புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
73 Posts - 46%
heezulia
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
4 Posts - 3%
M. Priya
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
1 Post - 1%
eraeravi
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
1 Post - 1%
Kavithas
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
1 Post - 1%
சிவா
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
1 Post - 1%
bala_t
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
304 Posts - 43%
heezulia
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
6 Posts - 1%
prajai
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
4 Posts - 1%
manikavi
முதுமொழிக் காஞ்சி!  Poll_c10முதுமொழிக் காஞ்சி!  Poll_m10முதுமொழிக் காஞ்சி!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமொழிக் காஞ்சி!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 18, 2013 10:42 pm

சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து ஆகிய இப்பத்துகள் அனைத்தும் முதுமொழிக் காஞ்சி என்ற நீதி நூலினுள் உள்ளன. இந்நூலை இயற்றியவர் கூடலூர் கிழார். இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு நீதியும் பழமொழிகளைப் போல அமைந்திருப்பதால் இது முதுமொழிக் காஞ்சி எனப்பட்டது. முதுமொழி என்றால் பழமொழி. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. முதல் பத்தாகிய சிறந்த பத்தில் உள்ள பத்து அடிகளில் சிறந்தன்று என்ற ஒரு சொல் பயின்று வந்ததால் இது சிறந்த பத்தாயிற்று. அப் பத்தைக் காண்போம்!

முதல் பத்து - சிறந்த பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை!

கடல் சூழ்ந்த இவ்வுலகத்து மக்கள் அனைவருக்கும் கல்வி கற்றலைவிட ஒழுக்கமுடையவராக இருப்பதே சிறந்ததாகும்.

2. காதலின் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்!
பிறர்க்கு அன்பு காட்டுவதிலும் செயல்களால் அவர் போற்றும்படி உயர்ந்த மதிப்பினைப் பெறுதல்
வேண்டும். அதுவே, அன்பை விட மிக்கச் சிறப்புடையதாகும்.

3. மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை!
ஒருவர் அறிவைப் பெற்றிருப்பதைவிட தான் கற்ற கல்வியை மறவாமல் இருப்பதே மிகுந்த சிறப்பை உடையது.

4. வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை!
வண்மை என்பது வளம் பொருந்திய செல்வம். வாய்மை என்பது உண்மை, மெய்மை. பலவகைத் தீமைகளை விளைவிக்கக்கூடிய செல்வத்தை ஒருவர் பெற்றிருப்பதைவிட, நன்மையைச் செய்யும் வாய்மை உடையவராக இருப்பதே மிகுந்த சிறப்பை உடையது.

5. இளமையில் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை!
ஒருவனுக்கு இளமை இன்பத்தைவிட நோயில்லாத வாழ்க்கையினால் உண்டாகின்ற இன்பமே மிகச்சிறந்த இன்பமாகும்.

6. நலன்உடை மையின் நாணுச் சிறந்தன்று!
நலன் என்பது அழகு; நாணு என்பது நாணம். ஒருவர் அழகுடையவராக இருப்பதைக் காட்டிலும் நாணம் உடையவராக இருப்பதே மிகவும் சிறப்புடையது.

7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று!
குலன் என்பது குடிப்பிறப்பு; கற்பு என்பது கல்வி. ஒருவன் உயர்குடியில் பிறந்தவனாக இருப்பதைவிட, கல்வி உடையவனாக இருப்பதே மிகவும் சிறப்புடையது.

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று!
ஒன்றைக் கற்றறிவதைவிடக் கற்றறிந்த பெரியோரை அணுகி அவருக்கு வழிபாடு செய்வதே மிகவும்
சிறந்ததாகும்.

9. செற்றாரைச் செறுத்தலின் தன்செய்கை சிறந்தன்று!
செற்றார் என்பவர் பகைவர்; செறுத்தல் என்பது அப்பகைவரை அழித்தல். அரசர்க்குத் தம்முடைய பகைவர்களை அழித்தலைவிட தங்களுடைய நிலையை மேலும் உயர்த்திக் கொள்வதே மிக்க சிறப்பைத் தரும்.

10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று!
முன் என்பது முற்காலம் (இளமைக் காலம்); பின் என்பது பிற்காலம் (முதுமைக் காலம்). செல்வமானது இளமையில் பெருகிப் பின்பு குறைவதைவிட, முதுமையில், முன்பு உள்ள நிலையில் குறையாமல் இருப்பதே மிக்க சிறப்புடையது.

(தொடரும்)
(நன்றி-தினமணி)




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Fri Apr 19, 2013 11:14 am

முதுமொழி காஞ்சி என்று ஒரு நூல் இருப்பதாக பள்ளி காலத்தில் படித்திருகின்றேன்.
அதில் சொல்ல பட்ட விடயங்கள் இது தான் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

தமிழ் என்றல் அமிழ்து என்பது எவ்வளவு சரி................ நடனம்


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 24, 2013 11:43 pm

முதுமொழிக் காஞ்சி இரண்டாவது - அறிவுப்பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப!

ஒலிக்கும் கடல் சூழ்ந்த நிலவுலகில் வாழும் மக்கள் அவர் பிறந்த குலத்தால் அறியப்படுவது இல்லை. அவர், பிற உயிர்களிடத்தில் காட்டும் இரக்க குணத்தினாலேயே அறியப்படுவர்.

2. ஈரம் உடைமை ஈகையின் அறிப!
ஒருவர் இரக்கம் உடையவர் என்பதை, பிறர்க்கு அவர் கொடுக்கும் கொடையினால் அறியலாம்.

3. சோரா நல்நட்பு உதவியின் அறிப!
ஒருவர் செய்யும் உதவியைக் கொண்டு அவர்தம் தளரா நட்பை அறியலாம்.

4. கற்றது உடைமை காட்சியின் அறிப!
ஒருவர் கற்றுள்ளமையை அவருடைய அறிவின் மிகுதியால் - அறிவுப் புலப்பாட்டால் அறியலாம்.

5. ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப!
ஒரு செயலை நன்றாக எண்ணி, செம்மையாகச் செய்து முடிக்கும் சிறப்பை உடையவரை, அதற்கு முன் அவர் கைக்கொண்டு முடித்த செயல்களினால் அறியலாம்.

6. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப!
ஒருவர் தம்மைத்தாமே செருக்குடன் உயர்த்திப் பேசும் தற்பெருமைகளை அளவாகக் கொண்டு அவர் பிறந்த குடியின் சிறுமையை அறியலாம்.

7. சூத்திரம் செய்தலின் கள்வன் ஆதல் அறிப!
ஒருவரின் கள்ளத்தனமான செயல்களைக் கொண்டு அவர் முழுத் திருடர் என்பதை அறியலாம்.

8. சொல்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப!
ஒருவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றாத நாநயம் இன்மையைக் கண்டு அவர் எல்லாவற்றிலும் சோர்ந்து தளர்பவர் என்பதை அறியலாம்.

9. அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்வும் அறிப!
ஒருவர் அறிவில் குறையுடையவராக இருப்பதைக் கொண்டு, அவர் பிற எல்லாவற்றிலும் குறை உடையவராகவே இருப்பர் என்பதை அறியலாம்.

10. சீருடை ஆண்மை செய்கையின் அறிப!
ஒருவர் மிகச்சிறந்த ஆளுமைத் தன்மை உடையவரா? என்பதை அவருடைய செயல்களால் அறியலாம்.

அடுத்த பத்து... அடுத்த வாரம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 06, 2013 12:55 pm

முதுமொழிக் காஞ்சி மூன்றாவது - பழியாப்பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
யாப்பிலோரை இயல்பு குணம் பழியார்.

ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகத்து மக்களுள் ஒரு செய்கையிலும் நிலையில்லாதவருடைய - கட்டுப்பாடு வகுத்துக்கொள்ளாதவருடைய குணங்களை ஒருவரும் பழியார்.

2. மீப்பி லோரை மீக்குணம் பழியார்.
மேன்மை குணம் இல்லாத கீழ்மக்களிடம் மேலோர்க்குரிய குணமும் செய்கையும் இல்லையே என்று எவரும் பழியார்.

3. பெருமை உடையதன் அருமை பழியார்.
ஒருவர் எவ்வளவு பெரிய செயல்களையும் செய்வதற்குத் தாம் மேற்கொள்ளும் அரிதாகிய முயற்சியினைப் பழித்தல் கூடாது.

4. அருமை உடையதன் பெருமை பழியார்.
ஒருவர் தான் எடுத்துக்கொண்ட அரிதாகிய செயல்களைச் செய்து முடிப்பதற்குரிய பெரிதாகிய முயற்சியை எவரும் பழித்தல் கூடாது.

5. நிறையச் செய்யாக் குறைவினை பழியார்.
எச்செயல்களையும் முழுமையாக - நிறைவாக செய்து முடிக்க முடியாதவரின் குறையைக் கண்டு எவரும் பழித்தல் கூடாது.

6. முறையி லரசர்நாட் டிருந்து பழியார்.
நீதியில்லாத கொடுங்கோல் அரசருடைய நாட்டில் வசிப்பவர் அக்கொடுங்கோன்மையைப் பழித்துரைக்க மாட்டார்.

7. செயத்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்.
தமக்கு உதவி செய்யத்தக்க நல்ல நண்பர்கள் - சுற்றத்தார் இல்லையே என்று பிறரிடம் சொல்லிப் பழியார்.

8. அறியாத தேசத் தாசாரம் பழியார்.
ஒருவர் தான் முன்பின் அறியாத நாட்டுக்குச் சென்றால் அங்குள்ளோர் ஒழுகும் ஒழுக்கத்தைப் பழித்தல் கூடாது.

9. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்.
வறுமை உடையவனைக் கொடைத்தன்மை இல்லாதவன் என்று பழித்தல் கூடாது. பொருளுடையவன் பொருளில்லார்க்கு ஈயாமையை எல்லோரும் பழிப்பர்; பொருளில்லாதவன் ஈயாமையை ஒருவரும் பழியார்.

10. சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.
சிறுமை குணம் உடைய சிறியோர்களின் கீழ்மை குணத்தை ஒழுக்கத்தில் சிறந்த பெரியவர்களும் பழியார்.

அடுத்த பத்து... அடுத்த வாரம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 06, 2013 12:58 pm

முதுமொழிக் காஞ்சி நான்காவது பத்து - துவ்வாப்பத்து

துவ்வாமை என்றால் நீங்காமை - நீங்கியொழியாது, விட்டொழியாது என்று பொருள்.

1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது.

ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகத்து மக்கள் எல்லோருக்கும் பழியுடையோரின் செல்வம் அறமுடையோரின் வறுமையினின்றும் விட்டொழியாதது ஆகும்.

2. கழி தறுகண்மை பேடியின் துவ்வாது.
இடமும் காலமும் அறியாத ஒருவனுடைய வீரத்தன்மை, பேடியின் வீரத்தன்மையின்றும் நீங்காது. எனவே, ஒருவன் தன்னுடைய வீரத்தை இடமும் காலமும் அறிந்து பகைவரிடத்தில் பயன்படுத்த வேண்டும்.

3. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
ஒருவன் வெட்கங்கெட்டு பிறரிடத்து உண்டு உயிர் வாழ்ந்தால் உண்டாகின்ற துன்பம், பசித்தலால் உண்டாகின்ற துன்பத்தின் வேறானதன்று. வெட்கமின்றி பிறரிடத்து உண்டு வாழ்வதைவிட பசியினால் இறந்தொழிவதே மேலானதாகும்.

4. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது.
விருப்பத்தோடு கூடிய ஈகையே ஈகை. அன்றி, விருப்பமில்லாத ஈகை ஈயாமையின் வேறாகாது. பிறருடைய கட்டாயத்திற்காக, மனம் வருந்திச் செய்யும் ஈகை சிறப்பில்லாதது ஆகும்.

5. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது.
ஒருவன் ஒரு செயலைத் தொடங்குமுன் செய்யத்தக்க செயலா? செய்யத்தகாத செயலா? என்று பகுத்தறிந்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத்தகாத செயல்களைச் செய்வதாக மேற்கொண்டு தொடங்குவது மூடத்தன்மையின் வேறாகாது.

6. பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது.
விருப்பமில்லாவிட்டாலும் விருப்பமுடையவர் போல் செய்யும் உதவியானது நீசத்தன்மையின் நீங்கியொழியாது. மனப்பூர்வமாய்ச் செய்யாத உதவி கீழ்மையினும் கீழ்மையானது.

7. கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது.
ஒருவரை நண்பராகக் கொண்ட பின் அவரைக் கண்ணோட்டமின்றிப் புறக்கணித்தல் கூடாது. அவ்வாறு செய்பவர் அவருக்குக் கொடுமை செய்தவரன்றி வேறாகார்.

8. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது.
அறிவில்லாதவரைத் துணையாகக் கொண்டிருப்பது தனித்திருப்பதற்குச் சமானமேயன்றி வேறாகாது. ஆகவே, அறிவில்லாதவரைத் துணையாகக் கொள்வதைவிட தனிமையில் இருப்பதே சிறப்புடையதாகும்.

9. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது.
இழிவினை உடைய முதுமைப் பருவம் யாவராலும் சினந்து தள்ளப்படுவது ஆகும். அம்முதுமைப் பருவம் பிறருடைய சினத்திலிருந்து நீங்காது.

10. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.
பிறருக்கு எதுவும் கொடுக்காமல் தான் மட்டுமே உண்டு இன்புற்று வாழும் வாழ்க்கை வறுமையுடைய வாழ்க்கையினின்று நீங்காதது.




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 26, 2013 7:57 am

முதுமொழிக் காஞ்சி ஐந்தாவது பத்து - அல்ல பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் நீர்அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.
ஒலிக்கும் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ளவர் அனைவரினுள்ளும் கணவன் இயல்பறிந்து நடக்காதவள் நல்ல மனைவியாக மாட்டாள்.

2. தாரம் மாணாதது வாழ்க்கை அன்று.
மனைவி மாண்புடையவளாக இல்லாத இல்வாழ்க்கை இல்வாழ்க்கை அன்று.

3. ஈரம் இல்லாதது கிளை நட்பு அன்று.
அன்பற்ற தொடர்பு சுற்றமும் நட்பும் அன்று.

4. சோராக் கையன் சொன்மலை அல்லன்.
மற்றவருக்குக் கொடுத்து உதவாத கையினை உடையவன் புகழுக்கு உரியவன் அல்லன். (சோரக் கையன் - என்ற பாடபேதமும் உண்டு).

5. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்.
ஒத்த மனத்தை உடைவனாக இல்லாதவன் நல்ல நண்பன் அல்லன்.

6. நேராமல் கற்றது கல்வி அன்று.
கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு ஒன்றும் உதவாமல் (குரு காணிக்கை தராமல்) படித்தது கல்வி ஆகாது.

7. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று.
தன் வாழ்வுக்காக அன்றி மற்றவர் வாழ்வுக்காக வருந்துதல் வருத்தமாகாது.

8. அறத்தாற்றின் ஈயாதது ஈகை அன்று.
அறநெறியில் அளிக்காதது ஈகை ஆகாது. அறநெறியில் ஈவதே சிறந்த ஈகையாகும்.

9. திறத்தாற்றின் நோலாதது நோன்பு அன்று.
ஒருவன் தன் திறனறிந்து அதற்கு ஏற்ற வகையில் செய்யாதது தவம் அன்று.

10. மறுபிறப்பு அறியாதது மூப்பு அன்று.
மறுபிறப்பு உண்டு என்பதை அறிந்து அதற்கேற்ப நடவாமல் (நற்செயல்களைச் செய்யாமல்) முதிர்ந்த முதுமை சிறந்த முதுமை ஆகாது.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக