புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_m10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10 
64 Posts - 50%
heezulia
மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_m10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_m10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_m10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_m10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_m10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_m10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_m10மெளனம் என்னும் மந்திர மொழி! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெளனம் என்னும் மந்திர மொழி!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 22, 2013 12:57 pm

ஒரு விவசாயியின் கைக்கடிகரம், அவன் மாட்டுத்தொழுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தொலைந்து விட்டது.
அங்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத் தேடித் தர சொன்னான். பரிசு கொடுப்பதாகவும் கூறினான்.
-
சிறுவர்கள் சிறிது நேரம் தேடினார் கிடைக்க வில்லை.விவசாயியிடம் வந்து அதைச் சொன்னார்கள். அவர்களில் ஒரு
சிறுவன், “அய்யா எனக்கு இன்னொரு முறை வாய்ப்பு தருவீர்களா?” என்று கேட்டான்.
-
“சரி போய்த் தேடு” என்றான் விவசாயி.சற்று நேரத்திற்கெல்லாம் சிறுவன் ஒரு கைக் கடியாரத்துடன் திரும்பினான்.
“மற்றவர்களுக்குக் கிடைக்காத போது உனக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது?” என்று. கேட்டான் விவசாயி.
-
சிறுவன் சொன்னான், “மாட்டுத் தொழுவத்தில் சிறிது நேரம் நான் எந்த ஒரு சப்தமும் செய்திடாது மௌனமாகஇருந்தேன். அப்போது கடியாரத்தின் ‘டிக் டிக்’ சத்தம் எனக்குக் கேட்டது” என்று.
-
மௌனத்திற்கு என்ன ஒரு பலம் பார்த்தீர்களா? நீங்களும் தினமும் சில நிமிஷங்கள் மௌனமாக இருக்கப் பழகினால்,மனோ பலம் அடைவீர்கள்…
-
வார்த்தைகள் இல்லாத புத்தகம் மெளனம். ஆனால் வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மெளனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மெளனம் என்பது இருட்டு. எல்லாத் துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மெளனம் என்பதுமூடி. இதை தயாரித்து விட்டால், எல்லா உணர்ச்சிகளையும் பூட்டி வைக்கலாம். மெளனம் என்பது போதி மரம். இதுவரை சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மெளனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.
-
மெளனம் என்பது வரம். நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும்மெளனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்.
உலகிலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். எங்கோ, எப்போதோ படித்த இதயத்தை வருடிய வரிகள். அதனால்தான் நாம் பேச ஆரம்பித்தால், மணிக்கணக்காகப் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரியில் பேசுகிறோம். பல நேரங்களில் நாம் யாரிடம்பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம், எந்த இடத்தில் பேசுகிறோம் என்பதைக் கூட சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை நாம் பேச வேண்டும் என்பது மட்டுமே நமக்கு இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு, மெüனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகின்றான்.
-
நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை, ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால்சில நேரங்களில் வருத்தப்படுவோம். அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது.பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.
-
மெளனத்தின் வெளிப்பாடு பல. கல்யாணப் பெண்ணின் மெளனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மெளனிக்கிறான். துன்பத்தின்உச்சியில் மெளனமே பேசுகிறது. மெளனம் இறைவனின் மொழி. “”சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே ” என்று முருகன்,
அருணகிரி நாதருக்கு உபதேசித்த மந்திர மொழி மெளனம். அமைதி வேறு, மெளனம் வேறு. போருக்குப் பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மெளனம் உள்ளிருந்து வருவது. மெளனம்வார்த்தைகளற்ற நிலை. எண்ணங்கள் அற்ற நிலை. ஓம் என்ற பிரணவத்தின் பொருள், அறிவாக உள்ள இறைவனை, உயிராக உணர்கிற மனிதன், பேரின்ப நிலையாகிய மெளனத்தில் ஆழ்கிறான் என்பதே.
-
இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை. வாழ்க்கை ஓடிக் கொண்டிருக் கிறது. வாரம் ஒருமுறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி, மன அமைதி, மகிழ்ச்சி. இது மெளன தவத்தால் கிடைக்கும்.
-
மெளனத் தவம் செய்பவன் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக் கதவுகள் மூடி, அகக் கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாத பொழுது, அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது குறை, நிறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறுமையாக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால் கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று, தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 22, 2013 1:02 pm

வார்த்தைகள் இல்லாத புத்தகம் மெளனம்.
ஆமோதித்தல் ஆமோதித்தல்

நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை, ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால்சில நேரங்களில் வருத்தப்படுவோம்.
சூப்பருங்க

எந்த தளத்திலிருந்து எடுத்து பதிவிடீர்கள் என்பதை குறிப்பிடவும்.


Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 22, 2013 1:06 pm

“”தன்னை அறிந்து, இன்பமுற வெண்ணிலாவே! ஒரு தந்திரம் நீசொல்ல வேண்டும் வெண்ணிலாவே”என்ற வள்ளலாரின் பாடல் அவன்காதில் ஒலிக்கிறது. தான் இறைவனின் அம்சம் என்று உணர்ந்த மறுகணமே அவன் இறைவனது பேராற்றலையும் பேரறிவையும் பெறுகிறான். சாதனைகள் கை கூடுகிறது. அவன்மனம் நிறைகிறது.
-
மெளன நோன்பு இரு வகை. ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதியோடு சங்கற்பம் செய்துகொண்டு, அவ்வேலை முடியும் வரை பேசாமல் இருப்பது. இது மனத்தையும் உள்ளாற்றலையும் சிதறாமல் பாதுகாக்கும். காரியம் வெற்றி பெறும்.
-
இரண்டாவது ஆன்ம தூய்மைக்காககுடும்பம், பொருளாதாரம், வாணிபம் இவற்றில் விலகி நின்று நோன்பு எடுப்பது. இந்நோன்புதான் அகத்தாய்வுக்கு உதவும்.
மேலும் இந்த மெளனம் பற்றி யோகி வேதாத்திரி மகரிஷி கூறுவதைப் பாருங்களேன்!
-
மெளனத்தில் பழகிப் பழகித் தான் எண்ணங்களை வெற்றி கொள்ள வேண்டும். மெளனத்தில் கிடைக்கக் கூடிய நல்ல எண்ணங்கள், முன் செய்த நல்ல செயல்களின் பதிவுகள் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றைச் செயல்படுத்தி விட்டோமானால், வாழ்க்கையில்மேம்பாடு வரும்.
-
இவைகளை எல்லாம் அனுபவத்தில்நீங்கள் பார்க்கலாம். நாம் பேசிக் கொண்டிருக்கும்போது,உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறோம். நமக்கு யார் யாருடைய கருத்துக்கள் வான் காந்தத்திலிருந்து வரும் என்றால், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளவர்களின் கருத்துத் தான் வரும். அவை நமது மூளையோடு சேர்ந்து நமது எண்ணங்களாக வரும்.
-
ஆனால், மெளனத்தில் பேரமைதி நிலைக்கு வந்தால், அமைதியாகஇருந்து ஆராய்ச்சி செய்து, இறைநிலையை உணர்ந்து, அதோடு தொடர்பு கொண்டால், அந்த நிலையை உணர்ந்த பெரும் மகான்கள், அவர்களுடைய ஆற்றல்கள், எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களாக வரும். அதை எல்லாம் அனுபவித்துப் பார்க்கலாம். அனுபவித்துப் பார்ப்பதற்கு ஏற்ற காலம் தான் மெளன காலம்.
-
எவ்வளவு காலம் மெளனம் மேற்கொள்ளலாம்?
நீங்கள் ஒரு நாள் மெளனம் இருக்கலாம். இரண்டு நாளும் இருக்கலாம். ஆனால், அந்த மெளன காலத்தில் கிடைத்த பயன்களை நினைவில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
போகப்போக ஒரு மணி நேரம் மெளனம் இருந்தால் கூடப் போதும். ஆனாலும், அந்த ஒரு மணி நேரமும் வெற்றி அளிப்பதாக இருக்கும். இங்கேயும் அங்கேயும் மனதை ஓடவிடாது வைத்து இருக்க முடியும்.
-
அப்படி இருந்து பழகிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்தச் செயல் செய்தாலும் பதிவாகி அந்தந்தப் பதிவுகள்அவ்வப்போது எண்ணங்களாக வருகின்றன அல்லவா? அதேபோல மெளன காலத்தில் நீங்கள் இறைநிலையில் இருந்து ஏற்படுத்திக் கொண்ட மெளனப் பதிவும் சாதாரண காலங்களில் கூட மேலே வந்து அவ்வப்போது அமைதி நிலைக்கு உங்கள் மனதைஅழைத்துச் செல்லும்.
தகவலில் உதவி :; டாக்டர் பி.கி.சிவராமன், தஞ்சை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர்
-
நன்றி ஆந்தை ரிப்ரோட்டர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக