புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
39 Posts - 49%
heezulia
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
3 Posts - 4%
jairam
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
சிவா
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
1 Post - 1%
Manimegala
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
14 Posts - 4%
prajai
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
9 Posts - 3%
jairam
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Rutu
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
Barushree
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_m10கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 25, 2013 3:31 pm

கோவை-அவினாசி சாலையில் உள்ளது லட்சுமி மில் சந்திப்பு. இதன் அருகே 4 மாடி கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இதன் கீழ் தளத்தில் ஆக்சிஸ் வங்கியும் 2-வது, 3-வது தளத்தில் சில தனியார் நிறுவனங்களும் 4-வது தளத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்டு என்ற காப்பீட்டு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி 5cad1e22-2094-49ad-894c-3d34b859c1d6_S_secvpf
இந்த வணிக வளாகத்தில் உள்ள வங்கி, காப்பீட்டு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். இன்று காலை அனைவரும் வழக்கம் போல நிறுவனங்களுக்கு பணிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர்.

காலை 10.15 மணி அளவில் 3-வது தளத்தில் உள்ள சேர்கான் நிறுவனத்தில் திடீரென கரும்புகை கிளம்பியது. இதனை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன காரணம் என்று யோசிப்பதற்குள் புகைமூட்டம் அதிகரித்து தீ மளமளவென பிடித்து எரிந்ததது. சிறிது நேரத்தில் மற்ற தளங்களுக்கும் தீ பரவத் தொடங்கியது.

2-வது மற்றும் 3-வது தளத்தில் உள்ள தனியார் நிறுவனங்களும் 4-வது தளத்தில் உள்ள காப்பீட்டு நிறுவனமும் தீப்பிடித்து எரிந்தன. கீழ் தளத்தில் உள்ள வங்கியிலும் தீ பரவ தொடங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த திடீர் தீ விபத்து காரணமாக அங்கிருந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து தீ விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்கும் முயற்சியில் இறங்கினர்.

நடு தளத்தில் உள்ள நிறுவன ஊழியர்கள் மேல் தளத்துக்கும் தரை தளத்துக்கும் ஓடி தப்பிக்க முயன்றனர். ஒரு சிலர் தப்பித்து வெளியேறினர். ஆனால் ஒரு சிலர் வெளியேற முடியாமல் தவித்தனர். வணிக வளாகம் முழுவதும் தீப்பிடித்து புகைமூட்டமாக இருந்ததால் அவர்களால் எங்கு செல்வதென தெரியாமல் தவித்தனர்.

இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. அவர்கள் தீயை அணைக்கும் பணியிலும் தீ விபத்து காரணமாக ஆங்காங்கே தளங்களில் சிக்கி தவித்தவர்களை மீட்கும் பணியிலும் இறங்கினார்கள். ஆனால் 3-வது தளத்தில் உள்ள சேர்கான் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் சுகன்யா (வயது 25), ஜீவிதா (26) ஆகிய 2 பெண் ஊழியர்களும் 2-வது தளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தனர். கீழே நின்றவர்கள் அவர்களை கீழே குதித்து தப்பிக்குமாறு கூறினார்கள்.

முதலில் அந்த பெண்கள் யோசித்தாலும் தீ விபத்தின் அகோரம் அதிகரித்ததால் அந்த 2 பெண்களும் மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் சுகன்யா புதுப்பெண் ஆவார். அவருக்கு சமீபத்தில்தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் தவிர சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கோவை-அவினாசி சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கும் ரோடு என்பதால் தீ விபத்து காரணமாக இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து பற்றி கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் அந்த பகுதிக்கு வந்து குவிந்தனர். சிலர் வேடிக்கை பார்த்தனர். பலர் மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். சுமார் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் இருந்த வீரர்களும் வணிக வளாகத்தை சுற்றி நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.

ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியும் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது. மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 2 பேர் வணிக வளாகத்தில் இருந்து எழுந்த தீயின் அகோரம் தாங்காமல் தீயணைப்பு வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். பெரும்பாலான தீயணைப்பு வீரர்கள் ஒவ்வொரு தளமாக சென்று தீயை அணைத்து அங்கு யாரும் சிக்கி இருக்கிறார்களா? என்று பார்த்து அவர்களை மீட்டனர். அப்போது தீ விபத்தில் சிக்கி 4 பேர் உடல் கருகி பிணமாக கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

வணிக வளாகத்தின் 3-வது தளத்தில் 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. அவர்கள் சேர்கான் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர்கள் ஆவார்கள். வேறு யாரும் தீ விபத்தில் சிக்கி இருக்கிறார்களா? என்று தேடும் பணி நடக்கிறது. 4 தளத்திலும் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் யார்-யார்? என்று கணக்கெடுத்து அவர்கள் எல்லாரும் இருக்கிறார்களா? என்று சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதனால் வணிக வளாகத்தின் முன்பு அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் பரிதவித்தபடி நிற்பதை பார்க்க முடிந்தது.

இதற்கிடையே காலை 10.15 மணிக்கு வணிக வளாகத்தில் பிடித்த தீ 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மதியம் 12.15 மணிக்கு அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து சம்பவம் கோவையில் இன்று பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 25, 2013 3:49 pm

சோகம்

விபத்தில் இழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கின்றேன்

மேலும் பலியான அனைவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Apr 26, 2013 10:53 am

பல குழந்தைகள் இறந்த கும்பகோண நிகழ்ச்சியை மறந்தது போல் இதையும் சில நாள்களில் மறந்து விடுவோம்.

வணிக வளாகங்கள், அரசுக் கட்டிடங்கள், கல்விச்சாலைகள், மருத்துவமனை ஆகியவற்றில் விபத்து கால அவசர செயலாக்கம் (emergency preparedness) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நடைமுறையில் செயல்படுத்தி மக்கள் உயிரை காக்க வேண்டும்.

என்ன செய்ய, விபத்துகளை செய்தியாகப் பார்க்கும் மனோபாவமே இங்கு மேலோங்கி இருக்கிறது. இவற்றை படிப்பினையாக நாம் கருத்துவதில்லை.




சதாசிவம்
கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக