புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%
சிவா
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%
bala_t
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%
prajai
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
296 Posts - 42%
heezulia
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
6 Posts - 1%
prajai
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_m10இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 4:30 am

இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் 220px-Ramakrishna_at_studio

இந்தியா உலகப் புகழ் பெறுவதற்குக் காரணம் தாஜ்மஹால் போன்ற சிறந்த கட்டடங்கள் மட்டும் அல்ல, இமய மலையும் கங்கையாறும் சென்னைக் கடற்கரை போன்ற இயற்கைப் பெருமைகள் மட்டும் அல்ல. பல நுாற்றாண்டுகளாக இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து புகழொளி பரப்பி வரும் பெருமக்களே காரணம்.உண்மையை ஆராய்ந்தால், இயற்கைப் பெருமைகளும் செயற்கைச் சிறப்புகளுமான மலை, கட்டடம் முதலியவற்றை விட, அழியாப் புகழைத் தேடித் தருகின்றவர்கள் இப் பெருமக்களே” என்றார் பேராசிரியர் மு.வரதராசனார்.

விவேகானந்தரின் குருதேவர்:

இப் பொன்மொழிக்கு ஏற்ப, பாரத மணித்திரு நாட்டிற்குப் பீடும் பெருமையும், புகழும் பெருமிதமும் சேர்த்த பெருமக்களுள் - அருளாளர்களுள் - சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒருவரே ராமகிருஷ்ண பரமஹம்சர். 'சுதாதரர்' என்ற இயற்பெயரினைக் கொண்ட அவர், வங்கம் தந்த ஓர் உயரிய ஆன்மிகப் பேரொளி; அவர் இம் மண்ணுலகில் வாழ்ந்தது 50 ஆண்டுகள் 5 மாதங்கள் 27 நாட்கள் (18.02.1886 - 16.08.1936). ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்னை சாரதா தேவியாரின் அருமந்த வாழ்க்கைத் துணைவர்; வீரத் துறவி விவேகானந்தரின் குரு தேவர்.“என்னுடைய ஆசானும், எனது குருநாதரும், எனது தலைவரும், எனது லட்சியப் புருஷரும், என் வாழ்க்கையை உய்விக்க வந்த தெய்வமுமாகிய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச தேவர்” எனத் தம் குருதேவருக்குப் புகழாரம் சூட்டிப் பெருமிதம் கொள்வார் சுவாமி விவேகானந்தர். “ராமகிருஷ்ண பரமஹம்சருடைய உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமானம் என்றால் மிகையாகாது. பழைய காலத்து ரிஷிகளைப் போன்ற தபோதனர் ஒருவர் நம்முடைய காலத்தில் அவதரித்தார். அவரே ராமகிருஷ்ண பரமஹம்சர்” என்னும் மூதறிஞர் ராஜாஜியின் கூற்றும் இங்கே மனங்கொளத்தக்கதாகும்.

பக்தி நெறி:

ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை மிகவும் எளிமையானது; பக்தி நெறியும் வைராக்கியமும் ஒன்று சேர்ந்தது. அவருடைய அமுத மொழியோ மிகமிகத் தெளிவானது; 'நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த, மறைமொழி தானே மந்திரம் என்ப' என்னும் தொல்காப்பிய நெறிக்கு ஏற்ப அமைந்தது. ஆழ்ந்த அனுபவ அறிவோடு உண்மை அறிவும் வாய்க்கப் பெற்றவர் ஆகையால் பரமஹம்சரின் வாக்கில் அருமையும் எளிமையும், அழகும் ஆற்றலும் களிநடம் புரிந்து நின்றன. மிகவும் நுட்பமான பொருள்களைக் கூட எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் தெள்ள தெளிவாக எடுத்துச்சொல்லும் ஆற்றல் அவரிடம் இருந்தது. நெஞ்சை அள்ளும் உவமைகளும் கதைகளும் அவருக்கு இவ்வகையில் உற்றுழி உதவின. பதச் சோறாக, 'எம்மதமும் சம்மதம்' என்ற கருத்தைப் பரமஹம்சர் எங்ஙனம் ஓர் எளிய உதாரணத்தின் வாயிலாக விளக்குகிறார் என இங்கே காணலாம்.

மொழிகள் பல :

ஐந்தாறு மொழிகளைப் பேசுகிற மக்கள் ஓர் இடத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் அப்போது தமக்கு அருகில் உள்ளவரைப் பார்த்து ஏதோ வேண்டும் என்று கேட்டனர். ஒவ்வொருவரும் தம் நண்பரிடம் தம் மொழியிலேயே சொன்னார்கள். 'பானி லாவோ' என்றார் ஒருவர். 'தண்ணீர் கொண்டு வா' என்றார் மற்றொருவர். இப்படியே அவரவர்கள் பேசிய வார்த்தைகள் வேறு வேறு மொழிகளாக இருந்தமையால் வெவ்வேறு ஒலிகளுடன் இருந்தன. 'பானி, வாட்டர், தண்ணீர், நீள்ளு' என்பன காதில் விழும்போது வேறு ஒலிகளாகத் தானே இருக்கும்? அவர்கள் பேசிய மொழிகளைத் தெரியாத ஒருவர் அங்கே இருந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வார்த்தைகளைப் பேசி ஒவ்வொருவரையும் அனுப்பியதைப் பார்த்தார்; ஒவ்வொருவரும் வேறு பொருள்களைக் கொண்டு வரச் சொல்லுகிறார்கள் போலும் என்று எண்ணிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து அனைவரும் தண்ணீரைக் கொண்டு வந்தார்கள். “அட, ஒரே பொருளைத் தான் இவ்வளவு பேரும் கேட்டார்களா? வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாகக் கேட்டார்களே!” என்று ஆச்சரியப்பட்டார்.

எல்லாக் கடவுளரும் ஒன்றே:

தண்ணீரின் பெயரை பல்வேறு மொழியில் சொல்லும் போது அது வெவ்வேறாகக் காதில் படுகிறது. ஆனால் அந்தப் பெயருக்கு உரிய பொருளைக் காணும்போது எல்லாம் ஒன்றுதான் என்று தெரியவருகிறது. 'ஏகம் ஸத்; விப்ரா பஹ_தா வதந்தி' என்பது மறைமொழி. 'உள்ள பொருள் ஒன்றே; அறிந்தவர்கள் பலபடியாகச் சொல்கிறார்கள்' என்பது அதன் பொருள். கடவுளிடம் ஈடுபட ஈடுபட, 'எல்லாக் கடவுளரும் ஒன்றே' என்ற உண்மை அனுபவத்தில் விளங்கும். 'ஒரே கடவுளைப் பலரும் பல வகைகளில் வழிபடுகிறார்கள்' என்ற உயரிய சமரசக் கொள்கையை இங்கே ஓர் எளிய உதாரணத்தின் மூலம் உணர்த்தியுள்ளார் பரமஹம்சர். சாதாரண மக்கள் செய்ய முடியாத காரியங்களைச் செய்யும் வல்லமை 'சித்தி' எனப்படும். இத்தகைய சித்திகளிலும், அவற்றைக் கொண்டு மக்களை வியக்கும்-படியாகச் செய்வதிலும் பரமஹம்சருக்குச் சற்றும் உடன்பாடு இல்லை. 'சித்திகள் பெறுவதனால் ஆணவம் வளரும், அதனால் பக்திக்குத் தடையே ஒழிய அது இறைவனை அடைய உதவும் கருவி ஆகாது' என்பது பரமஹம்சரின் திண்ணிய கருத்து. இதனை உணர்த்த

ஒருமுறை அவர் சொன்ன கதை:ஒரு யோகி தன் குருவிடம் சென்று, “நான் பதினான்கு வருடங்கள் காட்டில் தனியாக இருந்து தவம் செய்து நீரின் மேல் நடக்கும் சித்தியை அடைந்திருக்கிறேன்” என்றானாம். அதைக் கேட்ட குருவானவர் அவனைப் பார்த்து, “மகனே! ஏன் இவ்வளவு வருத்தப்பட்டாய்? பதினான்கு வருடங்களையும் வீணாக்கி விட்டாயே! ஒன்றரையணா கொடுத்தால் ஓடக்காரன் உன்னை நீரின் மேல் கொண்டு போய் அக்கரை சேர்ப்பானே? நீ அடைந்த சித்தி ஒன்றரையணா மதிப்புத் தான்” என்றாராம்.திருவடியை அடைய வழி “சித்தி அடையும் ஆசையைக் கொண்டு யாரும் காசை வீணாக்க வேண்டா. இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்ற நோக்குடன் உண்மையான பக்தி செய்யுங்கள். அற்புதங்களைக் காட்டி மக்களைக் கவர நினைக்கும் யோகிகளிடம் செல்ல வேண்டாம்” என்பது ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானமொழி; உபதேசம்.'பல சாஸ்திரங்களைத் தெரிந்துகொள்வதால் என்ன பயன்?

இந்த வாழ்க்கை நதியைக் கடக்கத் தெரிவதுதான் அவசியம்' என்பதை உணர்த்தும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சுவையான குறுங்கதை:சிலர் படகில் கங்கையைக் கடந்து கொண்டிருந்தனர். ஒரு பண்டிதர் தன்னுடைய கல்வியறிவைத் தம்பட்டம் அடித்துக் கொண்டார்; 'வேதம், வேதாந்தம், ஆறு தரிசனங்கள் என்ற சாஸ்திரங்கள் எல்லாம் படித்திருக்கிறேன்' என்றார். 'என்ன, உனக்கு வேதாந்தம் தெரியுமா?' என்று ஒருவனிடம் கேட்டார். அதற்கு அவன், 'இல்லை ஐயா' என்றான். பிறகு, 'சாங்கியம், பாதஞ்ஜலம் தெரியுமா?' என்றார். அதற்கும் அவன், 'இல்லை ஐயா, எனக்குத் தெரியாது' என்றான். 'தரிசனம் - கிரிசனம் ஏதாவது படித்திருக்கிறாயா?' என்று கேட்டபோது அதற்கும் அவன், 'இல்லை' என்றே பதிலளித்தான். பண்டிதர் இப்படி அளந்து கொண்டே வந்தார். அந்த மனிதன் மவுனமாக இருந்தான்.அந்த நேரத்தில் பலத்த புயல் வீசத் தொடங்கியது. படகு நிலைகுலைந்து ஆடியது. அப்போது அந்த மனிதன் பண்டிதரிடம், 'ஐயா, பண்டிதரே, உமக்கு நீந்தத் தெரியுமா?' என்று கேட்டான். அதற்குப் பண்டிதர், 'தெரியாது' என்று பதிலளித்தார். 'எனக்குச் சாங்கியம், பாதஞ்ஜலம் எதுவும் தெரியாது, ஆனால் நன்றாக நீந்தத் தெரியும்' என்றான் அந்த மனிதன்.இராமகிருஷ்ண பரமஹம்சரின் இத்தகைய மந்திர மொழிகளையும் கதை-களையும் மனம் கலந்து - பொருள் உணர்ந்து - பயில்வோம்; அவற்றின் வழி வையத்துள் வாழ்வாங்கு - நல்ல வண்ணம் - வாழ்வோம். இம்மண்ணுலகிலேயே மகாகவி பாரதியார் சுட்டும் 'அமர நிலை'யினை அடைவோம்.

- முனைவர் இரா.மோகன்,
எழுத்தாளர், மதுரை.



இன்று ராமகிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக