புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
59 Posts - 50%
heezulia
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
3 Posts - 3%
Shivanya
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
1 Post - 1%
Guna.D
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
12 Posts - 2%
prajai
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
9 Posts - 2%
jairam
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
4 Posts - 1%
Jenila
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
4 Posts - 1%
Rutu
செய்திகள்: 23-02-2013 Poll_c10செய்திகள்: 23-02-2013 Poll_m10செய்திகள்: 23-02-2013 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள்: 23-02-2013


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 23, 2013 9:00 am

சாப்ட்வேர் நிறுவனத்தில் புகுந்து மனைவி கழுத்தை அறுத்த கணவன்

சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூரில் உள்ள கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் லாவண்யா. இன்று மாலை அவர் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவரது கணவன் சீனிவாசன் அங்கு வந்தார். மனைவி அருகில் வந்த அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் வெட்டியுள்ளார்.

இதனால் மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். சீனிவாசனை தடுக்க முயன்றனர். அப்போது சீனிவாசன் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார். கணவன்-மனைவி இருவரும் ரத்தம் சொட்டச் சொட்ட தரையில் சரிந்தனர்.

உடனே அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத் தகராறு காரணமாக சீனிவாசன், மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

மாலைமலர்



செய்திகள்: 23-02-2013 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 23, 2013 9:01 am

ஐதராபாத் தொடர் குண்டுவெடிப்பு: மாநில அரசு மீது வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு

ஐதராபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையைத் தொடர்ந்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பா.ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

ஐதராபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக விவாதம் நடத்தப்படும் விதமே சரியில்லை. பாராளுமன்றத்தில் ஷிண்டே தாக்கல் செய்த அறிக்கையில் அரசின் உருப்படியான நடவடிக்கை எதுவுமே இல்லை.

இது தனிப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் அல்ல. நாட்டின் உறுதி நிலையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து பணம் கொடுத்து ஊக்குவித்து வருகிறது ஒரு நாடு. நமது அண்டை நாடு ஒன்றே தீவிரவாதத்தை தூண்டிவிட்டு வருகிறது.

குண்டுவெடிப்பு நடக்கும் என்று உளவுத்துறை அளித்த தகவலை ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐதராபாத், கோவை மற்றும் பெங்களூரில் இந்த தாக்குதல் நடக்கலாம் என உளவுத் துறை தகவல் அளித்துள்ளது. தகவல் அனுப்பியும் ஆந்திர அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் அரசு அலட்சியம் காட்டுகிறது. உளவுத்துறை தகவல் காவல்துறைக்கு வந்திருக்கலாம், தமக்கு வரவில்லை என்கிறார் முதல்வர்.

இந்த அவையில் குண்டுவெடிப்பு பற்றி வெறுமனே விவாதித்து விட்டு கலைந்து செல்வதால் பயனில்லை. ஐதராபாத்துக்காக மட்டும் நான் இந்த அவையில் பேசவில்லை. நாடு முழுவதும் தீவிரவாதத்தால் பாதிக்கப்படுவோருக்காக பேசுகிறேன்.

இறந்தவர்களுக்கு இரங்கல், காயமடைந்தோருக்கு நிவாரணம் என்பதே அரசின் கொள்கையா? குண்டுவெடிப்பு பற்றிய நடவடிக்கையில் அரசின் உருப்படியான நடவடிக்கை எதுவும் இல்லை. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.



செய்திகள்: 23-02-2013 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 23, 2013 9:02 am

நாகாலாந்து, மேகாலயாவில் சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

புதுடில்லி : நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான ஓட்டுப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் முறையே 60 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

நாகாலாந்து தேர்தல் :

60 இடங்களுக்கான நாகாலாந்து தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் மரணத்தால் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகுதிக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ஜெ.ஆலம் தெரிவித்துள்ளார். தற்போது நாகாலாந்தில் 59 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெறும் எனவும், தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாகாலாந்து தேர்தலுக்காக சுமார் 250 கம்பெனிகளைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட போலீசாரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் ஆளும் இடசாரிகளுக்கும், காங்கிரசிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியினர் ஹெலிகாப்டர்களில் வந்து வாக்காளர்களுக்கு பணம் ‌தருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான ஊழல்களில் ஆளும்கட்சி ஈடுபட்டதாகவும் காங்கிரசார் குற்றம் சாட்டி உள்ளனர். 10 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இம்மாநிலத்தில் 188 பேர் போட்டியிடுகின்றனர்.

மேகாலயா தேர்தல் :

தேசிய விடுதலை கூட்டமைப்பு தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்த போதிலும் மக்கள் எவ்வித பயமும் இன்றி தைரியமாக வந்து வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை மேகாலயா அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் 7 மாவட்டங்களில் 36 மணி நேர ப்ந்திற்கு தேசிய விடுதலை கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேகாலயாவில் லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் தேசிய மக்கள் கட்சிக்கும், ஐக்கிய ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சங்மாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெற்ற தோல்வி பதலளிக்கும் விதமாக இந்த தேர்தல் வெற்றி அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த தேர்லில் சங்மாவின் மகனும், சங்மாவின் சகோதரரும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 25 பெண்கள் உட்பட 350 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள நாட்டின் ஒரு சில மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. இங்கு 744,299 ஆண் வாக்காளர்களும், 759,608 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 2845 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 900 மையங்கள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகம் பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் வங்கதேச எல்லை பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.




செய்திகள்: 23-02-2013 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 23, 2013 9:03 am

எந்தத் துப்பும் கிடைக்காமல் ஐதராபாத் போலிசார் திணறல்!

ஐதராபாத்: ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக, எந்தத் துப்பும் கிடைக்காமல், போலீசார் திணறி வருகின்றனர். 20 பேர் உயிரை பலி வாங்கிய குண்டுகளை வைத்தது யார் என்பது இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், தில்சுக் நகர் பஸ் நிலையம் அருகே, நேற்று முன் தினம் இரவு நிகழ்ந்த, இரட்டை குண்டு வெடிப்பில், 20 பேர் பலியாயினர்; 119 பேர் காயம் அடைந்தனர். பலியான, 20 பேரில், 14 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே நேற்று பார்வையிட்டார். அத்துடன், குண்டு வெடிப்பில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

அப்போது, நிருபர்களிடம் பேசிய அவர், ""ஐதராபாத்தில் குண்டு வெடிக்கும் என, குறிப்பிடத்தக்க உளவு தகவல்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. மாநிலங்களில் எங்காவது குண்டு வெடிக்கலாம் என, கிடைத்த தகவலையே, ஆந்திர மாநில அரசுக்கு தெரிவித்தோம்,'' என்றார்.

குண்டு வெடிப்பை நேரில் பார்த்த, கேடகொல்லா ஆனந்த் என்பவர் கொடுத்த புகாரை அடுத்து, பல்வேறு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்
பதிவு செய்துள்ளனர்.குண்டு வெடிப்பு தொடர்பாக, போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், குண்டு வெடிப்புக்கு சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பினர், கடந்த காலங்களில் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்கள் போல இருப்பதால், அந்த அமைப்பினருக்கு, இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அதனால், கடந்த அக்டோபர் மாதத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்திய முஜாகிதீன் பயங்கரவாதி, மக்பூல் என்பவனிடம், இது தொடர்பாக, விசாரணை நடத்த, ஐதராபாத் மற்றும் டில்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.குண்டு வெடிப்பு தொடர்பாக, ஐதராபாத் போலீசார் கூறியதாவது:

நூறு மீட்டர் இடைவெளியில், இரண்டு இடங்களில், சைக்கிளில்தொங்கவிடப்பட்ட குண்டுகளே வெடித்துள்ளன. அதிக அளவில், உயிர் சேதம் நிகழ வேண்டும் என்பதற்காகவே, மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளை, பயங்கரவாதிகள் தேர்வு செய்துள்ளனர். குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளில், அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை, குண்டு வெடிப்பு தொடர்பாக, உருப்படியான துப்புகள் எதுவும், போலீசாருக்கு கிடைக்கவில்லை. அத்துடன், எந்த பயங்கரவாத அமைப்பும், குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்கவில்லை.ஐதராபாத் தில்சுக் நகர் பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம், ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என, பார்த்த போது, அதில், ஒரு கேமரா நீண்ட நாட்களாக செயல்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன், அதன் ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மற்றொரு கேமரா, போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் வகையில், நிறுவப்பட்டிருந்ததால், அதன்மூலம், எந்த தடயங்களுயம், யாருடைய புகைப்படங்களும் கிடைக்கவில்லை.குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த இடம், பெரிய அளவிலான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், குறிப்பிட்ட இரு இடங்களை மட்டும், செயல் பாட்டில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமரா மூலம், போலீசார் கண்காணித்திருக்க வாய்ப்பு இல்லை.

குண்டுவெடிப்பு நடந்த பகுதி, எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், பயங்கர வாதிகள் அப்பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் தங்கியிருந்து, குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியிருக்கலாம்.தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், குண்டு வெடிப்பு நடந்த இடங்களை பார்வையிட்டு, அங்கு கிடந்த சில பொருட்களை, பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில், தேசிய பாதுகாப்புப் படையினரும், மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

இதற்கிடையில், தில்சுக் நகர் பகுதியில், இரட்டை குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்கு, சற்று நேரத்திற்கு முன்னர் தான், அப்பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலில், ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர், வழிபாடு செய்து விட்டு சென்றார் என, கூறப்படுகிறது.



செய்திகள்: 23-02-2013 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 23, 2013 9:04 am

ஐதராபாத் தாக்குதல்:ஐந்து நகரங்களுக்கு எச்சரி‌க்கை

புதுடில்லி: ஐதராபாத்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 16 பேருக்கு மேல் பலியானார்கள். 117 பேர் காயமடைந்தனர். இது குறித்து மத்திய உள்‌துறை அமைச்சர் ஷிண்டே ஐதராபாத்திற்கு சென்று பார்வையிட்டார்.பார்லிமென்ட் தாக்குதலில் ஈடுபட்ட அப்சல்குரு தூக்கிலிட்டதை தொடர்ந்து இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு பழிவாங்குவதற்காக ‌ஐதராபாத்,பெங்களூரு, மும்பை,கோவை மற்றும் ஹூப்ளி மற்றும் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள சில பகுதிகளுக்கு இந்‌தியன் முஜாஹிதின் அமைப்பு உள்பட பல்வேறு ‌தீவிரரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய உளவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



செய்திகள்: 23-02-2013 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக