புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_c10வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_m10வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_c10வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_m10வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_c10வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_m10வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_c10வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_m10வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_c10வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_m10வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_c10வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_m10வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான வரி நோட்டீஸ்... தவிர்க்கும் வழிகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 11:41 am


வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 23 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பதாக அண்மையில் வருமான வரித்துறை அறிவிக்க, தங்களுக்கும் நோட்டீஸ் வந்துவிடுமோ எனப் பலரும் குழம்பிப்போய்க் கிடக்கிறார்கள். இந்தக் குழப்பங்களுக்குத் தெளிவான பதில் பெற சென்னை வருமான வரி முதன்மை ஆணையர் எஸ்.ரவியைச் சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு விரிவான விளக்கம் தந்தார் அவர்.

''வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவதாகச் சொல்லப்படுகிறதே... எவ்வாறு இது செயல்படுத்தப்படுகிறது?'

''வருமான வரித்துறையில் அத்தனை பிரிவுகளுமே கணினி மயமாக்கப்பட்டுள்ளது. வரி செலுத்து வோரின் படிவங்கள் அதாவது, ரிட்டர்ன்ஸ் முதலான அத்தனை பரிவர்த்தனைகளுமே கணினியில் பதிவு செய்யப்படுகின்றன. ஆகவே, இந்தத் துறையில், ஏறக்குறைய அத்தனைபேரின் தகவல்களையும் உள்ளடக்கிய டேட்டாபேஸ் எங்களிடம் தயாராக இருக்கிறது. இதை வைத்து கடந்த ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் வருமான அளவு எப்படி இருந்தது, தற்போது எப்படி தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது அல்லது தாக்கல் செய்யாமல் விடப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து, வரிச் செலுத்தியதில் தவறு செய்தவர் களையும் வரி தாக்கல் செய்யத் தவறி யவர்களையும் எங்களால் கண்டுபிடித்து நோட்டீஸ் அனுப்ப முடிகிறது.

தவிர, புது டெல்லியில் இருந்து செயல்படும் வருமான வரி இயக்குநர் (சிஸ்டம்ஸ்) அலுவலகம் மூலமாகவும், வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் வரி கணக்கு தாக்கலை நிறுத்தியவர்கள் அடங்கிய பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலும் நோட்டீஸ் அனுப்புகிறோம். சார் பதிவாளர் அலுவலகம், பெரிய ஒப்பந்ததார நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்தும் வரிச் செலுத்துவோரின் தகவல்கள் கிடைக்கப் பெற்று அதன் அடிப்படை யிலும் நோட்டீஸ் அனுப்புகிறோம்''.

ஒருவருக்கு எந்தமாதிரி சூழ்நிலையில் வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வரும்?

''ஆண்டுதோறும் வரி கட்டப்பட வேண்டாத வருமானத் துக்கான வரம்பு எவ்வளவு என்று மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. அந்த வரம்புக்குமேல் வருமானம், அதாவது, வரி கட்டவேண்டிய அளவுக்கு வருமானம் இருந்து, அது வருமான வரித்துறைக்குத் தாக்கல் செய்யப்படாமல் இருக்கும்பட்சத்தில், முதலில் மென்மையாக ஒரு கடிதம் அனுப்பி, வரிச் செலுத்துவோரிடம் இருந்து உண்மையான தகவல் கேட்டுப் பெறப்படுகிறது.

ரிட்டர்ன் மற்றும் கணக்கு தாக்கல் செய்த பின்னரும்கூட, வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வெளியில் இருந்துவரும் தகவல்களின்படி கணக்கு சரியாகத் தாக்கல் செய்யாமல் இருப்பதாக வலுவான சந்தேகம் இருப்பின், நோட்டீஸ் அனுப்பப்படும். இதுவும் அல்லாமல், விவரங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் நோட்டீஸ் அனுப்பப்படலாம்.''

வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வருவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

''உங்கள் வருமானம், அதற்கான வரியை சரியாகக் கணக்கிட்டு, உரிய முறையில் அதை அரசுக்கு செலுத்தி, குறிப்பிட்ட கெடுவுக்குள் 'ரிட்டர்ன்’ தாக்கல் செய்துவிட்டால், வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் என்கிற பேச்சுக்கே இடமில்லை.''

வருமான வரியைப் பொறுத்தவரையில் மாதச் சம்பளதாரர்கள் எந்த விஷயத்தில் அதிகம் தவறு செய்கிறார்கள்?

''பொதுவாக, சம்பளதாரர்கள் தங்களது வருமான நிர்ணயம் மற்றும் வரிக் கணக்கிடுவதில் பெரிதாகத் தவறு இழைப்பதில்லை. நடைமுறை சார்ந்த சிறு பிழைகள்தாம் அதிகம் காண முடிகிறது. சரியான பான் எண் எழுதாமல் இருத்தல், வங்கிக் கணக்கு விவரங்கள் குறிப்பாக, எம்.ஐ.சி.ஆர் எண் போன்றவை விடுபட்டுப்போதல், கையெழுத்துப் போடாமல் ரிட்டர்ன் சமர்ப்பித்தல்; தொடர்புக்கான தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரி கொடுக்காமல் இருத்தல் போன்ற தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்கின்றனர்.''

வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன தண்டனை?

''வரி கணக்கு குறித்த நேரத்தில் தாக்கல் செய்யாதவர்களுக்கு வருமான வரி அதிகாரியினால் நோட்டீஸ் அனுப்பப்படும். அதன்பிறகும் வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில், வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 271-ன் கீழ் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், வருமான வரித்துறைக்குக் கனக்குகளைக் குறைத்து மதிப்பிட்டு, வரி கணக்கு சமர்ப்பித்தால் கூடுதல் வருமான வரி செலுத்துவதோடு நில்லாமல், ஏய்க்கப்பட்ட வரிக்கு மூன்று மடங்கு அளவுக்கு மிகாமல் அபராதம் செலுத்த வேண்டிவரும்.''

விகடன்

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Feb 24, 2014 3:52 pm

நல்ல பகிர்வு சிவா அண்ணே.

இது எல்லாம் சாமானியர்களுக்கு மட்டும் தானே!

கோடிகளில் ஏய்க்கும் கேடிகளுக்கு ?
ஈகரையன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஈகரையன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 3:53 pm

ஈகரையன் wrote:நல்ல பகிர்வு சிவா அண்ணே.

இது எல்லாம் சாமானியர்களுக்கு மட்டும் தானே!

கோடிகளில் ஏய்க்கும் கேடிகளுக்கு ?

கோடிகளில் புரளும் மனிதர்களுக்குத்தானே அரசாங்கமே செயல்படுகிறது! அவர்களுக்கு சட்ட விதிமுறைகள் என்று எதுவும் இல்லை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக