புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
prajai
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
18 Posts - 2%
prajai
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for தூக்கம்

Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் OKJ7GKs

உலக தூக்க தினம் மார்ச் 17ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு நாள் முழுவதற்குமான அலுவலக பணிகளுக்கு பின் வீட்டுக்கு செல்லும் உங்களின் முக்கிய தேவை என்னவாக இருக்கும்? சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இதற்கான பதில் தூக்கமாகவே இருக்கும்.

முந்தைய நாளின் களைப்பில் இருந்து விடுபடவும், இன்றைய நாளை புத்துணர்ச்சியோடு தொடங்கவும் நல்ல தூக்கம் மிக முக்கியம். வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் போன்றவை காரணமாக பலரும் தேவையான அளவு தூக்கத்தை தொலைத்துவிட்டு அவதிப்படுகின்றனர்.

போதிய அளவு தூக்கம் இல்லையென்றால் பல்வேறு நோய்களுக்கு அது வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தூக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தூக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி உலக தூக்க தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருபொருள் - ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம்.

நமது உடல்நலம், மனநலம் போன்றவற்றுக்கு உணவு, உடற்பயிற்சி போன்றவை எந்தளவு அவசியமோ தூக்கமும் அதே அளவு அவசியம். எவ்வித தடங்கலும் இல்லாமல் தினமும் வழக்கமான நேரத்தில் தூங்குவது நாள்பட்ட நோய்கள், உடல்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை குறைக்கும் என்று 'வோர்ல்ட் ஸ்லீப் டே' நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.

உலகம் முழுவதும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 கோடியாக இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.


தூங்கும்போது நம் உடலில் என்ன நடக்கிறது?



தூக்கமின்மை குறித்து பார்ப்பதற்கு முன்பாக தூக்கம் என்றால் என்ன என்பதை அலசுவோம்.

தூங்கும்போது நம் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

"வளர்சிதை மாற்ற (Metabolism) பணிகளில் ஒன்றுதான் தூக்கம். வளர்சிதை மாற்றத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று அனபாலிசம்; மற்றொன்று கெடபாலிசம்.

இவற்றை சமன்படுத்தும் பணிகள் தூக்கத்தின் போதுதான் நிகழ்கின்றன.

எனவே, தூக்கம் என்பது மிக அவசியம் என்று கூறுகிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் எஸ். ஜெயராமன். தூக்கத்தின்போதுதான் நமது உடலில் அணுக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன.

தூக்கம் குறையும்போது நோய் எதிர்ப்பு குறைந்துவிடுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் உடலில் தோன்றுகின்றன," என்று எஸ்.ஜெயராமன் குறிப்பிடுகிறார்.

தினமும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ?



ஒரு சராசரி நபருக்கு தினசரி 6 முதல் 8 மணி நேரம் வரையிலான தூக்கம் அவசியம் என்கிறார் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.

“பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு 14 மணி நேரம் வரை தூக்கம் அவசியம்.

வயதாக ஆக இந்த நேர அளவு குறைந்து விடுகிறது. 60 முதல் 70 வயதை கடந்தவர்கள் தூங்கும் நேரம் மிகவும் குறைவு. வயதானவர்களில் சிலர் தினசரி 4 மணி நேரம் மட்டுமே தூங்குகின்றனர்,” என்றும் அவர் கூறினார்.

இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரையிலான 8 மணி நேரத்தில் தூங்க பழக்குவது சிறந்ததாக இருக்கும் என்று தெரிவித்த ஜெயராமன் இதில், 1 மணிநேரம் முன்னர் பின்னர் இருப்பதில் தவறில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

“தினமும் ஒரே நேரத்தில் தூங்குவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். அப்படியே பகலில் தூங்கினாலும் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் தூங்கலாம். அதற்கு மேல் தூங்குவது உங்களின் இரவு தூக்கத்தை கடுமையாக பாதிக்கும்,” என்றும் அவர் எச்சரிக்கிறார்.

எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதை விட எந்தளவு ஆழ்ந்து தூங்குகிறோம் என்பது முக்கியம் என்கிறார் மருத்துவர் ஜெயராமன்.

“தூக்கத்திற்கு நடுவில் விழித்து உடல் உபாதைகள் கழிக்க செல்வது, தூக்கத்தில் சுவாச அடைப்பு, குறட்டை போன்றவை ஏற்படாமல் ஆழ்ந்து தூங்குவதுதான் சிறப்பானது. இதனால் காலையில் நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.”

மொபைல் போன்ற மின் சாதனங்களால் ஏற்படும் பாதிப்பு என்ன?



இரவில் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் போன்களை பயன்படுத்துவது போன்றவை தூக்கமின்மைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த கருத்துடன் தான் உடன்படுவதாக மருத்துவர் ஜெயராமன் கூறுகிறார்.

“செல்போன் போன்ற மின்சார சாதனங்களின் வரவால் மனிதர்கள் தூங்கும் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. நமது மூளையில் உள்ள பீனியல் சுரப்பியில் இருந்து மெலடோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. தூக்கத்தைத் தூண்டும் சுரப்பியான மெலடோனின் இருட்டான சூழலில் அதிகமாக உற்பத்தியாகி உடலை தூங்குவதற்கு தயார் படுத்துகிறது.

ஒளி நிறைந்த சூழல் மெலடோனின் உற்பத்தியைக் குறைப்பதோடு, உங்கள் உடலுக்கு விழித்திருப்பதற்கானச் சமிக்ஞைக் கொடுக்கிறது. இரவு நேரத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தினாலோ, தொலைக்காட்சி பார்த்தாலோ, அதிலிருந்து வெளிப்படும் நீல வெளிச்சம் மெலடோனின் உற்பத்தியை குறைக்கிறது. இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கமின்மை வேறு பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.” என்று அவர் விளக்கினார்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், குழந்தைகளிடம் உள்ள இணைய பழக்கம் தொடர்பாக தங்களிடம் எந்த குறிப்பிட்ட தரவுகளும் இல்லையென்றும் அதேவேளையில், குழந்தைகள் இணைய வசதியுடன் மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் (உடல், நடத்தை மற்றும் உளவியல்-சமூகம்)" என்ற தலைப்பில் குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் நடத்திய ஆய்வை மேற்கொள் காட்டி பதிலளித்தார்.

அப்போது, 23.80 சதவீத குழந்தைகள் தூங்குவதற்கு முன்பு படுக்கையில் மொபைல் பயன்படுத்துவதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார். மொபைல் பயன்பாடு காரணமாக 37.15 சதவீத குழந்தைகளின் கவனம் செலுத்தும் திறன் குறைவை எதிர்கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

குழந்தைகளிடம் மொபைல் போனை தருவது என்பது தவறான பழக்கம் என்று எச்சரிக்கிறார் ஜெயராமன், “தற்போதைய அவசர யுகத்தில் குழந்தைகளை பார்த்துகொள்வது கடினமாக இருப்பதாக கூறி பெற்றோர்கள் அவர்களின் கைகளில் மொபைல் போனை கொடுத்துவிடுகின்றனர். மொபைல் இருந்தால் குழந்தைகள் அமைதியாக இருக்கிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், இது தவறான பழக்கம். குழந்தைகள் தூங்கும் நேரத்தை இது பாதிக்கும். மேலும், அவர்களின் புத்திக்கூர்மையை இது பாதிக்கிறது,” என்றார்.

தூக்கத்தில் உணவு ஏற்படுத்தும் தாக்கம்



மொபைல் பயன்பாட்டைப் போன்று உணவுப் பழக்கமும் நமது தூக்கத்தில் முக்கிய பங்காற்றுகிறது என்று கூறுகிறார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணரான மருத்துவர் மீனாட்சி பஜாஜ்.

“தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே நாம் இரவு உணவை சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். இரவில் காலதாமதமாக உணவு சாப்பிடுவது நாம் தூங்குவதை தாமதப்படுத்தும்.

இதேபோல், சிலர் இரவில் உணவை சமைக்க நேரம் இல்லாமல் உணவு செயலிகள் மூலமாக கண்ட நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். இவ்வாறு சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவது ஆகியவை உங்களின் தூக்கத்தை பாதிக்கும். கடலை, பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது” என்றார்.

“ஜப்பான் மக்கள் ஒக்கினாவா என்ற டயட் முறையை பின்பற்றுகின்றனர். சர்க்கரைவள்ளி கிழங்கு, வெண்டைக்காய், பாகற்காய், மீன் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர். யக்கிஷோபா என்ற நூடூல்ஸ் வகையை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.

இரவு உணவை முன்னரே அவர்கள் சாப்பிட்டு விடுகின்றனர். மேலும் மூன்று வேளையையும் வயிறு முட்ட சாப்பிடாமல் முக்கால் வயிறுவரை மட்டுமே சாப்பிடுகின்றனர். இதெல்லாம் அவர்கள் நீண்ட நாட்கள் நிம்மதியுடன் வாழ உதவுகிறது ” என்றும் அவர் தெரிவித்தார்.

தூக்கத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?



இதற்கு, வானம்பாடி மற்றும் ஆந்தை நபர்கள் (Lark and owl persons) என்ற ஒப்பீடு கூறப்படுவது உண்டு. இரவு 11 மணிக்கு முன்பாக தூங்கச் சென்று காலை 8 மணிக்கு முன்பாக விழிப்பவர்களை வானம்பாடி என்றும் இரவு 11 மணிக்கு பின்பு தூங்கச் சென்று காலை 8 மணிக்கு பின்பாக விழிப்பவர்களை ஆந்தை என்றும் கூறுவார்கள்.

இன்றைய இளைஞர்கள்`ஆந்தை` பண்பை அதிகமாக பின்பற்றுகின்றனர் என்று கூறுகிறார் மருத்துவர் மீனாட்சி.

“இரவு தூக்கம் என்பது மிக அவசியம். இரவு நீண்ட நேரம் கண்முழித்து தூங்காமல் இருப்பது உடல் பருமன், சர்க்கரை வியாதி, இதய நோய், ரத்த கொதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இரவுப் பணியில் ஈடுபடுபவர்கள், தங்கள் உணவுப்பழக்கத்தை அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். இரவுப் பணி என்பதே உடலுக்கு கெடுதல்தான். அதிலும் உணவு பழக்கத்தை முறையாக பின்பற்றாமல் இருப்பது மேலும் கெடுதல் தரும்.

எனவே, குறைந்தபட்சம் ஒரு பாதிப்பையாவது குறைத்துக் கொள்ளலாம். ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தூங்குவதற்கு முன்பாக டீ, காபி போன்றவை குடிப்பதற்கு பதிலாக பால் குடிப்பது நல்லது,” என்கிறார்.

தூங்கும் அறையை முடிந்துவரை இருட்டாக இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மெலடோனின் உற்பத்தி அதிகரிக்கும். இது நல்ல தூக்கத்துக்கு உதவும் என்கிறார் மருத்துவர் ஜெயராமன்.

“மெலடோனின் சுரப்பி குறைபாடு இருந்தால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். தற்போது இதனை சரி செய்வதற்கு சிகிச்சைகளும் உள்ளன. இரவு தூங்குவதற்கு முன்பாக மின் சாதனங்களை பயன்படுத்துவது உங்களின் தூக்கத்தை பாதிக்கும் என்று முன்பே கூறியிருந்தேன்.

எனவே, முடிந்தவரை தூங்க தயாராவதற்கு 2 அல்லது 1 மணி நேரத்துக்கு முன்பாகவே மின் சாதனங்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட வேண்டும். தூங்கும்போது கைக்கு எட்டும் தூரத்தில் மொபைல் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இரவு பணி செய்பவர்கள், பணி முடிந்து வீட்டுக்கு திரும்பியதும் எவ்வித தொந்தரவும் இல்லாமல் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். அறையை இருட்டாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இதேபோல், ஒரு சிலர் பணி நாட்களின்போது 4 மணி நேரம் தூங்குவது விடுமுறை நாட்களில் 10 மணி நேரம் வரை தூங்குவது போன்றவற்றை பின்பற்றுகின்றனர். இதுவும் தவறுதான். தினமும் ஒரே மாதிரியான தூங்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்” என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

குறிச்சொற்கள் #உலக_தூக்க_தினம் #World_Sleep_Day #தூக்கம்

பிபிசி தமிழ்
முன்பெல்லாம் #தூங்கா_நகரம் என்றாலே மதுரையைத்தான் சொல்வதுண்டு. அதற்கு அங்கிருப்பவர்கள் யாரும் தூங்குவதில்லை என்று அர்த்தமாகாது. இரவிலும் சுற்றுப் பகுதிகளிலிருந்து மக்கள் வந்து சென்றுகொண்டிருப்பதால், இரவிலும் கடைகள் திறந்திருப்பதும், வணிகர்கள் மட்டுமே பெரும்பாலும் நடமாடிக்கொண்டிருப்பதும்தான் காரணம்.

இரண்டாயிரத்துக்குப் பின்னான நமது வாழ்வு முற்றிலும் வேறுவகை. சென்னையில் மட்டுமே இரவு பத்து மணிக்குத் தொடங்கி காலை ஆறு மணிவரை மட்டுமே இயங்கக்கூடிய உணவகங்கள் குறிப்பாக, பிரியாணி மற்றும் துரித உணவுகள் சுடச்சுட சமைக்கப்பட்டு விடிவதற்குள் விற்று தீர்ந்துவிடுகின்றன.  வடசென்னையில் ஒரு கடையில் ராத்திரி ஒரு மணிக்கு அந்த அசைவ உணவகம் திறக்கப்படும் போது வாசலில் கூட்டம் அலைமோதும், நான்கு மணிக்கு அனைத்தும் தீர்ந்து கடை அடைக்கப்பட்டுவிடும்.இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என்று புலம்புவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.  அது அவரவர் விருப்பம். ஆனால்,  இரவு ஒரு மணி என்பது உடலியல் கடிகாரத்தின்படி என்ன? அதில் நாம் என்ன செய்யலாம் என்பதைத் தொட்டுக்காட்டவே இந்தப் பகுதி.

ராமாயணத்தின் உப கதைகளில் ஒன்று, #நித்ராதேவி எனும் தூக்கத்தின் தெய்வம். லட்சுமணனின் வேண்டுகோளுக்கிணங்க  பதினான்கு வருட தூக்கத்தை அவனுடைய மனைவி ஊர்மிளைக்குக் கொடுத்து இரவும் பகலும் தூங்கச் செய்கிறாள். லட்சுமணன் விழித்திருந்து காவல் காக்கிறான்.  அதாவது இதிகாச நாயகர்களாகவே இருந்தாலும் அல்லது தெய்வமாகவே இருந்தாலும் தூக்கம் என்பது இயற்கையின் இயங்கு சக்திகளில் முக்கியமானது.

அப்படியிருக்கையில் பெரும் மிருகங்களைவிட பலம் குன்றிய மனிதனுக்கு உறக்கம் என்பதன் தேவையை உணர்ந்துகொள்ளலாம்.நமது #தூக்கம் என்பது  படுக்கையில் படுத்தல், அசைவுகளை நிறுத்துதல், கனவு நிலை, இறுதியாக  ஆழ்ந்த தூக்கம் என நான்கு பகுதிகளாக நிகழ்கிறது. இதில் ஆழ்ந்த தூக்கம் என்பது மட்டுமே நாம் அடுத்த நாள் செயல்படுவதற்கான உடல் மற்றும் மன ஆற்றலைத் தரவல்லது. எனினும் நம்மில் எண்பது சதவிகிதம் பேர், முதல் மூன்று நிலைகளில் தடுமாறிக்கொண்டே இருப்பவர்கள்தான். ஆகவே, நமது  தூக்கத்தை பற்றிய அறிவும், நம்முடைய நிலையையும் அறிந்து வயதுக்குத் தகுந்த உறக்கம் நடைபெறுகிறதா எனக் கவனித்து அதைச் சரி செய்வதுஅவசியம். ஏனெனில், அனைத்து மன அழுத்தம் மற்றும் உளவியல் சிக்கல்களுக்கு அடிப்படை தூக்கத்தில்தான் துவங்குகிறது. ஆகவே, அறிவியல் தூக்கம் சார்ந்த மூன்று வித நோய்களை அறிவுறுத்துகிறது.

முதல் வகை:- நாம் அனைவரும் அறிந்த #இன்சோம்னியா எனும் தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கம். இது நாம் அதீத பயத்தின் போது நம் மூளை எப்படியான எதிர்வினையாற்றுமோ, அதே  உயரழுத்ததுடன் செயல்படுகிறது. பெரும்பாலும் இது மனஅழுத்தம், பதற்றம் போன்ற நிலைகளிலும் நிகழ்வதுதான்.  இந்த வகை நோயில் உள்ள சவாலே, ஒருவருக்குத் தான், பதற்றம் மனஅழுத்தத்தில் இருக்கிறோம் என்பதே தெரியாது. நீண்ட நாட்களுக்கு பின்னர்தான் அவர் மன நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது கண்டறியப்படும்.

இரண்டாவது வகை:- #நார்கோலெப்ஸி எனப்படும் அதீத தூக்கம், சிலர் நன்றாகப் பன்னிரண்டு மணி நேரம் தூங்கியதாகச் சொல்வார்கள். அது நல்ல உறக்கம் இல்லை என்பதே உண்மை. இதுவும் நிச்சயமாக   சைக்கோ சோமட்டிக் எனப்படும் மனதால் உடலில் உருவாகும் நோய் வகைதான். மூளையில் சுரக்கும் ஓரெக்சின் எனும் வேதிப்பொருள், நம்முடைய உடலுக்குத் தவறுதலாகச் செய்தியை அனுப்பி தொடர்ந்து தூக்கநிலையில் வைத்துக்கொள்வதால் இது சிலருக்கு நிகழலாம்.

மூன்றாவது வகை:- #டிஸ்ஸோம்னியா எனப்படும் தூக்ககோளாறு இதில் தூக்கத்தில் அலறுதல், பேசுதல் எழுந்து நடத்தல் எனப் பல்வேறு குறைபாடுகள் கொண்ட தூக்கம் இது. நம்மில் தமோ குணம் மிகும் பொழுது தூக்கமும் தூக்கம் சார்ந்த பிரச்சனைகளும் வருவதாகவும், தமோ குணத்தை நிகர் செய்வதற்கும், தூக்கத்தின் தரத்தைச் சீரமைப்பதற்கும் யோக மரபு பிரத்யேகமான பயிற்சிகளை வடிவமைத்து வைத்துள்ளது. உதாரணமாக நீண்ட சுவாசத்துடன் கூடிய பயிற்சிகள், படுத்த நிலையில் செய்ய வேண்டிய பயிற்சிகள், தியானப் பயிற்சிகள் என ஒருவர் பத்து முதல் பதினைந்து பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு இவ்வகை நோயிலிருந்து முற்றிலும் குணமாகலாம்.

தூக்கத்தை பற்றி ஆயுர்வேத முதன்மை நூலான சரக சம்ஹிதையில், ‘‘மகிழ்ச்சி, போஷாக்கு, திடகாத்திரம், வீரியம், உயிர்ப்புடன் இயங்குதல் இவை அனைத்தையும் ஒரு நல்ல தூக்கமே வழங்குகிறது. அதேபோல துயரம், ஊட்டச்சத்துக் குறைபாடு, பலவீனம், மலட்டுத்தன்மை, அறியாமை மற்றும் இறப்பு இவை அனைத்தும் தூக்கமின்மையால் ஏற்படுகிறது. தரமான தூக்கமே ஆனந்தமான வாழ்வைத் தரமுடியும்' என்கிறார் #சரகர்.

ஆயுர்வேதமும், நவீன மருத்துவமும் கிட்டத்தட்ட நம்முடைய உறக்கத்தை ஒரே மாதிரிதான் அணுகுகிறார்கள். எனினும் நமக்கு மேலே சொல்லப்பட்ட நான்கு நிலை தூக்கம் என்பது படிப்படியாக நிகழ்கிறதா? மற்றும் மூன்று விதமான தூக்கம் சார்ந்த பிரச்சனைகளில் நம் தனிப்பட்ட அனுபவம் என்ன என்பதை ஒருவர் தொடர்ந்து ஒரு மாத காலம் அவதானித்துத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த மூன்றில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால்கூட உடனடியாக மருத்துவரை அணுகலாம். மிக குறுகிய காலத்துக்கு மருத்துவம் எடுத்துக்கொண்டே, வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்களைச் செய்யலாம், அதில் முக்கியமானது சரியான பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்தல்.  அதாவது உங்கள் உடலுக்குத் தேவையான ஆசனங்கள், உங்கள் உடலியங்கியல் முழுவதற்குமான சரியான மூச்சுப் பயிற்சி முறைகள், பிராணாயாமங்கள், தூக்கமும் மனமும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதால், பிரத்யாஹார மற்றும் தாரணைப் பயிற்சிகளை மரபார்ந்த ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டு செய்துவருவதன் மூலம்  இரண்டு பலன்களை அடையலாம். ஒன்று இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த பிணியிலிருந்து விடுதலை. அடுத்ததாக, மீண்டும் இதுபோன்ற நோய்க்கூறுகள்வாழ்வில் வராதவண்ணம் தற்காத்துக் கொள்ளுதல்.

உதாரணமாக #பார்க்கின்ஸன் போன்ற நோய்கள் ஒருவருடைய நரம்பு மண்டலத்தை தாக்கி சிறிது சிறிதாக உடலுறுப்புகளை செயலிழக்க வைப்பவை. மேலே, சொல்லப்பட்ட மூன்று வகை தூக்கம் சார்ந்த பிரச்சனைகளோடு நேரடி தொடர்புள்ள நோய். அதை மரபார்ந்த யோக பயிற்சிகளான , பவன் முக்தாசனம், நேத்தி, ஸ்வான பிராணாயாமம், போன்ற யோகப்பயிற்சிகளின் மூலம் குணப்படுத்த முடிந்திருக்கிறது.

எனினும் இதிலுள்ள சவால் என்பது பார்க்கின்ஸன் உள்ள நோயாளிகள் அனைவரையும் யோகாவின் மூலம் மட்டுமே குணப்படுத்திவிட முடியும். என மேம்போக்காகவும், எந்த அடிப்படை அறிவியலும் இல்லாமல் ஒருவரிடம் கற்றுக்கொண்டால் அது மேலும் சிக்கலையே உருவாக்கும். ஆகவே, யோக முறைகளின் எல்லைகளையும் அதன் சாதக பாதகங்கள் தெரிந்த ஒருவரிடம் அல்லது ஒரு ஆராய்ச்சி சார்ந்த யோக கல்வி நிலையத்தில் இதற்கான தீர்வுகளைத் தேடலாம்.

மகராசனம்



Topics tagged under தூக்கம் on ஈகரை தமிழ் களஞ்சியம் Makara10

இந்தப் பகுதியில் நாம் ‘மகராசனம்’ எனும் மரபார்ந்த பயிற்சியைப் பற்றி தெரிந்துகொள்வோம். குப்புற படுத்த நிலையில், இரு உள்ளங்கைகளாலும் கன்னம் மற்றும் தாடைப் பகுதியை ஏந்தியவாறு, கண்களை மூடி படுத்துக்கொள்ளவும். மூக்கின் நுனியை கவனித்தபடி பத்து அல்லது அதிகபட்சம் இருபது மூச்சுகள் வரை எண்ணி முடித்து திரும்பிப் படுத்து ஓய்வெடுக்கவும்.

நீண்ட நாள் #முதுகுவலி மற்றும் தண்டுவட பிரச்சனை உள்ளவர்களுக்கும், ஆஸ்துமா பிரச்சனைக்கும் ஒரு சிறந்த சிகிச்சையாக அமையும்.



#மகராசனம் #ஆசனம்
நன்றி குங்குமம் டாக்டர்
யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

Back to top