புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_m10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10 
64 Posts - 50%
heezulia
தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_m10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_m10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_m10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_m10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_m10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_m10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_m10தனித்துவமான தமிழ் சினிமா...!!! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்துவமான தமிழ் சினிமா...!!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Oct 11, 2014 6:49 pm

தனித்துவமான தமிழ் சினிமா...!!! AGxNTcC

எந்த ஒருமனிதனும் 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டே இருக்கமுடியாது. அதுபோல, 24 மணி நேரமும் ஓய்வு எடுத்துக்கொண்டோ, அல்லது தூங்கிக்கொண்டோ இருக்கமுடியாது. அவனுடைய உடலும், உள்ளமும் சோர்வடையாமல் உற்சாகமாக இருக்கவேண்டுமானால், ஏதாவது ஒரு பொழுதுபோக்கு நிச்சயமாக தேவை. பொழுதுபோக்கில் முக்கிய இடத்தில் இருப்பது சினிமாதான். டெலிவிஷனில்கூட சினிமா பார்ப்பதே முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்திய சினிமா கடந்த ஆண்டு 100 வயதை தாண்டிவிட்டது. ஆங்கிலேயர் தங்கள் காலடியை இந்தியாவுக்குள் வைத்து, அவர்கள் ஆட்சியை கொண்டுவந்தவுடன் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கு பல மிஷனரிகளும் வந்தனர். அவர்கள் கிறிஸ்தவ மதம் தொடர்பான குறிப்பாக ஏசுநாதர் பற்றிய மவுன படங்களை, ஊர் ஊருக்கு திரையில் போட்டு காட்டினார்கள். அப்போது பல இந்துக்களுக்கு நம் தெய்வங்களை இப்படி திரையில் பார்க்கமுடியாதா? என்று ஏக்கம் இருந்தது.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே என்ற மராத்தியரும் அந்த கனவில்தான் 1912–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லண்டனுக்கு சென்று சலன படங்கள், அல்லது ஊமை படங்கள் என்று அழைக்கப்படும் படங்களை தயாரிக்க படித்துவிட்டு, அதற்கான கருவிகள், கச்சா பிலிம்களை வாங்கிக்கொண்டு இந்தியா திரும்பினார். தன்னுடைய முதல் ஊமைப்படமான ராஜா ஹரிசந்திராவை தயாரித்து 1913–ம் ஆண்டு மே மாதம் 3–ந் தேதி வெளியிட்டார். ஹரிசந்திரா கதை அனைவருக்கும் தெரியும் என்பதால், ஊமை படமாக இருந்தாலும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதன்காரணமாக இந்தியா முழுவதிலும் அனைத்து இடங்களிலும் பலர் ஊமை படங்களை தயாரிக்க முற்பட்டனர். தமிழ்நாட்டில் இத்தகைய ஊமை படத்தை முதலில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு ஸ்டுடியோவை அமைத்து, வேலூரைச்சேர்ந்த நடராஜ முதலியார் கீசகவதம் என்ற படத்தை தயாரித்து 1919–ம் ஆண்டு வெளியிட்டார். முதல் தமிழ் பேசும் படமாக காளிதாஸ் என்ற படம் 1931–ம் ஆண்டு வெளிவந்தது. அதன்பிறகு தமிழ் சினிமாவுக்கு ஏறுமுகம்தான். ஒருபக்கம் இந்தி படங்களும், மற்றொரு பக்கம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்பட அனைத்து மொழிப்படங்களும் அனைத்து தொழில் நுட்பங்களிலும் தயாரிக்கப்பட்டு நடிகர்களும், நடிகைகளும் கொடிகட்டிப் பறந்தனர்.

இந்த நிலையில், தற்போது ஐ.நா.வின் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், இந்திய படங்களில் பெண்களை மிகவும் செக்சியாக காட்டுகிறார்கள்,
35 சதவீத பெண் கதாபாத்திரங்களை ஆடை குறைப்போடுதான் காட்டுகிறார்கள், பெண் கதாபாத்திரங்களுக்கு 24.9 சதவீதம்தான் உரையாடல் வழங்கப்படுகிறது, பெண் தயாரிப்பாளர்கள், பெண் எழுத்தாளர்கள் எல்லாமே குறைவாக இருக்கிறது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் எதுவுமே தமிழ் சினிமாவுக்குப் பொருந்தாது. சினிமா பார்ப்பது என்பது ஒரு பொழுது போக்குக்குத்தானே தவிர, நீதி போதனைகளை படிப்பதற்காக செல்லும் இடம் அல்ல. திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவதற்கு முன்பு, சென்சார் சர்டிபிக்கேட்டு பெறவேண்டும். அதற்கென சில விதிமுறைகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காட்சியும் குறிப்பாக கதைக்கு தேவையான கற்பழிப்பு, அல்லது கற்பழிப்பு முயற்சி, சண்டை போன்ற காட்சிகள் எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்பதற்கு தெளிவான விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிகளை அப்படியே பின்பற்றினாலே எந்த குறைக்கும் இடம் இருக்காது.

சினிமா பொதுமக்களிடம் சிறந்த பொழுதுபோக்காக கருதப்படுவதால்தான், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 281 தமிழ்படங்கள் வெளிவந்துள்ளன. தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு தனியாக ஒரு ஆய்வு தேவையில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு எத்தகைய படங்கள் ஓடுகின்றன என்பதைப் பார்த்தாலே புரிந்துவிடும். மக்களின் ரசனைக்கேற்ப விதிகளுக்குட்பட்டு மக்களின் பொழுதுபோக்குக்காக இன்னும் தரமான திரைப்படங்களை தமிழ் திரைஉலகம் தயாரித்து, தமிழ் சினிமா தனித்துவம்மிக்கது என்ற பெருமையை கொண்டுவரவேண்டும். அதற்கு சென்சார் போர்டின் பங்களிப்பும் மிகவும் அத்தியாவசியமானது.

நன்றி-தினத்தந்தி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக