புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 68 of 84 •
Page 68 of 84 • 1 ... 35 ... 67, 68, 69 ... 76 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (447)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேலே ஆய்ந்த கிளவியாக்கம் நூற்பா 61, அவ்வியலின் கடைசி நூற்பா!
இப்போது சொல்லதிகாரத்தின் இரண்டாவது இயல் – வேற்றுமை இயல் !
பெயர்ச் சொல்லானது , வேற்றுமை உருபை ஏற்றுப் பொருள் வேற்றுமை காட்டும் இயல்தான் ‘வேற்றுமை இயல்’!
வேற்றுமை இயலின் முதல் நூற்பா இது ! -
“வேற்றுமை தாமே ஏழென மொழிப” (வேற். 1)
‘வேற்றுமையின் தொகை ஏழு என்று சொல்வார்கள் ’ – இதுவே நூற்பாவின் பொருள் !
இதற்கு அடுத்த நூற்பா ! -
“விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே” (வேற். 2)
‘பெயர்கள் விளியை ஏற்பதால், அந்த விளியை ஒரு வேற்றுமையாகக் கருதி , வேற்றுமை மொத்தம் எட்டு ஆகும் !’- இதுவே இந் நூற்பாவின் பொருள் !
இந்த இரு நூற்பாக்களின் நடைகளையும் பார்க்கும்போது , நமக்கு இரு கருத்துகள் தோன்றுகின்றன! –
1 . விளி வேற்றுமை சிறப்பில்லாதது
2 . தொல்காப்பியருக்கு முந்தைய இலக்கணப் புலவர்கள் , வேற்றுமை மொத்தம் ஏழு என்றே கூறிவந்தனர் !
இந்த நமது கருத்துக்கு ஆதரவாக நிற்கிறது இளம்பூரணர் உரை !
1 . இளம்பூரணர் – “ வேற்றுமை தாமே ஏழென மொழிப எனப் பிறர் மதம் கூறி இச் சூத்திரத்தால் தந் துணிபு உரைத்தார்” என்கிறார் ! (வேற். 2 இளம். உரை)
பிறர் மதம் – பிறர் கொள்கை (Opinion)
தந்துணிபு = தம் + துணிபு; தம்முடைய முடிவு.
2 . இளம்பூரணர் – “விளிவேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய … விளி யென்னு மீற்ற எனப் பிரித்துக் கூறினார்” (வேற். 3 இளம். உரை).
இளம்பூரணர் வாய் மொழியில் தொல்காப்பியருக்கு முந்தைய தமிழ் இலக்கண ஆசிரியர் பற்றிய குறிப்பைப் பெறும்போது நமக்கு மெய்ச் சிலிர்ப்பு ஏற்படுகிறது !
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேலே ஆய்ந்த கிளவியாக்கம் நூற்பா 61, அவ்வியலின் கடைசி நூற்பா!
இப்போது சொல்லதிகாரத்தின் இரண்டாவது இயல் – வேற்றுமை இயல் !
பெயர்ச் சொல்லானது , வேற்றுமை உருபை ஏற்றுப் பொருள் வேற்றுமை காட்டும் இயல்தான் ‘வேற்றுமை இயல்’!
வேற்றுமை இயலின் முதல் நூற்பா இது ! -
“வேற்றுமை தாமே ஏழென மொழிப” (வேற். 1)
‘வேற்றுமையின் தொகை ஏழு என்று சொல்வார்கள் ’ – இதுவே நூற்பாவின் பொருள் !
இதற்கு அடுத்த நூற்பா ! -
“விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே” (வேற். 2)
‘பெயர்கள் விளியை ஏற்பதால், அந்த விளியை ஒரு வேற்றுமையாகக் கருதி , வேற்றுமை மொத்தம் எட்டு ஆகும் !’- இதுவே இந் நூற்பாவின் பொருள் !
இந்த இரு நூற்பாக்களின் நடைகளையும் பார்க்கும்போது , நமக்கு இரு கருத்துகள் தோன்றுகின்றன! –
1 . விளி வேற்றுமை சிறப்பில்லாதது
2 . தொல்காப்பியருக்கு முந்தைய இலக்கணப் புலவர்கள் , வேற்றுமை மொத்தம் ஏழு என்றே கூறிவந்தனர் !
இந்த நமது கருத்துக்கு ஆதரவாக நிற்கிறது இளம்பூரணர் உரை !
1 . இளம்பூரணர் – “ வேற்றுமை தாமே ஏழென மொழிப எனப் பிறர் மதம் கூறி இச் சூத்திரத்தால் தந் துணிபு உரைத்தார்” என்கிறார் ! (வேற். 2 இளம். உரை)
பிறர் மதம் – பிறர் கொள்கை (Opinion)
தந்துணிபு = தம் + துணிபு; தம்முடைய முடிவு.
2 . இளம்பூரணர் – “விளிவேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய … விளி யென்னு மீற்ற எனப் பிரித்துக் கூறினார்” (வேற். 3 இளம். உரை).
இளம்பூரணர் வாய் மொழியில் தொல்காப்பியருக்கு முந்தைய தமிழ் இலக்கண ஆசிரியர் பற்றிய குறிப்பைப் பெறும்போது நமக்கு மெய்ச் சிலிர்ப்பு ஏற்படுகிறது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M. Jagadeesanபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 26/11/2016
தொல்காப்பியத்திற்கு முற்பட்ட இலக்கண நூல்கள் நமக்குக் கிடைக்காமல் போனது ,தமிழ்நாடு செய்த தவக்குறைவே ஆகும்.
நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (448)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘விளி’யோடு சேர்த்து , வேற்றுமை உருபுகள் எட்டு என்றார் தொல்காப்பியர் !
அந்த எட்டு எவை என்று அடுத்துக் கூறுகிறார் !:-
“அவைதாம்
பெயர்ஐ ஒடுகு”
இன்அது கண்விளி என்னும் ஈற்ற “ (வேற். 3)
இந் நூற்பாவில் தொல்காப்பியர் அந்த எட்டு வேற்றுமை உருபுகளைப் பட்டியலிடுகிறார் :-
1. பெயர்
2. ஐ
3. ஒடு
4. கு
5. இன்
6. அது
7 . கண்
8.விளி
நூற்பாவில் உள்ள ‘ஈற்ற’ என்பதற்குப் பொருள் என்ன?
சேனாவரையர் விளக்குகிறார் - “விளி வேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி யென்னாது ‘விளியென்னு மீற்ற’ எனப் பிரித்துக் கூறினார்.
”
விளக்கிய – விளக்க
‘உம்மைத் தொகை’ என்றால் உங்களுக்குத் தெரியும் !
‘பலபெயர் உம்மைத் தொகை’ என்றால் ?
சேனாவரையர் இந்த நூற்பாவின் உரையில் விளக்குகிறார் !
அவர் விளக்கப்படி - ‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண்’ என நிறுத்தினால் , இதுதான் ‘பலபெயர் உம்மைத் தொகை’!
இச் சொற்றொடரை விரித்தால் எப்படி விரிப்போம்?
‘பெயரும் ஐயும் ஒடுவும் குவும் இன்னும் அதுவும் கண்ணும்’ என்றுதானே விரிக்கமுடியும்?
எனவே, ‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண்’ என்ற தொடரில், ‘உம்’ மறைந்து (தொகைந்து) வந்துள்ளதாலும் , ‘பெயர்’ முதலிய பல பெயர்கள் வந்துள்ளதாலும்தான் இது ‘பலபெயர் உம்மைத் தொகை’!
1. மேற் பட்டியலில் , ‘பெயர்’ என்பது வேறு ஒன்றுமில்லை ; எழுவாய்தான் !
‘பெயர் வேற்றுமை’ என்றாலும் , ‘எழுவாய் வேற்றுமை’ என்றாலும் , ‘முதல் வேற்றுமை’ என்றாலும் ஒன்றுதான் !
’சாந்தி வந்தாள்’ – இதில் ‘சாந்தி’ , எழுவாய்; இதுவே ‘பெயர் வேற்றுமை’ என்றும் அறியப்படும் !
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘விளி’யோடு சேர்த்து , வேற்றுமை உருபுகள் எட்டு என்றார் தொல்காப்பியர் !
அந்த எட்டு எவை என்று அடுத்துக் கூறுகிறார் !:-
“அவைதாம்
பெயர்ஐ ஒடுகு”
இன்அது கண்விளி என்னும் ஈற்ற “ (வேற். 3)
இந் நூற்பாவில் தொல்காப்பியர் அந்த எட்டு வேற்றுமை உருபுகளைப் பட்டியலிடுகிறார் :-
1. பெயர்
2. ஐ
3. ஒடு
4. கு
5. இன்
6. அது
7 . கண்
8.விளி
நூற்பாவில் உள்ள ‘ஈற்ற’ என்பதற்குப் பொருள் என்ன?
சேனாவரையர் விளக்குகிறார் - “விளி வேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி யென்னாது ‘விளியென்னு மீற்ற’ எனப் பிரித்துக் கூறினார்.
”
விளக்கிய – விளக்க
‘உம்மைத் தொகை’ என்றால் உங்களுக்குத் தெரியும் !
‘பலபெயர் உம்மைத் தொகை’ என்றால் ?
சேனாவரையர் இந்த நூற்பாவின் உரையில் விளக்குகிறார் !
அவர் விளக்கப்படி - ‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண்’ என நிறுத்தினால் , இதுதான் ‘பலபெயர் உம்மைத் தொகை’!
இச் சொற்றொடரை விரித்தால் எப்படி விரிப்போம்?
‘பெயரும் ஐயும் ஒடுவும் குவும் இன்னும் அதுவும் கண்ணும்’ என்றுதானே விரிக்கமுடியும்?
எனவே, ‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண்’ என்ற தொடரில், ‘உம்’ மறைந்து (தொகைந்து) வந்துள்ளதாலும் , ‘பெயர்’ முதலிய பல பெயர்கள் வந்துள்ளதாலும்தான் இது ‘பலபெயர் உம்மைத் தொகை’!
1. மேற் பட்டியலில் , ‘பெயர்’ என்பது வேறு ஒன்றுமில்லை ; எழுவாய்தான் !
‘பெயர் வேற்றுமை’ என்றாலும் , ‘எழுவாய் வேற்றுமை’ என்றாலும் , ‘முதல் வேற்றுமை’ என்றாலும் ஒன்றுதான் !
’சாந்தி வந்தாள்’ – இதில் ‘சாந்தி’ , எழுவாய்; இதுவே ‘பெயர் வேற்றுமை’ என்றும் அறியப்படும் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (449)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வேற்றுமைகள் எட்டில் , முதற்கண் எழுவாய் வேற்றுமை பற்றிக் கூறுகிறார் –
“அவற்றுள்
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே” (வேற்.4)
இதற்குச் சேனாவரையர் தரும் விளக்கம் –
“…உருபும் விளியும் ஏலாது , பிறிதொன்றனோடு தொகாது நிற்கும் நிலைமை;எனவே , உருபும் விளியு மேற்றும் பிறிதொன்றனோடு தொக்கும் நின்ற பெயர் எழுவாய் வேற்றுமை யாகா தென்றவாறாம்.”
அஃதாவது , எழுவாய் வேற்றுமைச் சொல்லில் வேற்றுமை உருபு எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடாது!
இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமெனில் , எழுவாய் , வேற்றுமை உருபு எதனையும் ஏற்கும் நிலைமையில் இருக்கக் கூடாது !
குமணன் வந்தான் – இத் தொடரில் ‘குமணன்’ எழுவாய் வேற்றுமைச் சொல் !
‘குமணன்’ என்ற பெயர்ச் சொல்லில் , வேற்றுமை உருபுகளைச் சேர்த்துப் பாருங்கள் ; பொருள் திரளாது ! -
குமணனை வந்தான் ×
குமணனால் வந்தான் ×
குமணனுக்கு வந்தான் ×
குமணனின் வந்தான்×
குமணனது வந்தான் ×
குமணனின்கண் வந்தான்×
குமணா வந்தான்×
ஒரு தொடரின் முதலில் உள்ள பெயர்ச் சொல்லை ‘எழுவாய்’ என்று சொல்ல முடியுமா?
முடியாது!
நல்ல எடுத்துக்காட்டோடு இதனை விளக்குகிறார் இளம்பூரணர் –
“ ‘ஆயன் சாத்தன் வந்தான்’ என்புழி , ஆயன் என்பதூஉம் பெயர்; சாத்தன் என்பதூஉம் பெயர் ; ஆயினும் , இரண்டிற்கும் இரண்டு பயனிலை தோன்ற நில்லாமையாற் , சாத்தன் என்பதூஉம் , வந்தான் என்பதூஉம், ஆயன் என்பதற்கே பயனிலை; அதனால் ‘சாத்தன்’ என்பது ஆண்டு எழுவாய் வேற்றுமை யாயிற்று”!
அஃதாவது , ‘ஆயனாகிய சாத்தன்’ எனக் கொண்டால் , ‘சாத்தன்’ என்பதே எழுவாய் என்பது உங்களுக்குப் புரியும் !
‘சாத்தன்’ என்பதற்கு ‘;ஆயன்’ , அடை (Adjective) !
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வேற்றுமைகள் எட்டில் , முதற்கண் எழுவாய் வேற்றுமை பற்றிக் கூறுகிறார் –
“அவற்றுள்
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே” (வேற்.4)
இதற்குச் சேனாவரையர் தரும் விளக்கம் –
“…உருபும் விளியும் ஏலாது , பிறிதொன்றனோடு தொகாது நிற்கும் நிலைமை;எனவே , உருபும் விளியு மேற்றும் பிறிதொன்றனோடு தொக்கும் நின்ற பெயர் எழுவாய் வேற்றுமை யாகா தென்றவாறாம்.”
அஃதாவது , எழுவாய் வேற்றுமைச் சொல்லில் வேற்றுமை உருபு எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடாது!
இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமெனில் , எழுவாய் , வேற்றுமை உருபு எதனையும் ஏற்கும் நிலைமையில் இருக்கக் கூடாது !
குமணன் வந்தான் – இத் தொடரில் ‘குமணன்’ எழுவாய் வேற்றுமைச் சொல் !
‘குமணன்’ என்ற பெயர்ச் சொல்லில் , வேற்றுமை உருபுகளைச் சேர்த்துப் பாருங்கள் ; பொருள் திரளாது ! -
குமணனை வந்தான் ×
குமணனால் வந்தான் ×
குமணனுக்கு வந்தான் ×
குமணனின் வந்தான்×
குமணனது வந்தான் ×
குமணனின்கண் வந்தான்×
குமணா வந்தான்×
ஒரு தொடரின் முதலில் உள்ள பெயர்ச் சொல்லை ‘எழுவாய்’ என்று சொல்ல முடியுமா?
முடியாது!
நல்ல எடுத்துக்காட்டோடு இதனை விளக்குகிறார் இளம்பூரணர் –
“ ‘ஆயன் சாத்தன் வந்தான்’ என்புழி , ஆயன் என்பதூஉம் பெயர்; சாத்தன் என்பதூஉம் பெயர் ; ஆயினும் , இரண்டிற்கும் இரண்டு பயனிலை தோன்ற நில்லாமையாற் , சாத்தன் என்பதூஉம் , வந்தான் என்பதூஉம், ஆயன் என்பதற்கே பயனிலை; அதனால் ‘சாத்தன்’ என்பது ஆண்டு எழுவாய் வேற்றுமை யாயிற்று”!
அஃதாவது , ‘ஆயனாகிய சாத்தன்’ எனக் கொண்டால் , ‘சாத்தன்’ என்பதே எழுவாய் என்பது உங்களுக்குப் புரியும் !
‘சாத்தன்’ என்பதற்கு ‘;ஆயன்’ , அடை (Adjective) !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (450)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேல் வேற்றுமையியல் நூற்பா 4ஐ அடுத்து , ‘எழுவாய் ஏற்கும் பயனிலைகள்’ , பற்றிய ஒரு நூற்பாவும் (வேற்.5) , ‘தொகைகள் ஏற்கும் பயனிலைகள்’ பற்றிய ஒரு நூற்பாவும் (வேற்.6) , ‘எழுவாயும் தோன்றா எழுவாயும்’ பற்றிய நூற்பாவும் (வேற்.7) வருகின்றன; இவற்றை முன்பே நாம் ஆய்ந்துள்ளதால், நாம் அடுத்த நூற்பாவுக்குச் செல்லலாம் !:-
“கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறுபெயர்க் காகும் இயற்கைய வென்ப” (வேற்.8)
’
கூறிய முறையின் உருபு நிலை’- வேற்றுமையியல் நூற்பா3இல் கூறிய உருபுகளின் நிலை என்னவென்றால்,
‘ஈறு பெயர்க்காகும் இயற்கைய எனப’ – பெயர்க்கு ஈறாகும் தன்மையாகும் என்பார்கள்!
1.சாத்தனை – ‘ஐ’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
2.சாத்தனொடு- ‘ஒடு’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
3. சாத்தற்கு – ‘கு’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
4. சாத்தனின் – ‘இன்’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
5. சாத்தனது – ‘அது’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
6. சாத்தன்கண் – ‘கண்’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
மேல் நூற்பாப்படி ‘பெயர்க்கு ஈறாகும் வேற்றுமை உருபு’ என்பதை ஒரு வரையறையாகக் கொள்ளலாம் !
அப்படியானால் வினைக்கு ஈறு?
இவ் வினாவிற்கு விடை தருகிறார் சேனாவரையர் !-
“வினைச் சொலிறுதி நிற்கு மிடைச்சொல் , தாமென வேறு உணரப்படாது அச் சொற்குறுப்பாய் நிற்குமன்றே. இவ்வாறு பெயர்க்குறுப் பாகாது தாமென வேறுணரப் பட் டிறுதி நிற்குமென்பார் ‘நிலை திரியாது ’ என்றார் !”
என்ன பொருள்?
வினைச்சொல்லின் இறுதியிலே நிற்பது ‘ வேற்றுமை உருபு’ அல்ல; அது ‘இடைச்சொல்’!
அந்த இடைச்சொல்லும் , வினையின் உறுப்பாய், வினையோடு சேர்ந்துதான் வரும்!
வந்தான் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆன்’ ; இஃது ஓர் இடைச்சொல் (Particle) !
வந்தாய் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆய்’ ; இஃது ஓர் இடைச்சொல் !
வந்தாள் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆள்’ ; இஃது ஓர் இடைச்சொல் !
மேலே வந்த இடைசொற்கள் , சொல்லைவிட்டுப் நீங்கிநில்லாமல் , பொருள் நிலையில் ஒட்டிக்கொண்டு நிற்பதைக் கவனியுங்கள் !
சாத்தனது – இதிலுள்ள ‘அது’வைப் பிரித்தால், ‘சாத்தன்’ என்ற , பொருள் தரக்கூடிய ஒரு சொல் நிற்கிறது !
வந்தாள் – இதிலுள்ள ‘ஆள்’ என்பதைப் பிரித்தால், ‘வந்த்’ என்பதுதான் நிற்கிறது ; ‘வந்த்’ என்பது பொருளற்றது !
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேல் வேற்றுமையியல் நூற்பா 4ஐ அடுத்து , ‘எழுவாய் ஏற்கும் பயனிலைகள்’ , பற்றிய ஒரு நூற்பாவும் (வேற்.5) , ‘தொகைகள் ஏற்கும் பயனிலைகள்’ பற்றிய ஒரு நூற்பாவும் (வேற்.6) , ‘எழுவாயும் தோன்றா எழுவாயும்’ பற்றிய நூற்பாவும் (வேற்.7) வருகின்றன; இவற்றை முன்பே நாம் ஆய்ந்துள்ளதால், நாம் அடுத்த நூற்பாவுக்குச் செல்லலாம் !:-
“கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறுபெயர்க் காகும் இயற்கைய வென்ப” (வேற்.8)
’
கூறிய முறையின் உருபு நிலை’- வேற்றுமையியல் நூற்பா3இல் கூறிய உருபுகளின் நிலை என்னவென்றால்,
‘ஈறு பெயர்க்காகும் இயற்கைய எனப’ – பெயர்க்கு ஈறாகும் தன்மையாகும் என்பார்கள்!
1.சாத்தனை – ‘ஐ’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
2.சாத்தனொடு- ‘ஒடு’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
3. சாத்தற்கு – ‘கு’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
4. சாத்தனின் – ‘இன்’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
5. சாத்தனது – ‘அது’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
6. சாத்தன்கண் – ‘கண்’ உருபு, ஈற்றிலே நிற்பதைக் காண்க!
மேல் நூற்பாப்படி ‘பெயர்க்கு ஈறாகும் வேற்றுமை உருபு’ என்பதை ஒரு வரையறையாகக் கொள்ளலாம் !
அப்படியானால் வினைக்கு ஈறு?
இவ் வினாவிற்கு விடை தருகிறார் சேனாவரையர் !-
“வினைச் சொலிறுதி நிற்கு மிடைச்சொல் , தாமென வேறு உணரப்படாது அச் சொற்குறுப்பாய் நிற்குமன்றே. இவ்வாறு பெயர்க்குறுப் பாகாது தாமென வேறுணரப் பட் டிறுதி நிற்குமென்பார் ‘நிலை திரியாது ’ என்றார் !”
என்ன பொருள்?
வினைச்சொல்லின் இறுதியிலே நிற்பது ‘ வேற்றுமை உருபு’ அல்ல; அது ‘இடைச்சொல்’!
அந்த இடைச்சொல்லும் , வினையின் உறுப்பாய், வினையோடு சேர்ந்துதான் வரும்!
வந்தான் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆன்’ ; இஃது ஓர் இடைச்சொல் (Particle) !
வந்தாய் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆய்’ ; இஃது ஓர் இடைச்சொல் !
வந்தாள் – இது வினை முற்று ; இதன் ஈற்றிலே நிற்பது , ‘ஆள்’ ; இஃது ஓர் இடைச்சொல் !
மேலே வந்த இடைசொற்கள் , சொல்லைவிட்டுப் நீங்கிநில்லாமல் , பொருள் நிலையில் ஒட்டிக்கொண்டு நிற்பதைக் கவனியுங்கள் !
சாத்தனது – இதிலுள்ள ‘அது’வைப் பிரித்தால், ‘சாத்தன்’ என்ற , பொருள் தரக்கூடிய ஒரு சொல் நிற்கிறது !
வந்தாள் – இதிலுள்ள ‘ஆள்’ என்பதைப் பிரித்தால், ‘வந்த்’ என்பதுதான் நிற்கிறது ; ‘வந்த்’ என்பது பொருளற்றது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (451)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வேற்றுமை இயலில் அடுத்துப் பெயரின் இலக்கணம் பற்றி ஓதுகிறார் தொல்காப்பியர் !-
“பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா
தொழில்நிலை யொட்டும் ஒன்றலங் கடையே” (வேற்.9)
‘பெயர்நிலைக் கிளவி’ – பெயர்ச்சொல்,
‘காலம் தோன்றா’ – காலம் காட்டாது;
‘தொழில்நிலை ஒட்டும் ஒன்று’ – வினையாலணையும் பெயர்,
‘ஒன்று அலங்கடையே’- ஒன்று அல்லாதபோது!
அல்லி , இளவரசி , செல்வி , கந்தன் , அருணாசலம் – பெயர்ச் சொற்கள் (இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க !)
வந்தவன் , வந்தவள் , அடித்தவன் , சென்றோன் , பாடினவள் – விணையாலணையும் பெயர்கள் (இவை காலம் காட்டுவதைக் கவனிக்க; காட்டப்படும் காலம், இறந்த காலம்).
ஆனால் , ‘குறிப்பு வினையாலணையும் பெயர்’ , காலம் காட்டாது !
பொய்யன் , நாடன் , நுதலாள் - குறிப்பு வினையாலணையும் பெயர்கள் (இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க!)
சேனாவரையர் , ‘பெயர்’ என்பதில் தொழிற்பெயரையும் (Verbal nouns) சேர்க்கிறார் !
அதன்படி –
உண்டல் , தின்னல் , ஆடல் , மகிழ்தல் – தொழிற்பெயர்கள் ( இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க !).
சேனாவரையர் , இரத்தினச் சுருக்கமாகப் ‘பெயர்’ என்றால் அதற்கு இலக்கணம் இதுதான் எனக் கூறுகிறார் - “பெரும்பான்மை பற்றிக் காலந் தோன்றாமை பெயரிலக்கணமாயிற்று !”
அப்படியானால் ‘சிறுபான்மை’ ?
‘சிறுபான்மை’ நாம் மேலே பார்த்த ‘வினையாலணையும் பெயர்’ (Participial noun)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வேற்றுமை இயலில் அடுத்துப் பெயரின் இலக்கணம் பற்றி ஓதுகிறார் தொல்காப்பியர் !-
“பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா
தொழில்நிலை யொட்டும் ஒன்றலங் கடையே” (வேற்.9)
‘பெயர்நிலைக் கிளவி’ – பெயர்ச்சொல்,
‘காலம் தோன்றா’ – காலம் காட்டாது;
‘தொழில்நிலை ஒட்டும் ஒன்று’ – வினையாலணையும் பெயர்,
‘ஒன்று அலங்கடையே’- ஒன்று அல்லாதபோது!
அல்லி , இளவரசி , செல்வி , கந்தன் , அருணாசலம் – பெயர்ச் சொற்கள் (இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க !)
வந்தவன் , வந்தவள் , அடித்தவன் , சென்றோன் , பாடினவள் – விணையாலணையும் பெயர்கள் (இவை காலம் காட்டுவதைக் கவனிக்க; காட்டப்படும் காலம், இறந்த காலம்).
ஆனால் , ‘குறிப்பு வினையாலணையும் பெயர்’ , காலம் காட்டாது !
பொய்யன் , நாடன் , நுதலாள் - குறிப்பு வினையாலணையும் பெயர்கள் (இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க!)
சேனாவரையர் , ‘பெயர்’ என்பதில் தொழிற்பெயரையும் (Verbal nouns) சேர்க்கிறார் !
அதன்படி –
உண்டல் , தின்னல் , ஆடல் , மகிழ்தல் – தொழிற்பெயர்கள் ( இவை காலம் காட்டவில்லை என்பதைக் கவனிக்க !).
சேனாவரையர் , இரத்தினச் சுருக்கமாகப் ‘பெயர்’ என்றால் அதற்கு இலக்கணம் இதுதான் எனக் கூறுகிறார் - “பெரும்பான்மை பற்றிக் காலந் தோன்றாமை பெயரிலக்கணமாயிற்று !”
அப்படியானால் ‘சிறுபான்மை’ ?
‘சிறுபான்மை’ நாம் மேலே பார்த்த ‘வினையாலணையும் பெயர்’ (Participial noun)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (452)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முதல் வேற்றுமை எனப்படும் ‘எழுவாய் வேற்றுமை’ பற்றிய தொல்கப்பிய நூற்பாக்களை அடுத்து ,நாம் பார்க்கப்போவது ’இரண்டாம் வேற்றுமை’!-
“இரண்டாகுவதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
அவ்விரு முதலில் தோன்றும் அதுவே” (வேற். 10)
‘இரண்டு ஆகுவதே’- இரண்டாம் வேற்றுமை என்பது,
‘ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ - ‘ஐ’ என்று பெயர் பெறும் வேற்றுமைச் சொல் ;
‘எவ்வழி வரினும்’ – எந்த இடத்தில் வந்தாலும்,
‘வினையே வினைக்குறிப்பு அவ்விரு முதலில் தோன்றும் அதுவே’ – வினை , வினைக் குறிப்பு ஆகிய இந்த இரண்டின் செயப்படுபொருளாகத் தோன்றும் அது !
முதல் - செயப்படுபொருள் (Object)
சேனாவரையர் எடுத்துக்காட்டுகள் ! –
1 . குடத்தை வனைந்தான்
2 . குழையை உடையன்
1. ‘வனைந்தான்’ என்ற வினை முற்றுக்குச் செயப்படுபொருள், ‘குடம்’.
2. ‘உடையன்’ என்ற குறிப்பு வினை முற்றுக்குச்(Appellative finite verb) செயப்படுபொருள் , ‘குழை’.
-இந்த இரு எடுத்துக்காட்டுகளிலும் , செயப்படுபொருளை ஒட்டிக்கொண்டு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு நிற்பதைக் காணலாம் !
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முதல் வேற்றுமை எனப்படும் ‘எழுவாய் வேற்றுமை’ பற்றிய தொல்கப்பிய நூற்பாக்களை அடுத்து ,நாம் பார்க்கப்போவது ’இரண்டாம் வேற்றுமை’!-
“இரண்டாகுவதே
ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
அவ்விரு முதலில் தோன்றும் அதுவே” (வேற். 10)
‘இரண்டு ஆகுவதே’- இரண்டாம் வேற்றுமை என்பது,
‘ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ - ‘ஐ’ என்று பெயர் பெறும் வேற்றுமைச் சொல் ;
‘எவ்வழி வரினும்’ – எந்த இடத்தில் வந்தாலும்,
‘வினையே வினைக்குறிப்பு அவ்விரு முதலில் தோன்றும் அதுவே’ – வினை , வினைக் குறிப்பு ஆகிய இந்த இரண்டின் செயப்படுபொருளாகத் தோன்றும் அது !
முதல் - செயப்படுபொருள் (Object)
சேனாவரையர் எடுத்துக்காட்டுகள் ! –
1 . குடத்தை வனைந்தான்
2 . குழையை உடையன்
1. ‘வனைந்தான்’ என்ற வினை முற்றுக்குச் செயப்படுபொருள், ‘குடம்’.
2. ‘உடையன்’ என்ற குறிப்பு வினை முற்றுக்குச்(Appellative finite verb) செயப்படுபொருள் , ‘குழை’.
-இந்த இரு எடுத்துக்காட்டுகளிலும் , செயப்படுபொருளை ஒட்டிக்கொண்டு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு நிற்பதைக் காணலாம் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஐயா, நிறைய இருக்கிறது படித்துவிட்டு மீண்டும் பின்னூட்டம் போடுகிறேன் !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
வணக்கம் ஐயா.
தங்களின் எளிய விளக்கங்களைத் தொகுத்து நூலாக்குங்கள். வரும் தலைமுறைக்கு நன்மை பயக்கும்.
நன்றி.
தங்களின் எளிய விளக்கங்களைத் தொகுத்து நூலாக்குங்கள். வரும் தலைமுறைக்கு நன்மை பயக்கும்.
நன்றி.
- Sponsored content
Page 68 of 84 • 1 ... 35 ... 67, 68, 69 ... 76 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 68 of 84
|
|