புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாங்க சாதிக்கலாம் Poll_c10வாங்க சாதிக்கலாம் Poll_m10வாங்க சாதிக்கலாம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
வாங்க சாதிக்கலாம் Poll_c10வாங்க சாதிக்கலாம் Poll_m10வாங்க சாதிக்கலாம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
வாங்க சாதிக்கலாம் Poll_c10வாங்க சாதிக்கலாம் Poll_m10வாங்க சாதிக்கலாம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வாங்க சாதிக்கலாம் Poll_c10வாங்க சாதிக்கலாம் Poll_m10வாங்க சாதிக்கலாம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வாங்க சாதிக்கலாம் Poll_c10வாங்க சாதிக்கலாம் Poll_m10வாங்க சாதிக்கலாம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வாங்க சாதிக்கலாம் Poll_c10வாங்க சாதிக்கலாம் Poll_m10வாங்க சாதிக்கலாம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாங்க சாதிக்கலாம் Poll_c10வாங்க சாதிக்கலாம் Poll_m10வாங்க சாதிக்கலாம் Poll_c10 
6 Posts - 1%
prajai
வாங்க சாதிக்கலாம் Poll_c10வாங்க சாதிக்கலாம் Poll_m10வாங்க சாதிக்கலாம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வாங்க சாதிக்கலாம் Poll_c10வாங்க சாதிக்கலாம் Poll_m10வாங்க சாதிக்கலாம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
வாங்க சாதிக்கலாம் Poll_c10வாங்க சாதிக்கலாம் Poll_m10வாங்க சாதிக்கலாம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாங்க சாதிக்கலாம்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 1:02 pm

உலகம் முழுவதும் பல்வேறு காலகட்டங் களில் பலப்பல சாதனையாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிலர் மிகச்சிறிய வயதிலேயே சாதிக்கிறார்கள். வெகுசிலரே மிகச்சரியான வயதில் சாதிக்கிறார்கள். வேறு சிலரோ காலம் கடந்து வயதான பின்னர் சாதிக் கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். மன உறுதியுடன் சாதித்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து உழைப்பவர்கள் நிச்சயம் சாதிக்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். மன உறுதியுடன் சாதித்தே தீர வேண்டும். என்ற நோக்கத்தில் தொடர்ந்து உழைப்பவர்கள் நிச்சயம் சாதிக்கிறார்கள். இந்த உலகத்தில் பிறக்கும் அனைவருக்குமே சாதிக்க வேண்டும் மக்களிடையே புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் இளம்வயதில் தோன்றுவது இயற்கையே. ஆனால் திறமை உள்ள எல்லோ ராலும் சாதிக்க முடிவதில்லை.

வாழ்க்கையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் பலரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் கடுமையாக உழைத்தால் மட்டும் சாதித்துவிட முடியாது. எல்லா சாதனை களுக்கும் அடிப்படை உழைப்புதான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதையும் தாண்டி சில விஷயங்கள் இருக்கின்றன. அப்படி யென்றால் சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்றகேள்வி எழுகிறதல்லவா?

உழைப்பு, விடாமுயற்சி, நேர்மை, கருணை உள்ளம், பிறரிடம் அன்பு பாரட்டும் குணம், எளிமை, ஒவ்வொரு செயலிலும் தனித்தன்மையோடு விளங்குதல், துணிச்சலாய் முடிவெடுக்கும் திறமை, எந்த ஒரு செயலையும் மனப்பூர்வமாய் செய்தல், மனநிறைவு, பிறரை பாராட்டும் பெருந்தன்மை, தன்னம்பிக்கை இது போன்ற பலவிதமான குணங்கள் ஒன்று சேர எவருக்கு இருக்கிறதோ அவரே மக்கள் மனதில் நிரந்தரமாய் இடம் பிடிக்கமுடியும். உலகம் போற்றும் பெரிய பெரிய சாதனையாளர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதமான தனித்தன்மை யோடு விளங்குவதைக் காணலாம்.

பிரெஞ்சு நாவலாசிரியர் ஜீல்ஸ் வர்ன். அவர் 1873 ஆம் ஆண்டில் “உலகைச் சுற்றி வர எண்பது நாட்கள்” என்றொரு அறிவியல் நூலை எழுதினார். அவர் அந்த நூலை புத்தகமாக்க விரும்பி பிரபலமான பல பதிப்பகங்களை அணுகினார். ஆனால் ஜீல்ஸ் வர்ன் அப்போது பிரபலமில்லாதவர் என்றகாரணத்தினால் எவரும் அதை பதிப்பிக்க முன்வரவில்லை. வெறுத்துப் போன ஜீல்ஸ் வர்ன் அந்த கையெழுத்துப் பிரதியினை தன் மனைவியிடம் கொடுத்து எரித்துவிடும்படி சொன்னார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 1:02 pm

மனைவியோ கணவன் சொல் மந்திரம் என்று கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவர் அல்ல. என்ன செய்யலாம் என்று அமைதியாக யோசித்தார். அப்பகுதியில் அதிகமாக பிரபல மில்லாத ஒரு பதிப்பகத்தாரை அணுகினார். அவர்களும் அந்த கையெழுத்துப் பிரதியை வாங்கி பரிசீலித்தார்கள். சில மாதங்களில் அதைப் புத்தகமாகவும் கொண்டு வந்தார்கள். வெளிவந்த சில காலத்திற்குள்ளாகவே அந்த புத்தகம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நல்ல விற்பனையும் ஆனது. இதைத் தொடர்ந்து பல புத்தகங்களை எழுதி அவர் மிகப்பிரபலமான எழுத்தாளராக ஆகிவிட்டார். உலகம் முழுவதும் அவர் புகழ் பரவியது.
ஒருவர் பிரபலமாகி சாதிக்க வேண்டு மென்றால் திறமை மட்டும் போதாது. தம்மிடம் இருக்கும் திறமையை வெளிக்கொணரும் வழிகளைத் தெரிந்திருக்க வேண்டும். இதனால்தான் பலர் திறமை இருந்தும் வெளியே வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தால் மூன்று விஷயங்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். முதல் விஷயம் நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும் என்றதன்னம்பிக்கை. நாம் தினமும் வீட்டை விட்டு வெளியே சென்று நமது செயல்களை முடித்து விட்டு வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்றால் அதற்கும் ஒருவித நம்பிக்கை அவசியம். இரண்டாவது மனதை ஒரு முகப்படுத்தும் தன்மை. எந்தத் துறையில் சாதிக்க விரும்பு கிறோமோ அந்தத் துறையில் நம் மனம் முழுவதையும் குவித்து உழைக்க வேண்டும். மூன்றாவது சரியான நேரத்தில் துணிச்சலுடன் சரியாக முடிவெடுக்கும் திறமையை வளர்த்தக் கொள்ள வேண்டும். இவை மூன்று விஷயங் களையும் எவன் ஒருவன் சரியாக பின்பற்று கிறானோ அவனால் நிச்சயம் சாதிக்க முடியும்.

அமெரிக்க ஐனாதிபதிகளாக பதவி வகித்தவர்களில் அதுவரை எவருமே அடிமைப் பட்டுக் கிடந்த மக்களின் வாழ்க்கை முன்னேற் றத்தைப் பற்றி சிந்திக்கவே இல்லை. அத்தகைய மக்களின் துயரத்தை அறிந்து அவர்கள் மீது அன்பு வைத்து கருணை காட்டியதாலேயே ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதி யாகி மக்கள் மனதில் இன்றுவரை நிறைந்திருக் கிறார். நேர்மை மற்றும் எளிமையான வாழ்க்கை முறையினால் காந்தி, சாஸ்திரி, காமராஜர் போன்றதலைவர்கள் இன்னமும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சாதிக்க விரும்பும் துறையில் ஏற்கனவே சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளை கட்டாயம் படியுங்கள். அத்தகையவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப் பட்டு சாதனை செய்தார்கள் என்பது உங்களுக்கு ஒரளவிற்குப் புரியும். கையில் பெரிய முதலீடு ஏதுமின்றி அறிவையும் உழைப்பையும் மட்டுமே முதலீடாக்கி கோடி கோடியாக பணத்தைக் குவித்தவர்கள் இருக்கிறார்கள். தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்களை இதற்கு உதாரண மாய்ச் செல்லலாம்.

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, இந்த பெயர் தற்போது உலகம் முழுக்க பிரபலமாகி விட்டது. 1946ஆம் ஆண்டில் மைசூருக்கு அருகில் அமைந்த சித்தலகட்டா என்றஊரில் பிறந்தவர் நாராயணமூர்த்தி. தந்தையார் ஒரு பள்ளி ஆசிரியர். நாராயணமூர்த்தி மிகச் சிறப்பாக படித்தார். இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங் களில் முதன்மையான ஐஐடியில் பட்டம் பெற வேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாக இருந்தது. முயன்று படித்தார். இந்திய அளவில் பதினேழாவது இடத்தைப் பிடித்தார். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவரால் ஐஐடியில் சேர்ந்து படிக்க இயலாமல் போய்விட்டது. எனவே மைசூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேசிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து அவருடைய விருப்பப்படியே கான்பூர் ஐஐடியில் எம்டெக் படித்து பட்டம் பெற்றார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 1:03 pm

எம்டெக் பட்டம் பெற்று சில நிறுவனங் களில் பணிபுரிந்த நாராயணமூர்த்தி பின்னர் மும்பையில் இருந்த பட்னி என்றமென்பொருள் நிறுவனத்தில் ஆலோசகராய் பணியில் சேர்ந்தார். பட்னி நிறுவனத்தில் அவரைப் போலவே துடிப் பான சில இளைஞர்கள் பணிபுரிந்து வந்தார்கள். அனைவருக்குமே சொந்தமாக ஒரு நிறுவனத் தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நாராயணமூர்த்தி, நந்தன் நிலேக்னி, தினேஷ், கோபாலகிருஷ்ணன், ராகவன், சைபால், அசோக் அரோரா ஆகிய ஏழு நண்பர்களும் இணைந்து ஆளுக்கு பத்தாயிரம் முதலிட்டில் 1981 ஆம் ஆண்டில் பூனே நகரத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்கள். தாங்கள் தொடங்கிய நிறுவனத்திற்கு அவர்கள் சூட்டிய பெயர் இன்ஃபோசிஸ் கடின உழைப்பின் மூலமாக இன்ஃபோசிஸ் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று புகழின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறது.

வெறும் எழுபதாயிரம் ரூபாய் முதலீட் டோடு தொடங்கப்பட்ட நிறுவனமான இன்ஃ போசிஸ் இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறது. இமாலய வெற்றியை அடைய பணம் பிரதானமல்ல உழைப்பே என்பதை உலகிற்கு நிரூபத்திருக்கும் ஒரு சிலருள் நம் நாராயணமூர்த்தியும் ஒருவர். நம்பிக்கை மீது முழு நம்பிக்கை வைத்தால் வெற்றி நம்மைத் தேடி வரும்.

நம் எல்லோரிடத்திலும் திறமை இருக்கிறது. திறமையை வெளிப்படுத்தக் கூடிய அளவிற்கு ஆற்றலும் இருக்கிறது. சாதனை செய்யத் தேவையான விடாமுயற்சி, மனஉறுதி போன்றவற்றைநாம் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். சாதனை செய்தவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டால் மட்டும் போதாது. அவர்கள் எப்படி சாதித்தார்கள், சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூர்ந்து நோக்க வேண்டும். மனதை எந்த நேரமும் உற்சாகமாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். உற்சாகமானவர்களுடன் சேர்ந்து உழைக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் சாதனை என்பது கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறது. ஆனால் அந்த தூரத்தை யாரும் அவ்வளவு சுலபத்தில் அடைந்துவிட முடியாது. சாதனை என்பது மிக மிக நீண்ட பயணம். அந்த பயணம் மற்றபயணங்களைப் போல் அல்லாமல் மிகவும் சிரமமானதாகத்தான் இருக்கும். சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் மனதில் உறுதி யோடும் உற்சாகத்தோடும் இலக்கை அடையும் வரை அப்பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் நிச்சயம் இலக்கைத் தொட்டு விடலாம். சரித்திரத்தில் நிரந்தரமாய் இடமும் பெற்று விடலாம்.

Author: பதி ஆர்.வி
Jul 2010 | Posted in Articles



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 13, 2014 12:55 pm

வாங்க சாதிக்கலாம் 103459460 வாங்க சாதிக்கலாம் 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 13, 2014 8:32 pm

M.M.SENTHIL wrote:


உழைப்பு, விடாமுயற்சி, நேர்மை, கருணை உள்ளம், பிறரிடம் அன்பு பாரட்டும் குணம், எளிமை, ஒவ்வொரு செயலிலும் தனித்தன்மையோடு விளங்குதல், துணிச்சலாய் முடிவெடுக்கும் திறமை, எந்த ஒரு செயலையும் மனப்பூர்வமாய் செய்தல், மனநிறைவு, பிறரை பாராட்டும் பெருந்தன்மை, தன்னம்பிக்கை இது போன்ற பலவிதமான குணங்கள் ஒன்று சேர எவருக்கு இருக்கிறதோ அவரே மக்கள் மனதில் நிரந்தரமாய் இடம் பிடிக்கமுடியும்.




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக