புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_c10இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_m10இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_c10 
21 Posts - 66%
heezulia
இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_c10இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_m10இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_c10இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_m10இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_c10 
63 Posts - 64%
heezulia
இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_c10இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_m10இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_c10இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_m10இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_c10இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_m10இனி என்ன நடக்கும் இலங்கையில்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி என்ன நடக்கும் இலங்கையில்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 3:29 pm

இனி என்ன நடக்கும் இலங்கையில்? ZY2GE1rRfGR2TIl0HSQA+p44a

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேறிவிட்ட சூழலில், உலகெங்கிலும் உள்ள முக்கியமான 16 தமிழ் அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து, உலக நாடுகளிடம் அவை மீதான தடையையும் கோரியிருக்கிறது இலங்கை அரசாங்கம்!

[noguest] அத்துடன், இலங்கைக்குள் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றதாக நெடுங்கேணி பகுதியில் கோபி, அப்பன், தேவிகன் ஆகிய மூவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது. சர்வதேச அழுத்தங்கள் வெறும் பேச்சளவில் உருவானதுமே, இலங்கையில் இருக்கும் நிராயுதபாணி தமிழர்களையும் விதவிதமாக வதைக்கத் தொடங்கிவிட்டது இலங்கை அரசு. இது 2009-ம் ஆண்டுக்குப் பிந்தைய போராகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன், ஈழத் தமிழர் படு கொலைக்கான ஆதாரங்களை SRI LANKA: HIDING THE ELEPHANT' என்ற நூலில் 1,000 பக்கங்களுக்கு அடுக்கியிருக்கிறார்.

கடந்த மூன்று வருடங்களாக இலங்கை தொடர்பான ஐ.நா. அமர்வுக்குச் சென்று வரும் ராமு மணிவண்ணனிடம் பேசினேன்...

''நான் தொடர்ந்து ஈழத்துக்குச் சென்று வருபவன். கொத்துக்குண்டுகள் பற்றிய செய்திகள் வருவதற்கு முன்னரே, அதன் விளைவுகளை அங்கு நேரில் கண்டவன். ஆதலால், 2008-ம் ஆண்டு இறுதியில் இருந்தே இந்த நூலுக்கானத் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டேன். அப்போது முதல் இப்போது வரை இறுதிப் போரில் காணாமல்போன குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அந்தப் பயங்கரத்தின் நிழலையும் நிஜத்தையும் இந்த நூலில் தொகுத்திருக்கிறேன்.

இறுதிப் போரின் முடிவில் பிடிபட்ட இளம் பெண்களை, சுமார் 60 பேருந்துகளில் ஏற்றிச் சென்றது இலங்கை ராணுவம். அந்தப் பேருந்துகளோ, அதில் பிடித்துச் செல்லப்பட்டவர்களோ என்ன ஆனார்கள் என இன்று வரை தெரியவில்லை. இந்த மாபெரும் இனப்படுகொலையை, 'போர்க் குற்றம்’ என்றும், 'மனித உரிமை மீறல்’ என்றும் உலகம் விவாதித்துக்கொண்டிருந்த சமயத்தில், 'இல்லை; இது அப்பட்டமான இனப் படுகொலை’ என்று உலகுக்கு உணர்த்த, போர் நடந்த விதம், பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கொல்லப்பட்ட மக்கள் என இந்த இன அழித்தொழிப்பு தொடர்பான முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் இந்த நூலில் தொகுத்திருக்கிறேன்.''

''இனிமேலாவது ஐ.நா. மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு ஏதேனும் நிவாரணம் கிடைக்குமா?''

''2009-ல் போர் முடிந்தபோது, இலங்கை அரசைப் பாராட்டி ஒரு தீர்மானத்தை இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றியது ஐ.நா. பின்னர், 2012-ம் ஆண்டு இலங்கை அரசே தன் பிரச்னைகளை விசாரித்துத் தீர்த்துக்கொள்ளும் விதத்தில், Lessons Learnt and Reconciliation Commission (L.L.R.C.)’ எனும் நல்லிணக்க ஆணைக் குழுவை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. 2013-ம் ஆண்டு L.L.R.C. விசாரணையிலும் மனித உரிமை தொடர்பான விசாரணைகளிலும் முன்னேற்றம் இல்லை என்று அறிவித்தது

ஐ.நா. பின்னர், ஐ.நா-வின் மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை, இலங்கைக்கே நேரடியாகச் சென்று சூழலை ஆராய்ந்து அறிக்கை கொடுத்தார். இப்போது (2014-ல்) சர்வதேச விசாரணை தேவை என, ஐ.நா. மனித உரிமை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஓர் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்த சர்வதேசச் சமூகம், தமிழர்களின் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்க ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்னை, படிப்படியாக சர்வதேச சமூகத்தின் கைகளுக்குச் சென்றுவிட்டது. இந்தத் தீர்மானங்கள் இன்னும் வலுவாக வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஐ.நா. நடவடிக்கைகளால் நன்மையே இல்லை என்று சொல்லிவிட முடியாது!''

''ஆனால், இதுவரை வெளிவந்த ஐ.நா. அறிக்கைகள் போர்க்குற்றம், மனித உரிமை என்றுதான் பேசுகிறதே தவிர, எங்குமே இனப்படுகொலை என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்தவில்லையே?''

''போர் முடிந்த புதிதில் அயர்லாந்தில் நடந்த மக்கள் தீர்ப்பாயத்தில் போர்க்குற்றம், இனப்படுகொலை என்றுதான் பேசினார்கள். ஆனால் உறுதியான ஆதாரங்கள் வெளிவந்த பின்னர், ஜெர்மனியில் நடந்த மக்கள் தீர்ப்பாய மாநாட்டின் முடிவில் 'இலங்கையில் நடந்தது இனப்படுகொலை’ என்று அறிவித்தார்கள். இந்த நிலையில் நாம் ஐ.நா. தீர்மானத்தை இனப்படுகொலை என்று திட்டவட்டமாக வரையறுக்கப் போராட வேண்டுமே தவிர, 'ஐ.நா-வே வேண்டாம், அமெரிக்கா எந்த நன்மையும் செய்யாது’ என்று பிரச்னையைத் திசை திருப்புவது குழப்பும் வேலையாகப் படுகிறது. தொடர்ந்து போராடுவதன் மூலம் மட்டுமே சர்வதேசச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து, ஈழத் தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வினைப் பெற முடியும்.

செப்டம்பர் மாதத்தில் இருந்து இலங்கை மீதான விசாரணைக்குரிய ஆயத்தப் பணிகள் தொடங்கும் என நம்புகிறேன். இந்த விசாரணைகளுக்கு, இலங்கை அரசு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் வரும் என எதிர்பார்க்க லாம். ஐ.நா. போன்ற அமைப்புகளால் மட்டுமே அது சாத்தியமாகும்!''

''ஆனால், எண்ணெய் வளமோ, சுரண்டக்கூடிய வேறு வளங்களோ இல்லாத இலங்கை மீது அமெரிக்காவுக்கோ, மேற்கு உலகுக்கோ என்ன அக்கறை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?''

''தெற்கு ஆசியாவின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் பங்கு முக்கியமானது. ஆனால், ஆசியாவில் தன்னை ஒரு 'சூப்பர் பவர்’ ஆக நிறுத்திக்கொள்ள இந்தியா எதையுமே செய்யவில்லை. குறிப்பாக, இலங்கை விவகாரத்தைத் தவறான கண்ணோட்டத்துடன் அணுகுகிறது. 13-வது சட்டத் திருத்தத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கான குறைந்தபட்ச தீர்வைக்கூடப் பெற்றுக் கொடுக்காமல், 'அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தோம்... கழிப்பிடம் கட்டிக் கொடுத்தோம்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இலங்கையைத் தனது பிராந்திய நலன்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சீனா, இந்து மகா சமுத்திரம் முழுக்க தன் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

என்னைப் பொறுத்தவரை அமெரிக்கா என்று இல்லை, ரஷ்யா, இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தாலும் அதை ஆதரிப்பேன். நமக்குத் தேவை நீதி. அது யார் மூலம் கிடைத்தால் என்ன?''

[thanks] விகடன் [/thanks][/noguest]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக