புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
27 Posts - 53%
heezulia
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
9 Posts - 1%
jairam
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பக்தி கதைகள் Poll_c10பக்தி கதைகள் Poll_m10பக்தி கதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தி கதைகள்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 6:16 pm

இலக்கணப் புலிகள்

பக்தி கதைகள் ST_174558000000

பேசுவதை உச்சரிப்பு பிறழாமல் கேட்க வேண்டும். தவறாகக் கேட்டு விட்டு ஒழுங்கான பதிலை எதிர்பார்த்தால் அதெப்படி கிடைக்கும்? பதஞ்சலி முனிவரை உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர் ஆதிசேஷனின் அம்சம். பாற்கடலில் பெருமாளைச் சுமந்த இவர், ஒருமுறை பெருமாளின் பாரம் தாங்காமல் கஷ்டப்பட்டார். பெருமாளே! திடீரென ஏன் பாரம் கூடியது? சிவனின் நடனம் கண்டேன், என்னமாய் ஆடுகிறார், உடலே பூரித்து விட்டது. அதனால் எடை கூடிவிட்டது,. அப்படியா! அப்படி ஒரு ஒப்பற்ற நடனத்தை நானும் பார்க்க வேண்டுமே! சரி, தில்லைக்கு போ, பார்க்கலாம்,. இப்படியாக பூலோகம் வந்தவர் பதஞ்சலி. மனித முகம், பாம்பு உடல். இவர் இலக்கணத்தில் வல்லவர். இவரைப் போலவே, பாணினி என்பவரும் இலக்கண வித்தகர். ஒருமுறை, பாணினி குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். பதஞ்சலி முகத்தை தண்ணீரின் மேல் வைத்தபடி பாம்பு உடலுடன் மிதந்து வந்தார்.

அந்த விசித்திரப்பிறவியைப் பார்த்துகோர்பவா? என்றார். அந்தச் சொல்லில் இலக்கணப் பிழை இருந்தது. அதனால், பதஞ்சலி சற்று கோபத்துடன், ஸபோஹம் என்றார். பதிலிலும் இலக்கணப்பிழை இருந்ததால், பாணினி முகத்தை சற்று கடுமையாக்கிக் கொண்டு, ரேதா: குத்ர கதா: என்றார். இதன் பொருளைப் பார்க்கலாம். கோர் பவா என்றால் நீங்கள் யார்? என்று பொருள். அதற்கு கோ பவா என்பது தான் சரியான உச்சரிப்பு. ஸபோஹம் என்றால் பாம்பு. அதற்கு ஸர்ப்போஹம் என்று தான் சொல்லியிருக்க வேண்டும். ரேதா குத்ர கதா என்றால், ஒரு எழுத்தை விட்டு விட்டு ஏன் பதில் சொன்னீர் என்பதாகும். பாணினி ர் என்ற எழுத்தை விட்டுக் கேட்டதால், பதஞ்சலியும் எரிச்சலில் ர் என்பதை எடுத்துவிட்டு பதில் சொன்னார். இருவருமே இலக்கணப் புலிகள் தான். ஆனாலும், உச்சரிப்பால் பிரச்னை வந்தது. உச்சரிப்பு சரியாக இருந்தால் தான் பேச்சு எடுபடும்.. புரிகிறதா!

நன்றி :- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் பக்தி கதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 6:21 pm

இரண்டு ராமரா! வாய்ப்பில்லையே!

பக்தி கதைகள் ST_170011000000

அசோகவனத்தில் மரத்தடியில் சாய்ந்திருந்தாள் சீதை. அவள் மனம்ராமனையே வட்டமடித்துக் கொண்டிருந்தது. அந்தநேரம் குளவி ஒன்றுஅவளருகே ரீங்காரமிட்டபடி பறந்து வந்தது. தான் கட்டிய மண் கூட்டுக்குள் ஒரு புழுவை வைத்து விட்டு சுற்றி சுற்றி வந்தது. மண்ணில் சிக்கிய புழு நகர முடியாமல் தவித்தது. சீதையால் இதை சகிக்க முடியவில்லை. அருகில்இருந்த விபீஷணனின் மகள் திரிசடையிடம்,ஏன் இந்த குளவி இப்படி செய்கிறது?, என்றாள். அவளோ அலட்டிக் கொள்ளாமல்குளவின்னா அப்படித் தானம்மா செய்யும்.புழுவைக் கொட்டி கொட்டி வேதனைப்படுத்தும். இதை சிந்தித்தபடியே, புழு குளவியாக மாறிவிடும். இதில் ஒன்றும்புதுமையில்லை, என்று விளக்கம் தந்தாள்.

சீதை அழத்தொடங்கினாள். இதென்ன வம்பாப் போச்சு!, என்று திரிசடை பதறினாள். கண்ணைத் துடைத்தபடி சீதை, நானும் இரவும்பகலும் என் கணவர்ராமனையே சிந்திக்கிறேன். புழு குளவியாக மாறுவது போல நானும் ராமனாக மாறிவிட்டால், இரண்டு ராமர் அல்லவா இருப்போம்!என்று வருந்தினாள். ஒன்றும் கவலையே படாதீர்கள். ராமனாகமாறுவதும் நன்மைக்குத் தான். ராமரும் உங்களையே சதா மனதில் அசை போட்டபடியே உங்களுக்காக சீதையாகிவிடுவார். அப்போதும்ராமருக்காக ஒரு சீதைதானிருப்பாள். அப்போதும் மணமொத்த தம்பதியாகத் தான் இருப்பீர்கள், என்று அவள் போக்கிலேயே சென்று ஆறுதல் அளித்தாள் திரிசடை.


நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் பக்தி கதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 13, 2013 6:21 pm

சூப்பருங்க

ஆக டாஸ்மாக் போயிட்டு வந்தால் கம்முனு இருக்கணும் வீட்ல - சும்மா இல்லாம உளறினா - வீட்டு இலக்கணம், இலக்கியம் எல்லாம் கெட்டு போகும்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 6:25 pm

யினியவன் wrote: சூப்பருங்க

ஆக டாஸ்மாக் போயிட்டு வந்தால் கம்முனு இருக்கணும் வீட்ல - சும்மா இல்லாம உளறினா - வீட்டு இலக்கணம், இலக்கியம் எல்லாம் கெட்டு போகும்.
இலக்கணம் கெட்டா பரவா இல்லே இல்லத்தரசி கோபப்பட்டு அப்ப்லாகுழவியை வைத்து முகத்தை பெத்தா ரொம்ப கஷ்டம்த்தான்



ஈகரை தமிழ் களஞ்சியம் பக்தி கதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 6:26 pm

குத்திக்காட்டி பேசாதீர்!

பக்தி கதைகள் ST_145335000000

சிலருக்கு வறுமை, சிலருக்கு ஊனம், இன்னும் பலருக்கு எத்தனையோ விதத்தில் குறைகள்... இவை அவரவர் விதிப்படி விளைபவை. இவர்கள் ஏற்கனவே, தங்கள் குறைபாட்டுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் அந்த குறைபாடுகளை குத்திக்காட்டுவது என்பது பெரும் விபரீதத்திற்கு வழிவகுத்து விடும். பாஞ்சால தேச மன்னன் துருபதன் திட்டத்துய்மன். இவனது மகள் திரவுபதி. இவளைத் திருமணம் செய்து கொடுக்க சுயம்வரம் அறிவித்தான். விதிவசத்தால், அவள் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியாக வேண்டியதாயிற்று. பாண்டவர்களின் தந்தை பாண்டு இறந்ததும், பெரியப்பா திருதராஷ்டிரன் தம்பி பிள்ளை களுக்குரிய ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்தார். அவர் பார்வையற்றவர். ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்ட பாண்டவர்கள், அங்கே அழகிய மாளிகை எழுப்ப முடிவெடுத்தனர். கண்ணனின் ஆசியுடனும், இந்திரனின் ஆலோசனையுடனும், தேவலோக சிற்பி விஸ்வகர்மா அரண்மனையை அமைத்துக் கொடுத்தார்.


அதற்கு தேவையான பொருட்களை பல இடங்களில் இருந்தும் வரவழைத்துக் கொடுத்தார் பாண்டவர்களில் மூத்தவரான தர்மர். அந்தக்கட்டடம் பொன்னாலும் மணியாலும் இழைக்கப்பட்டது. பளிங்குத்தரை அமைக்கப்பட்டது. அது தரையா அல்லது தண்ணீரா என்று தெரியாத அளவுக்கு பளபளப்பு இருந்தது. அந்த அரண்மனை அமைந்த இடத்திற்கு இந்திரபிரஸ்தம் (இன்றைய டில்லி) என்று பெயரிட்டார் தர்மர். அரண்மனை கிரகப் பிரவேசத்திற்கு, தன் தம்பிமார்களான கவுரவர்களையும் அழைத்திருந்தார் தர்மர். அவர்களில் மூத்தவனான துரியோதனன், பளிங்குத்தரையில் கால் வைக்க முயன்றபோது, அதன் பளபளப்பு தண்ணீர் போல் தெரிந்ததால், தண்ணீர் தான் கிடக்கிறதோ என்று தன் ஆடையை உயர்த்தி நடந்தான். கால் வைத்த பின் தான் அது தரை என்று தெரிந்தது.அதைப் பார்த்த திரவுபதி சிரித்து விட்டாள். ஏதோமைத்துனர் என்ற உரிமையில், விளையாட்டாகக் கருத்து சொல்லியிருந்தால் கூட, மைத்துனி கேலி செய்கிறாள் என்று துரியோதனின் மனம் சங்கடப்பட்டிருக்காது. ஆனால் அவள், உன் தந்தை தான் குருடு என நினைத்திருந்தேன். நீயும் அப்படித்தானோ! என மனம் புண்படும்படியாக பேசிவிட்டாள்.

இதன் மூலம் மைத்துனனை மட்டுமல்ல, பெரிய மாமனாரின் ஊனத்தையும் குறைத்துப் பேசி விட்டாள். பொம்பளை சிரித்தால் போச்சு என்பது எக்காலத்துக்கும் பொருந்தும் பழமொழி. துரியோதனன் இதை மனதில் வைத்துக் கொண்டான். அவனும் இந்திரபிரஸ்தத்துக்கு இணையான அரண்மனை கட்டினான். அப்பகுதி அஸ்தினாபுரம் எனப்பட்டது. கிரகப்பிரவேசத்திற்கு பாண்டவர்களை அழைத்தான். கவுரவர்களின் தாய்மாமன் சகுனி, நேரப் போக்கிற்காக சொக்கட்டான் ஆடுவோமே என்று பாண்டவர்களை அழைத்தான். அவனது வலையில் தர்மர் விழுந்தார். நாடு, நகரம் மட்டுமல்ல, திரவுபதியையும் இழந்தார். எல்லாரும் கவுரவர்களுக்கு அடிமை யாயினர். துர்க்குணம் வாய்ந்த துரியோதனன், அடிமைப் பெண்ணான உனக்கு ஆடை எதற்கடி? என்று கேட்டுதிரவுபதியின் துயிலுரிய ஆணையிட்டான். அவன் அவ்வாறு செய்ததும் தவறே. கோபத்தில் கவுரவர்களின் நாட்டையும், திரவுபதியையும் பறித்த அவன், சகோதரர்களின் மனைவி என்றும் பாராமல் இவ்வாறான தீய செயல் செய்தது பாண்டவர்கள் மனதில் கோபக் கனலை எழுப்பியது. ஆக, இரு தரப்பு கோபமும் குரு÷க்ஷத்திரத்தில் யுத்தமாய் வெடித்தது. கவுரவர்கள் அழிந்தனர். இதுபோன்ற தேவையற்ற சண்டைக்கு காரணமாய் இருந்தது என்ன? பிறரது குறையைப் பெரிதுபடுத்தி மனம் புண்படும்படி பேசியது தான்! இனியும், பிறர் குறையைக் குத்திக் காட்ட வேண்டாமே!


நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் பக்தி கதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 6:32 pm

அவனை மட்டும் நம்புவோம்!

பக்தி கதைகள் ST_153850000000

ஒரு சாமியாரிடம் மனநிம்மதிக்கு வழிகேட்டு ஏராளமான மக்கள் ஆலோசனை கேட்டு வந்தனர். அவர்களின் வரிசை மிக நீண்டு இருந்தது. தன்னை தேடி வருபவர்கள் வெயிலிலும், மழையிலும் கஷ்டப்படுகிறார்ளே! இவர்கள் நிற்க வசதியாக கூடாரம் அமைக்கலாமே என்று சாமியார் நினைத்தார். ஆனால், அதற்கான பணவசதி இல்லை. அந்நாட்டு மன்னரிடம், அவர் உதவி கேட்பதற்காக சென்றார். அப்போது மன்னர் கடவுளை வணங்கிக் கொண்டிருந்தார். பூஜையறைக்கு வெளியே காத்திருந்த சாமியாரின் காதில், மன்னரின் பிரார்த்தனை கேட்டது. இறைவா! நீ எனக்கு இன்னும் ராஜ்யங்களைக் கொடு, மேலும் செல்வத்தை வாரி வழங்கு. நவமணிகளும், தங்கமும் மேலும் குவிய வேண்டும், என்று அவர் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

சாமியார் கிளம்பவும், மன்னர் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. ஐயா! ஏன் கிளம்பி விட்டீர்கள்! என்னைக் காண வந்துவிட்டு, ஏதும் பேசாமல் திரும்பக் காரணம் என்ன? என்றார் மன்னர். மாமன்னரே! நான் என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்க யாசகம் கேட்டு வந்தேன். நீங்களோ என்னை விட பெரிய பிச்சைக்காரர் போலும்! கடவுளிடம் என்னென்னவோ யாசகம் கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்த. ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனிடம் யாசகம் கேட்பது தவறல்லவா! நானும், உங்களைப் போல கடவுளிடமே கேட்டுக் கொள்கிறேன், என சொல்லிவிட்டு நிற்காமல் போய்விட்டார். அதிர்ந்துவிட்டார் மன்னர். இந்த போக்கிரி உலகத்தில் மனிதர்களை நம்ப முடியவில்லை. கடவுளை நம்பி இறங்கினால் எதிலும் வெற்றி பெறலாம். இதுவே, இந்த தமிழ் புத்தாண்டின் சிந்தனையாக அமையட்டும்.


நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் பக்தி கதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 6:38 pm

ஒரே ஒரு பூ போதும்!

பக்தி கதைகள் ST_153705000000

பழநி முருகன் கோயிலுக்கு வந்த பணக்கட்டு படத்தை பேப்பரில் பார்த்தாயா? என்று நண்பரிடம் கேட்டார் ஒருவர்.ஆமாம், பார்த்தேன்! ஆனால், ஏனோ தெரியலை! அந்த முருகன் எனக்கு இப்படியெல் லாம் காணிக்கை போடுமளவு வசதியைத் தரலே! ஏன்...அந்த பழநியையே இன்னும் பார்த்தது இல்லே! என்று விரக்தியாகச் சொன்னார் நண்பர்.கவலை வேண்டாம் நண்பரே! ஒரு கதையைக் கேளுங்க! என்றவர் ஆரம்பித்தார்.சிவனுக்கு பசுபதி என்ற பெயர் இருப்பதைப் புத்தகத்தில் படித்தான் ஒருவன். ஐயோ! என்னிடம் மட்டும் பணமிருந்தால், உள்ளூர் சிவன் கோயிலுக்கு ஒரு பசு வாங்கி காணிக்கையளிப்பேனே! என்று நினைத்துக் கொண்டான்.அன்றிரவு கனவில் சிவன் வந்தார்.பக்தா! பசு காணிக்கை தர உன்னிடம் பணமில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால், உன்னிடம் பக்தி என்ற பசு இருக்கிறது.

அந்த பசுவை எனக்குத் தந்தால் அளவற்ற ஆனந்தம் உனக்கு உண்டாகும். அது மீண்டும் மீண்டும் பாலைச் சுரந்து கொண்டே இருக்கும். அதை எனது திருவடிகளாகிய கொட்டிலில் கட்டிப் போட்டு விடு. அவ்வாறு செய்தால் நல்லொழுக்கம் என்ற கன்றுக்குட்டியை அது உனக்குத் தரும், எனறார்.பக்தன் திடுக்கிட்டு விழித்தான்.சிவனே! தங்கள் பொன்மொழியில் இருந்து ஒன்றைக் கற்றுக்கொண்டேன். பணத்தை கோடி கோடியாக உண்டியலில் கொட்ட வேண்டாம். மிருகங்களையோ, பாத்திரங்களையோ, ஆடம்பரமான பூஜை பொருட்களையோ உங்களுக்குத் தர வேண்டாம். ஒரு பக்தன் மனத்தூய்மையுடன், எனக்கு ஒரு இலையையோ, ஒரு பூவையோ, ஒரு பழத்தையோ...அதுவும் முடியாவிட்டால் சிறிது நீரையோ தந்தால் கூட போதும். நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்று கிருஷ்ணர் கீதையில் சொன்னது போல, பசுபதியாகிய உங்களுக்கு பக்தி என்னும் பசுவைக் காணிக்கையாக அளிக்கிறேன், என்று பிரார்த்தித்தான்.மனநிம்மதியுடன் உறங்க ஆரம்பித்தான்

நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் பக்தி கதைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக