புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_m10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10 
30 Posts - 71%
heezulia
முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_m10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_m10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_m10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10 
72 Posts - 66%
heezulia
முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_m10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_m10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_m10முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 20, 2013 2:34 am


சுயம்பு லிங்கங்களை பல்வேறு திருத்தலங்களில் தரிசித்திருக்கலாம். சுயம்பு முருகனை காண்பது அரிது.

அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம்.

நட்சத்திரகிரியில் கந்தன் குடி கொண்டது சுவாரஸ்யமான வரலாறு.

முன்னொரு சமயம் இப்பகுதியில் இரண்டு சிவாச்சார்யர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் ஆடிக் கிருத்திகை நாளில் திருத்தணிகை சென்று சுப்ரமணியரை வழிபட்டு வருவது வழக்கம். ஒரு வருடம் அவர்களால் ஆடிக்கிருத்திகையன்று தணிகைமலை செல்ல இயலவில்லை. இதனால் இருவரும் மிகுந்த மன வருத்தம் அடைந்தனர்.

ஒருநாள் அவர்களின் கனவில் தோன்றிய குமரன், “நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுவில் சுயம்பு வடிவாய் எழுந்துள்ளேன். சூரியன்-சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கும். நட்சத்திரக் குன்றின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திர புஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட, என்னை வந்து அடையுங்கள்!’ என்று கூறி மறைந்தார்.

திடுக்கிட்டு கண்விழித்த சிவாச்சாரியார்கள், பிரம்ம முகூர்த்த வேளையில் சுனையினை அடைந்தனர். அங்கிருந்து ஒளி பொருந்திய நாகம் ஒன்று வழிகாட்டிட, அதைப் பின்தொடர்ந்தனர் குன்றின் நடுவில் சென்றதும் ஓரிடத்தில் நாகம் மறைந்தது. அங்கே சப்பாத்திக் கள்ளிச் செடிகளுக்கு இடையே சுயம்பு லிங்க வடிவாய் முருகன் காட்சியளித்தார்.

இதைக் கேள்வியுற்ற ஊர் மக்கள் ஒன்று கூடி, சுயம்பு சுப்ரமணியரை வணங்கினர். பின்னர் வள்ளி-தெய்வானை சுமேத முருகன் உருவச் சிலையையும் ஸ்தாபித்து ஆலயம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டது.

சேயாற்றின் கரையோரமாக சிறு குன்றின் மீது குறைகளையெல்லாம் களையும் குமரன் இனிதே வீற்றிருக்கிறார்.

சுமார் 227 படிகள் ஏறி, முதலில் சித்தி விநாயகரை வணங்குகின்றோம். மூன்று நிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இடதுபுறம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வலப்புறம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதரும் அருள்கின்றனர். கிழக்குப்புறம் பலிபீடம், மயில் வாகனம், கொடிமரம் காணப்படுகிறது.

மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகிய அமைப்பில் சன்னதிகள் அமைந்துள்ளன. கருவறையுள் வள்ளி மற்றும் தெய்வானையுடன் கந்தன் உருவமூர்த்தமாகவும், பீடத்தின் கீழே சுயம்புவாய் அருவுருவ லிங்க வடிவிலும் எழுந்தருளியுள்ளார். முருகனின் தலைக்குப் பின் படம் எடுத்து நிற்கும் நாக வடிவம் உள்ளது. இந்த முருகனை நாகம் அடையாளம் காட்டியதன் நினைவாக நித்தமும் நாகபாசம் பொருத்தப்படுகின்றது.

வேண்டியதையெல்லாம் தருவான் இந்த வேலவன். 27 நட்சத்திரங்களும், கார்த்திகைப் பெண்களும் அனுதினமும் இங்கு ஆறுமுகனை பூஜிப்பதாக ஐதிகம்.

மலைக்கோயிலின் வெளியே மலேசிய பத்துமலை முருகனை நினைவுகூரும் விதத்தில் கந்தன் தங்க நிறத்தில் கம்பீரமாய்த் திகழ்கின்றான்!

மலைக்கு வாகனங்கள் மூலம் செல்ல சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில் தீர்த்த சுனையும், அனுமன், கணபதி, நவகிரகம் மற்றும் இடும்பன் சன்னதிகளும் அமைந்துள்ளன.

இந்த நட்சத்திரக் குன்று முருகன் மீது முருகதாசரான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் நான்கு பாடல்களைப் பாடிச் சிறப்பித்துள்ளார். மேலும் இந்த முருகன் மீது சிவசுப்ரமணிய மாலை, நட்சத்திரக்குன்ற வழிநடைப்பதம், உடுமலைப் பாமாலை, நட்சத்திரக் குன்ற அருள்மிகு சிவசுப்பிரமணியர் பிள்ளை தமிழ் போன்ற எண்ணற்ற பாமாலைகள் புலவர் பலரால் இயற்றப்பட்டுள்ளது.

சித்திரை வருடப்பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகைப் பெருவிழா, கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை தீபம், தை கிருத்திகை, பங்குனி உத்திர பிரம்மோற்சவம் (அதில் ஏழாம்நாள் திருத்தேர்), வைகாசி விசாகம், மாத கார்த்திகைகள் என விழாக்கள் பற்பல இங்கு கொண்டாடப்படுகின்றன. சஷ்டியில் பெருமான் எலத்தூர் சென்று அன்னை சக்தியிடம் வேல் வாங்கி வந்து, நட்சத்திரக் கோயிலில் சூரசம்ஹாரம் செய்வார். அதன்பின் சேயாற்றின் கரையில் அமைந்துள்ள குருவிமலை கிராமத்திற்குச் சென்று, அங்கே ஆற்றில் தீர்த்தவாரி நடக்கும். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர்.

தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும் இவ்வாலயத்தில் கிருத்திகைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்களின் நாகதோஷம் புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும்; புதுவாழ்வு பிறக்கும். பாலபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும்; நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் வில்வாரணி என்னும் ஊரில் அமைந்துள்ளது, நட்சத்திரக்குன்று எனப்படும் நட்சத்திரக்கோயில்.

- எம்.கணேஷ், ஆரணி.



முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 20, 2013 11:00 am

:வணக்கம்: பகிர்வுக்கு நன்றி தல

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக