புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 70 of 84 •
Page 70 of 84 • 1 ... 36 ... 69, 70, 71 ... 77 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
மேலே கூறப்பட்டுள்ள 28 வகைப் பொருளின் பாகுபாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் கல்லாடனார் கொடுத்ததா அல்லது தாங்கள் கொடுத்ததா ?
மேலே கூறப்பட்டுள்ள 28 வகைப் பொருளின் பாகுபாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் கல்லாடனார் கொடுத்ததா அல்லது தாங்கள் கொடுத்ததா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி ஜெகதீசன் அவர்களே!
‘கல்லாடனார் உரையின் அடிப்படையில்’ என்று கவனமாக நான் எழுதியுள்ளேன். அடிப்படைதான் கல்லாடனாரது; எடுத்துக்காட்டுகள் யாவும் என்னுடையதே! கல்லாடனார் போட்ட தண்டவாளத்தில் எனது வண்டி!
ஊன்றிப்படிக்கும் ஆய்வாளர் நீங்கள்! மிக்க மகிழ்ச்சி!
‘கல்லாடனார் உரையின் அடிப்படையில்’ என்று கவனமாக நான் எழுதியுள்ளேன். அடிப்படைதான் கல்லாடனாரது; எடுத்துக்காட்டுகள் யாவும் என்னுடையதே! கல்லாடனார் போட்ட தண்டவாளத்தில் எனது வண்டி!
ஊன்றிப்படிக்கும் ஆய்வாளர் நீங்கள்! மிக்க மகிழ்ச்சி!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (456)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது , ஆறாம் வேற்றுமை உருபு!
இதற்குத் தொல்காப்பியம் :-
“ஆறாகுவதே
அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும்
அன்ன கிளவிக் கிழமைத் ததுவே” (வேற். 18)
‘ஆறு ஆகுவதே’ – ஆறம் வேற்றுமை உருபு ஆகுவதாவது,
‘அது எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ - ‘அது’ என்று பெயர்கொண்ட வேற்றுமைச் சொல்!
‘தன்னினும் பிறிதினும்’ – ஒன்றனொடு சேர்ந்து பொருள்பட்டும்(தற்கிழமையாகவும்) , சேராது நின்று பொருள்பட்டும்(பிறிதின் கிழமையாகவும்),
‘இதனது இதுவெனும்’ – இந்தப் பொருளோடு தொடர்புபெற்று இது வரும் என்ற நிலையில்,
‘அன்ன கிளவிக் கிழமைத் ததுவே’ - கிழமை பெற்றதாய் வருவதாகும்.
1. ’யானையது கொம்பு’ – ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க! கொம்பானது யானையோடேயே தொடர்புபட்டு ஒட்டிக்கொண்டிருக்கும் பொருளாதலால், இந்த எடுத்துக்காட்டின் பொருளைத், ‘தற்கிழமைப் பொருள்’ என்பர்! (தன் + கிழமை = தற்கிழமை; பேசப்படும் பொருளுக்கே உரிமை உடையது; கிழமை – உரிமை; ‘கிழமை’ உடையவர் , ‘கிழார்’!)
2. ‘யானையது காடு’ - ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு இங்கும் வந்துள்ளதைக் காண்க! கொம்பானது யானையோடேயே தொடர்புபட்டு ஒட்டிக்கொண்டிருப்பதைப் போலல்லாது , காடானது தனித்துக் கிடப்பதால் , இந்த எடுத்துக்காட்டின் பொருளைப், ‘பிறிதின் கிழமைப் பொருள்’ என்பர்!
இனி, ஆறாம் வேற்றுமை உருபானது எந்தெந்தப் பொருள்களில் வரும் என வெகு நுணுக்கமாகக் கூறுகிறார் தொல்காப்பியர் !:-
“இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்
செயற்கையின் முதுமையின் வினையி னென்றா
கருவியின் துணையின் கலத்தின் முதலின்
ஒருவழி யுறுப்பின் குழுவி னென்றா
தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
திரிந்துவேறு படூஉம் பிறவும் அன்ன
கூறிய மருங்கில் தோன்றுங் கிளவி
ஆறன் பால என்மனார் புலவர்” (வேற். 19)
இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளைக் கண்டால் பொருள் விளங்கும் !
கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் சேனவரையர் , இளம்பூரணர் , தெய்வச்சிலையார் உரைகளிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டவையாம் ! ஒவ்வொருவர் உரையிலும் ஒவ்வொன்று தெளிவாக இருக்கும் என்பதால் இப்படி எடுக்கவேண்டுயுள்ளது!:-
1 . இயற்கை : ‘நிலத்தது அகலம்’- நிலத்தின் அகலம் இயற்கையாக அமைந்ததாகும்; எனவேதான் இயற்கைக் குணத்தின் அடிப்படையில் இதுபோல வருவனவற்றை எல்லாம் ‘இயற்கக் கிழமை’ப் பொருள்கொண்டவை என்பர்; இப்படித் தொடர்கள் வந்தால் அதில் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு வரும்! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
2 . உடைமை: ‘சாத்தனது தோட்டம்’ – இத் தொடரில் ‘அது’ வந்துள்ளதை நோக்குக! தோட்டம் சாத்தனுக்குச் சொந்தமானது என்பதால் , ‘உடைமை’ப் பொருளில் வந்த தொடர் இது ! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
3 . முறைமை : ‘ஆவினது கன்று’ – பசுவுக்கும் கன்றுக்கும் தொப்புள் உறவு உள்ளதால் இந்த எடுத்துக்காட்டுத் தொடர் ‘முறைமை’ என்ற பொருளுக்கு ஏற்றதாகும் ! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
4 .கிழமை : ‘அரசனது உரிமை’ - அரசனது உரிமை வரிவாங்குதல் என்றால் , இத் தொடரில் வந்துள்ள பொருள், ’கிழமை’ப் பொருள்! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
5 . செயற்கை : ‘சாத்தனது கற்றறிவு’ என்ற தொடர், சாத்தனுடைய செயற்கையான – இயற்கையாக இல்லாமல் அவன் படித்துச் செயற்கையாப் பெற்ற- அறிவு என்பதால் , இந்த எடுத்துக்காட்டுச், ‘செயற்கை’ என்ற பொருளின்கீழ் வரும்! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
6 . முதுமை: ‘அரசனது முதிர்வு’- அரசனுக்குற்ற முதுமையை இத் தொடர் தெரிவிப்பதால், இது ‘முதுமை’ என்ற பொருள் பாகுபாட்டில் வைத்துக் கருதப்படும் ! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
7 . வினை: ‘சாத்தனது செலவு’ – சாத்தனது பயணம் என்று இன்றைய நடையிற் கூறலாம் ! செல்லும் வினை (காரியம்) பேசும் தொடராதலால், ‘வினை’ப் பொருள் கொண்ட தொடருக்கு இஃது எடுத்துக்காட்டாம் . (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
8 . கருவி : ‘சாத்தனது வாள்’ – வாள் (கத்தி) , இன்னாரது என்று சொல்லக்கூடிய தொடர் இது; ஆகவே , ‘அது’ வேற்றுமை பயிலும் ‘கருவி’ப் பொருள் தொடர் இது! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
9 . துணை: ‘அவனது இணங்கு’- இங்கே ‘இணங்கு’ என்பது ‘துணைவன்’ அல்லது ‘துணைவி’யைக் குறிப்பதாகும் ! ‘Spouse’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் ‘இணங்கு’! எனவே ‘துணைக் கிழமை’க்கு இந்த எடுத்துக்காட்டுத் தொடர் பொருந்துவதைக் காண்க! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
10 . கலம்: ‘சாத்தனது கலம்’ – இங்கே ‘கலம்’ என்பது ‘ஓலைப் பத்திரம்’ (Palmleaf document) என்ற பொருளில் நிற்கிறது ! ‘இன்னாரது கலம்’ என்ற தொடர் தொல்காப்பியர் காலத்தில் பயிற்சி இருந்ததால், ‘கலக் கிழமை’த் தொடர்களில் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு பயின்றது ! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
11 . முதல் : ’கலத்தது முதல்’- ‘கலம்’ எனும் பத்திரம் எந்தப் பொருளின் உரிமைக்காக எழுதப்பட்டது? இதற்கு விடை கூறும்போது , அந்நாளில் ‘கலத்தது முதல் இன்னது’ என்பர்! இதுவே ‘முதல் கிழமை’ என்பதன் பொருள்!
12 . ஒருவழி உறுப்பு: ‘புலியது உகிர்’ - ‘உகிர்’ என்றால் நகம் என்பது பொருள். இத் தொடரிலும் ‘அது’ வேற்றுமை உருபு வந்துள்ளமை காண்க! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
13 . குழூஉ: ‘படையது குழூஉ’- ‘குழு’ என்பதே நூற்பாவுக்காக அளபெடை பெற்றது. குழுவைப் பற்றிய இத்தகைய தொடர்களில் ‘அது’ உருபு பயிலும். படையது குழு - படையது கூட்டம். (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
14 . தெரிந்துமொழிச் செய்தி: ‘கபிலரது பாட்டு’ - கபிலர் எழுதினார் என்று வெளிப்படையாகத் தெரிந்தது பற்றிய தொடராதலால் , ‘தெரிந்துமொழிச் செய்தி’! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
15 . நிலை: ‘சாத்தனது இல்லாமை’- சாத்தன் என்பானின் வறிய நிலையைக் கூறும் தொடர் இது; இதில் ‘அது’ வந்துள்ளதை நோக்குவீர்! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
16 . வாழ்ச்சி : ‘காட்டது யானை’ – இங்கே ’வாழ்ச்சி’ என்பது வாழ்க்கையைக் குறிக்கும்! காட்டில் யானை வாழ்வதைச் சுட்டும் தொடர் இது. காட்டது யானை- காட்டிலே வாழும் யானை ! இங்கே ‘அது’ வந்துள்ளதை நோக்குவீர்! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
17 . திரிந்து வேறுபட்டது: ‘கோட்டது நூறு’ ; கோடு – சுண்ணாம்புக் கட்டி ; நூறு – தூள்; கோட்டது நூறு – சுண்ணாம்புத் தூள். சுண்ணக்கட்டி தூளாக மாறிவிட்டதால், ‘திரிந்து வேறுபட்டது’ என்ற கிழமைப் பொருள் வந்தது. (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
’இயற்கை’ முதலாகத் ‘திரிந்து வேறுபட்டது’ ஈறாக வந்த மேல் 17 கிழமைப்பொருள்கள், தொல்காப்பியர் வகுத்தவை! இப் பதினேழும் , தற்கிழமை, பிறிதின் கிழமை என்ற இரண்டனுள் அடங்குவதை அடைப்புக் குறிக்குள் தந்துள்ள குறிப்புகளால் உணரலாம் !
தற்கிழமை பற்றி மேலே கண்டோமல்லவா? இந்தத் தற்கிழமை ஐந்து வகைப்படும் என்கிறார் சேனாவரையர்! :-
1 . ஒன்றியற் கிழமை- இயற்கை, நிலை பற்றி வந்தவை; எடுத்துக்காட்டுகளை மேலே (எண் 1, 15)பார்த்தோம் !
2 . ஒன்றுபல குழீஇயது – எள்ளதுகுப்பை
3 . வேறுபல குழீஇயது- படையது குழாம் (பலதரப்பட்ட வீரர்கள் படையில் இருப்பதால் ‘பல குழீஇயது’ ! பலகுழீஇயது – பல குழுமியது.
4 . உறுப்பின் கிழமை- புலியது உகிர்
5 . மெய்திரிந்தாய தற்கிழமை- சாத்தனது செலவு (சாத்தனின் பயணம் என்பது அவன் உடல் உறுப்போடு ஒட்டியது அல்ல; ஆகவே , ‘மெய்திரிந்தாய’ ! )
பிறிதின் கிழமைக்கு உட் பிரிவுகள் இல்லை என்பது இளம்பூரணர் கருத்தாக உள்ளது! ஆனால், சேனாவரையர், பிறிதின் கிழமை மூன்று வகைப்படும் என்று கூறுகிறார் !பொருள் , நிலம், காலம் ஆகிய கிழமைகளில் இவை வரும் என்கிறார் அவர்:-
1 .பொருள்- ‘கபிலரது பாட்டு’ (சேனாவரையரின் எடுத்துக்காட்டு)
2 . நிலம் – ‘யானையது காடு’(சேனாவரையரின் எடுத்துக்காட்டு)
3 . காலம் – ‘வெள்ளியது ஆட்சி’ (ஆ.சிவலிங்கனாரின் எடுத்துக்காட்டு)
(வெள்ளிக்கோள் பற்றிய தொடர்களில் இப்படிப்பட்ட தொடர்கள் பயின்றன.)
‘அது’ எனும் ஒரு வேற்றுமை உருபைத் தொல்காப்பியம் எவ்வளவு ஆழமாக ஆய்ந்துள்ளது பார்த்தீர்களா? வியப்பு! வியப்பு!
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது , ஆறாம் வேற்றுமை உருபு!
இதற்குத் தொல்காப்பியம் :-
“ஆறாகுவதே
அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும்
அன்ன கிளவிக் கிழமைத் ததுவே” (வேற். 18)
‘ஆறு ஆகுவதே’ – ஆறம் வேற்றுமை உருபு ஆகுவதாவது,
‘அது எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ - ‘அது’ என்று பெயர்கொண்ட வேற்றுமைச் சொல்!
‘தன்னினும் பிறிதினும்’ – ஒன்றனொடு சேர்ந்து பொருள்பட்டும்(தற்கிழமையாகவும்) , சேராது நின்று பொருள்பட்டும்(பிறிதின் கிழமையாகவும்),
‘இதனது இதுவெனும்’ – இந்தப் பொருளோடு தொடர்புபெற்று இது வரும் என்ற நிலையில்,
‘அன்ன கிளவிக் கிழமைத் ததுவே’ - கிழமை பெற்றதாய் வருவதாகும்.
1. ’யானையது கொம்பு’ – ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க! கொம்பானது யானையோடேயே தொடர்புபட்டு ஒட்டிக்கொண்டிருக்கும் பொருளாதலால், இந்த எடுத்துக்காட்டின் பொருளைத், ‘தற்கிழமைப் பொருள்’ என்பர்! (தன் + கிழமை = தற்கிழமை; பேசப்படும் பொருளுக்கே உரிமை உடையது; கிழமை – உரிமை; ‘கிழமை’ உடையவர் , ‘கிழார்’!)
2. ‘யானையது காடு’ - ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு இங்கும் வந்துள்ளதைக் காண்க! கொம்பானது யானையோடேயே தொடர்புபட்டு ஒட்டிக்கொண்டிருப்பதைப் போலல்லாது , காடானது தனித்துக் கிடப்பதால் , இந்த எடுத்துக்காட்டின் பொருளைப், ‘பிறிதின் கிழமைப் பொருள்’ என்பர்!
இனி, ஆறாம் வேற்றுமை உருபானது எந்தெந்தப் பொருள்களில் வரும் என வெகு நுணுக்கமாகக் கூறுகிறார் தொல்காப்பியர் !:-
“இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்
செயற்கையின் முதுமையின் வினையி னென்றா
கருவியின் துணையின் கலத்தின் முதலின்
ஒருவழி யுறுப்பின் குழுவி னென்றா
தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
திரிந்துவேறு படூஉம் பிறவும் அன்ன
கூறிய மருங்கில் தோன்றுங் கிளவி
ஆறன் பால என்மனார் புலவர்” (வேற். 19)
இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளைக் கண்டால் பொருள் விளங்கும் !
கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் சேனவரையர் , இளம்பூரணர் , தெய்வச்சிலையார் உரைகளிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டவையாம் ! ஒவ்வொருவர் உரையிலும் ஒவ்வொன்று தெளிவாக இருக்கும் என்பதால் இப்படி எடுக்கவேண்டுயுள்ளது!:-
1 . இயற்கை : ‘நிலத்தது அகலம்’- நிலத்தின் அகலம் இயற்கையாக அமைந்ததாகும்; எனவேதான் இயற்கைக் குணத்தின் அடிப்படையில் இதுபோல வருவனவற்றை எல்லாம் ‘இயற்கக் கிழமை’ப் பொருள்கொண்டவை என்பர்; இப்படித் தொடர்கள் வந்தால் அதில் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு வரும்! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
2 . உடைமை: ‘சாத்தனது தோட்டம்’ – இத் தொடரில் ‘அது’ வந்துள்ளதை நோக்குக! தோட்டம் சாத்தனுக்குச் சொந்தமானது என்பதால் , ‘உடைமை’ப் பொருளில் வந்த தொடர் இது ! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
3 . முறைமை : ‘ஆவினது கன்று’ – பசுவுக்கும் கன்றுக்கும் தொப்புள் உறவு உள்ளதால் இந்த எடுத்துக்காட்டுத் தொடர் ‘முறைமை’ என்ற பொருளுக்கு ஏற்றதாகும் ! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
4 .கிழமை : ‘அரசனது உரிமை’ - அரசனது உரிமை வரிவாங்குதல் என்றால் , இத் தொடரில் வந்துள்ள பொருள், ’கிழமை’ப் பொருள்! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
5 . செயற்கை : ‘சாத்தனது கற்றறிவு’ என்ற தொடர், சாத்தனுடைய செயற்கையான – இயற்கையாக இல்லாமல் அவன் படித்துச் செயற்கையாப் பெற்ற- அறிவு என்பதால் , இந்த எடுத்துக்காட்டுச், ‘செயற்கை’ என்ற பொருளின்கீழ் வரும்! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
6 . முதுமை: ‘அரசனது முதிர்வு’- அரசனுக்குற்ற முதுமையை இத் தொடர் தெரிவிப்பதால், இது ‘முதுமை’ என்ற பொருள் பாகுபாட்டில் வைத்துக் கருதப்படும் ! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
7 . வினை: ‘சாத்தனது செலவு’ – சாத்தனது பயணம் என்று இன்றைய நடையிற் கூறலாம் ! செல்லும் வினை (காரியம்) பேசும் தொடராதலால், ‘வினை’ப் பொருள் கொண்ட தொடருக்கு இஃது எடுத்துக்காட்டாம் . (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
8 . கருவி : ‘சாத்தனது வாள்’ – வாள் (கத்தி) , இன்னாரது என்று சொல்லக்கூடிய தொடர் இது; ஆகவே , ‘அது’ வேற்றுமை பயிலும் ‘கருவி’ப் பொருள் தொடர் இது! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
9 . துணை: ‘அவனது இணங்கு’- இங்கே ‘இணங்கு’ என்பது ‘துணைவன்’ அல்லது ‘துணைவி’யைக் குறிப்பதாகும் ! ‘Spouse’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் ‘இணங்கு’! எனவே ‘துணைக் கிழமை’க்கு இந்த எடுத்துக்காட்டுத் தொடர் பொருந்துவதைக் காண்க! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
10 . கலம்: ‘சாத்தனது கலம்’ – இங்கே ‘கலம்’ என்பது ‘ஓலைப் பத்திரம்’ (Palmleaf document) என்ற பொருளில் நிற்கிறது ! ‘இன்னாரது கலம்’ என்ற தொடர் தொல்காப்பியர் காலத்தில் பயிற்சி இருந்ததால், ‘கலக் கிழமை’த் தொடர்களில் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு பயின்றது ! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
11 . முதல் : ’கலத்தது முதல்’- ‘கலம்’ எனும் பத்திரம் எந்தப் பொருளின் உரிமைக்காக எழுதப்பட்டது? இதற்கு விடை கூறும்போது , அந்நாளில் ‘கலத்தது முதல் இன்னது’ என்பர்! இதுவே ‘முதல் கிழமை’ என்பதன் பொருள்!
12 . ஒருவழி உறுப்பு: ‘புலியது உகிர்’ - ‘உகிர்’ என்றால் நகம் என்பது பொருள். இத் தொடரிலும் ‘அது’ வேற்றுமை உருபு வந்துள்ளமை காண்க! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
13 . குழூஉ: ‘படையது குழூஉ’- ‘குழு’ என்பதே நூற்பாவுக்காக அளபெடை பெற்றது. குழுவைப் பற்றிய இத்தகைய தொடர்களில் ‘அது’ உருபு பயிலும். படையது குழு - படையது கூட்டம். (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
14 . தெரிந்துமொழிச் செய்தி: ‘கபிலரது பாட்டு’ - கபிலர் எழுதினார் என்று வெளிப்படையாகத் தெரிந்தது பற்றிய தொடராதலால் , ‘தெரிந்துமொழிச் செய்தி’! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
15 . நிலை: ‘சாத்தனது இல்லாமை’- சாத்தன் என்பானின் வறிய நிலையைக் கூறும் தொடர் இது; இதில் ‘அது’ வந்துள்ளதை நோக்குவீர்! (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
16 . வாழ்ச்சி : ‘காட்டது யானை’ – இங்கே ’வாழ்ச்சி’ என்பது வாழ்க்கையைக் குறிக்கும்! காட்டில் யானை வாழ்வதைச் சுட்டும் தொடர் இது. காட்டது யானை- காட்டிலே வாழும் யானை ! இங்கே ‘அது’ வந்துள்ளதை நோக்குவீர்! (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)
17 . திரிந்து வேறுபட்டது: ‘கோட்டது நூறு’ ; கோடு – சுண்ணாம்புக் கட்டி ; நூறு – தூள்; கோட்டது நூறு – சுண்ணாம்புத் தூள். சுண்ணக்கட்டி தூளாக மாறிவிட்டதால், ‘திரிந்து வேறுபட்டது’ என்ற கிழமைப் பொருள் வந்தது. (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)
’இயற்கை’ முதலாகத் ‘திரிந்து வேறுபட்டது’ ஈறாக வந்த மேல் 17 கிழமைப்பொருள்கள், தொல்காப்பியர் வகுத்தவை! இப் பதினேழும் , தற்கிழமை, பிறிதின் கிழமை என்ற இரண்டனுள் அடங்குவதை அடைப்புக் குறிக்குள் தந்துள்ள குறிப்புகளால் உணரலாம் !
தற்கிழமை பற்றி மேலே கண்டோமல்லவா? இந்தத் தற்கிழமை ஐந்து வகைப்படும் என்கிறார் சேனாவரையர்! :-
1 . ஒன்றியற் கிழமை- இயற்கை, நிலை பற்றி வந்தவை; எடுத்துக்காட்டுகளை மேலே (எண் 1, 15)பார்த்தோம் !
2 . ஒன்றுபல குழீஇயது – எள்ளதுகுப்பை
3 . வேறுபல குழீஇயது- படையது குழாம் (பலதரப்பட்ட வீரர்கள் படையில் இருப்பதால் ‘பல குழீஇயது’ ! பலகுழீஇயது – பல குழுமியது.
4 . உறுப்பின் கிழமை- புலியது உகிர்
5 . மெய்திரிந்தாய தற்கிழமை- சாத்தனது செலவு (சாத்தனின் பயணம் என்பது அவன் உடல் உறுப்போடு ஒட்டியது அல்ல; ஆகவே , ‘மெய்திரிந்தாய’ ! )
பிறிதின் கிழமைக்கு உட் பிரிவுகள் இல்லை என்பது இளம்பூரணர் கருத்தாக உள்ளது! ஆனால், சேனாவரையர், பிறிதின் கிழமை மூன்று வகைப்படும் என்று கூறுகிறார் !பொருள் , நிலம், காலம் ஆகிய கிழமைகளில் இவை வரும் என்கிறார் அவர்:-
1 .பொருள்- ‘கபிலரது பாட்டு’ (சேனாவரையரின் எடுத்துக்காட்டு)
2 . நிலம் – ‘யானையது காடு’(சேனாவரையரின் எடுத்துக்காட்டு)
3 . காலம் – ‘வெள்ளியது ஆட்சி’ (ஆ.சிவலிங்கனாரின் எடுத்துக்காட்டு)
(வெள்ளிக்கோள் பற்றிய தொடர்களில் இப்படிப்பட்ட தொடர்கள் பயின்றன.)
‘அது’ எனும் ஒரு வேற்றுமை உருபைத் தொல்காப்பியம் எவ்வளவு ஆழமாக ஆய்ந்துள்ளது பார்த்தீர்களா? வியப்பு! வியப்பு!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
என் மாடு , எனது மாடு - இவற்றில் எது சரி ?
திருமணப் பத்திரிகைகளில் " எனது மகனுக்கும் ...." என்று அச்ச்சிடுகிறார்கள் . அது சரியா ?
திருமணப் பத்திரிகைகளில் " எனது மகனுக்கும் ...." என்று அச்ச்சிடுகிறார்கள் . அது சரியா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மிக்க நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே!
என் மாடு , எனது மாடு – இரண்டுமே சரிதான் !
எனது மகன் – இதுவும் சரிதான்! தொல்காப்பியத்து ‘முறைமைக் கிழமை’ இதில் பயிலுவதைக் காண்பீர்!
என் மாடு , எனது மாடு – இரண்டுமே சரிதான் !
எனது மகன் – இதுவும் சரிதான்! தொல்காப்பியத்து ‘முறைமைக் கிழமை’ இதில் பயிலுவதைக் காண்பீர்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான் கேள்விப்பட்ட வரையில் " என் " என்பது உயர்திணைக்கும், " எனது " என்பது அஃறிணைக்கும் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் .
" எனது மகன் " எனது மாடு " இவை இரண்டும் சரியென்று சொன்னால் , மகனும் மாடும் சமநிலை பெறுகின்றனர் . இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?
" எனது மகன் " எனது மாடு " இவை இரண்டும் சரியென்று சொன்னால் , மகனும் மாடும் சமநிலை பெறுகின்றனர் . இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி ஜெகதீசன் அவர்களே! நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான் ! நானும் அதைப் படித்துள்ளேன்! ‘அது’ பற்றிய தொல்காப்பியர் நூற்பாவில் ‘முறைமைக் கிழமை’ என வந்துள்ளதால், ’எனது மகன்’ தொல்காப்பிய விதிக்கு உட்பட்டதுதான் என நாம் மதிப்பிடலாம்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (457)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது ஏழாம் வேற்றுமை உருபு!:-
“ஏழாகுவதே
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே” (வேற். 20)
‘ஏழு ஆகுவதே’ – ஏழாம் வேற்றுமை எனப்படுவது,
‘கண் எனப் பெயரிய’ – ‘கண்’ என்ற பெயர்கொண்ட’
‘வேற்றுமைக் கிளவி’ – வேற்றுமைச் சொல்;
‘வினைசெய் இடத்தின்’ – தொழில் நடைபெறும் இடத்தில்,
‘நிலத்தின்’ – இடத்தைக் குறிப்பிடும்போது,
‘காலத்தின்’ – காலத்தில் நடைபெறுவதைக் குறித்தலின்போது,
‘அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே’ – என்ற மூன்று நிலைகளில் தோன்றும் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் !-
1 . ’தட்டுப்புடைக்கண் வந்தான்’ (இந்த எடுத்துக்காட்டு ‘வினைசெய் இடத்தில்’ என்பதற்கானது) ( தட்டுப்புடை என்ற தொழில், முறத்தால் பயிர்களைப் புடைத்தல் என்பதாகலாம் எனச் சிவலிங்கனார் குறிப்பு எழுதியுள்ளார். )
2 . ’மாடத்தின்கண் இருந்தான்’ (இந்த எடுத்துக்காட்டு ‘நிலத்தில்’ என்பதற்கானது)
3 . ‘கூதிர்க்கண் வந்தான்’ (இந்த எடுத்துக்காட்டு ‘காலத்தின்’ என்பதற்கானது)s
அடுத்த நூற்பாவில் , ’கண்’ உருபினையும் அதனை ஒத்த , பிற சொல் உருபுகளை யும் அடுக்குகிறார் தொல்காப்பியர்!:-
”கண்கால் புறமகம் உள்ளுழை கீழ்மேல்
பின்சார் அயல்புடை தேவகை யெனாஅ
முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ
அன்ன பிறவும் அதன்பால என்மனார் ” (வேற்.21)
இந் நூற்பா தரும் உருபுகள்!:-
1 . கண்
2 . கால்
3 . புறம்
4 . அகம்
5 . உள்
6 . உழை
7 . கீழ்
8 . மேல்
9 . பின்
10 .சார்
11 . அயல்
12 . புடை
13 . தேவகை
14 . முன்
15 . இடை
16 . கடை
17 . தலை
18 .வலம்
19 . இடம்
சேனாவரையர் உரைப்படி ‘கண்’ என்ற ஒன்றே ஏழாம் வேற்றுமை உருபு ! ஏனைய பதினெட்டும் , ஏழாம் வேற்றுமை ’உருபின் திறத்தன’!
‘கண்’ என்பதே 7ஆம் வேற்றுமையின் சூத்திரச் சொல்! அஃதாவது , வாய்பாடு(Formula).
எடுத்துக்காட்டாக , ‘தோப்பயல் இருந்தான்’ என்று தொடர் உள்ளது என வைத்துக்கொள்ளுங்கள்! இங்கே ‘அயல்’ எந்த வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது என்பதை அறியக் ‘கண்’ணை வைத்துப் பாருங்கள்! ‘தோப்புக்கண் இருந்தான் ’ என்று வருகிறது! இதனால் பொருளில் மாற்றம் இல்லை! எனவே, ‘அயல்’ என்பது ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது எனத் தீர்மானிக்கலாம்! இவ்வாறு நாம் தீர்மானிக்க வசதியாகவே தொல்காப்பியர் பல ’வேறு உருபுக’ளைத் தந்துள்ளார் என நாம் விளங்கிக்கொள்ளவேண்டும் !
இப்போது , கல்லாடனார் மேல் 19 உருபுகளுக்கும் (கல்லாடனார் பத்தொன்பதையும் ‘உருபுகள்’ என்றே எழுதுகிறார்!) தந்துள்ள எடுத்துக்காட்டுகளைக் காணலாம்! :-
1 . கண் - ‘ஊர்க்கண் இருந்தான்’(= ஊரில் இருந்தான்)
2 . கால் – ‘ஊர்க்கால் இருந்தான்’ (= ஊரை அடுத்து இருந்தான்)
3 . புறம் – ’ஊர்ப்புறத் திருந்தான்’ (= ஊரின் புறத்தே இருந்தான்)
4 . அகம் – ’மாடத்தகத் திருந்தான்’ (=மாடத்தில் இருந்தான்)
5 . உள் – ’ஊருள் இருந்தான்’ (=ஊருக்குள் இருந்தான்)
6 . உழை – ’சான்றோருழைச் சென்றான்’ (=சான்றோரிடம் சென்றான்)
7 . கீழ் – ’மாடத்துக்கீழ் இருந்தான்’ (= மாடத்திற்கு அடிப்புறத்தே இருந்தான்)
8 . மேல் – ‘மாடத்து மேல் இருந்தான்’(= மாடத்திற்கு மேலே இருந்தான்)
9 . பின் – ‘ஏர்ப்பின் சென்றான்’ (= ஏரின் பின்னே சென்றான்)
10 . சார் - ‘காட்டுச்சார் ஓடுங் களிறு’ (= காட்டுப்பக்கம் ஓடுகிற களிறு)
11 . அயல் – ‘ஊரயல் இருந்தான்’ (= ஊரை ஒட்டி இருந்தான்)
12. புடை – ‘ஊர்ப்புடை இருந்தான்’ (= ஊரின் பக்கத்தே இருந்தான்)
13 . தேவகை – ‘வடக்கண் வேங்கடம்’ (= வடக்குத் திசையில் வேங்கடம்)
14 . முன் - ‘தேர்முன் சென்றான்’ (=தேருக்கு முன்னே சென்றான்)
15 . இடை – ‘சான்றோரிடை யிருந்தான்’ (=சான்றோர் நடுவே இருந்தான்)
16 . கடை – ‘கோயிற்கடைச் சென்றான்’ (= கோயிலுக்குச் சென்றான்)
17. தலை – ‘தந்தைதலைச் சென்றான்’ (= தந்தையிடம் சென்றான்)
18. வலம் – ‘கைவலத்துள்ளது கொடுக்கும்’ (= கையிலே உள்ளதைக் கொடுப்பார்)
19 . இடம் – ‘கையிடத்துப் பொருள்’ (= கையிலே உள்ள பொருள்)
கல்லாடனார் , ‘தேவகை’ என்பதைத் ’திசைக் கூறு’ எனக் கொண்டு , மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டைத் தந்துள்ளார். தொல்காப்பியரின் ‘அன்ன பிறவும்’ என்பதில் , ‘தேஎம்’ என்ற உருபைக் காட்டினார் கல்லாடனார்; இதே ‘தேஎம்’ என்ற சொல்லையே , ‘தேம்’ என்றார் தெய்வச்சிலையார். ’தேஎத்து’ என்ற சொல்லின் பகுதியாகத் ‘தேம்’ என்பதையே இன்றைய மொழியிலார் காட்டுகின்றனர்.
இறையனார் களவியலிலும் , சங்க இலக்கியத்திலும் ‘தேஎத்து’ , ‘தேயத்து’ என்ற வடிவங்கள் ‘கண்’ வேற்றுமை உருபுப் பொருளிலேயே வருகின்றன; ‘திசை’ என்ற பொருளில் வரவில்லை!
இலக்கணக் கொத்து என்ற நூலில் சுவாமிநாத தேசிகர் (கி.பி.17ஆம் நூ.ஆ.) உருபை மூன்று வகைகளாகக் காட்டுகிறார் :-
1 . உருபு
2 . வேறு உருபு
3 . சொல்லுருபு
ஆனால் இவற்றை அவர் விளக்கவில்லை!
இலக்கொத்தின்படி,தொல்காப்பியர் கூறிய ‘கண்’ என்பதை நாம் ’உருபு’ எனக் குறிக்கலாம்; ’கால்’ முதல் ‘இடம்’ வரையானவற்றை ‘வேறு உருபுகள்’ என்ற வகையில் அடக்கலாம்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (TVU), ‘வீடு வரை போனான்’ என்ற தொடரில் ‘வரை’ என்பது சொல்லுருபாகும் என்கிறது; பெயர்சொல்லின் ஈற்றில் இணைந்து நிற்காமல் தனித்து நிற்பதால் ‘வரை’ யைச் சொல்லுருபு என அது விளக்குகிறது.இதன்படி -
‘அதன் நிமித்தம்’ – இங்கே ’நிமித்தம்’, சொல்லுருபு.
‘அதன் பொருட்டு’ – இங்கே ’பொருட்டு’, சொல்லுருபு.
எனச் சில எடுத்துக்காட்டுகளை நாம் தரலாம்.
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது ஏழாம் வேற்றுமை உருபு!:-
“ஏழாகுவதே
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே” (வேற். 20)
‘ஏழு ஆகுவதே’ – ஏழாம் வேற்றுமை எனப்படுவது,
‘கண் எனப் பெயரிய’ – ‘கண்’ என்ற பெயர்கொண்ட’
‘வேற்றுமைக் கிளவி’ – வேற்றுமைச் சொல்;
‘வினைசெய் இடத்தின்’ – தொழில் நடைபெறும் இடத்தில்,
‘நிலத்தின்’ – இடத்தைக் குறிப்பிடும்போது,
‘காலத்தின்’ – காலத்தில் நடைபெறுவதைக் குறித்தலின்போது,
‘அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே’ – என்ற மூன்று நிலைகளில் தோன்றும் !
சேனாவரையரின் எடுத்துக்காட்டுகள் !-
1 . ’தட்டுப்புடைக்கண் வந்தான்’ (இந்த எடுத்துக்காட்டு ‘வினைசெய் இடத்தில்’ என்பதற்கானது) ( தட்டுப்புடை என்ற தொழில், முறத்தால் பயிர்களைப் புடைத்தல் என்பதாகலாம் எனச் சிவலிங்கனார் குறிப்பு எழுதியுள்ளார். )
2 . ’மாடத்தின்கண் இருந்தான்’ (இந்த எடுத்துக்காட்டு ‘நிலத்தில்’ என்பதற்கானது)
3 . ‘கூதிர்க்கண் வந்தான்’ (இந்த எடுத்துக்காட்டு ‘காலத்தின்’ என்பதற்கானது)s
அடுத்த நூற்பாவில் , ’கண்’ உருபினையும் அதனை ஒத்த , பிற சொல் உருபுகளை யும் அடுக்குகிறார் தொல்காப்பியர்!:-
”கண்கால் புறமகம் உள்ளுழை கீழ்மேல்
பின்சார் அயல்புடை தேவகை யெனாஅ
முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ
அன்ன பிறவும் அதன்பால என்மனார் ” (வேற்.21)
இந் நூற்பா தரும் உருபுகள்!:-
1 . கண்
2 . கால்
3 . புறம்
4 . அகம்
5 . உள்
6 . உழை
7 . கீழ்
8 . மேல்
9 . பின்
10 .சார்
11 . அயல்
12 . புடை
13 . தேவகை
14 . முன்
15 . இடை
16 . கடை
17 . தலை
18 .வலம்
19 . இடம்
சேனாவரையர் உரைப்படி ‘கண்’ என்ற ஒன்றே ஏழாம் வேற்றுமை உருபு ! ஏனைய பதினெட்டும் , ஏழாம் வேற்றுமை ’உருபின் திறத்தன’!
‘கண்’ என்பதே 7ஆம் வேற்றுமையின் சூத்திரச் சொல்! அஃதாவது , வாய்பாடு(Formula).
எடுத்துக்காட்டாக , ‘தோப்பயல் இருந்தான்’ என்று தொடர் உள்ளது என வைத்துக்கொள்ளுங்கள்! இங்கே ‘அயல்’ எந்த வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது என்பதை அறியக் ‘கண்’ணை வைத்துப் பாருங்கள்! ‘தோப்புக்கண் இருந்தான் ’ என்று வருகிறது! இதனால் பொருளில் மாற்றம் இல்லை! எனவே, ‘அயல்’ என்பது ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது எனத் தீர்மானிக்கலாம்! இவ்வாறு நாம் தீர்மானிக்க வசதியாகவே தொல்காப்பியர் பல ’வேறு உருபுக’ளைத் தந்துள்ளார் என நாம் விளங்கிக்கொள்ளவேண்டும் !
இப்போது , கல்லாடனார் மேல் 19 உருபுகளுக்கும் (கல்லாடனார் பத்தொன்பதையும் ‘உருபுகள்’ என்றே எழுதுகிறார்!) தந்துள்ள எடுத்துக்காட்டுகளைக் காணலாம்! :-
1 . கண் - ‘ஊர்க்கண் இருந்தான்’(= ஊரில் இருந்தான்)
2 . கால் – ‘ஊர்க்கால் இருந்தான்’ (= ஊரை அடுத்து இருந்தான்)
3 . புறம் – ’ஊர்ப்புறத் திருந்தான்’ (= ஊரின் புறத்தே இருந்தான்)
4 . அகம் – ’மாடத்தகத் திருந்தான்’ (=மாடத்தில் இருந்தான்)
5 . உள் – ’ஊருள் இருந்தான்’ (=ஊருக்குள் இருந்தான்)
6 . உழை – ’சான்றோருழைச் சென்றான்’ (=சான்றோரிடம் சென்றான்)
7 . கீழ் – ’மாடத்துக்கீழ் இருந்தான்’ (= மாடத்திற்கு அடிப்புறத்தே இருந்தான்)
8 . மேல் – ‘மாடத்து மேல் இருந்தான்’(= மாடத்திற்கு மேலே இருந்தான்)
9 . பின் – ‘ஏர்ப்பின் சென்றான்’ (= ஏரின் பின்னே சென்றான்)
10 . சார் - ‘காட்டுச்சார் ஓடுங் களிறு’ (= காட்டுப்பக்கம் ஓடுகிற களிறு)
11 . அயல் – ‘ஊரயல் இருந்தான்’ (= ஊரை ஒட்டி இருந்தான்)
12. புடை – ‘ஊர்ப்புடை இருந்தான்’ (= ஊரின் பக்கத்தே இருந்தான்)
13 . தேவகை – ‘வடக்கண் வேங்கடம்’ (= வடக்குத் திசையில் வேங்கடம்)
14 . முன் - ‘தேர்முன் சென்றான்’ (=தேருக்கு முன்னே சென்றான்)
15 . இடை – ‘சான்றோரிடை யிருந்தான்’ (=சான்றோர் நடுவே இருந்தான்)
16 . கடை – ‘கோயிற்கடைச் சென்றான்’ (= கோயிலுக்குச் சென்றான்)
17. தலை – ‘தந்தைதலைச் சென்றான்’ (= தந்தையிடம் சென்றான்)
18. வலம் – ‘கைவலத்துள்ளது கொடுக்கும்’ (= கையிலே உள்ளதைக் கொடுப்பார்)
19 . இடம் – ‘கையிடத்துப் பொருள்’ (= கையிலே உள்ள பொருள்)
கல்லாடனார் , ‘தேவகை’ என்பதைத் ’திசைக் கூறு’ எனக் கொண்டு , மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டைத் தந்துள்ளார். தொல்காப்பியரின் ‘அன்ன பிறவும்’ என்பதில் , ‘தேஎம்’ என்ற உருபைக் காட்டினார் கல்லாடனார்; இதே ‘தேஎம்’ என்ற சொல்லையே , ‘தேம்’ என்றார் தெய்வச்சிலையார். ’தேஎத்து’ என்ற சொல்லின் பகுதியாகத் ‘தேம்’ என்பதையே இன்றைய மொழியிலார் காட்டுகின்றனர்.
இறையனார் களவியலிலும் , சங்க இலக்கியத்திலும் ‘தேஎத்து’ , ‘தேயத்து’ என்ற வடிவங்கள் ‘கண்’ வேற்றுமை உருபுப் பொருளிலேயே வருகின்றன; ‘திசை’ என்ற பொருளில் வரவில்லை!
இலக்கணக் கொத்து என்ற நூலில் சுவாமிநாத தேசிகர் (கி.பி.17ஆம் நூ.ஆ.) உருபை மூன்று வகைகளாகக் காட்டுகிறார் :-
1 . உருபு
2 . வேறு உருபு
3 . சொல்லுருபு
ஆனால் இவற்றை அவர் விளக்கவில்லை!
இலக்கொத்தின்படி,தொல்காப்பியர் கூறிய ‘கண்’ என்பதை நாம் ’உருபு’ எனக் குறிக்கலாம்; ’கால்’ முதல் ‘இடம்’ வரையானவற்றை ‘வேறு உருபுகள்’ என்ற வகையில் அடக்கலாம்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (TVU), ‘வீடு வரை போனான்’ என்ற தொடரில் ‘வரை’ என்பது சொல்லுருபாகும் என்கிறது; பெயர்சொல்லின் ஈற்றில் இணைந்து நிற்காமல் தனித்து நிற்பதால் ‘வரை’ யைச் சொல்லுருபு என அது விளக்குகிறது.இதன்படி -
‘அதன் நிமித்தம்’ – இங்கே ’நிமித்தம்’, சொல்லுருபு.
‘அதன் பொருட்டு’ – இங்கே ’பொருட்டு’, சொல்லுருபு.
எனச் சில எடுத்துக்காட்டுகளை நாம் தரலாம்.
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (458)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது , வேற்றுமையியலின் அடுத்த நூற்பா!:-
“வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை
ஈற்றுநின் றியலுந் தொகைவயின் பிரிந்து
பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்
எல்லாச் சொல்லும் உரிய வென்ப” (வேற்.22)
‘வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை’ - வேற்றுமைப் பயன் இன்னது என்று ஒரு தொகையை விரித்துப் பேசும்போது,
‘ஈற்றுநின் றியலுந் தொகைவயின் பிரிந்து’ – முதற்சொல்லின் ஈற்றிலே அந்த வேர்றுமையானது நிற்கும் !
‘பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்’ - வேற்றுமையை உருபோடு சொல்லினும், உருபானது மறையச் சொல்லினும் , பொருளானது ஒன்றாகவே வரும் !
‘மரங் குறைத்தான்’ – இது வேற்றுமைத் தொகை. (வேற்றுமை உருபு மறைந்து வருவதைக் காண்க)
‘மரத்தைக் குறைத்தான்’ – இது வேற்றுமை விரி. (ஐ- வேற்றுமை உருபு வெளிப்பட நிற்பதைக் காண்க)
-
ஆனால் இரண்டு இடத்தும் பொருள் ஒன்றே!இரண்டும் வேற்றுமைப் பொருள் கொண்ட தொடர்களே!
மேலை எடுத்துக்காட்டில் ‘மரம்’ என்ற சொல்லின் ஈற்றிலேதான் வேற்றுமை உருபு(ஐ) நின்றதையும் நோக்கலாம் !
‘ஈற்றுநின்று இயலும்’ என்பதை மேலும் விளக்கவேண்டும் !
‘தாழ்குழல் வந்தாள்’ – இதில், வேற்றுமை உருபு எங்கே மறைந்து நிற்கிறது? ‘தாழ்குழல்’ என்பதன் ஈற்றிலே மறைந்து நிற்கிறது !
‘தாழ்குழல் வந்தாள்’ – இதனை விரித்தால், ‘தாழ்குழலை உடையவள் வந்தாள்’ என விரியும் ! ‘தாழ்குழல்’ என்பது , தாழ்குழலை உடையவளைச் சுட்டுவதால் , இதனை ‘அன்மொழித்தொகை’ என்கிறோம் ! ‘தாழ்குழல்’ என்பது தொகை; ஆனால் , இதற்குப் புறத்தே சென்று ‘ தாழ்குழலை உடையவள்’ என்ற பொருளை நாம் எடுப்பதால், ‘அன்மொழித்தொகை’ ஆகிறது.
அன்மொழித் தொகை = அல்+ மொழி+ தொகை
அல் – அல்லாத ; அஃதாவது சொல்லில் அல்லாத; ‘புறத்தே’ என வந்த மேலை விளக்கத்தைக் காண்க!
இத்துடன் வேற்றுமை இயல் முடிந்தது.
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது , வேற்றுமையியலின் அடுத்த நூற்பா!:-
“வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை
ஈற்றுநின் றியலுந் தொகைவயின் பிரிந்து
பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்
எல்லாச் சொல்லும் உரிய வென்ப” (வேற்.22)
‘வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை’ - வேற்றுமைப் பயன் இன்னது என்று ஒரு தொகையை விரித்துப் பேசும்போது,
‘ஈற்றுநின் றியலுந் தொகைவயின் பிரிந்து’ – முதற்சொல்லின் ஈற்றிலே அந்த வேர்றுமையானது நிற்கும் !
‘பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்’ - வேற்றுமையை உருபோடு சொல்லினும், உருபானது மறையச் சொல்லினும் , பொருளானது ஒன்றாகவே வரும் !
‘மரங் குறைத்தான்’ – இது வேற்றுமைத் தொகை. (வேற்றுமை உருபு மறைந்து வருவதைக் காண்க)
‘மரத்தைக் குறைத்தான்’ – இது வேற்றுமை விரி. (ஐ- வேற்றுமை உருபு வெளிப்பட நிற்பதைக் காண்க)
-
ஆனால் இரண்டு இடத்தும் பொருள் ஒன்றே!இரண்டும் வேற்றுமைப் பொருள் கொண்ட தொடர்களே!
மேலை எடுத்துக்காட்டில் ‘மரம்’ என்ற சொல்லின் ஈற்றிலேதான் வேற்றுமை உருபு(ஐ) நின்றதையும் நோக்கலாம் !
‘ஈற்றுநின்று இயலும்’ என்பதை மேலும் விளக்கவேண்டும் !
‘தாழ்குழல் வந்தாள்’ – இதில், வேற்றுமை உருபு எங்கே மறைந்து நிற்கிறது? ‘தாழ்குழல்’ என்பதன் ஈற்றிலே மறைந்து நிற்கிறது !
‘தாழ்குழல் வந்தாள்’ – இதனை விரித்தால், ‘தாழ்குழலை உடையவள் வந்தாள்’ என விரியும் ! ‘தாழ்குழல்’ என்பது , தாழ்குழலை உடையவளைச் சுட்டுவதால் , இதனை ‘அன்மொழித்தொகை’ என்கிறோம் ! ‘தாழ்குழல்’ என்பது தொகை; ஆனால் , இதற்குப் புறத்தே சென்று ‘ தாழ்குழலை உடையவள்’ என்ற பொருளை நாம் எடுப்பதால், ‘அன்மொழித்தொகை’ ஆகிறது.
அன்மொழித் தொகை = அல்+ மொழி+ தொகை
அல் – அல்லாத ; அஃதாவது சொல்லில் அல்லாத; ‘புறத்தே’ என வந்த மேலை விளக்கத்தைக் காண்க!
இத்துடன் வேற்றுமை இயல் முடிந்தது.
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (459)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது-
வேற்றுமை மயங்கியல் !
ஒரு வேற்றுமை உருபுக்குப் பதிலாக இன்னொரு வேற்றுமை வரும்போது ஏற்படும் பொருள் மாற்றங்களைக் கூறும் இயல் இது !
வேற்றுமை இயலின் முதலாம் நூற்பா! –
“கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு
உரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை” (வேற். மயங். 1)
‘கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு ’ - உடம்பால் செயற்பாடு இல்லாத ‘சார்பு’ எனும் சொல்லுக்கு,
‘உரிமையும் உடைத்தே கண் என் வேற்றுமை’ - ‘கண்’ எனும் வேற்றுமை உருபு வருவதும் உண்டு !
சுவற்றைச் சார்ந்தான் – இதில் உடம்பின் செயல் உள்ளது!
தூணைச் சார்ந்தான் - இதில் உடம்பின் செயல் உள்ளது!
ஆனால்,
‘அரசனைச் சார்ந்தான்’ – இதில் உடம்பின் செயற்பாடு இல்லை ! அஃதாவது , அரசன் மீது உடம்பைச் சார்த்துதல் இல்லை ! தூணின் மீது சாய்வது போல அரசன் மீது சாய்வது இல்லையல்லவா? இதுவே கருமம் அல்லாச் சார்பு!
தூணைச் சார்ந்தான் – இது கருமச் சார்பு
சுவற்றைச் சார்ந்தான் – இது கருமச் சார்பு
1 . அரசரைச் சார்ந்தான் - கருமம் அல்லாச் சார்பு ; இங்கே இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ)வந்தது !
2 . அரசர்கட் சார்ந்தான் - கருமம் அல்லாச் சார்பு ; இங்கே எட்டாம் வேற்றுமை உருபு ( ‘கண்’)வந்தது !
-
இந்த இரண்டு தொடர்களுக்கும் பொருள் ஒன்றே!
இவற்றில் , ‘ஐ’யும் வரலாம் ‘கண்’ணும் வரலாம் என்ற நிலை உள்ளதல்லவா? இதுதான் வேற்றுமை மயக்கம் என்பது!
இனி , வேறுமை இயலின் இரண்டாம் நூற்பா!-
“சினைநிலைக் கிளவிக்கு ஐயுங் கண்ணும்
வினைநிலை யொக்கும் என்மனார் புலவர்” (வேற். 2)
இந்தச் சூத்திரமும் இரண்டாம் வேற்றுமை வரத்தக்க எந்த இடத்தில் ஏழாம் வேற்றுமை வரலாம் என்பதைத்தான் சொல்கிறது !
’
சினைநிலைக் கிளவிக்கு ‘ -சினை பற்றிய சொல்லுக்கு,
‘ஐயும் கண்ணும்’ – ’ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபும், ‘கண்’ எனும் ஏழாம் வேற்றுமை உருபும்,
‘வினைநிலை ஒக்கும் என்மனார் புலவர்’ - தம்முள் ஏதாவது ஒன்று வந்தாலும், பொருள் மாறாது என்பார்கள் புலவர்கள் !
‘கோட்டைக் குறைத்தான்’ = கொம்பைக் குறைத்தான் (கொம்பை வெட்டினான் ; இங்கே ‘ஐ’வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க!)
‘கோட்டின்கட் குறைத்தான்’ = கொம்பைக் குறைத்தான் (கொம்பை வெட்டினான் ; இங்கே ‘கண்’வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க!)
‘ஐ’ உருபு வந்தாலும் , ‘கண்’ உருபு வந்தாலும் பொருள் ஒன்றுதான் என்பதைக் கவனிக்க!
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது-
வேற்றுமை மயங்கியல் !
ஒரு வேற்றுமை உருபுக்குப் பதிலாக இன்னொரு வேற்றுமை வரும்போது ஏற்படும் பொருள் மாற்றங்களைக் கூறும் இயல் இது !
வேற்றுமை இயலின் முதலாம் நூற்பா! –
“கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு
உரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை” (வேற். மயங். 1)
‘கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு ’ - உடம்பால் செயற்பாடு இல்லாத ‘சார்பு’ எனும் சொல்லுக்கு,
‘உரிமையும் உடைத்தே கண் என் வேற்றுமை’ - ‘கண்’ எனும் வேற்றுமை உருபு வருவதும் உண்டு !
சுவற்றைச் சார்ந்தான் – இதில் உடம்பின் செயல் உள்ளது!
தூணைச் சார்ந்தான் - இதில் உடம்பின் செயல் உள்ளது!
ஆனால்,
‘அரசனைச் சார்ந்தான்’ – இதில் உடம்பின் செயற்பாடு இல்லை ! அஃதாவது , அரசன் மீது உடம்பைச் சார்த்துதல் இல்லை ! தூணின் மீது சாய்வது போல அரசன் மீது சாய்வது இல்லையல்லவா? இதுவே கருமம் அல்லாச் சார்பு!
தூணைச் சார்ந்தான் – இது கருமச் சார்பு
சுவற்றைச் சார்ந்தான் – இது கருமச் சார்பு
1 . அரசரைச் சார்ந்தான் - கருமம் அல்லாச் சார்பு ; இங்கே இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ)வந்தது !
2 . அரசர்கட் சார்ந்தான் - கருமம் அல்லாச் சார்பு ; இங்கே எட்டாம் வேற்றுமை உருபு ( ‘கண்’)வந்தது !
-
இந்த இரண்டு தொடர்களுக்கும் பொருள் ஒன்றே!
இவற்றில் , ‘ஐ’யும் வரலாம் ‘கண்’ணும் வரலாம் என்ற நிலை உள்ளதல்லவா? இதுதான் வேற்றுமை மயக்கம் என்பது!
இனி , வேறுமை இயலின் இரண்டாம் நூற்பா!-
“சினைநிலைக் கிளவிக்கு ஐயுங் கண்ணும்
வினைநிலை யொக்கும் என்மனார் புலவர்” (வேற். 2)
இந்தச் சூத்திரமும் இரண்டாம் வேற்றுமை வரத்தக்க எந்த இடத்தில் ஏழாம் வேற்றுமை வரலாம் என்பதைத்தான் சொல்கிறது !
’
சினைநிலைக் கிளவிக்கு ‘ -சினை பற்றிய சொல்லுக்கு,
‘ஐயும் கண்ணும்’ – ’ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபும், ‘கண்’ எனும் ஏழாம் வேற்றுமை உருபும்,
‘வினைநிலை ஒக்கும் என்மனார் புலவர்’ - தம்முள் ஏதாவது ஒன்று வந்தாலும், பொருள் மாறாது என்பார்கள் புலவர்கள் !
‘கோட்டைக் குறைத்தான்’ = கொம்பைக் குறைத்தான் (கொம்பை வெட்டினான் ; இங்கே ‘ஐ’வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க!)
‘கோட்டின்கட் குறைத்தான்’ = கொம்பைக் குறைத்தான் (கொம்பை வெட்டினான் ; இங்கே ‘கண்’வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க!)
‘ஐ’ உருபு வந்தாலும் , ‘கண்’ உருபு வந்தாலும் பொருள் ஒன்றுதான் என்பதைக் கவனிக்க!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 70 of 84 • 1 ... 36 ... 69, 70, 71 ... 77 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 70 of 84
|
|