புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிந்து நாளிதழ் Poll_c10ஹிந்து நாளிதழ் Poll_m10ஹிந்து நாளிதழ் Poll_c10 
30 Posts - 60%
heezulia
ஹிந்து நாளிதழ் Poll_c10ஹிந்து நாளிதழ் Poll_m10ஹிந்து நாளிதழ் Poll_c10 
19 Posts - 38%
mohamed nizamudeen
ஹிந்து நாளிதழ் Poll_c10ஹிந்து நாளிதழ் Poll_m10ஹிந்து நாளிதழ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிந்து நாளிதழ் Poll_c10ஹிந்து நாளிதழ் Poll_m10ஹிந்து நாளிதழ் Poll_c10 
72 Posts - 62%
heezulia
ஹிந்து நாளிதழ் Poll_c10ஹிந்து நாளிதழ் Poll_m10ஹிந்து நாளிதழ் Poll_c10 
40 Posts - 34%
mohamed nizamudeen
ஹிந்து நாளிதழ் Poll_c10ஹிந்து நாளிதழ் Poll_m10ஹிந்து நாளிதழ் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஹிந்து நாளிதழ் Poll_c10ஹிந்து நாளிதழ் Poll_m10ஹிந்து நாளிதழ் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிந்து நாளிதழ்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 1:42 pm

இது சற்று பழய பதிவு தான், ஆனால் இன்று பேசப்படும் செய்திகளுக்கு சரியான ஒன்று 




ஹிந்து நாளிதழ் W9rl
தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள உணர்வுகளை ஹிந்து ஆசிரியர் என்.ராமால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான அஜீரண கோளாறு காரணமாக கருத்துச் சுதந்திரம் குறித்து எல்லாம் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். கருத்துச் சுதந்திரம் குறித்து யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லையா ? செய்திகளை கூட இருட்டடிப்பு செய்து வெளியிடும் ஹிந்து நாளிதழ் எல்லாம் கருத்துச்சுதந்திரம் குறித்து பேசுவது தான் உச்சகட்ட காமெடி.

இன்றைக்கு பேச்சுரிமை குறித்து பேசும் ஹிந்து, ஈழத்திற்கு ஆதரவாக குரலெழுப்புவதும் பேச்சுரிமை தான் என்பதையும், கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரலெழுப்ப முயன்ற வைகோ போன்ற தலைவர்களின் கைதினை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்டதையும் சுட்டி காட்ட வேண்டிய தேவையுள்ளது. என்.ராமின் பின்புலம் குறித்து தெரியதவர்களுக்கு ஒரு நீண்ட விளக்கம் கொடுப்பது அவசியம் என்று தோன்றினாலும், நேரமின்மை காரணமாக ஒரு செய்தியை மட்டும் சுட்டிக்காட்டி விட்டு செல்லலாம் என நினைக்கிறேன். ஹிந்து ராம் சிறீலங்கா அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்படாத தூதுவராக தமிழகத்திலும், இந்தியாவிலும் செயலாற்றிக் கொண்டிருந்தார்/கொண்டிருக்கிறார். சிறீலங்கா அரசாங்கத்திற்கு அவர் விசுவாசமாக பணியாற்றியதன் அடையாளமாக அவருக்கு அவருடைய "குடும்ப நண்பர்" சந்திரிகா குமாரதுங்கா "ஸ்ரீலங்கா ரத்னா" என்ற சிறீலங்காவின் உயரிய விருதினை அளித்து கொளரவப்படுத்தினார். இந்த விருதினைப் பெற்ற ஒரே இந்தியர் என்ற தனிப்பெரும் பெருமையும் என்.ராமிற்கு உண்டு.

இது குறித்து செய்தியினை ஹிந்து நாளிதழிலேயே சென்று வாசிக்கலாம்.

http://www.hinduonnet.com/2005/11/15/stories/2005111517191400.htm

அந்தச் செய்தியின் ஒரு சாரத்தினை இங்கே அளிக்கிறேன்.


The "Sri Lanka Ratna" is conferred for "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka in particular and\or humanity in general." Mr. Ram is the first Indian recipient of the honour, which is conferred on a restrictive basis.

அதாவது சிறிலங்காவிற்கு அவர் அளித்த "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka" என்ற காரணத்திற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. இந்த "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka" என்பதை அவர் எப்படி சாதித்தார் ?

130 வருட "பாரம்பரியம்" மிக்க ஹிந்து நாளிதழை சிறீலங்கா அரசாங்கத்தின் கொள்கைப் பரப்புச் சாதனமாக மாற்றியதன் மூலம் சாதித்தார். செய்திகளை தமிழகத்தில் திரித்து வெளியிட்டார். பத்திரிக்கை ஆசிரியர் என்ற முகமூடியை அணிந்து கொண்டு அவர் செய்த அரசியல் புரோக்கர் வேலைகளை யாருமே அதிகம் அம்பலப்படுத்தாமல் போனதும், ஹிந்துவின் "பாரம்பரிய பேனரும்" அவருக்கு வசதியாக இருந்தது.

நன்றி - பிளாக்.தமிழ்சசி.காம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 1:43 pm

ஈழப் பிரச்சனையில் ஹிந்துவின் பிரச்சார போக்கில் தற்பொழுது ஒரு மாற்றம் தெரிவதை ஹிந்துவை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியும். ராஜீவ் காந்தி படுகொலை என்ற வாதத்தை தொடர்ந்து ஈழப் பிரச்சனையில் ஹிந்து வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் இன்றைக்கு தமிழக காங்கிரஸ் கூட அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அரசியல் நிர்பந்தங்களுக்காக ஈழ மக்களுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுத்துள்ளது ஹிந்துவிற்கு தன் நிலைப்பாட்டினை மாற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் இவ்வாறான ஒரு போக்கினை எடுக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை. தமிழ்ச்செல்வன் மரணத்தை சார்ந்த சூழ்நிலையின் பொழுது, தமிழ்ச்செல்வனை கொன்றது பிரபாகரன் என கூறிய அறிவுஞீவி "தமிழர்கள்" தான் காங்கிரஸ் கதர் வேட்டிகள். டெல்லியின் எடுபிடிகளான காங்கிரஸ் கதர்வேட்டிகள் மீது எனக்கு பெரிய நம்பிக்கையோ, மரியாதையோ இல்லை. ஆனால் தங்களின் அரசியல் தேவைக்காக தமிழக காங்கிரஸ், ஈழப்பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாட்டினையே சார்ந்துள்ள சூழ்நிலையில்,  இந்தியன் எக்ஸ்பிரஸ்  விகடன் உள்ளிட்ட கருத்துகணிப்புகளில் ராஜீவ் காந்தியின் படுகொலையை கடந்து ஈழப் பிரச்சனையை தமிழக மக்கள் அணுகியுள்ள சூழ்நிலையில் ராஜீவ் படுகொலை என்ற வாதம் வலுவிழக்கிறது.

தமிழ் ஈழத்தை எதிர்க்க, ராஜீவ் படுகொலை என்ற ஆயுதத்தை கடந்த காலங்களில் வெற்றிகரமாக பிரயோகித்து வந்த ஹிந்து, அது கூர்மழுங்கியதும் தற்பொழுது புதிய ஆயுதத்தை எடுத்துள்ளது.

அது தான் காஷ்மீர் பயங்கரவாதம்.


காஷ்மீர் பிரச்சனையையும், ஈழப் பிரச்சனையும் பிணைத்து விடுவதன் மூலம் "இந்திய தேசிய உணர்வை" சீண்டி விட்டு ஈழத்திற்கு எதிரான சூழ்நிலையை ஏற்படுத்த முனைந்து வருகிறது. ஈழப் பிரச்சனையை காஷ்மீருடன் ஒப்பிடுவதன் மூலம் அண்டை நாட்டில் ஒரு புதிய நாடு உருவானால், நம் நாட்டிலும் புதிய நாடு உருவாகும் என்ற அச்சத்தை விதைப்பதே ஹிந்துவின் நோக்கம். இதன் மூலம் இந்தியத் தமிழர்களை, இந்தியர்களாக மட்டும் வைத்திருக்க முனைவதும், ஈழத்தமிழர்களுக்கு எதிராக தமிழகத் தமிழர்களை திருப்புவதும் ஹிந்துவின் நோக்கமாக உள்ளது.

ஹிந்துவில் மாலினி பார்த்தசாரதி என்பவர் பின்வருமாறு எழுதுகிறார் 

Tamil Nadu’s politicians clearly have different standards for India and for Sri Lanka. It would appear that they accept that battling terrorism in India and saving Kashmir from Islamist jihadis are important national tasks but not so in Sri Lanka which has been menaced for more than two decades by the LTTE. ....When Pakistani generals and Islamist militants characterise the separatist uprising in Kashmir as a "freedom struggle," the collective Indian national consciousness is understandably outraged. Politicians in India are rarely exercised over concerns that the human rights of innocent citizens are often trampled upon in police action against terrorists or their perceived accomplices. There is indeed a broad-based political consensus behind the Indian state when it takes strong steps to root out terrorism.

என்னைப் போன்றவர்கள் காஷ்மீர் மக்களின் விடுதலையையும் ஆதரிக்கவே செய்கிறோம் என்பதால் இந்த வாதம் எந்த மாற்றத்தையும் எங்களுடைய நிலைப்பாட்டில் ஏற்படுத்தப்போவதில்லை.

ஆனால் ஆனால் மைய அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் காஷ்மீர் குறித்த பெரிய புரிதல் இல்லாத சூழ்நிலையை தங்களுடைய சிங்கள அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைக்கு ஹிந்து பயன்படுத்திக் கொள்கிறது. ஈழப் பிரச்சனையை எப்படியெல்லாம் எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் ஹிந்து ராம் இருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஸ்ரீலங்கா ரத்னா பட்டத்தை கட்டிக் காக்க வேண்டும் அல்லவா ?

இந்திய தேசிய உணர்வுகளை தூண்டி விட்டு, சிறீலங்காவை கட்டிகாக்க ஹிந்து துடிப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிறீலங்காவை அப்படி கட்டிக்காக வேண்டிய தேவை அவருக்கு ஏன் உள்ளது என்றும் தமிழர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அப்பொழுது தான் ஹிந்துவின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொள்ள முடியும்.

நன்றி - பிளாக்.தமிழ்சசி.காம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 1:43 pm

சிறீலங்காவை கட்டிகாக்க துடிக்கும் ஹிந்து, தமிழர்கள் குறித்த செய்திகள் எதையேனும் வெளியிடுகிறதா ?

சிறீலங்கா அரசாங்கத்தின் போர் நடவடிக்கை ஒரு பெரிய மனித அவலத்தை ஈழத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கிளிநொச்சியை விட்டு தமிழ் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள விமானப்படை விமானம் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. ஒரு பாரம்பரிய மிக்க பத்திரிக்கை நியாயமாக இந்தச் செய்திகளை வெளியிட வேண்டாமா ? கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் பத்திரிக்கை, பத்திரிக்கை தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டாமா ? ஆனால் ஹிந்து அதனை செய்யவில்லை.

பிபிசி போன்ற செய்தி தளங்களில் 
தமிழர்கள் தினமும் கைது செய்யப்படுவது (Sri Lanka Tamils 'being arrested')
கிளிநொச்சியில் மக்கள் போரினால்பாதிக்கப்பட்டுள்ளது போன்றசெய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ளன ('The intolerable noise of ஷேல்ல்ஸ்')

இப்படியான செய்திகளை வெளியிட்டால், தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலை இன்னும் அதிகரிக்கும். எனவே ஹிந்து அதனை செய்யாது. மாறாக இன்றைக்கு ஹிந்து ஒரு முக்கியமான செய்தியினை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

I am committed to political solution and ending Tamil civilian hardships’ 

N. Ram Chennai: 

“I am firmly committed to a just and enduring political solution” to the Tamil question in Sri Lanka and “am clear that there are no military solutions to political questions,” President Mahinda Rajapaksa told me in a telephonic conversation from Colombo on Thursday morning.

மகிந்த ராஜபக்ஷ என்.ராமிடம் மேற்கண்டவாறு தொலைபேசியில் கூறியிருக்கிறாராம். உடனே ஹிந்து அதனை முதல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இத்தனை நாளாக ஹிந்து ஏன் கேட்கவில்லை ? மகிந்த ராஜபக்ஷ ஏன் கூற வில்லை ?

இத்தனை நாளாக தமிழர்கள் தமிழகத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு விழித்துக் கொண்டார்கள். அதனால் தமிழகத்தில் எழுந்துள்ள சூட்டை தணிக்க ஹிந்து தன்னலான உதவியை செய்கிறது. வாங்கிய "ஸ்ரீலங்கா ரத்னா" என்ற ரொட்டி துண்டுக்கு உழைக்க வேண்டாமா ? ஹிந்து ராம் என்ற விசுவாசமான "பிறவி" அந்த ரொட்டி துண்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறது.

********

போரினால் மிகப் பெரிய மனித அவலம் நேரும் இந்த தருணத்திலும் மனிதநேயம் அற்ற வகையில் செயல்பட்டு வரும் ஹிந்து நாளிதழை கண்டிப்பதோ, எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதோ தேவையில்லாதது. தமிழர்களாக தங்களை நினைக்கும் அனைவரும் ஹிந்து நாளிதழை "காசு கொடுத்து" வாங்க கூடாது. தமிழர்களின் காசில் கொழுத்து தமிழர்களுக்கு எதிராகவே செயல்படும் ஹிந்துவை முற்றிலும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

அப்படி செய்தால் ஹிந்து அலுவலகம் தானாகவே சென்னை அண்ணாசாலையில் இருந்து கொழும்பு LakeHouse க்கு மாறிவிடும். ஹிந்து இருக்க வேண்டிய இடமும் கொழும்பு LakeHouse தான்.

எனவே ஹிந்து நாளிதழை புறக்கணிப்போம்...

நன்றி - பிளாக்.தமிழ்சசி.காம்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 1:46 pm

சரியான நேரத்தில் பகிர்ந்து இன்னொரு திரியில் ஓடிக்கொண்டிருந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறீர்கள்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 16, 2013 1:51 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:சரியான நேரத்தில் பகிர்ந்து இன்னொரு திரியில் ஓடிக்கொண்டிருந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறீர்கள்
பதிவும் , அதற்கான பின்னுட்டமும் அருமை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 16, 2013 2:12 pm

ஹிந்து நாளிதழ் 3838410834 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 16, 2013 10:36 pm

இன்றைய தேவையான பதிவுக்கு நன்றி




ஹிந்து நாளிதழ் Mஹிந்து நாளிதழ் Uஹிந்து நாளிதழ் Tஹிந்து நாளிதழ் Hஹிந்து நாளிதழ் Uஹிந்து நாளிதழ் Mஹிந்து நாளிதழ் Oஹிந்து நாளிதழ் Hஹிந்து நாளிதழ் Aஹிந்து நாளிதழ் Mஹிந்து நாளிதழ் Eஹிந்து நாளிதழ் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக