புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
காஷ்மீரில் 50,000 பேர் மீட்பு: வெள்ளம் வேகமாக வடிவதால் மீட்புப் பணியில் முன்னேற்றம்
ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பசியில் தவிக்கும் ராணுவத்தினர் குடும்பங்கள்
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் மும்முரமாக முப்படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் 1,000 பேர் உதவியின்றி தவித்து வருகின்றனர்.
சீறிப்பாயந்த ஜீலம் நதி காஷ்மீரையே புரட்டிப்போட, தெற்கு, மத்திய காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்கள் பல வெள்ளத்தல் சூழப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள மத்திய, தெற்கு காஷ்மீர் பகுதிகளில் மட்டும் 20 ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இந்த முகாம்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது, தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முகாம்களில் இருக்கும் உணவுப் பொருட்கள் பெரும்பான்மை பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்பட்டுள்ளதால், போதிய அளவு உணவுப் பொருட்கள் இல்லாமல் ராணுவத்தினர் குடும்பங்கள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட 1000 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்" என்றார்.
50,000 பேர் மீட்பு
காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக சிந்து நதியின் கிளை நதியான ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வரலாறு காணாத பெருவெள்ளத்தில் மாநிலமே கடும் பாதிப்புக்குள்ளானது.
தற்போது அங்கு மழை குறைந்துள்ளது, வெள்ளம் வடிந்து வருகிறது. இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகே நீரில் மூழ்கிய பகுதிகளுக்குச் செல்ல முடியும். அப்போதுதான் பலி எண்ணிகையை துல்லியமாக உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவந்த பலர் தாங்கள் அனுபவித்த துயரத்தை விவரித்தனர். தாங்கள் மீட்கப்படும்போது அப்பகுதியில் மற்றும் சிலர் எழுப்பிய அபயக்குரல் அடங்கியது என்றும், எனவே அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
மீட்புக் குழுவினர் மீது தாக்குதல்:
இதற்கிடையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறைய பேர் சிக்கியிருப்பதாகக் கூறி மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கே செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் வேறு பகுதிக்கு செல்ல திட்டமிட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மீட்புப் படை வீரர் ஒருவரது கை பலமாக பாதிக்கப்பட்டது. காயமடைந்த வீரர் சிகிச்சைக்காக சண்டிகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "மீட்புக் குழுவினர் மீது மக்கள் ஆங்காங்கே தாக்குதல் நடத்திவருவது வருத்தமளிக்கிறது. மீட்புக்குழுவினருக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்றார்.
இதற்கிடையில் ஜம்மு - காஷ்மீரில் நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் ஓ.பி.சிங்கை காஷ்மீர் செல்லுமாறு அரசு பணித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பசியில் தவிக்கும் ராணுவத்தினர் குடும்பங்கள்
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் மும்முரமாக முப்படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் 1,000 பேர் உதவியின்றி தவித்து வருகின்றனர்.
சீறிப்பாயந்த ஜீலம் நதி காஷ்மீரையே புரட்டிப்போட, தெற்கு, மத்திய காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்கள் பல வெள்ளத்தல் சூழப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள மத்திய, தெற்கு காஷ்மீர் பகுதிகளில் மட்டும் 20 ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இந்த முகாம்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது, தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முகாம்களில் இருக்கும் உணவுப் பொருட்கள் பெரும்பான்மை பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்பட்டுள்ளதால், போதிய அளவு உணவுப் பொருட்கள் இல்லாமல் ராணுவத்தினர் குடும்பங்கள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட 1000 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்" என்றார்.
50,000 பேர் மீட்பு
காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக சிந்து நதியின் கிளை நதியான ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வரலாறு காணாத பெருவெள்ளத்தில் மாநிலமே கடும் பாதிப்புக்குள்ளானது.
தற்போது அங்கு மழை குறைந்துள்ளது, வெள்ளம் வடிந்து வருகிறது. இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகே நீரில் மூழ்கிய பகுதிகளுக்குச் செல்ல முடியும். அப்போதுதான் பலி எண்ணிகையை துல்லியமாக உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவந்த பலர் தாங்கள் அனுபவித்த துயரத்தை விவரித்தனர். தாங்கள் மீட்கப்படும்போது அப்பகுதியில் மற்றும் சிலர் எழுப்பிய அபயக்குரல் அடங்கியது என்றும், எனவே அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
மீட்புக் குழுவினர் மீது தாக்குதல்:
இதற்கிடையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறைய பேர் சிக்கியிருப்பதாகக் கூறி மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கே செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் வேறு பகுதிக்கு செல்ல திட்டமிட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மீட்புப் படை வீரர் ஒருவரது கை பலமாக பாதிக்கப்பட்டது. காயமடைந்த வீரர் சிகிச்சைக்காக சண்டிகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "மீட்புக் குழுவினர் மீது மக்கள் ஆங்காங்கே தாக்குதல் நடத்திவருவது வருத்தமளிக்கிறது. மீட்புக்குழுவினருக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்றார்.
இதற்கிடையில் ஜம்மு - காஷ்மீரில் நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் ஓ.பி.சிங்கை காஷ்மீர் செல்லுமாறு அரசு பணித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதவியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள்
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் வெள்ளம் படிப்படியாக வடிகிறது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஓடும் எல்லா ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஜீலம் நதியின் வெள்ளம் நூற்றுக்கணக்கான கிராமங்களை முற்றிலுமாக விழுங்கிவிட்டது. மேலும், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இந்த கன மழை, வெள்ளத்துக்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். மேலும் 2,500–க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வருகிறார்கள். அவர்களில் பலர் தங்களது வீடுகளின் கூரைகளிலும், மேல்மாடிகளிலும் ஏறி நின்று தங்களைக் காப்பாற்றும்படி தொடர்ந்து அபயக்குரல் எழுப்பி வருகிறார்கள். ராணுவ, விமானப்படை, கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் 200–க்கும் அதிகமான படகுகளில் சென்று இரவு பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனிடையே, தெற்கு காஷ்மீர் பகுதியில் நேற்று வெள்ளநீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. ஸ்ரீநகரில் சுமார் 3 அடி முதல் 5 அடி வரை நீர் மட்டம் குறைந்து இருக்கிறது. அதே நேரம் வடக்கு காஷ்மீர் பகுதியில் வெள்ள நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. ஜீலம் நதியில் தண்ணீர் அதிகரித்து செல்கிறது. இதனை கவனத்தில் கொண்டும் மீட்பு பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்பு குழுவினர் மேலும், 29 ஆயிரம் பொதுமக்களை மீட்டுள்ளனர். இதுவரையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை 76,500 பேரை மீட்டுள்ளது. உல்லார் ஏரியில் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது. மானாஸ்பால் ஏரியில் நீர்மட்டம் 3 அடி குறைந்து 18.3 அடியாக உள்ளது. ஏரியில் நீர்மட்டம் 4.3 அடி உயரம் அபாயகட்டத்தில் உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் அதே நிலையிலே உள்ளது. தெற்கு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரில் ராணுவ முகாம்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் 1000 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் மாநிலத்தில் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் வெள்ளம் படிப்படியாக வடிகிறது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஓடும் எல்லா ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஜீலம் நதியின் வெள்ளம் நூற்றுக்கணக்கான கிராமங்களை முற்றிலுமாக விழுங்கிவிட்டது. மேலும், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இந்த கன மழை, வெள்ளத்துக்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். மேலும் 2,500–க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வருகிறார்கள். அவர்களில் பலர் தங்களது வீடுகளின் கூரைகளிலும், மேல்மாடிகளிலும் ஏறி நின்று தங்களைக் காப்பாற்றும்படி தொடர்ந்து அபயக்குரல் எழுப்பி வருகிறார்கள். ராணுவ, விமானப்படை, கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் 200–க்கும் அதிகமான படகுகளில் சென்று இரவு பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனிடையே, தெற்கு காஷ்மீர் பகுதியில் நேற்று வெள்ளநீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. ஸ்ரீநகரில் சுமார் 3 அடி முதல் 5 அடி வரை நீர் மட்டம் குறைந்து இருக்கிறது. அதே நேரம் வடக்கு காஷ்மீர் பகுதியில் வெள்ள நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. ஜீலம் நதியில் தண்ணீர் அதிகரித்து செல்கிறது. இதனை கவனத்தில் கொண்டும் மீட்பு பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்பு குழுவினர் மேலும், 29 ஆயிரம் பொதுமக்களை மீட்டுள்ளனர். இதுவரையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை 76,500 பேரை மீட்டுள்ளது. உல்லார் ஏரியில் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது. மானாஸ்பால் ஏரியில் நீர்மட்டம் 3 அடி குறைந்து 18.3 அடியாக உள்ளது. ஏரியில் நீர்மட்டம் 4.3 அடி உயரம் அபாயகட்டத்தில் உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் அதே நிலையிலே உள்ளது. தெற்கு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரில் ராணுவ முகாம்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் 1000 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் மாநிலத்தில் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேர்தல் ஆணைய ஆய்வு பயணம் ரத்து
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை பதவிக்காலம் 2015 ஜனவரி 15 ந்தேதியுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து அங்கு சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆரமப கட்ட வேலைகளை தொடங்கி உள்ளது.மேலும் தேர்தல் பணிகள் குறித்து 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று காஷமீர் மாநிலம் செல்வதாக இருந்தது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். மேலும் 2,500–க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வருகிறார்கள். ராணுவ, விமானப்படை, கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் 200–க்கும் அதிகமான படகுகளில் சென்று இரவு பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளி வைப்புது என முடிவு செய்து உள்ளது.மேலும் தேர்தல் ஆய்வு பணி பயணத்தையும் தள்ளிவைத்து உள்ளனர் இந்த பயணத்திற்கான் அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது காலநிலை காரணமாக சட்டசபை தேர்தலை தள்ளிவைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் இந்த பணி தாமதமாகும் என தெரிகிறது என கூறினார்.
கடந்த முறை ஜம்மு காஷமீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. அரியான, ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கான ஆய்வு கூட்டத்தை தேர்தல் ஆணையம் ஏற்கனவே முடித்து விட்டது.அரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பை ஆணையம் விரைவில் அறிவிக்கும் என கூறப்படுகிறது.ஜார்கண்ட் மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் அறிவிப்பை தாமதமாக வெளியிடும் என தெரிகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை பதவிக்காலம் 2015 ஜனவரி 15 ந்தேதியுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து அங்கு சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆரமப கட்ட வேலைகளை தொடங்கி உள்ளது.மேலும் தேர்தல் பணிகள் குறித்து 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று காஷமீர் மாநிலம் செல்வதாக இருந்தது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். மேலும் 2,500–க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வருகிறார்கள். ராணுவ, விமானப்படை, கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் 200–க்கும் அதிகமான படகுகளில் சென்று இரவு பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளி வைப்புது என முடிவு செய்து உள்ளது.மேலும் தேர்தல் ஆய்வு பணி பயணத்தையும் தள்ளிவைத்து உள்ளனர் இந்த பயணத்திற்கான் அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது காலநிலை காரணமாக சட்டசபை தேர்தலை தள்ளிவைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் இந்த பணி தாமதமாகும் என தெரிகிறது என கூறினார்.
கடந்த முறை ஜம்மு காஷமீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. அரியான, ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கான ஆய்வு கூட்டத்தை தேர்தல் ஆணையம் ஏற்கனவே முடித்து விட்டது.அரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பை ஆணையம் விரைவில் அறிவிக்கும் என கூறப்படுகிறது.ஜார்கண்ட் மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் அறிவிப்பை தாமதமாக வெளியிடும் என தெரிகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைவரையும் மீட்கும் வரை ஓயமாட்டோம்: ராணுவம் திட்டவட்டம்
வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைத்து மக்களையும் மீட்கும் வரை ஓயமாட்டோம் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழை, அந்த மாநிலத்தை வரலாறு காணாத அளவுக்கு புரட்டி போட்டுள்ளது. அங்கு திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அங்கு பாயும் ஆறுகளிலும் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்வதால் மக்களின் குடியிருப்புகள் அனைத்தும் குட்டி குட்டி தீவுகளாக காட்சியளிக்கின்றன. இந்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 175–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ராணுவம், விமானப்படை, கடற்படை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் சற்றும் குறையாமல் மழை வெழுத்து வாங்குகிறது. இதனால் அங்கு மோசமான நிலையே நிலவுகிறது. தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. மோசமான வானிலை மற்றும் ஆர்பரித்து ஓடும் தண்ணீராலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி இந்த வெள்ள சேதத்தை தேசிய பேரிடராக அறிவித்துள்ளார். மேலும் ஆயிரம் கோடி நிவாரண உதவி தொகையாக அம்மாநிலத்திற்கு அளித்துள்ளார். மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ராணுவமும் இணைந்து மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், மீட்பு பணிகள் பற்றி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த வடக்கு ராணுவ தளபதி ஜெனரல் டி.எஸ் ஹூடா கூறுகையில், அடுத்த 48 மணிநேரத்திற்கு எங்கள் கவனம் ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதியில் இருக்கும்.ஏராளமான மக்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே வெள்ளப்பகுதியில் சிக்கியுள்ள அனைவரையும் மீட்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று தெரிவித்தார். மேலும், வெள்ள நிலைமை உடனடியாக கட்டுக்குள் வராது என்றார்.
இதனிடையே, அடுத்த 3 முதல் 5 நாட்கள் வரை மழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அங்குள்ள மக்கள் சிறிது நிம்மதி அடைந்துள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:-
வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைத்து மக்களையும் மீட்கும் வரை ஓயமாட்டோம் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழை, அந்த மாநிலத்தை வரலாறு காணாத அளவுக்கு புரட்டி போட்டுள்ளது. அங்கு திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அங்கு பாயும் ஆறுகளிலும் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்வதால் மக்களின் குடியிருப்புகள் அனைத்தும் குட்டி குட்டி தீவுகளாக காட்சியளிக்கின்றன. இந்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 175–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ராணுவம், விமானப்படை, கடற்படை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் சற்றும் குறையாமல் மழை வெழுத்து வாங்குகிறது. இதனால் அங்கு மோசமான நிலையே நிலவுகிறது. தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. மோசமான வானிலை மற்றும் ஆர்பரித்து ஓடும் தண்ணீராலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திரமோடி இந்த வெள்ள சேதத்தை தேசிய பேரிடராக அறிவித்துள்ளார். மேலும் ஆயிரம் கோடி நிவாரண உதவி தொகையாக அம்மாநிலத்திற்கு அளித்துள்ளார். மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ராணுவமும் இணைந்து மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், மீட்பு பணிகள் பற்றி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த வடக்கு ராணுவ தளபதி ஜெனரல் டி.எஸ் ஹூடா கூறுகையில், அடுத்த 48 மணிநேரத்திற்கு எங்கள் கவனம் ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதியில் இருக்கும்.ஏராளமான மக்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே வெள்ளப்பகுதியில் சிக்கியுள்ள அனைவரையும் மீட்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று தெரிவித்தார். மேலும், வெள்ள நிலைமை உடனடியாக கட்டுக்குள் வராது என்றார்.
இதனிடையே, அடுத்த 3 முதல் 5 நாட்கள் வரை மழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அங்குள்ள மக்கள் சிறிது நிம்மதி அடைந்துள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:-
வெள்ள கட்டுபாட்டு அறை எண்:- புதுடெல்லி ஜம்மு&காஷ்மீர் இல்லம்(011)-24611210 மற்றும் 24611108
ஸ்ரீநகர்-0194-2452138
ஜம்மு-0191 -2560401
உள்துறை அமைச்சக உதவி எண்கள்:011-23093054, 23092763, 23093564, 23092923, 23092885, 23093566, 23093563
ஸ்ரீநகர்-0194-2452138
ஜம்மு-0191 -2560401
உள்துறை அமைச்சக உதவி எண்கள்:011-23093054, 23092763, 23093564, 23092923, 23092885, 23093566, 23093563
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காஷ்மீர் மீட்புப் பணிகள்: மக்கள் கொந்தளிப்புக்கு ஒமர் அப்துல்லா விளக்கம்
"ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மிக மிக மோசமானது. எதிர்பாராத இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், வெள்ளப் பேரிடரை மாநில அரசு சரிவர கையாளவில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை ஒமர் திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, மீட்புப் பணியில் அரசு நிர்வாகம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருவதாக கூறினார்.
காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இது, கடந்த 109 ஆண்டுகளில் இல்லாத அளவிலான பேரழிவு என கூறியுள்ளார் ஒமர்.
காஷ்மீர் அரசு பேரிடரை சமாளிக்க சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருவது தொடர்பான கேள்விக்கு, "காஷ்மீர் மக்கள் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை. மக்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்றால் அபாய சூழலில் இருந்து மீட்கப்பட்டு பத்திரமாக எங்கோ தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
அந்த வகையில், மக்கள் பத்திரமாக இருப்பதை நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியே. இது ஒரு எதிர்பாராத பேரிடர். தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மட்டுமே தலையாய பிரச்சினை. பொது மக்களை மீட்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது" என்றார்.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம் மற்றும் கடற்படையினருடன் தொடர்பில் இருப்பதாக கூறிய ஒமர் வெள்ளம் வடிந்த பின்னர் தொற்று நோய்கள் பரவுவதை தடுப்பது மிகவும் சவாலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் வந்த பிறகே மாநில அரசு வெள்ளப் பிரச்சினையை கண்டு கொண்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒமர், "பிரதமர் வருவதற்கு முன்னரே வெள்ள மீட்புப் பணிகளை மாநில அரசு தொடங்கிவிட்டது. பிரதமர் வந்தபோது நிலைமை கட்டுக்குள் இருந்தது.
ஆனால், அதன் பிறகுதான் ஜீலம் நதி பெருக்கெடுத்து வெள்ளம் புகுந்தது. பிரதமர் ஒன்றும் காஷ்மீரில் இந்த அளவுக்கு இயற்கை பேரிடர் வரும் என ஏற்கெனவே தெரிந்து வைத்துக் கொண்டு வரவில்லை" என்றார்.
"ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மிக மிக மோசமானது. எதிர்பாராத இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், வெள்ளப் பேரிடரை மாநில அரசு சரிவர கையாளவில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை ஒமர் திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, மீட்புப் பணியில் அரசு நிர்வாகம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருவதாக கூறினார்.
காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இது, கடந்த 109 ஆண்டுகளில் இல்லாத அளவிலான பேரழிவு என கூறியுள்ளார் ஒமர்.
காஷ்மீர் அரசு பேரிடரை சமாளிக்க சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருவது தொடர்பான கேள்விக்கு, "காஷ்மீர் மக்கள் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை. மக்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்றால் அபாய சூழலில் இருந்து மீட்கப்பட்டு பத்திரமாக எங்கோ தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.
அந்த வகையில், மக்கள் பத்திரமாக இருப்பதை நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியே. இது ஒரு எதிர்பாராத பேரிடர். தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மட்டுமே தலையாய பிரச்சினை. பொது மக்களை மீட்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது" என்றார்.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம் மற்றும் கடற்படையினருடன் தொடர்பில் இருப்பதாக கூறிய ஒமர் வெள்ளம் வடிந்த பின்னர் தொற்று நோய்கள் பரவுவதை தடுப்பது மிகவும் சவாலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் வந்த பிறகே மாநில அரசு வெள்ளப் பிரச்சினையை கண்டு கொண்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒமர், "பிரதமர் வருவதற்கு முன்னரே வெள்ள மீட்புப் பணிகளை மாநில அரசு தொடங்கிவிட்டது. பிரதமர் வந்தபோது நிலைமை கட்டுக்குள் இருந்தது.
ஆனால், அதன் பிறகுதான் ஜீலம் நதி பெருக்கெடுத்து வெள்ளம் புகுந்தது. பிரதமர் ஒன்றும் காஷ்மீரில் இந்த அளவுக்கு இயற்கை பேரிடர் வரும் என ஏற்கெனவே தெரிந்து வைத்துக் கொண்டு வரவில்லை" என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விஜயகாந்த் ரூ.10 லட்சம் நிதியுதவி
ஜம்மு - காஷ்மீர் பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திடீர் மழை பொழிவால் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் கிராமங்கள் மட்டுமல்லாமல், நகரங்களிலும் வெள்ளம் சூழ்ந்து பெருத்த உயிர் சேதங்களும், பொருள் சேதங்களும் ஏற்பட்டு அம்மாநிலமே ஸ்தம்பித்துள்ளது.
உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து முப்படைகளையும் கொண்டு மீட்புபணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த மழை வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்படுத்தி உள்ளது.
வெள்ள பாதிப்பினாலும், நிலச்சரிவாலும் தீவுகளுக்குள் சிக்கிய மனிதர்கள் போல் அம்மாநிலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்பதற்கு அந்த மாநில அரசும், மத்திய அரசும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த இயற்கை சீற்ற பேரழிவில் இறந்தவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் தே.மு.தி.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
காஷ்மீர், நமது நாட்டின் முக்கிய எல்லை பகுதியாகவும், எப்போதும் விழிப்புடன் பாதுகாப்புபணியை மேற்கொள்ளும் மாநிலமாகவும் உள்ளது. அண்டைநாடுகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்கும் மாபெரும் பணியை அங்கே உள்ள ராணுவ வீரர்கள் செய்துவருகிறார்கள்.
இந்த பேரழிவில் அவர்களும் பாதிக்கப்பட்டு, இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கே இயற்கை பேரழிவு சவாலாக அமைந்துள்ளது. எனவே பணக்காரர்களும், முதலாளிகளும், வியாபாரிகளும், இளைஞர்களும் மட்டும் அல்ல, தேசநலனில் அக்கறை கொண்டுள்ள அனைவருமே பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தங்களால் இயன்ற நிதிஉதவியோ, பொருள் உதவியோ, செய்திட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இயற்கை பேரழிவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை காத்திடவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், அவர்களுக்கு உதவுகின்ற வகையில் எனது சொந்த பணத்தில் இருந்து, பாரத பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் நிதியாக வழங்குகிறேன்" இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திடீர் மழை பொழிவால் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் கிராமங்கள் மட்டுமல்லாமல், நகரங்களிலும் வெள்ளம் சூழ்ந்து பெருத்த உயிர் சேதங்களும், பொருள் சேதங்களும் ஏற்பட்டு அம்மாநிலமே ஸ்தம்பித்துள்ளது.
உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து முப்படைகளையும் கொண்டு மீட்புபணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த மழை வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்படுத்தி உள்ளது.
வெள்ள பாதிப்பினாலும், நிலச்சரிவாலும் தீவுகளுக்குள் சிக்கிய மனிதர்கள் போல் அம்மாநிலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்பதற்கு அந்த மாநில அரசும், மத்திய அரசும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த இயற்கை சீற்ற பேரழிவில் இறந்தவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் தே.மு.தி.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
காஷ்மீர், நமது நாட்டின் முக்கிய எல்லை பகுதியாகவும், எப்போதும் விழிப்புடன் பாதுகாப்புபணியை மேற்கொள்ளும் மாநிலமாகவும் உள்ளது. அண்டைநாடுகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்கும் மாபெரும் பணியை அங்கே உள்ள ராணுவ வீரர்கள் செய்துவருகிறார்கள்.
இந்த பேரழிவில் அவர்களும் பாதிக்கப்பட்டு, இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கே இயற்கை பேரழிவு சவாலாக அமைந்துள்ளது. எனவே பணக்காரர்களும், முதலாளிகளும், வியாபாரிகளும், இளைஞர்களும் மட்டும் அல்ல, தேசநலனில் அக்கறை கொண்டுள்ள அனைவருமே பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தங்களால் இயன்ற நிதிஉதவியோ, பொருள் உதவியோ, செய்திட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இயற்கை பேரழிவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை காத்திடவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், அவர்களுக்கு உதவுகின்ற வகையில் எனது சொந்த பணத்தில் இருந்து, பாரத பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் நிதியாக வழங்குகிறேன்" இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வரலாறு காணாத வெள்ளத்தில் நான்கு லட்சம் பேர் சிக்கி தவிப்பு
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள, வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளவர்களை மீட்க, ராணுவம், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், இன்னும் நான்கு லட்சம் பேர், வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தில், கடந்த சில நாட்களாக, மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதியில், வரலாறு காணாத வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின், 90 சதவீத பகுதிகள், தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதுவரை, 200 பேர் உயிரிழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. அவர்களின் வீடுகளும், உடைமைகளும் பறிபோய் விட்டன; ஏராளமானோரை காணவில்லை.
முழு வீச்சில் மீட்பு பணி:
ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், துணை ராணுவப் படையினர், போலீசார் உள்ளிட்ட, 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர், முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு, விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம், உணவுப் பொருட்கள், தண்ணீர் பாக்கெட், மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதியில், நேற்றும் பலத்த மழை பெய்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.ஸ்ரீநகர், நாட்டின் மற்ற பகுதி களுடன் முற்றிலும் தனித்து விடப்பட்டு, தீவாகி விட்டது. வெள்ளப் பாதிப்பு பகுதிகளில், நான்கு லட்சம் பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.நேற்றும், ஏராளமானோரை, ராணுவத்தினர் மீட்டனர். உதாம்பூர் பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில், 30 பேர் மண்ணுக்குள் புதைந்து விட்டதாக, மீட்பு குழுவினர் தெரிவித்தனர். மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், நேற்று மீட்பு குழுவினர், தங்கள் கவனத்தை திருப்பினர்.
மீட்பு பணிகள் குறித்து, ராணுவ உயரதிகாரி சேட்டன் கூறியதாவது:படகுகளில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகிறோம். ஒரு சுற்றுக்கு, 1,000 பேர் மீட்கப்படுகின்றனர். இன்று மட்டும், 5,000 சுற்றுக் கள், மீட்பு பணிகள் நடந்துஉள்ளன. குறிப்பிட்ட பகுதியில், யாரும் சிக்கயிருக்கவில்லை என்பதை உறுதி செய்தபின்பே, அடுத்த இடத்துக்கு மீட்புக்கு செல்கிறோம்.'சாட்டிலைட் நெட்ஒர்க்' மூலம், ஓரளவு தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ரஜோரி, பூஞ்ச், டோடா உள்ளிட்ட பகுதிகளில், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலை திறப்பு:
இதற்கிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சேதமடைந்திருந்த, லடாக்கை, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியுடன் இணைக்கும் ஸ்ரீநகர் லேக் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.
பாசமும், வெறுப்பும்!
வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை, ராணுவ வீரர்கள், தங்கள் உயிரை கொடுத்து மீட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட பலரும், கண்ணீர் மல்க, ராணுவ வீரர்களுக்கு, கைகூப்பி நன்றி தெரிவித்தனர். அதேநேரத்தில், 'ஜம்மு காஷ்மீர் மக்களின், பிரதிநிதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும், ஹுரியத் மாநாட்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள், இருக்கும் இடமே தெரியவில்லை. இதேபோல், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான, மாநில அரசும், வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை' என்றும், பொதுமக்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
நடிகை எங்கே?
பிரபல மலையாள நடிகை அபூர்வா தாமஸ். மலையேற்றத்தில் ஆர்வம் உள்ள இவர், இதுகுறித்து பயிற்சி பெறுவதற்காக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றிருந்தார். ஸ்ரீநகரில், இவர் தங்கியிருந்த ஓட்டலை வெள்ளநீர் சூழ்ந்தது. இதையடுத்து, அபூர்வா உட்பட, ஓட்டலில் தங்கியிருந்த அனைவரும், ஓட்டலின் மாடியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இரண்டு நாட்களாக, அங்கிருந்து, கேரளாவில் உள்ளவர்களுடன், அபூர்வா பேசி வந்தார். நேற்றிலிருந்து, அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதனால், அவரின் நிலை என்பது தெரியாமல், அவரின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள, வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளவர்களை மீட்க, ராணுவம், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், இன்னும் நான்கு லட்சம் பேர், வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தில், கடந்த சில நாட்களாக, மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதியில், வரலாறு காணாத வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின், 90 சதவீத பகுதிகள், தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதுவரை, 200 பேர் உயிரிழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. அவர்களின் வீடுகளும், உடைமைகளும் பறிபோய் விட்டன; ஏராளமானோரை காணவில்லை.
முழு வீச்சில் மீட்பு பணி:
ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், துணை ராணுவப் படையினர், போலீசார் உள்ளிட்ட, 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர், முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு, விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம், உணவுப் பொருட்கள், தண்ணீர் பாக்கெட், மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதியில், நேற்றும் பலத்த மழை பெய்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.ஸ்ரீநகர், நாட்டின் மற்ற பகுதி களுடன் முற்றிலும் தனித்து விடப்பட்டு, தீவாகி விட்டது. வெள்ளப் பாதிப்பு பகுதிகளில், நான்கு லட்சம் பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.நேற்றும், ஏராளமானோரை, ராணுவத்தினர் மீட்டனர். உதாம்பூர் பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில், 30 பேர் மண்ணுக்குள் புதைந்து விட்டதாக, மீட்பு குழுவினர் தெரிவித்தனர். மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், நேற்று மீட்பு குழுவினர், தங்கள் கவனத்தை திருப்பினர்.
மீட்பு பணிகள் குறித்து, ராணுவ உயரதிகாரி சேட்டன் கூறியதாவது:படகுகளில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகிறோம். ஒரு சுற்றுக்கு, 1,000 பேர் மீட்கப்படுகின்றனர். இன்று மட்டும், 5,000 சுற்றுக் கள், மீட்பு பணிகள் நடந்துஉள்ளன. குறிப்பிட்ட பகுதியில், யாரும் சிக்கயிருக்கவில்லை என்பதை உறுதி செய்தபின்பே, அடுத்த இடத்துக்கு மீட்புக்கு செல்கிறோம்.'சாட்டிலைட் நெட்ஒர்க்' மூலம், ஓரளவு தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ரஜோரி, பூஞ்ச், டோடா உள்ளிட்ட பகுதிகளில், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலை திறப்பு:
இதற்கிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சேதமடைந்திருந்த, லடாக்கை, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியுடன் இணைக்கும் ஸ்ரீநகர் லேக் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.
பாசமும், வெறுப்பும்!
வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை, ராணுவ வீரர்கள், தங்கள் உயிரை கொடுத்து மீட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட பலரும், கண்ணீர் மல்க, ராணுவ வீரர்களுக்கு, கைகூப்பி நன்றி தெரிவித்தனர். அதேநேரத்தில், 'ஜம்மு காஷ்மீர் மக்களின், பிரதிநிதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும், ஹுரியத் மாநாட்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள், இருக்கும் இடமே தெரியவில்லை. இதேபோல், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான, மாநில அரசும், வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை' என்றும், பொதுமக்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
நடிகை எங்கே?
பிரபல மலையாள நடிகை அபூர்வா தாமஸ். மலையேற்றத்தில் ஆர்வம் உள்ள இவர், இதுகுறித்து பயிற்சி பெறுவதற்காக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றிருந்தார். ஸ்ரீநகரில், இவர் தங்கியிருந்த ஓட்டலை வெள்ளநீர் சூழ்ந்தது. இதையடுத்து, அபூர்வா உட்பட, ஓட்டலில் தங்கியிருந்த அனைவரும், ஓட்டலின் மாடியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இரண்டு நாட்களாக, அங்கிருந்து, கேரளாவில் உள்ளவர்களுடன், அபூர்வா பேசி வந்தார். நேற்றிலிருந்து, அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதனால், அவரின் நிலை என்பது தெரியாமல், அவரின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய 11 மலேசிய மாணவர்கள் மீட்பு!
புதுடெல்லி, செப்டம்பர் 10 – இந்தியாவில் வட மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய 56 மலேசியர்களில் 11 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று மாலை புதுடெல்லி அழைத்து வரப்பட்டனர்.
மீதமுள்ள 43 பேரில் 26 பேர் மாணவர்களாவர். அவர்கள் அம்மாநிலத்திலியே பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையிலுள்ள மலேசியா தூதரகத்தின் தலைவர் சித்ரா தேவி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அவர்கள் அனைவரையும் வெள்ளப்பகுதியில் இருந்து மீட்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டியது. இதனால் மாநிலத்தின் அனைத்து நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இன்னும் 4 லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர். மழை வெள்ளம் படிப்படியாக குறைந்தாலும், பல இடங்களில் பல அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்பதால் மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 43,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெள்ள நிவாரண உதவி: மோடிக்கு நன்றி தெரிவித்தார் நவாஸ் ஷெரீப்!
பாகிஸ்தானில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பல மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மழை சார்ந்த விபத்துகள் ஏற்பட்டது ஒருபுறமிருக்க, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
வெள்ள பாதிப்பினால் துயரப்படும் பாகிஸ்தான் மக்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்துக்கு பதில் அளித்தும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் நவாஸ் ஷெரிப் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளதாவது:-
“பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பினால் உயிரிழந்த மக்களுக்கு அனுதாபம் தெரிவித்தும், துயரப்படும் பாகிஸ்தான் மக்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது எனவும் நீங்கள் எனக்கு எழுதியிருந்த நேற்றைய கடிதத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல், இந்திய-பாகிஸ்தான் எல்லையோரம் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இந்த வெள்ளத்தினால் உயிரிழப்பும், உடமையிழப்பும் ஏற்பட்டுள்ளதையும் அறிவேன்.
இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புப் பணிகளுக்கும், நிவாரணத்துக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும் வகையில்,
இயற்கை பேரிடர்களை சந்திக்கும் மனத்திறனை நமது மக்களுக்கு உண்டாக்கும் வகையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பதவி விலகலா?
» ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
» மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர்: அமித் ஷா அறிவிப்பின் சாராம்சம்
» காய்கறி சாகுபடி செய்வதின் முக்கியத்துவத்தை விளக்கும் சமையலறை தோட்டம்: ஜம்மு-காஷ்மீர் அரசு அறிமுகம்
» காஷ்மீர் ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்டுகள்
» ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
» மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர்: அமித் ஷா அறிவிப்பின் சாராம்சம்
» காய்கறி சாகுபடி செய்வதின் முக்கியத்துவத்தை விளக்கும் சமையலறை தோட்டம்: ஜம்மு-காஷ்மீர் அரசு அறிமுகம்
» காஷ்மீர் ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்டுகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|