசி எண், கைபேசி எண், அலுவலக முகவரி, தொலைபேசி எண் என்று எல்லாமும் இருப்பது மிகவும் நல்லது. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை என்றால் வேலை எளிதாகிவிடும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள் போன்றவர்கள் கூச்சப்படாமல் அந்தத் தகவலையும் சேர்த்தால் டாக்டர்களுக்கு வேலை எளிதாகும். ரத்த குரூப்பைக்கூட குறித்துவைக்கலாம்.

வாகனம் வைத்திருப்பவர்கள் முறையாக லைசென்ஸ், பதிவுச் சான்று, இன்சூரன்ஸ், புகை பரிசோதனை ஆகிய நான்கின் நகல்களை வண்டியில் வைத்திருத்தல் அவசியம். வாகனங்களை மாதம் ஒருமுறையாவது பரிசோதனை செய்து ஓட்ட வேண்டும்.

வாகனத்தை ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது, தலைக்கவசம் அணிந்து ஓட்ட வேண்டும், பாதையில் கண் இருக்க வேண்டும். வேகம் கூடாது. சாலையின் நட்டநடுவில் 2 சக்கர வாகனங்கள் போகக்கூடாது. பின்னாலும் எதிரிலும் வரும் பஸ், லாரிகளைப் பார்த்ததும் வேகமாக சாலை ஓரத்துக்குச் செல்லும்போது சாலைத் தடுப்புகளிலோ, பள்ளங்களிலோ விழுந்து விபத்தில் சிக்க நேரும்.

ஆரம்பத்திலிருந்தே சாலை ஓரமாகச் செல்வது பாதுகாப்பானது. பின்னால் ஒருவரை உட்காரவைத்துச்செல்லும் போது மிகவும் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் ஓட்ட வேண்டும்.

(நன்றி-தினமணி- எஸ்.ஏ. முத்துபாரதி, திருப்பூர்.)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக