புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
31 Posts - 55%
heezulia
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
17 Posts - 3%
prajai
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
9 Posts - 1%
jairam
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_m10ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெட்டைப் புறாவும் ஒற்றைச் சிறுவனும் - சிறுகதையின் கடைசி பாகம்


   
   
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Apr 01, 2013 9:05 pm

கதையின் முதல் பாகம் இங்கே: http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_25.html

http://3.bp.blogspot.com/-WzQ5xPcEGuI/UVltg-G4_8I/AAAAAAAABlY/JVjvjfSQlxE/s1600/1hczgto769.jpg

புறாக் குஞ்சுகளை பிடிக்க சுப்பு பொந்திற்குள் கையை நீட்டினான். "யாருடா கோபுரத்துமேல ?" என்று அதிகாரத்தோடு ஒரு குரல் கேட்டதும். கையை லபக்கென்று வெளியே எடுத்தான் சுப்பு. இருவருக்கும் கண்களில் கலவரம் நிறைந்த பயம்.

"டேய் யாரோ வாரங்க, அந்த ஒல்லி பூசாரியா இருந்தா வீட்ல போட்டுக் குடுதுடுவார்டா வாடா போயிடலாம்..." சொன்னான் சுப்பு.

"ஏய் போடா, எனக்கு புறாக்குஞ்சு வேணும்" அடம்பிடித்தான் முகிலன்.

"போடா என் அப்பா பெல்ட்டெடுத்து அடிப்பாரு... நான் போறன்ப்பா" சொல்லிவிட்டு வேப்பம் கொம்பைப் படித்து வேகமாக இறங்கினான் சுப்பு.

"டேய் மாட்டிக்காதடா இருடா..." குரலைக் கட்டுபடுத்தி சொன்னான் முகிலன். இருந்தும் அதைக்கேட்காதவனாய், சுப்பு இடத்தைவிட்டு நகர்ந்தான்.

கருமை சூழ்ந்த கோபுரத்தில், பத்துநிமிடம் அமைதியாக அமர்ந்திருந்தான் முகிலன்.கோபுரத்தை சுற்றி குரல் சத்தம் குறைந்ததும், புறாக் குஞ்சுகளை திரும்பிப்பார்த்தான்.

இளம் குஞ்சுகள்... ஒன்றின் மீது ஒன்று படுத்திருந்தது...

புறாவைப் பார்த்த ஆனந்தத்தில், அதைச் சுற்றி கிடக்கும் புறாக் கழிவுகளின் துர்நாற்றம் முகிலனின் மூக்கைத் துளைத்ததாய் தெரியவில்லை. மண்டியிட்டு அமர்ந்துகொண்டு மெல்லச் சிரித்தான்..

இடது கையில் இருந்த மஞ்சள் நிற துணிப்பையை விரித்தான். புறாக் குஞ்சைப் பிடிக்க பொந்திற்குள் பொறுமையாக கையை நீட்டினான். முடி கூட வளராத இளம் குஞ்சுகளின் சூடு, முகிலனின் கையில் பாய்ந்தது. இரண்டு குஞ்சுகளும் மஞ்சள்பைக்குள் தஞ்சம் அடைந்தது.

எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மெதுவாக இறங்கினான்.வேப்பம் பட்டை கிழித்து, அவன் நெஞ்சில் பட்ட சிறிய காயத்தைச் சுற்றி ரத்தம் கட்டியது. அதை அவன் கண்டு கொள்ளவில்லை. அந்த எரிச்சலும் அவன் பொருட்படுத்தவில்லை.

பைக்குள் இருக்கும் இரண்டு குஞ்சுகளையும்,உள்ளங்கைகளில் வைத்து கழுத்தோடு அனைத்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.

முகிலனின் மாமா, அத்தை, அம்மா எல்லோரும் வீட்டு வாசலில் உட்காந்து பேசிக்கொண்டிருந்தனர். பையை பின் புறமாக ஒழித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். நெல் மூட்டை அடுக்கிருக்கும் சந்தில் புறக்குஞ்சுகளை வைத்துவிட்டு வெளியே வந்த முகிலனை பார்த்து

"முகில் சாப்புடிறியா ?.."என்றாள் அத்தை.

"ஹ்ம்ம் என்னா கொழம்பு ?"

"சொன்னாத்தான் வருவியா ?" சிரித்துக் கொண்டே கேட்டாள் அத்தை.

ஐந்து நிமிடத்தில், முட்டைப் பொறியல், அவரைக்காய் சாம்பார் மற்றும் ரசத்துடன் வாசலில் போடப்பட்ட பாயில் அமர்ந்துகொண்டு சாப்பிட ஆரம்பித்தான். ஒரு கரண்டி சோறில் பாதி முடித்திருப்பான். திடீரென எழுந்தான் முகிலன்.

"என்னையா ஆச்சு ?" ஒன்றன் பின் ஒன்றாக எல்லோரும் கேட்டனர். அனைவருக்கும் சேர்த்து

"எனக்குப் போதும்" என்ற பதிலை காற்றில் கலந்துவிட்டு ஓடினான்.

உண்மையில் அவனுக்கு பசி அடங்கவில்லை. ஆனால் அவன் உன்னும் போதே, பசியோடிருக்கும் புறாக் குஞ்சுகளுக்கு உணவூட்ட வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது.

அங்கும் இங்குமாய்த் தேடி, அரிசி மூட்டையை கண்டுபிடித்தான். அவன் தோட்டத்தில் வளரும் கோழிகள், குஞ்சுகளுக்கு இரையூட்டும் போது, இரையை உடைத்து குருனையாக்குவதை அவதானித்ததாலோ என்னவோ, இளம் குஞ்சுகளால் முழு அரிசியை உண்ண முடியாதென்பதை உணர்ந்திருந்தான்.

கையளவு அரிசியை அள்ளி, அம்மாச்சி அரைக்கும் அம்மியில் குருனைகளாக நுணுக்கினான்...

ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் நுணுக்கப்பட்ட அரிசியுடன் குஞ்சுகளை நெல் மூட்டை சந்தில் இருந்து வெளியே எடுத்து, மடியில் வைத்து இரையும் நீரும் ஊட்டி விட்டு, பின்பு ஒருவழியாக உறங்கப் போனான்.

அதிகாலையில் எழுந்து முகிலனின் அம்மா ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். முகிலனையும் கிளம்பச் சொன்னாள்.அவனுக்கு தாளாத சந்தோசம், புறாக்குஞ்சுகளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதில்..

தடபுடலாக தயாராகினான். பேருந்து நிறுத்தத்திற்கு வரும்வழியில்,
"அம்மா ஒன்னுக்கு போனும்..."

"சரி பைய கொண்டா.. " அம்மா சொன்னாள். முகிலனுக்கோ தயக்கம்.

"அதுல என்ன தாண்டா இருக்கு ?... இத கைலவச்சுட்டி எப்டி போவ.. குடு.." என்று பிடிங்கினாள் அம்மா...

"அதுல ஒண்ணுமில்ல..." சொல்லிவிட்டு சிறுநீர் கழிக்க சற்று தொலைவில் போனான் முகிலன்.

பையைத் திறந்துபார்த்தாள் அம்மா... அழகான புறாக்குஞ்சுகள்.

"இளம் குஞ்சுகளை கொன்றுவிடுவானோ ?" என்ற பயம் அவளுக்கு.

ஆனால் புறாக்களைப் பற்றி அவ்வப்போது வீட்டில் அவன் பாடும் புராணங்களும் அதன் மீது அவன் அளவற்ற பற்றும், அவளை சற்று ஆறுதல் படுத்தியது. அதோடு அவனது பிடிவாதத்தை அவள் நன்கு அரிவாள். அதனால் புறக்குஞ்சுகளைப் பற்றி அவனிடம் வாய் திறக்கவில்லை.

ஒருவழியாக இரண்டு பேருந்துகள் மாறி, வீட்டை வந்து சேந்தனர்.

முன்பொருநாள், கதுவாரிக் குஞ்சுகளுக்கு செய்யப்பட்ட கூட்டை, வேட்டைக்கார தாத்தாவிடம் புறாக்களுக்கு வேண்டி வாங்கி வைத்திருந்ததை தேடி எடுத்து, அதனுள் புறாக் குஞ்சுகளை குடியமர்த்தினான்.

தோட்டத்தில் விளைந்த கம்பு, சோளம், அரிசி இவற்றை மாற்றி மாற்றி குருனையாக்கி புறாக்களுக்கு இறையிட்டான்.

பள்ளி போகும் நாட்களில், காலையில் முதல் வேலையாக புறாக்களுக்கு உணவிட்டு விட்டு, குருனைகளை கூண்டிற்குள்ளும் இறைத்து விடுவான். மாலையில் கூண்டை சுத்தம் செய்து மறுபடியும் இறை வைப்பான்.

இவ்வாறாக நாட்கள் நகர்ந்தது...

புறாக் குஞ்சுகளும் பெரிதானது. ஜோடிப் புறாக்களுக்கும் முகிலனுக்கும் மட்டுமே புரியும் ஒரு மொழி இருவருக்குள்ளும் எப்படியோ வளந்தது.

முகிலன் பள்ளி செல்லும் போது, புறாக்களை கூண்டிலிருந்து வெளியே விட ஆரம்பித்தான். எங்கு போனாலும் மாலைப்பொழுதில் வீடு திரும்பும் வழக்கத்தை புறாக்களும் கடைபிடித்தன.

முகிலன் உணவுன்னும் போது, அவன் தோள், மடி உச்சந்தலை என பறந்து வந்து அமர்ந்து புறாக்கள் பாசத்தைக் காட்டும். இறங்கச் சொன்னால் பறந்து கீழே அமரும். அவனோடு சேர்ந்து அவன் வீட்டு நாயும் புறாக்களுடன் விளையாடும். அவர்களின் மொழிப் பரிமாற்றம் அழகிய உணர்வுகளைக் கொண்டு பிணையப்பட்டிருந்தது.

முகிலனின் ஊரில், அவனுக்கு முன் புறா வளர்த்தோர், புறாக்கள் நீண்ட தூரம் பறந்து போகாமல் இருக்க இறகு நுனியை அவ்வப்போது வெட்டிவிடும் வழக்கத்தை வைத்திருந்தனர். முகிலனும் அதையே தொடந்து கடை பிடித்தான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை...

ஒரு புறாவைப் பிடித்து, இறகு நுனியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டிக்கொண்டிருந்தான். அவன் மடியில் இருந்த சோளத்தை, இரண்டு புறாக்களும் தின்று கொண்டு இருந்தது. நுனி இறகுகளை ஒரு புறாவிற்கு வெட்டி முடித்தான்.

இரண்டாவது புறாவை கையில் எடுத்தான் முகிலன். இறை தின்று கொண்டிருந்த முதல் புறா, திடீரென பறந்து சமயலறைக்கும் போனதும், அருகில் படுத்திருந்த முகிலன் வீட்டு நாய், விளையாட்டு நோக்கில் வழக்கம்போல் புறாவுடன் சேந்து ஓடியது.

30 வினாடிகளில் நாயும் புறாவும் சமயலறையில் இருந்து வெளியில் வந்தது. நாயில் வாயில் புறா. புறாவை நாய் கீழே போட்டது. என்ன ஆனதென்று தெரியாமல் முகிலன் எழுந்து ஓடினான்.

நாயின் பற்கள் பதிந்து அந்த புறா இறந்து போனதை அறிந்தான். ஓ.. வென்று அழுதான். உருண்டு புரண்டான். என்ன நடந்ததென்பதை அறியாத இரண்டாவது புறா, முகிலனின் தோளில் பறந்து வந்து அமர்ந்து, அவன் காதை செல்லமாக கொத்தியது.

அம்மா சாமாதனப் படுத்தினாள். இருந்தும் அவன் அழுகை சில இரவுகள் நீண்டன. இரண்டு புறாக்களின் மீது வைத்த அன்பையும் ஒரு புறாவின் மீது செலுத்த ஆரம்பித்தான்.

முகிலன் புறாக்கள் மீதும், புறாக்கள் முகிலன் மீதும் வைத்த அன்பை, அவன் நன்கு அறிவான். ஆனால் ஒரு புறா மற்றொன்றின் மீது வைத்திருக்கும் புறாக்களுக்கிடையேயான அன்பை அவன் அறிந்திருக்கவில்லை.

ஒரு நாள் காலை...

இறை வைத்த சற்று நேரத்தில் புறாவைக் காணவில்லை. முகிலன் தேடினான். அந்த ஒற்றை புறா பறந்து கொண்டிருந்தது. சொல்ல இயலாத அதீத அன்பினாலும், தன் துணையை இழந்த துயரத்தினாலும் பறந்து போன புறா மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்த நிகழ்வு முகிலன் மனதை முழுவதும் உடைத்து நொறுக்கியது.

வருடங்கள் கடந்தன...

அன்று, கோவில் கோபுரத்தில் குஞ்சுகளைப் பிரித்து தவிக்கவிட்டு வந்த தாய்ப் புறாவையும், ரெட்டைப் புறாக்களைப் பிரித்த ஒற்றைச் சிறுவனாகவும், ஆழ்ந்த துயரங்கள் ஆறாத வடுக்களாய் இன்றும் அவன் மனதில்...

முற்றும்.

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 01, 2013 11:18 pm

இன்பம் என்பது பிறருக்கு துன்பம் என்பதை
உணருகையில் துன்பமே மேலோங்குகிறது
காலம் கடந்து விடுகிறது உணருகையில்

புறா கதையின் மூலம் இன்ப துன்ப வாழ்க்கை கணக்கை உணர்ந்தோம் - நன்று அகல்




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 02, 2013 12:20 am

இளம் வயதை நினைவுறித்தின.நன்றி.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Apr 02, 2013 12:57 pm

யினியவன் wrote:இன்பம் என்பது பிறருக்கு துன்பம் என்பதை
உணருகையில் துன்பமே மேலோங்குகிறது
காலம் கடந்து விடுகிறது உணருகையில்
ஆமோதித்தல் நன்றிகள் அண்ணே ...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Apr 02, 2013 12:57 pm

ஹர்ஷித் wrote:இளம் வயதை நினைவுறித்தின.நன்றி.
நன்றிகள் ஹர்ஷித்..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக