புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_m10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 
60 Posts - 48%
heezulia
 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_m10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_m10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_m10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_m10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_m10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_m10 அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தர் பல்டி அதிமுக...அரவணைக்கும் பா.ஜனதா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:17 am



எதிர்பார்த்தபடியே பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கிவிட்டது அதிமுக. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மத்தியில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கின்ற நிலையில், ஜெயலலிதாவின் சிறந்த நண்பர் மோடி என்றும், அவர் பிரதமரானால் நெருக்கமான உறவு மலர வாய்ப்பு உள்ளதாகவும் கூறி, அந்தர்பல்டி அரசியல் ஆட்டத்தை தொடங்கி வைத்துவிட்டது அதிமுக.

வாக்குப்பதிவு பின்னர் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகள், மத்தியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் ஆருடம் கூறுகின்றன. மற்றொருபுறம் எந்த ஒரு கட்சியிடம் இருந்தும், அது ஒரே ஒரு எம்.பி.யாக இருந்தாலும் கூட அவர்களின் ஆதரவை பெற தங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்று பா.ஜனதா நேற்று அறிவித்தது.

இவ்வாறு பா.ஜனதா விடுத்த அழைப்பும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் மாநில கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியை நோக்கி நெருக்கி தள்ள தொடங்கி உள்ளன. அவ்வாறு நெருங்கி வரும் கட்சிகளில் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம், அதிமுக மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் இப்போதே மோடி அரசில் இடம்பிடிக்க துண்டு போட தொடங்கிவிட்டன.

பிகு பண்ணாத பிஜூ ஜனதா தளம்

பிஜு ஜனதா தளத்தை பொறுத்தவரை அக்கட்சி ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்ற கட்சிதான். இந்நிலையில் தற்போது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்தால் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளிக்க தயார் என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரவாத் திரிபாதி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

" ஒட்டுமொத்த தேசத்தின் வெளிப்பாட்டையும், ஒடிசா மாநிலத்தின் நலனையும் கருத்தில்கொள்ளும்போது தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதில் பிரச்னை ஏதும் இல்லை" என்றும் அதில் கூறினார். தங்களது ஆதரவுக்கு பிரதிஉபகாரமாக ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரப்பட வேண்டும் என்றும், இது தங்களது நீண்ட நாள் கோரிக்கை என்றும் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மூன்றாது அணி அமைக்கும் முயற்சி வெற்றிபெறாமல் போனாலும், அதில் முனைப்பு காட்டியவர்களில் முக்கியமானவர் ஒடிசா முதல்வர் பிஜூ பட்நாயக். இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியான பின்னர், பா.ஜனதா ஆட்சியமைக்க ஆதரவளிக்க தயார் என்று அவரது கட்சித் தலைவர்களில் ஒருவரான திரிபாதி கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலைப்பை ஏற்படுத்த, இடதுசாரி கட்சிகளோ திகைப்பில் ஆழ்ந்தன.

இதனைத் தொடர்ந்து இடதுசாரி தலைவர்கள் பிஜூ பட்நாயக்கை தொடர்புகொண்டு பேசியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்தே பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு ஏதும் எடுக்கவில்லை என பிஜூ பட்நாயக் இன்று செய்தியாளர்களிடம் மறுத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தங்கள் கட்சி பேச்சுவார்த்தை எதிலும் ஈடுபடவில்லை என்றும், யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் பதிலளித்தார்.

அவர் இவ்வாறு கூறியபோதிலும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள பா.ஜனதா தலைவர்களோ, பிஜு ஜனதா தளத்திடம் இருந்து எங்களுக்கு 'ஆதரவு சிக்னல்' வந்துவிட்டது என்று கூறி நமுட்டு சிரிப்பு சிரிக்கின்றனர்.

அந்தர் பல்டி அதிமுக

பிஜூ ஜனதா தளத்தின் நிலை இதுவென்றால், அதிமுக பகிரங்கமாகவே பா.ஜனதாவுக்கு நேசக்கரம் நீட்ட தொடங்கிவிட்டது. அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான மலைச்சாமி, இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், "ஜெயலலிதாவின் சிறந்த நண்பர்களில் ஒருவர் மோடி. அரசியல் ரீதியாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மோடி பிரதமரானால் அவருடன் நெருக்கமான உறவை ஜெயலலிதா பேணுவார்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் கனவில் இருந்த ஜெயலலிதாவும், மூன்றாவது அணிதான் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய நவீன் பட்நாயக்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தங்களது ஆதரவு யாருக்கு என்பதை மூடுமந்திரமாகவே வைத்திருந்தனர். அத்துடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் ஜெயலலிதா மற்றும் நவீன் பட்நாயக் ஆகிய இருவருமே தவிர்த்தனர். அதற்கு அர்த்தம், தாங்கள் நினைத்தது நடக்காவிட்டால், அது காங்கிரஸோ அல்லது பா.ஜனதாவோ தேர்தலுக்கு பின்னர் ஆதரவளித்து மத்திய அரசில் இடம்பெற்றுவிட வேண்டியதுதான் என்பதுதான் என சொல்லத்தேவையில்லை.

தேர்தல் பிரசாரத்தின்போது, மோடி மற்றும் பா.ஜனதாவை ஜெயலலிதா கடைசி நேரத்தில் விமர்சித்தது கூட, நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஜெயலலிதா மோடியை ஆதரிப்பார் என்று திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் பிரசாரம் செய்ததால்தான் சிறுபான்மையின மக்களின் வாக்குகளை எண்ணி மோடியையும், பா.ஜனதாவையும் வேறு வழியில்லாமல் விமர்சித்து பேசியிருந்தார் ஜெயலலிதா. எனவேதான் " அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா...!" என்ற ரீதியில் பா.ஜனதா மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே பரஸ்பரம் அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

மேலும் ஜெயலலிதா தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது சொத்துக் குவிப்பு வழக்கு. அந்த வழக்கின் தீர்ப்பு வேறு எந்த நேரமும் வந்துவிடலாம் என்ற ரீதியில் அவரை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. எனவே எத்தகைய முடிவை எடுக்க வேண்டும் என்பதை யாரும் ஜெயலலிதாவுக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை.

இதனிடையே கொடநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்பிய ஜெயலலிதாவிடம், மோடி ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டபோது, "தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சொல்கிறேன்" என்றுதான் பதிலளித்தாரே தவிர, ஆதரவளிக்க மாட்டோம் என்று கூறவில்லை.

சரத் பவார் ஆதரவும் சாத்தியம்

அதேப்போன்று சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பா.ஜனதா ஆட்சியமைத்தால் அதற்கு ஆதரவளிக்க தயங்காது என்று அக்கட்சியின் இரண்டாம் மட்டத்தலைவர்களது பேச்சுகள் உணர்த்துகின்றன.

அதற்கு உதாரணமாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான பிரஃபுல்படேலிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, " அரசியலில் எந்த சாத்தியத்தையும் நிராகரித்துவிட முடியாது. வலுவான, நிலையான அரசு மத்தியில் அமைய வேண்டும். இதன் அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் செயல்படும்" என்று கூறியுள்ளதை பார்த்தால், காற்று எந்த பக்கம் வீசுகிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இதுதவிர தற்போது மகாராஷ்ட்ராவில் ராஜ்தாக்கரேவின் நவநிர்மாண் கட்சியுடன் பா.ஜனதா தலைவர்கள் நெருக்கம் காட்டுவதை கசப்புடன் பார்க்கும் சிவசேனாவுக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே நிலவும் முட்டல் மோதல்கள், தேசியவாத காங்கிரஸ் உடன் பா.ஜனதா நெருங்க வைக்கும் என்றும் அம்மாநில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இப்படி தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே அந்தர் பல்டிகள் அரங்கேற தொடங்கிவிட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுக பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து மோடி அரசில் இடம்பெறும் பட்சத்தில், தமிழக பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, மதிமுக மற்றும் பாமக போன்ற கட்சிகளின் தலைவர்கள், "அன்பு சகோதரி...!" என்று கூறி எத்தகைய அந்தர் பல்டிகளை அடிக்க நேரிடுமோ...? மே 16 ல் தெரியும் விடை!


விகடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 15, 2014 12:22 pm

அரசியல் சாக்கடைகள் இது போல பல்டி அடிப்பது சகஜம் தானே

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:12 pm

அம்மாவுக்கு தெரியாதா சார் எப்ப, எப்படி பேசி காயை நகர்த்தணும் என்பது.

இதே பா.ஜ. கூட்டணியில் அம்மா சேர்ந்து விட்டால், 

இந்த கூட்டணி மட்டும்தான் இனி அரசியலில் இருக்கும், அதற்கு தமிழ்நாட்டு மக்கள் அடுத்த சட்டசபை தேர்தலில் அதிமுக-வையும், பா.ஜ.வையும் வெற்றி பெற செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? என்று ஆரம்பித்து விடுவார்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 15, 2014 2:51 pm

பதவிக்காக என்ன வேணுன்னாலும் செய்யலாம் என்பது அரசியல்வாதிகளின் கோட்பாடு..!ஒன்னும் புரியல

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Thu May 15, 2014 7:26 pm

திரு சிவா,

உங்களின் மதிப்பீடு மிகவும் உண்மை. BJP 250 இடங்களை பெற்று அ தி மு க வின் ஆதரவை பெற்றால் ஜெயலலிதா அவர்களுக்கும் ஓரளவு தமிழகதிர்க்கும் நல்லது. நமக்கு என்ன என்றால் ரயில்வே மற்றும் சட்ட அமைச்சகத்தை ஜெயலலிதா கேட்ப்பார் என்கிற வதந்தி. முதலாவதற்கு மைத்ரேயனும் இரண்டாவதற்கு தம்பிதுரையையும் சிபாரிசு செய்யலாம். அதுவே நாளை வரை பொறுத்திருங்கள் என்று கூறுவதன் காரணம் என நினைக்கிறேன். ஒரு வேளை 280 இடங்களுக்கு மேல் BJP பெற்றுவிட்டால் கொஞ்சம் திண்டாட்டம் தான். இன்னும் 15 மணி நேரம் காத்திருப்போம்.

சரத் பவர் இப்போதைக்கு காங்கிரச்சை விட்டு வரமாட்டார். வரவேண்டியது நிறைய இருக்கிறது

அன்புடன் நண்பன்

சிவம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 15, 2014 10:29 pm

கண்டிப்பாக அ.தி.மு.க. /தி.மு.க இரண்டும் தேசிய அரசியலில் தத்தளிக்கப் போவது உறுதி.
இவங்க முட்டுக் குடுக்கும் அவசியம் மோடிக்கு ஏற்படாது.ஏற்படவே கூடாது என்பது விருப்பம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக