புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
68 Posts - 49%
heezulia
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
54 Posts - 39%
T.N.Balasubramanian
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
3 Posts - 2%
Shivanya
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
1 Post - 1%
prajai
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
1 Post - 1%
Guna.D
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
15 Posts - 3%
prajai
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
9 Posts - 2%
Jenila
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
4 Posts - 1%
jairam
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_m10பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu Jan 09, 2014 12:47 pm


மனிதன், விலங்கு,
பறவை, ஊர்வன, மரம்,
தாவரம், செடி,
கொடி போன்ற
உயிரினங்கள் வாழவேண்டுமெனில் ஓர்
இருப்பிடம்
தேவைப்படுகின்றது.
இவை யாவுக்கும்
இருப்பிடம்
கொடுத்து நிற்பது அந்தரத்தில் நின்று சுழன்றுகொண்டிருக்கும்
ஒன்பது கோள்களில் ஒன்றான
பூமியாகும்.

பூமியில்
மட்டும்தான் உயிரினங்கள்
வாழமுடியும். மற்றைய
எட்டுக் கோள்களிலும் உயிரினம் வாழ முடியாது.
பூமியில் உள்ள நீர், காற்று,
வெப்பம்
ஆகியவை உயிரினங்களை வாழ
வைக்கின்றன. இதனால்தான்
பூமியும் உயிர் பெற்றுச் சிறப்புடன்
நிலைத்துள்ளது. எனினும்
சூரியன் இன்றேல் பூமியும்
இல்லை. ஏன் மற்றைய எட்டுக்
கிரகங்களும்
இயங்காது அழிந்துவிடும். எனவே சூரியன் பிறந்த
கதையையும் காண்போம்.
ஒரு கருநிலைக்
கோட்பாட்டின்படி (Theory) 460
கோடி ஆண்டுகளுக்குமுன்
ஒரு கிட்டிய நட்சத்திரம் விசையால்
அழிக்கப்பட்டு அந்த
வெடிப்பொலி அதிர்வு அலைகளைக்
கதிரவன் முகிற் படலமூலம்
வெளியேற்றி அதற்குக்
கோணமுடக்கான இயங்கு விசையைக்
கொடுத்தது.

இது முகிற்சுழற்சி, ஈர்ப்பு,
செறிவு ஆகியவற்றை விரைவுபடுத்தியது.
அதனால் செறி தொகுதிகள்
கெட்டியடைந்து மத்தியில்
வெப்பம் பெருகியது.
இவ்வெப்பம் வெளியேற முடியாது மேலும்
மையவெப்பம்
கூடிக்கொண்டது. ஈற்றில்
நீர்வாயு (Hydrogen) கீலியமாக
(Helium) அணுமாற்றம்
பெற்று ஒரு நட்சத்திரம் (T.Tauri) தீப்பிடித்து எரிந்து ஒரு சூரியன்
உருவாயிற்று. இச் சூரியன்
460 கோடி ஆண்டுகளாக
இற்றைவரை பிரகாசித்து எரிந்துகொண்டிருக்கின்றது.

கதிரவன் மண்டலம்
தொடக்கத்தில் சுழற்சியான
தூசி, பாறை, நீரகம், கீலியம்
போன்றவை நிறைந்திருந்தன.
கதிரவன் மண்டலத்தின்
பிறப்புத்தான் பூமி. இப்பூமியானது 457
கோடி ஆண்டுகளுக்குமுன்
தோன்றியதென்பர்.
அன்று பூமியும்
நெருப்புக் கோளமாகச்
சூரியனைப்போல் எரிந்துகொண்டிருந்தது.

நீண்ட காலத்தின்பின்
பூமியின்
மேற்பரப்பு குளிர்ச்சியடைந்தது.
ஆனால் பூமியின் மையப்
பகுதி இன்றும்
அனலாகவே இருக்கின்றது. பூமி குளிர, மேகங்களும்
குளிர்ந்து,
பெருமழை பெய்து, நீர்
குழிகளில்
பாய்ந்து தேங்கிக் கடல்கள்
தோன்றின. பூமியில் 453 கோடி ஆண்டளவில்
ஒரு நிலா தோன்றியது.

இனி பூமியில் ஏற்பட்ட
மாற்றங்களையும், அதில்
தோன்றிய
உயிரினங்களையும், மனிதன்
தோன்றிய முறைகளையும்,
அவன் எய்திய உயர்ச்சிகளையும்
காண்போம்


. • பூமியில் 400
கோடி ஆண்டளவில்
உயிரினங்கள்
தோன்றியிருக்கலாம்
என்று கருதப்படுகிறது

• 350
கோடி ஆண்டுகளுக்குமுன்
தாவர இலைகள் பச்சிலை
பெற்று உணவைத்
தயாரிக்கும் தாவர
ஒளி இயைபாக்கம் பெற்றன.

• 260 கோடி ஆண்டளவில்
நீரிலுள்ள உயிரணுச்
சவ்வுகள்
தரையிலும் தோன்றின.

• 230 கோடி ஆண்டளவில்
உயிரகம் செறிந்த
வளிமண்டலம்
தோன்றியது.

• 100
கோடி ஆண்டுகளுக்குமுன்
காளான்கள் தோன்றின.

• தாவரம் 70
கோடி ஆண்டுகளாக
வாழ்ந்து வருகின்றன.

• 53
கோடி ஆண்டுகளுக்குமுன்
கடல் மீன்கள்
முள்ளெலும்புடன்
தோன்றின.

• 45
கோடி ஆண்டுகளுக்குமுன்
ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்களின்
ஒரு வகைப் பிராணி
(Arthropods)
நீரிலிருந்து நிலத்தில்
வாழத் தொடங்கியது.

• 38
கோடி ஆண்டுகளுக்குமுன்
நாற்கால் (Tetrapods)
பிராணிகள்
மீனிலிருந்து தோன்றின.
இவை நீரிலிருந்து தலையை வெளியில்
நீட்டிச் சுவாசிக்கத்
தொடங்கின. இதே
காலப்பகுதியில்
முதலாவது முதுகெலும்பு பொருந்திய
தரை விலங்குகளும்
தோன்றின.

• 36
கோடி ஆண்டுகளின்முன்
தாவரங்கள் விதைகளைத் தம்
விருத்திக்காகத்
தந்துதவின.

• 31 கோடி ஆண்டுகளில்
பாலூட்டிகள், பறவைகள்,
ஊர்வன
தோன்றின.

• 23
கோடி ஆண்டுகளின்முன்
ஊர்ந்து செல்லும் மாபெரும்
விலங்குகள் (Dinosaurs)
தோன்றின.

• 15 கோடி ஆண்டுகளில்
பழமையானதும்
பறப்பனவற்றிற்கும்
ஊர்வனவற்றிற்கும்
இடைப்பட்ட ஓர் அதிசயப்
பறவை (Archaeopteryx) இனம்
தோன்றியது.

• 7 கோடி ஆண்டுக்
காலப்பகுதியில்
பாலூட்டிகள் பெரிதாக
வளர்ந்தன.

• 3 கோடி ஆண்டளவில் சில
பாலூட்டிகள் டொல்வின்
மீன்களாகக் கடலுக்குத்
திரும்பின.

• 20 இலட்சம் ஆண்டளவில்
முதல் மனிதன்
ஆபிரிக்காவில்
தோன்றினான்.

• எட்டு (08) இலட்சம்
ஆண்டுகளுக்குமுன்
நெருப்பின்
பிரயோகமும் அதைக்
கட்டுப்படுத்தும்
ஆற்றலையும் மனிதன் பெற்றுக்கொண்டான்.

• இரண்டு (02) இலட்சம்
ஆண்டளவில் உறுப்பியல்
சார்ந்த
அமைப்பியலான
புது நாகரிகப்
பண்பாடுடைய மனிதன் ஆபிரிக்காவில்
தோன்றினான்.

60 இலட்சம்
ஆண்டுகளுக்குமுன்
வாழ்ந்த ஒரு சிறிய ஆபிரிக்க
குரங்கின் இரு மரபினர்வழித்
தோன்றலின் ஒன்றான
வாலில்லாக் குரங்கு இனம் எழுந்து நிமிர்ந்து நின்று நடக்கக்கூடிய
ஆற்றலைப் பெற்றது. இதன்
மூளை வளர்ச்சியும்
மிகுதியாகப் பெருகியது.

20 இலட்சம் ஆண்டளவில் இந்த
வாலில்லாக்
குரங்கினத்தை மனித
இனமாக
வகைப்படுத்தப்பட்டது. மனித
இனம் இரு காலுள்ள பாலூட்டும் இனத்தின்
குரங்குக் குடும்பத்தைச்
சேர்ந்தது. மனித இனத்தின்
மிக நெருங்கிய உறவினர்
சிம்பன்சியாகும். (Chimpanzee).

பல்லினால் அரைக்கும்
முறையைச் சீராக்கி,
கோரைப் பல்லைக்
குறைத்து,
குரல்வளையையும் வளைந்த
நாவடி எலும்பையும் சரிவுபடுத்தப்பட்டமை மனிதன்
கதைப்பதற்கு ஏதுவாயமைந்தது.
சிம்பன்சிக்கும்
மனிதனுக்கும் உள்ள
பரிணாம வளர்ச்சி எலிக்கும்
சுண்டெலிக்கும் உள்ளதைவிடப்
பத்து மடங்கு கூடியதாக
அவதானிக்கப்பட்டது.
அணுமரபுவழிப்
பரிசோதனையில் 98.4 சத வீதம்
சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் இடையில்
ஒப்பானதாக இருந்தமையும்
காணப்பட்டது.

உறுப்பியல் சார்ந்த
அமைப்பியலான
புது நாகரிகப்
பண்பாடுடைய மனிதன்
சுமார் இரண்டு இலட்சம்
(2,00,000) ஆண்டளவில் ஆபிரிக்காவில்
தோன்றினான். இதை ஓர்
இலட்சத்து அறுபதினாயிரம்
(1,60,000)
ஆண்டுகளுக்கு மேலான
புதை படிவமூலம் கணக்கிட்டுள்ளனர்.

நின்டர்தல் (Neanderthals)
என்றொரு தனி இனம்
ஆன்மிகத் துறையில் ஊறிய
முதல் மனிதனாக
இருந்துள்ளமைக்கு ஆதாரங்கள்
கிடைத்துள்ளன. இவர்கள் இறந்த
பொழுது சடலங்களை அவர்கள்
உண்ட உணவுடனும்,
பாவித்த கருவிகளுடனும்
அடக்கம் செய்து தம் ஆன்மிக
உணர்வை வெளிக்கொணர்ந்தனர். இவர்களின் வழித்தோன்றல்
அன்றிலிருந்தே அருகிவிட்டது.

தற்கால மனித மூளையின்
நிறை 1,400 கிறாம் (1.4
கிலோ அல்லது 03 இறாத்தல்)
ஆகும். இதன் கன பரிமாணம்
1,400 கன. சென்ரி மீற்ரறாகும்.
மனித மூளையானது சிம்பன்சி,
கொறில்லா குரங்குகளின்
மூளையிலும் பார்க்க
இரு மடங்காகும். மனித
மூளையின் விரிவுk;
வளர்ச்சியும் அவன் உயர்வுக்கு முழுமுதற்
காரணமாம்.

மூளையின் பருமன்
கூடியபடியால் தலைகள்
பெரிதாக வளரமுன்
குழந்தைகள் விரைவில்
பிறக்கின்றனர். இதன்
காரணமாக எளிதில் கூடிய உருமாறும் தன்மையையும்
புதிதாகக் கற்பதற்குரிய
கூடிய பரும அளவையும்
கொண்டுள்ளனர். இத்துடன்
அவர்களுக்குக் கூடிய காலச்
சார்புநிலையும் (Dependence) தேவைப்படுகின்றது.

ஆதி மனிதனின் மனச்
செயற்றிறன் தன்
உடலை நிமிர்த்தி நிற்கச்
செய்தது. இதனால் அவன்
மேல் உறுப்பான கைகளால்
பொருள்களைக் கையாளுவதற்கும்
கருவிகளைப் பெரிய
அளவில் பாவிப்பதற்கும்
மற்றைய இனங்களைவிட
மனிதன்
முன்னிலை அடைந்துள்ளான். இன்று மனிதன்
தென்துருவமடுத்த பெரும்
பனிப்பரப்பைத் (Antarctica) தவிர
மற்றைய எல்லாக்
கண்டங்களிலும்
செறிந்து வாழ்கின்றான். 2012-ஆம் ஆண்டின் உலகச்
சனத்தொகை 707
கோடியாகும்.

பொதுநலத் தொண்டுச்
செயற்றிறன்,
உறவினர்க்கிடையில்
நிலவும்
உறவு போன்றவற்றில்
பெரும் சிக்கலை உண்டாக்கியது.
மொழி பெரும்
முன்னேற்றமடைந்தது.
கருவிகள் மிக நுட்பமாகச்
செய்யப்பட்டன. இவைகள்
மேலும் ஒத்துளைப்பையும் மூளை வளர்ச்சியையும்
கொடுத்தன. குடியேற்றமற்ற
தென் அமெரிக்காக்
கண்டத்தின் தென் முனைப்
பகுதிக்கு 11,000-ஆம்
ஆண்டளவில் கடைசியாக மக்கள் குடியேறினர்.

ஆதி மனிதர்
நாடோடி வேட்டையாடும்
சிறு குழுவாக வாழ்ந்தனர்.
மொழி சிக்கலைக்
கொடுத்தபடியால் ஞாபகத்
தன்மையிலும் செய்திப் பரிமாற்றத்திலும் சிரமங்கள்
ஏற்படப் புது விதமான
முறைகளைக்
கைக்கொண்டு கருத்துப்
பரிமாற்றம் விரைவாகச்
செய்தனர். திருவள்ளுவருக்கு முன்
(தி.மு) 8500 - 7000 ஆண்டுக்
காலப்பகுதியில் மத்திய
கிழக்கில் பயிர்
வேளாண்மையும்,
விலங்குடனான உழவு விவசாயமும்
செய்யத்தொடங்கினர்.

இது அயல் நாடுகளுக்கும்
பரவித் தனித்துவமாகச்
சீவித்து ஒரேயிடத்தில்
நிரந்தரமாகக் கமத்தொழிலில்
ஈடுபட்டு வாழ்ந்தனர்.
விவசாயம் பெரு விளைச்சலைத்
தந்தது. அதேநேரம் அரச
வகுப்பினரும் தோன்றினர்.
அத்தோடு உழைப்புப்
பங்கீட்டு (Division of Labour)
முறையும் நடைமுறைக்கு வந்தது.
இது பூமியின் முதல்
நாகரிகமாக மத்திய
கிழக்கு நாடுகளில் தி.மு.
4000 – 3000 ஆண்டுகளில்
ஏற்பட்டது. இதனோடு பண்டைய
எகிப்தும், இந்து ஆற்றுப்
பள்ளத்தாக்கு நாகரிகமும்
தோன்றியது.

இன்னும் தி.மு. 3000
ஆண்டுகளுக்குமுன்
பழமை வாய்ந்ததும் இன்றும்
புழக்கத்திலுள்ளதுமான
இந்து மதம் தோன்றியது.
மேலும் எழுத்து முறை, பதிவுகள், நூல் நிலையம்,
விஞ்ஞானம் (முதல் நிலை)
வியாபாரம், சண்டை சச்சரவு,
நிலம் பற்றல்,
வல்லரசு போன்றன
உருவாகியன. தி.மு. 500-ஆம் ஆண்டளவில் மத்திய கிழக்கு,
இந்தியா, சீனா, ஈரான், கிறீஸ்
ஆகிய நாடுகள் ஆதிக்கம்
பெற்றன.

இத்தாலியில் கலை, சமயம்,
விஞ்ஞானம் ஆகியவற்றில் 14-
ஆம் நூற்றாண்டில்
மறுமலர்ச்சி தோன்றியது.
மேலும் 15-ஆம் நூற்றாண்டில்
விஞ்ஞானம், தொழில் முறை ஆகியவற்றில்
ஐரோப்பிய நாடுகளில்
பெருமாற்றங்கள் பெற்றன.
1914–1918ஆம் ஆண்டுகளிலும்
1939–1945ஆம் ஆண்டுகளிலும்
இரண்டு உலக யுத்தங்கள் நிகழ்ந்தன.

அன்றிருந்த சர்வதேச சங்கம்
இந்த யுத்தங்களைச் சமரசம்
செய்து வைக்க
முடியவில்லை. இதற்காக
ஐக்கிய நாடுகள்
அமைப்பு உருவாகியது. 1992-ஆம் ஆண்டில் ஐரோப்பிய
நாட்டினம்
ஒன்று சேர்ந்து ஐரோப்பிய
ஒன்றியத்தை உருவாக்கினர்.
போக்குவரத்தும்,
தொடர்சாதனமும் முன்னேற்றமடைந்தன. உலகப்
பொருளாதாரமும் நாட்டின்
அரசியல் நடைவடிக்கைகளும்
ஒன்றுடனொன்று பின்னிப்
பிணைந்தன.

தொழில் நுட்ப விஞ்ஞான
வளர்ச்சியில் உள்ளடங்கிய
அணு படைக்கலம், கணிணி,
மரபுவழிப் பண்பியல் சார்ந்த
பொறியியல், உலக மயப்
பொருளியல், தொடர் சாதனம், போக்கு வரத்து, தொழில்
நுட்பம் ஆகியன 1940-ஆம்
ஆண்டிலிருந்து இற்றைவரை உலகின்
அநேக பகுதிகளில் வாழும்
மக்களின் நாளாந்த
வாழ்க்கையில் அதிக செல்வாக்கைக்
கொடுக்கின்றன. இன்னும்
குடியாட்சி,
முதலாளித்துவம்,
சூழ்நிலைச் சுற்றாடல்
ஆகியனவும் செல்வாக்கை உயர்த்தி உள்ளன.

உலகச் சனத்தொகை பெருக,
நோய், யுத்தம், வறுமை,
வன்முறை, தீவிரவாதம்,
உலகளாவிய
வெப்பநிலை ஆகியன
தோன்றின. 1957-ஆம் ஆண்டில் ருசிய கூட்டரசு தன்
முதலாவது செயற்கைத்
துணைக்கோளைக்
கோள்வீதியில்
செலுத்தியது. திரு.
யூரி ககாரின் (Yuri Gagarin) என்பவர்
முதலாவது விண்வெளி வீரனானார்.
அமெரிக்க வீரனான திரு. நீல்
ஆம்ஸ்ரோங் (Neil Armstrong)
சந்திரனில் கால் பதித்தார். 20-
ஆம் நூற்றாண்டில் ருசியாவும்
அமெரிக்காவும்
விண்வெளி ஆய்வுப்
பயணத்தை மேற்கொண்டனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 09, 2014 2:59 pm

பரிணாம வளர்ச்சியின் மனிதவரலாறு DPajEfVZSZCkQ3DlLatg+ape

--

மனிதக் குரங்குகள் மனிதனைப்போல்
ஆற்றல் வாழ்ந்தவை என்பதை அடிப்படையாக
கொண்டு எடுக்கப்பட்ட ஆங்கில படம்
Rice of the planet of Apes - ஆகும்
-
குரங்குகளை வைத்து ஆங்கிலத்திலும்
தமிழிலும் நிறைய படங்கள் வந்துள்ளன
-
நமது முன்னோர்களை வாழ்த்துவோம்...!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக