புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
62 Posts - 57%
heezulia
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
104 Posts - 59%
heezulia
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_m10தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களை விரட்டும் சிங்கப்பூர்... கண்டுகொள்ளாத இந்தியா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 26, 2013 4:42 pm



தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரிக்கட்டும் என்பார் களே... அதுபோல இருக்கிறது சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற தமிழர்கள் நிலைமை!

கடந்த 8-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சிங்கப்பூர் 'லிட்டில் இந்தியா’ எனப்படும் தேக்காவில் நடந்த விபத்தில் பலியானார். ஸ்பாட்டில் கூடிய தமிழர்கள் சிலர் பிரச்னை செய்ய... அது கலவரமாக உருவெடுத்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது, ரிமாண்ட் என அடுத்தடுத்த அதிரடிகளில் இறங்கியது சிங்கப்பூர் அரசு. அது இப்போது பிழைப்புத் தேடிப்போன தமிழர்கள் பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படித் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ஒருவரான புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரைச் சந்தித்தோம். ''கடந்த ஏழு வருசமா சிங்கப்பூர்ல எலெக்ட்ரிக்கல் வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். கடந்த 8-ம் தேதி எங்க ஊர்க்காரர் ஒருத்தர் சிங்கப்பூர்ல இருந்து ஊருக்குப் போறதால, அவருக்கான பொருட்கள் வாங்குறதுக்காக தேக்காவுக்குப் போயிருந்தேன். அப்பதான் அங்கே பிரச்னை நடந்திருக்கு. இது எனக்குத் தெரியாது. நானும் அவரும் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிட்டு இருக்கும்போது, அங்கே கலவரம் நடந்துகிட்டு இருக்குன்னு என் நண்பர்கள் எனக்கு போன் பண்ணாங்க. உடனே நாங்க, தேக்காவுல இருக்குற என்னோட ரூமுக்குப் போயிட்டோம். மறுநாள் வழக்கம்போல வேலைக்குப் போயிட்டேன்.

அடுத்த நாள் 10-ம் தேதி அதிகாலை மூணு மணிக்கு போலீஸ் வந்து என்னை எழுப்பி உங்ககிட்ட விசாரிக்கணும்னு சொன்னாங்க. நானும் அவங்களோட போலீஸ் ஸ்டேஷன் போனேன். அங்கே இருந்த தமிழ் பேசத் தெரிஞ்ச போலீஸ்காரர், 'நீ ஞாயிற்றுக்கிழமை தேக்காவுக்குப் போயிருந்தியா?’ன்னு கேட்டார். 'ஆமா... போயிருந்தேன்’னு சொன்னேன். உடனே, 'அப்ப நீயும் அந்தக் கலவரத்துல ஈடுபட்டிருப்பே’ன்னு சொன்னாங்க. 'எனக்கும் கலவரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் பொருள் வாங்க போன கடைகளில் எல்லாம் கேமரா இருக்கு. அதுல நாங்க எத்தனை மணிக்கு எங்கே இருந்தோம்னு பதிவாகியிருக்கும். அதை பார்த்துக்கங்க’ன்னு சொன்னேன். அதையெல்லாம் அவங்க காதுல வாங்காததோட, ஒட்டுமொத்த தமிழர்களையும் கேவலமா பேசினாங்க. அப்புறம் ஏதோ எழுதிட்டு என்னைத் திருப்பி அனுப்பிட்டாங்க.

திரும்பவும் நாலு நாள் கழிச்சு என்னை அழைச்சு கிட்டுப் போய் விசாரிச்சாங்க. நான் சொன்னதை அவங்க ஏத்துக்கலை. 'நீயும்தான் கலவரத்துல ஈடுபட்டிருக்கே’ன்னு சொல்லிட்டு, கடந்த 17-ம் தேதி ஜெயிலுக்குக் கொண்டுபோயிட்டாங்க. அங்க போனதும்தான், என்னை மாதிரி நிறைய தமிழர்களை இதே மாதிரி அங்கே கொண்டுவந்து வெச்சிருந்தது தெரிஞ்சது.

ஜெயில்ல இருந்த தமிழ் போலீஸ்காரர் ஒருத்தர், 'உங்க யாருக்கும் எந்த தண்டனையும் கிடையாது. ஆனால், எல்லாரையும் ஊருக்கு அனுப்பப் போறாங்க. யாரும் பயப்பட வேணாம்’னு சொன்னாரு. 'நாங்க யாருமே எந்தத் தப்புமே செய்யல. அப்புறம் எதுக்கு ஊருக்கு அனுப்புறீங்க?’ன்னு கேட்டோம். 'அதெல்லாம் எனக்குத் தெரியாது’ன்னாரு. அப்புறம் அந்த நாட்டு நீதிபதி ஜெயிலுக்கு வந்தார். அவரும், 'நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள்’ என்று சொல்லிட்டு போயிட்டார். என்ன ஏதுன்னு விசாரிக்கல. அப்புறம் நம்ம நாட்டு தூதரக அதிகாரி வந்தார். அவர் எங்களோட முகவரிகளை மட்டும் விசாரிச்சுட்டுப் போயிட்டார். என்ன ஏதுன்னுகூட கேக்கல. தப்பே செய்யாம இவ்வளவு பேர் ஜெயிலுக்குள்ள இருக்கோம். இது தொடர்பா நம்ம நாட்டு அரசிடம் பேசுறேன்னோ, ஆறுதலான வார்த்தையோ அவர்கிட்ட இருந்து வரல.

19-ம் தேதி என்னை விமானத்துல ஏத்தி அனுப்பிட்டாங்க. என்னோட சேர்த்து 53 பேரை அனுப்பப்போறதா சொல்லியிருக்காங்க. வறுமையில வாடியிருக்கும் நாங்க, சோறு கஞ்சி நிம்மதியா குடிக்கணும்னுதான் பொழப்பு தேடி வெளிநாடு போறோம். அங்கே போற நம்மளுக்கு நம்ம நாட்டு தூதரகம்தான் ஒரே சொந்தம். அவங்களும் கைவிட்டு, நம்ம நாட்டு அரசாங்கமும் கைவிட்டுருச்சுன்னா நாம யாருகிட்ட சொல்றது.

தப்பே பண்ணலைன்னாலும் ஊருக்குள்ள நான் ஏதோ தப்பு பண்ணிட்டு திரும்பிவந்த மாதிரி கேவலமா பாக்குறாங்க. வீட்டுலேயும் அப்படித்தான் நிலைமை இருக்கு. எங்களை நம்பி கடனெல்லாம் நிறைய வாங்கி வெச்சிருக்காங்க. அதையெல்லாம் எப்படி அடைக்கப் போறேன்னே தெரியல'' என்று கலங்கினார்.

தேக்கா கலவரம் தொடர்பாக மொத்தம் 35 பேர் கைது செய்யப் பட்டிருந்தனர். அவர்களில் ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுகள் சமீபத்தில் விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளன. முருகானந்தம் உள்ளிட்ட 53 நபர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட துணைத் தூதர் தேவயானிக்காக வரிந்துகட்டி களத்தில் இறங்கியிருக்கும் இந்திய அரசாங்கம், இந்த அப்பாவி தமிழர்களையும் கண்டுகொள்ளுமா?

- வீ.மாணிக்கவாசகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 26, 2013 4:48 pm

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட துணைத் தூதர் தேவயானிக்காக வரிந்துகட்டி களத்தில் இறங்கியிருக்கும் இந்திய அரசாங்கம், இந்த அப்பாவி தமிழர்களையும் கண்டுகொள்ளுமா? wrote:

அதான் தமிழர்கள் என்று சொல்லிவிட்டிங்க அப்புறம் அரசு எப்படி கண்டுகொள்ளும்
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக