புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
19 Posts - 50%
heezulia
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
1 Post - 3%
Guna.D
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
17 Posts - 4%
prajai
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
4 Posts - 1%
jairam
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நாடு தோறும் தீப ஒளி! Poll_c10நாடு தோறும் தீப ஒளி! Poll_m10நாடு தோறும் தீப ஒளி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு தோறும் தீப ஒளி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 1:59 am

வடநாட்டில் "தீபாவளி' என்ற பெயருக்கேற்ப ஒவ்வொரு வீட்டிலும் பால்கனி, மாடிப்படி என்று எல்லா இடத்திலும் தீபம் ஏற்றுகின்றனர். தமிழ்நாட்டில் கார்த்திகையின்போது இந்தத் தீப வரிசைகள் இல்லந்தோறும் பிரகாசிக்கின்றன. இந்தியா தவிர, வேறு சில நாடுகளிலும் தீப ஒளிக்கொண்டாட்டம் நடைபெறுகிறது.

டிசம்பர் 13ம் தேதி ஸ்வீடனுக்குப் போனால் லூயிஸ் என்ற பெண்ணின் நினைவாக "லூசியா' என்ற திருநாள் மிகவும் உற்சாகத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஸ்வீடனில் இரவின் நேர்ம மிக அதிகமாக இருக்கும். பகலில் சூரிய வெளிச்சம் சில மணி நேரங்களுக்கே இருக்கும். அப்போது வெள்ளை உடையில் ஒரு பெண் வருவாள். அவள் தலையில் ஒரு கிரீடம் இருக்கும். அந்தக் கிரீடத்தின்மேல் மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருக்கும். அவள் கையில் சிவப்பு ரோஜா மலர்வளையம் இருக்கும். அவளைச் சுற்றி பல சிறுமிகள் வெண்ணிற ஆடையில் வர அவர்களது கையிலும் மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்கும். பின் ஆண்களும் இதேபோல் கையில் ஒளியுடன் தொடர்வார்கள். தலையில் கூர்மையான தொப்பி அவர்களது அழகைக் கூட்டும். இவர்கள் பல பள்ளிகளுக்கும் மருத்துவமனைக்கும் போவார்கள். இதேபோல் ஒவ்வொரு குடும்பத்திலும் முதலாவதாகப் பிறந்த பெண் இதில் பங்கு பெறுவாள். குங்குமப்பூவால் ஆன பன், பிஸ்கெட், காபி முதலியவற்றை எல்லாருக்கும் அளிப்பார்கள். அந்தப் பன்னின் பெயரும் "லூசி கேட்டர்'.

இதன் கதை என்ன?

"லூசி' என்று ஒரு சிசிலியன் பெண் இருந்தாள். மிகவும் கருணை உள்ளம் கொண்டவள். அவளுக்குத் திருமண வயது வந்தபோது, தன்னை கடவுளிடமே ஐக்கியப்படுத்திக் கொள்ள விரும்பினாள். ஆனால், அவளை விரும்பிய ஓர் இளைஞன் தன் காதலை பலமுறை சொல்லியும் அவள் பிடிகொடுத்து பேசவில்லை. அவனிடம் தன் மறுப்பைத் திட்டவட்டமாக எடுத்துச்சொல்ல, அவன் கோபம் அடைந்தான். பின் அவள் கொல்லப்பட்டாள். இவளது நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஊர் முழுவதும் மெழுகுவர்த்தி ஒளி, வெள்ளை உடை, சிவப்புப் பூக்கள் என்ற காட்சி நம்மை மெய்மறக்கச் செய்கின்றது.

-----
அடுத்ததாக ஒளியைக் காணப்போகிறோம் தாய்லாந்தில் இருக்கும் பேங்காக்கிற்கு!

இங்கு நடக்கும் தீப ஒளித் திருநாளை "லாய்க்ரதோங்' என கூறுகின்றனர். தாய்மொழியில் லாய் என்றால் மிதப்பது, "க்ரதோங்' என்றால் ஒரு மிதக்கும் கட்டை எனலாம். இதை ஆங்கிலத்தில் ராப்ட் என்பார்கள். நவம்பர் மாதம் முடிவில் வரும் பவுர்ணமியில் தாயி மக்கள் நதிக்கரை அல்லது வாய்க்கால் போன்ற இடத்துக்கு வந்து நதியைப் பூஜித்து அந்த நதி அவர்களது வாழ்க்கையில் உதவி செய்து வருவதற்கு நன்றி தெரிவித்து வணங்குகிறற்ரகள். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் மிதப்பதைப் பார்க்க அழகாக இருக்கிறது.
---
அடுத்ததாக நாம் பார்க்கப்போவது "ஹனுக்கா' என்ற திருநாள். ஹனுக்கா என்றால் ஹீப்ருவில் முழுமனத்துடன் செய்வது (டெடிகேஷன்) கி.மு.165-ல் எகிப்து சீரியா பாலஸ்தீனத்துக்கும் நடுவில் கடும் போர் மூண்டது. இதில் யூதர்கள் ஜெயித்துவிட்டனர். பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அதை அப்படியே எரியவிட எண்ணினர். ஆனால் அதில் இருந்த எண்ணெய் ஒரு நாளுக்குத் தேவையானதாகத்தான் இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவனை எண்ணெய் வாங்க அனுப்பித்து வைத்தனர். ஆனால் என்ன ஆச்சரியம்! அந்த விளக்கு மேலும் எட்டு நாட்களுக்குத் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. எண்ணெய் வாங்கப் போனவன் வரும்வரை பிரகாசமாக எரிந்தது ஒரு அற்புதம்தான். இந்த விளக்கு ஒன்பது மெழுகுவர்த்திகளை ஏந்தும் வசதிகளைக் கொண்டது. நடுவில் இருப்பது சிறிய உயரமாக இருக்கும்.

"ஹனுக்கா' தினத்தன்று ஒருவர் இடதுபக்கம் இருக்கும் முதல் மெழுகுவர்த்தியை ஏற்றுவார். பின் இரண்டாவது நாள் இரண்டாவது ஏற்ற முதலில் ஏற்றியதும் குறையாமல் எரிந்துகொண்டிருக்கும். இதேபோல் மீதி எட்டு மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டு எட்டு நாட்கள் எல்லாமே அணையாமல் எரிந்துகொண்டிருக்கும். இந்த அதிசயமான ஒன்றுதான் "ஹனுக்கா' தீபத்திருநாள். இது டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும்.
---
அடுத்ததாக நாம் நுழைவது ஹாலந்து நாடு. நவம்பர் பதினொன்றாம் தேதி அன்று, குழந்தைகள் பல இனிய பாடல்களைப் பாடியவண்ணம் தெருக்களில் பவனி வருகின்றனர். அவர்களது கையில் லாந்தர் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது. அதன் பிரகாசம் இருளைக் கிழித்தபடி அந்த இடத்தையே பகலாக்குகிறது. அவர்கள் யாரைக் குறித்துப் பாடுகிறார்கள்? யாருக்காக இந்த ஒளியை ஏந்தி மரியாதை செலுத்துகிறார்கள்?

அவர் பெயர் புனித மர்டின் மிகவும் கருணை உள்ளம் கொண்ட அவர், ரோம் நகரில் ஒரு சிப்பாய் ஆக இருந்தவர். தன்னலமில்லா சேவை செய்தவர். அன்பைத் தவிர வேறு ஒன்றும் அவருக்குத் தெரியாது. ஒருநாள் கடுங்குளிர்காலத்தில் அவர் ஒரு சத்சங்கம் போய்விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார். திடீரென்று புயல்காற்று வீசியதுடன் பனிக்கட்டி மழையும் பெய்யத் தொடங்கியது. அவர் ஒரு நீள் அங்கி போட்டுக் கொண்டிருந்தால் கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. அப்போது யாரோ முனகும் சத்தம் கேட்டது. இவர் அந்தத் திசையில் நடக்க, ஏழை ஒருவன் மழையில் நனைந்து தவித்துக் கொண்டிருந்தான். அவன் உடலெல்லாம் நடுங்கியது. மார்டின், தன் நீள அங்கியிலிருந்து பாதியைக் கிழித்து அவனுக்கு மாட்டிவிட்டார். பின் அவனை அணைத்தபடி குளிரிலிருந்து காப்பாற்றினார்.

அன்று இரவு அவரது கனவில் ஏசு வந்தார். ஏசுபிரானின் மேனியில் மார்டினின் பாதி அங்கி இடம் பெற்றிருந்தது. அதன்பின் அவருக்கு தேவனின் குரலும் கேட்டது. ""இந்தச் சாதாரணமான சிப்பாய் பாதிரி ஆகாமலே என்னை நெருங்கி எனக்கு உடையும் கொடுத்துவிட்டார். இவர்தான் புனித மார்ட்டின்''.

-விசாலம் ராமன், சென்னை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக