புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மர்பி விதிகள் Poll_c10மர்பி விதிகள் Poll_m10மர்பி விதிகள் Poll_c10 
74 Posts - 59%
heezulia
மர்பி விதிகள் Poll_c10மர்பி விதிகள் Poll_m10மர்பி விதிகள் Poll_c10 
41 Posts - 33%
T.N.Balasubramanian
மர்பி விதிகள் Poll_c10மர்பி விதிகள் Poll_m10மர்பி விதிகள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மர்பி விதிகள் Poll_c10மர்பி விதிகள் Poll_m10மர்பி விதிகள் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மர்பி விதிகள் Poll_c10மர்பி விதிகள் Poll_m10மர்பி விதிகள் Poll_c10 
116 Posts - 60%
heezulia
மர்பி விதிகள் Poll_c10மர்பி விதிகள் Poll_m10மர்பி விதிகள் Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
மர்பி விதிகள் Poll_c10மர்பி விதிகள் Poll_m10மர்பி விதிகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மர்பி விதிகள் Poll_c10மர்பி விதிகள் Poll_m10மர்பி விதிகள் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மர்பி விதிகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 23, 2009 8:54 am

1947 முதல் 1949 வரை MX981 என்னும் புராஜக்ட் எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் (முராக் எனும் இடத்தில்) ஒரு அறிவியல் சோதனை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.

அதில் எட்வர்ட் மர்பி அவர்கள் மின்சார மீட்டர்களைப் பார்க்கும் வேலை செய்து வந்தார். அதில் ஏற்பட்ட ஒரு தவறுக்கு அவரது உதவியாளரைக் காரணம் காட்டி சொன்னதே முதல் மர்பி விதியாகும். அந்த விதி, "If that guy has any way of making a mistake, he will." அதன் பின்னரே, மிகவும் பிரசித்தி பெற்ற "ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பிருக்குமேயானால், அது தவறாகவே நடக்கும்" - "If it can go wrong, it will" போன்ற விதிகள் அவரால் சொல்லப்பட்டன.


ஆனால் இது வெளியே வந்ததற்கு முக்கியக் காரணம், அவரது மேலதிகாரி, ஸ்டேப் (Stapp) என்பவர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தனது உதவியாளர் மர்பியை மறக்காமல் குறிப்பிட்டு, அவரது இந்த விதிகளைத் தாங்கள் உதாசீனப்படுத்தாமல் கவனத்துடன் செயல்பட்டதால் தங்களால் சாதிக்க முடிந்தது என்று கூறியது தான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 23, 2009 8:54 am

1. ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பு இருக்குமேயானால் அது தவறாகவே நடக்கும்.

2.
நிறைய விஷயங்கள் தவறாக நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக்கொண்டால்
நம்மை எது அதிகமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறதோ அதுவே தவறாக நடக்கும்!

3. ஒரு விஷயம் தவறாக நடக்கவே வாய்ப்பில்லையென்றால் அது நிச்சயம் தவறாகவே நடக்கும்!

4.
நாம் ஒரு விஷயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது
என்று கணித்தோமேயானால் அது எல்லாவற்றையும் மீறி நாம் எதிர் பாராத வகையில்
எதிர்பாராத நேரத்தில் ஐந்தாவது தவறு வரும்.

5. எந்த விஷயமும் மாறாத பட்சத்தில் நிகழ்வுகள் எப்போதுமே மோசமான கட்டத்திலிருந்து மிக மோசமான கட்டங்களுக்கே செல்லும்.

6. எல்லாமே சரியாக நடப்பது போல் தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

7. இயற்கை எப்போதுமே தனக்குள் தவறை ஒளித்து வைத்துள்ளது. ஆனால் அது எப்போதுமே அதை அதிக நேரத்திற்கு மறைத்து வைப்பதில்லை.

8. புன்னகை புரியுங்கள். நாளை இதை விட மோசமாகத் தான் இருக்கும்.

9. எல்லா விஷயங்களும் ஒரே நேரத்தில் தான் தவறாக நடக்க ஆரம்பிக்கும்.

10. உடைபடும் பொருளும் அதன் மதிப்பும் எப்போதுமே எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

11. எந்த ஒரு விஷயத்தையும் முட்டாள்தனமே இல்லாமல் படைக்க இயலாது. ஏனென்றால் முட்டாள்கள் அவ்வளவு அறிவு ஜீவிகள்.

12. எந்த ஒரு விஷயமும் நீங்கள் உணர்வது போல் அவ்வளவு எளிதில்லை.

13. ஒவ்வொரு தீர்வுமே ஒரு பிரச்சினைக்கு வழிகாட்டி.

14. ஒரு தாளில் உள்ள தகவல் எவ்வளவு தூரம் உங்களால் படிக்க இயலாமல் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அது முக்கியத்துவம் வாய்ந்தது!

15. வெண்ணெய் தடவிய பிறகு கீழே விழும் ரொட்டி எந்தப் பக்கம் தரையில் விழும் என்பது உங்கள் கார்பெட்டின் விலையைப் பொருத்தது!

16. கிழே விழும் ஒரு பொருள் எந்த இடத்தில் விழுந்தால் அதிக நட்டத்தைக் கொடுக்குமோ அந்த இடத்தில் தான் விழும்.

17. எந்த ஒரு தொலைந்த பொருளும் அதற்கான மாற்றை வாங்கியவுடனேயே கிடைத்து விடும்.

18. நீங்கள் தொலைத்த இடத்தில் தான் தேடவேண்டும்.

19.
நீங்கள் எவ்வளவு அலைந்து கஷ்டப்பட்டு ஒரு பொருளை வாங்கினாலும் நீங்கள்
வாங்கியவுடன் மலிவாக இன்னொரு இடத்தில் கிடைத்தே தீரும். (அது உங்கள்
மனைவியின் கண்களில் தான் முதலில் படும்!)

20. நீங்கள் ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தால் அடுத்த வரிசை தான் வேகமாக நகர ஆரம்பிக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 23, 2009 8:55 am

21. உங்களுக்கு ஒரு கடன் கிடைக்க வேண்டுமானால் அது உங்களுக்கு தேவையில்லை என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும்.

22. அது சிக்கிக் கொண்டால் அழுத்தம் கொடுங்கள். உடைந்து விட்டால்?! எப்படியும் மாற்றத் தானே போகிறீர்கள்! ஹி ஹி.

23. ஒரு பழுதான பொருளை பழுது பார்ப்பவரிடம் காட்டும் போது (மட்டும்) அழகாக வேலை செய்யும்!

24.
எந்த ஒரு முட்டாளும் கூட பயனடையுமாறு ஒரு விஷயத்தை உங்களால் கண்டுபிடிக்க
முடிந்தால் முட்டாள்கள் மட்டுமே அதில் பயன் பெற முடியும்.

25. எல்லொரிடமும் பணக்காரனாவதற்கான வழிமுறை இருக்கிறது. ஆனால் அது பயன் மட்டும் தராது!

26. முட்டாள்களுடன் விவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். பார்ப்பவர்களுக்கு (யார் முட்டாள் என்று) வித்தியாசம் தெரியாமல் போய் விடும்.

27. நீங்கள் எந்த விளையாட்டில் நன்றாக விளையாடினாலும் அது தனியாக விளையாடும் போது மட்டுமே நிகழும்.

28. நீங்கள் யாரைக் கவுக்க வேண்டும் (?!) என்று நினைத்து விளையாடிக் காட்டுகிறீர்களோ அப்போது தான் தப்பாக விளையாடுவீர்கள்.

29. நீங்கள் செய்யும் அரிய பெரிய கண்டுபிடிப்புகள் உடனே மறந்து போகும். உப்புக்குச் சப்பான விசயங்கள் மறப்பதே இல்லை.

30. நீங்கள் எவ்வளவு தாமதமாகச் செல்கிறீர்களோ அவ்வளவே தான் நெரிசலும் இருக்கும்.

31. நீங்கள் எவ்வளவு முட்டாள்தனமாக நடந்துகொள்வீர்களோ அவ்வளவு தூரம் அனைவரும் கவனிக்கும் படி நடந்து கொள்வீர்கள்.

32. தபால் பெட்டி எப்போதுமே சாலையின் மறுபுறத்தில் தான் இருக்கும்.

33. நீங்கள் பட்டங்களை வேண்டுமானால் வாங்கலாம். மூளையை வாங்க முடியாது.

34. குழப்பங்கள் நேர்த்தியாக இருப்பதனால் எப்போதுமே வெற்றியடைகின்றன.

35. நீங்கள் புது செருப்பு அணியும் போது தான் அனைவரும் அதை மிதித்து அழுக்காக்குவார்கள்.

36. எது செய்தாலும் நடக்கவில்லையா? சுத்தியலுக்கு வேலை வந்து விட்டது என்று அர்த்தம்.

37. நீங்கள் எந்த விதிகளை முழுமையும் படித்து முடிக்கிறீர்களோ உடனே அது மாற்றப்பட்டிருக்கும்.

38. எந்த ஒரு வேலையையும் செய்து முடித்தவுடன் அதை எளிதாக முடிப்பதற்கான வழி தென்படும்.

39. காற்று எப்போதுமே உங்கள் விக்குக்கு எதிர்புறமாகவே வீசும்.

40. ஒரு கண்ணாடி ஜன்னலில் அழுக்கு இருப்பதாகத் துடைத்தால் அது ஜன்னலின் மறுபுறத்தில் தான் இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 23, 2009 8:55 am

41. ஒரு விலை மதிக்க முடியாத பொருள் எடுக்க முடியாத இடத்தில் விழுந்து விட்டதென்றால், அந்தப் பொருளுக்கும் உங்களுக்கும் உள்ள தூரம் ஒரு விரற்கிடைக்கும் குறைவாகவே இருக்கும். அவ்வாறு இல்லாமல் குறைவாக இருந்ததென்றால் நீங்கள் தொட்டவுடன் அந்த தூரத்திற்கு அது சென்று விடும்.

42. உங்கள் குடையின் அளவுக்கும் மழையின் அளவுக்கும் எப்பொதுமே எதிர்விகிதம் தான்.

42. எந்த ஒரு சிறிய பிரச்னைக்கும் பின்னாலும் ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.

43. உங்கள் நகத்தை வெட்டிய ஒரு மணி நேரத்தில் அதை வைத்து செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு வந்து சேரும்!

44. உங்களுக்கு தேவையான கோப்பு எப்போதுமே அவிழ்க்க முடியாத கட்டுக்கு அடியில் தான் இருக்கும்.

45. பொது அறிவு அத்தனை பொதுவானது அல்ல!

46. அதிகாரம் என்பது எடுத்துக் கொள்ளப்படுவது. கொடுக்கப்படுவதே இல்லை.

47. இரண்டு சரியானவைகள் சேர்ந்து ஒரு தவறாவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் இரு தவறுகள் சேர்ந்தால் மூன்றோ, நான்கோ ஆவதற்குத் தான் வாய்ப்பு இருக்கிறது.

48. உண்மை உங்கள் பக்கம் இருந்தால் யாருமே அதை நம்புவதில்லை.

49. உலகில் இரண்டு விஷயங்கள் அதிகம் பரவி இருக்கிறது. ஒன்று - ஹைட்ரஜன், இரண்டு - முட்டாள்தனம்.

50. உங்கள் செயலில் 50% சரியாக நடக்க வாய்ப்பிருக்கின்றது என்றால் 75% தவறாகவே செய்வீர்கள்.



51. நீங்கள் ஒரு விஷயம் தவறாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்த்தும் அது சரியாகவே நடந்ததென்றால், அது தவறாகவே நடந்திருக்குமேயானால் உங்களுக்கு லாபத்தை ஈட்டித் தந்திருக்கும்.


52. முட்டாள்தனத்திற்கும் அறிவுஜீவித்தனத்திற்கும் உள்ள ஒரே வேற்றுமை அறிவுஜீவித்தனத்திற்கு எல்லை உண்டு.

53. யார் ஒருவரால் முடிவு எடுக்க இயலாதோ அவரால் தவறுகளை செய்யவே முடியாது.

54. ஓராயிரம் வருடத்துக்கு மேலும் ஒரு விஷயம் தவறாக நடக்காமல் சரியாக நடந்து வந்து கொண்டிருக்கிறதென்றால் அது இப்போது தவறாக நடந்து விடும்.

55. நீங்கள் தவறு நடந்து கொண்டிருக்கும்போது தான் அந்த விஷயம் சரியாக நடந்து கொண்டிருப்பதாக உணர்வீர்கள்.

56. இந்த விதிகளைத் தெரிந்து வைத்திருப்பதால் உங்களுக்கு ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை.

57. உங்களுக்கு முன்னால் வரிசையில் நிற்பவர் மட்டுமே இருப்பவர்களிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்வார்.

58. கவலையே படாதீர்கள். எந்த ஒரு பிரச்னைக்கும் அதைவிட ஒரு பெரிய பிரச்னை தான் தீர்வாக அமையும்.

59. மர்பி விதிகள் பற்றி பார்க்க நினைக்கும் போது மட்டும் இந்த பக்கம் திறக்காமல் இருக்கும்!

60. வெற்றியின் பாதை எப்போதுமே சீரமைப்பில் இருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 23, 2009 8:56 am

61. நீங்கள் ஒரு வேலையைச் சரியாகச் செய்தால் அதைத் தான் தான் செய்தேன் என்று மார்தட்டிக் கொள்ள ஒருவர் இருப்பார். அதில் பிரச்னை வரும் வரை. அதற்கு பின் நீங்கள் தான் பொறுப்பு.

62. மர்பி விதிகள் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். எப்படியும் அதன் படி நடக்கத் தான் போகிறது.

63. ஒரு மேதாவி என்பவர் யாரென்றால் யார் ஒருவர் நுணுக்கமான விஷயங்களைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறாரோ அவர் தான். எவ்வளவு நுணுக்கம் என்றால் "ஒன்றுமில்லை " என்பது வரை. அதாவது ஒன்றுமில்லாத விஷயத்தை அதிகம் அறிந்து வைத்திருப்பவர் தான் மேதாவியாம்!

64. ஒருவரிடம் 300 கோடி நட்சத்திரங்கள் இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள் நம்பி விடுவார். ஆனால் பக்கத்து மேசையில் தற்போது தான் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள், அதைத் தொட்டுப்பார்க்காமல் விட மாட்டார்!

65. எந்த ஒரு வேலையும் மதிப்பீடுக்குள்ளும், நேரத்திற்குள்ளும் முடிக்கப்பட்டதே இல்லை.

66. ஒரு நிர்வாகத்தின் மூட நம்பிக்கையே அப்படி ஒரு நிர்வாகம் இருப்பதாக அனைவரும் கருதுவது தான்.

67. புது இயந்திரங்கள் புது வித பிரச்னைகளையே உருவாக்கும்.

68. தவறு செய்தல் மனித இயற்கை. ஆனால் அது பூதாகரமாக உருவெடுக்க ஒரு கணினி தேவை.

69. ஒரு கணினி 20 ஆட்கள் 20 ஆண்டுகளாக செய்ய முடியாத தவறுகளைக்கூட 2 விநாடிகளில் செய்து முடித்து விடும்.

70.ஒரு விஷயத்தில் மேதாவியைத் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தால் யார் அந்த வேலைக்கு அதிக பணச் செலவும், நேரமும் ஆகக்கூடும் என்று கணிக்கிறாரோ அவரையே தேர்ந்தெடுங்கள்.


71. உங்களுக்கு எந்த வாடிக்கையாளர் லாபம் அதிகம் அளிப்பாரோ அவரைத் தான் நமது எதிராளி முதலில் தொடர்பு கொள்வார்.

72. எந்த ஒரு எளிய விதியும் கஷ்டமான வார்த்தைகளாலேயே விளக்கப்பட்டிருக்கும்.

73. பழுதாகாத எந்த ஒரு பொருளையும் பழுது பார்க்காதீர்கள். ஏனென்றால் அது பழுதாகும் சமயத்தில் உங்களால் பழுது பார்க்க இயலாது.

74. தண்டவாளத்தை மட்டும் பார்த்து ரயில் எந்தப்புறம் சென்றது என்று சொல்ல இயலாது.

75. நீங்கள் சரியாகக் குழம்பவில்லை என்றால் உங்களுக்கு அனைத்துத் தகவல்களும் சரியாக வந்து சேரவில்லை என்று அர்த்தம்.

76. எந்த ஒரு செயலியின் புதுப் பதிப்பும் நீங்கள் எப்போதும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் கட்டளையை மாற்றியமைப்பதாகவே இருக்கும்.

77. இந்த அவசர உலகத்தில் நமக்கு என்ன தேவை என்பதை மட்டும் நம்மால் படிக்க முடிவதில்லை.

78. எந்த ஒரு எளிதான விஷயத்தையும் கஷ்டமான விஷயமாக்குவது எளிது. ஆனால் கஷ்டமான காரியங்களை எளிதாக்குவது அவ்வளவு எளிதல்ல.

79. ஒரு இயந்திரத்தின் அடிக்கடி மாற்ற வேண்டிய பொருள் கைக்கு எளிதில் எட்டாத இடத்திலேயெ இருக்கும்.

80. ஒரு ரூ.10,000/- மதிப்புள்ள பொருளைக் காக்க ரூ.10/- மதிப்புள்ள ஃப்யூஸ் போட்டால் அது ரூ.10/- ஃயூஸைக் காக்க 10,000/- மதிப்புள்ள பொருள் வெடித்துவிடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 23, 2009 8:57 am

81. பிரதி எடுக்கும் இயந்திரம் முக்கியமான பக்கம் வரும் போது மட்டுமே சிக்கிக் கொள்ளும்.

82. உங்களை விட்டால் இந்த இடத்துக்குத் தகுதியான ஆள் வேறில்லை என்று நிர்வாகம் நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்ளாதீர்கள். நடந்து கொண்டால் பின்னர் எப்படி உங்களுக்கு உத்தியோக உயர்வு அளிக்க இயலும்?

83. உங்களுக்கு சம்பள உயர்வு கொடுக்கப்பட்ட மாதத்திலிருந்து இறுதியில் பையில் இருக்கும் பணம் குறைவாகவே இருக்கும்.

84. எந்த கடிதத்திலும் இரண்டு கேள்விகளை மறந்தும் கேட்டு விடாதீர்கள். எந்தக் கேள்விக்கு மிகவும் பதிலை எதிர்பார்த்திருக்கிறீர்களோ அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் இருக்காது.

85. முதலாளி உற்பத்தி தரத்தைப் பற்றி சொல்லும்போது அவரைப் பற்றி சொல்கிறார் என்று நினைத்து விடாதீர்கள்.

86. முதலாளி சொன்னால் ஆண்டவன் சொன்ன மாதிரி.

87. தவறுதல் மனித இயல்பு. ஆனால் மன்னித்தல் நிறுவனத்தின் வழக்கம் இல்லை.

88. கடைசியாக நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் தான் எந்தத் தவறுக்கும் பொறுப்பாளி. மீண்டும் வேறொருவர் வெளியேறும் வரை.

89. நீங்கள் நல்லவராக இருந்தால் அவ்வளவு வேலையும் உங்களிடம் தான் ஒப்படைக்கப்படும். ரொம்ப நல்லவராய் இருந்தால் வேலையை விட்டு வெளியேறிவிட வேண்டியது தான்.

90. மக்கள் ஒரு முறை செய்த தவறு மற்றும் ஒரு முறை செய்வதில்லை. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து முறைகள் என்று தான் செய்வார்கள்.

91. புதன்கிழமை ஏன் யாருக்குமே உடல்நலக்குறைவே ஏற்படுவதில்லை?

92. விதிகளை அனுசரிப்பதால் மட்டுமே வேலை முடிந்து விடாது.

93. உங்கள் பதவியின் பெயர் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவு தூரம் உங்கள் வேலை முக்கியமில்லாததாக இருக்கும்.

94. விளம்பரத்தில் ஒரு சலுகையைப் பார்த்து விட்டு அவசரமாக போனால் தான் தெரியும் அந்த சலுகை நேற்றுடன் முடிந்தது என்றும் அந்தப் பொருளின் விலை அதிகரித்து விட்டது என்றும்.

95. தபாலில் காசோலைகளை விட பட்டி(பில்?)களே அதிக வேகத்தில் வந்து சேரும்.

96. அனைத்து முக்கியமான வேலைகளும் வெள்ளிக்கிழமை மாலை உங்களுக்கு வந்து சேரும். அவை யாவும் மறு திங்கட்கிழமை காலைக்குள் முடிக்கப்பட வேண்டியிருக்கும்.

97. வேலையைக் கச்சிதமாக முடித்தவுடன் சம்பள உயர்வைப் பற்றி பேசவே பேசாதீர்கள்.

98. முதலாளி எப்போது சிடுசிடு என்று இருக்கிறாரோ அது தான் சம்பள உயர்வு பற்றிப் பேச சரியான நேரமாகும்.

99. பிரச்னை இருந்தால் தானே உங்களைத் தேட வேண்டும்? எனவே பிரச்னை வரும் நேரமே சம்பள உயர்வைப் பற்றி விவாதிக்க சரியான நேரமாகும்.

100. வெள்ளத் தனையது மலர் நீட்டம். உங்கள் வருமானத் தனையது உங்கள் செலவு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 23, 2009 8:57 am

101. ஆசிரியருக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும் பாடம் மாணவர்களுக்கு மிகவும் அறுவையாகவே இருக்கும்.

102. பாடம் நடத்துவதற்கு ஆசிரியர் எடுத்துக்கொள்ளும் நேரமும் அதை மாணவர்கள் பதிய வைத்துக் கொள்ளும் அளவும் எப்போதும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

103. மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்கினால் அதன் பெருமை மாணவர்களையே சாரும். குறைந்த மதிப்பெண் வாங்கினால் வாத்தியார் தான் சரியாக நடத்தவில்லை.

104. எந்த மாணவனை அடிக்க ஆசிரியர் கையை ஓங்குகிறாரோ அவன் தான் பள்ளியின் தாளாளரின் பையனாக இருப்பான்.

105. புதிதாக நமது பள்ளிக்கு வந்து சேரும் மாணவர்கள் இதற்கு முன் எதுவுமே நடத்தாத பள்ளியிலிருந்து தான் வருவார்கள்.

106. நல்ல மாணவர்கள் வெளியேறிக் கொண்டே இருப்பார்கள்.

107. வகுப்பு நேரத்தை விட ஓய்வு நேரம் மிக அதிகமாக ஓடும்.

108. ஒரு வகுப்பில் 20 பேர் தான் இருக்க முடியும் என்றிருந்தால் உங்கள் விண்ணப்ப எண் 21 ஆக இருக்கும்.

109. இறுதித் தேர்வில் 80% கேட்கப்படும் கேள்வி நீங்கள் வராத அந்த ஒரு நாளில் நடத்தப்பட்ட பாடத்திலிருந்தும், நீங்கள் படித்திராத அந்த ஒரே ஒரு புத்தகத்திலிருந்தும் தான் கேட்கப்படும்.

110. () நீங்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம் என்றிருந்தால் நீங்கள் புத்தகத்தை மறந்து வைத்து விடுவீர்கள்.

() நீங்கள் வீட்டில் வைத்தே தேர்வு எழுதலாம் என்றிருந்தால் வீட்டையே மறந்து விடுவீர்கள்.

() இணையத்தில் வைத்து எழுதப்படும் தேர்வில் உங்கள் கடவுச் சொல் மறந்து போகும்(!)


111. அம்மாவிடம் இருந்து நீங்கள் இரண்டே சமயங்களில் தான் அறிவுரை பெற முடியும். நீங்கள் விரும்பும்போதும் விரும்பாத போதும்.

112. உங்கள் அம்மா ஒருவர் தான் உங்களை விட உங்களைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருப்பவர் ஆவார்.

113. நீங்கள் கேட்டுக் கடைபிடிக்காத அறிவுரை மட்டுமே உங்கள் அம்மாவிடம் இருந்து வந்த மிகச் சிறந்த அறிவுரையாக இருக்கும்.

114. நீங்கள் அம்மாவிடம் ரகசியத்தை மறைத்து விட்டதாக நினைக்கிறீர்களா? உங்கள் உள்ளாடையை யார் மாட்டி விட்டது - மறந்து விட்டீர்களா?

115. உங்கள் காதலி ஒரு தொலைபேசி எண்ணைக் கூறும் போது தான் அதை சேமிக்க ஒரு தாளும் உங்களிடம் இருக்காது.

116. உங்கள் கணிணியின் வன்பொருள் ஏதாவது பழுது பட்டால் அதைப் பார்க்கும் பழுது பார்ப்பவர் மென்பொருளைக் குறை கூறுவார்.

117. முந்தைய விதியை மாற்றிப்போட்டுக்கொள்ளுங்கள்!

118. ஒரு கணிணி மென்பொருளில் கண்டுபிடிக்கப்படாத தவறுகளின் எண்ணிக்கைக்கு அளவே கிடையாது.

119. ஏற்கனவே தாமதமாக இருக்கும் ஒரு மென்பொருள் வேலை புதிதாக ஆட்களைச் சேர்த்தால் இன்னும் தாமதமாகும்.

120. ஒரு கணிணியைப் பழுது பார்க்கும் ஒரு நபருக்கும் கணிணிக்கும் இடைப்பட்ட தூரமும் அக்கணிணியில் ஏற்படும் பழுது நீங்குவதும் எப்பொதும் எதிர் விகிதத்திலேயே இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 23, 2009 8:58 am

121. நீங்கள் அதிகம் விரும்பும் செயலியை இயக்குவதற்கு தேவையான நினைவிடம் உங்களிடம் எப்போதும் இருக்காது.

122. நீங்கள் நினைவிடம் வாங்கி விட்டால் வன் தட்டில் இடமிருக்காது.

123. உங்கள் தரவுகள் நினைவிடத்துக்கு தகுந்தாற்போல் விரிவடைந்து கொள்ளும்.

124. உங்களிடம் நினைவிடமும் இருந்து, வன் தட்டில் இடமும் இருந்தால் அந்த மென்பொருள் இயங்காமல் உங்கள் கணிணியையும் செயலிழக்கச் செய்துவிடும்.

125. அவ்வாறு செயலிழக்கச் செய்யாது இருந்தால் அது அதற்கான தக்க தருணத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


126. நீங்கள் எவ்வளவு தான் பேரம் பேசி வாங்கினாலும் நீங்கள் வாங்கியவுடன் கணிணியின் விலை குறைந்து விடும்.

127. கணிணியில் உள்ள ஒரு பாகத்தின் உபயோகமிழக்கும் வேகமும் அதன் விலையும் எப்போதும் நேர் விகிதத்திலேயே இருக்கும்.

127. ஒரு மென்பொருளினை சந்தைப்படுத்துவதற்கு முன் 1000 நபர்கள் அதை சோதித்திருந்தாலும் அதை விலை கொடுத்து வாங்கி உபயோகிப்பவரே அனைத்து பிழைகளையும் கண்டுபிடிப்பார்.

128. உங்கள் கணிணியில் பழுதாகும் பொருள் மட்டுமே உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதும் அதன் இருப்பு இல்லாதிருப்பதும் விந்தையே இல்லை.

129. மாறிலிகள் மாறிவிடும்.

130. மாறிகள் மாறுவதில்லை.

131. உங்கள் கையிலிருந்து விழும் ஒரு பொருள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அவ்வளவு தூரம் அது கைக்கெட்டாத இடத்தில் போய் விழும்.

132. உங்கள் முதலாளியைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டால் இணையத்தில் மேயுங்கள்.

133. நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உங்கள் முதலாளி நீங்கள் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது தான் உங்கள் பின்னால் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்.

134. நீங்கள் சேமித்து வைக்காத முக்கியமான விஷயம் எந்த வன் தட்டில் இருக்கிறதோ அது தான் முதலில் பழுதாகும்.

135. மர்பி விதிகள் சரியாக இருந்தால் என்னால்................................................. [connection reset - error message 928 ]

136. எந்த ஒரு பிரச்னையும் அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் எளிய முறையில் மட்டுமே அதைத் தீர்க்க முடியும்.

137. எந்த ஒரு மென்பொருளும் 5 பிழைகளைக் கொண்டது. ஆனால் இது வரை கண்டுபிடித்த பிழைகள் கணக்கில் சேர்க்கப் பட மாட்டாது.

138. எந்தக் கணிணி உபயோகிப்பாளருக்கும் தேன் வந்து பாயும் மழலை வார்த்தைகள் "அப்பா! இந்த C: பார்மட் செய்யப்படுகிறது என்று கணிணி சொல்கிறதே அதன் அர்த்தம் என்ன ?" என்று குழந்தை கேட்பது தான்.

139. நீங்கள் ஒரே வரியில் ஒரு மென்பொருள் எழுதினாலும் அதிலும் பிழை இருந்தே தீரும்.

140. எந்த ஒரு மென்பொருளாக இருந்தாலும் நீங்கள் அதை முழுமையும் படித்தறிந்த உடனேயே அதன் புதிய பதிப்பு வெளியிடப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 23, 2009 8:58 am

141. ஒரு வைரசினால் ஏற்படும் பாதகங்களும் அது உங்கள் கணிணியைத் தாக்கும் வாய்ப்பும் நேர் விகிதத்தில் இருக்கும்.

142. நீங்கள் கடவுச் சொல் மாற்றும் வேகமும் அதை மறக்கும் வேகமும் நேர் விகிதத்தில் இருக்கும்.

143. கடவுச் சொல்லை மாற்றவே இல்லை என்றால் அதைத் தான் அடுத்தவர் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்களே!

144. எவ்வளவு அதிக நேரம் ஒரு மென்பொருள் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய எடுத்துக் கொள்கிறதோ அவ்வளவு தூரம் அது செயல்படுவதற்கு வாய்ப்பில்லை.

145. ஒரு மென்பொருள் நல்ல மென்பொருள் தான் பிழை இல்லாதிருக்கும் வரை - ஆனால் அது சாத்தியமே இல்லை.

146. ஒரு மென்பொருளில் பிழை வரும் வாய்ப்பு கணிணியை எத்தனை பேர்கள் பார்க்கிறார்கள் அவர்களின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பொருத்தது.

147. எந்த ஒரு மென்பொருள் கன கச்சிதமாக எந்த ஒரு பிழையுமின்றி எதிர்பார்த்தபடி செயல்படுகிறதோ அது வைரசைத் தவிர வேறெந்த மென்பொருளாக இருக்க முடியும்?

148. ஹும். இந்த மனிதர்கள் கணிணியை உபயோகிப்பது எவ்வளவு எளிதென்கிறார்கள்? நாம் கேட்பதோ நேரம் என்ன என்று. அவர்கள் சொல்வது எவ்வாறு ஒரு கடிகாரத்தை செய்வது என்று.

149. எல்லா பிழைகளையும் சரி செய்யும் ஒரே கட்டளை பார்மட் C: என்பது தான்.

150. உங்கள் வேலையில் உள்ள தவறுகளை நீங்கள் உங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு தான் காண்பீர்கள்.


151. நீங்கள் எந்த ஒரு கடிதத்தை அச்சடிக்க கட்டளை கொடுத்தாலும் முதல் பக்கத்தில் கடிதம் அச்சடிக்கப்பட்டு 2வது பக்கத்தில் கடைசி வரி மட்டும் அச்சடிக்கப்படும்.

152. 99% ஒரு கோப்பை இறக்கம் செய்த உடனேயே மின் இணைப்பு போய் விடும்.

153. உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கையேட்டில் உங்கள் பிரச்னையைத் தவிர அனைத்தும் விளக்கப்பட்டிருக்கும்.

154. மேற்கண்ட மென்பொருள் சம்பந்தப்பட்ட அனைத்து விதிமுறைகளும் மைக்ரோசாப்ட்க்கு (எந்த பதிப்பாக இருந்தாலும்) கச்சிதமாக பொருந்தும்.

155. தானியங்கி தவறு நீக்கி (Auto correct) தவறை நீக்குவதில்லை. தவறை உருவாக்கும்!

156. மாதாந்திர சேவை புரியும் பணியாளர் (AMC worker) வரும் வரை கணிணி ஒழுங்காக தான் வேலைபார்த்துக் கொண்டிருந்திருக்கும்.

157. வன் தட்டு பழுதினால் வைரசும் அழிந்து போகும். இதனால் நீங்கள் விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கும் வைரசு நீக்கிக்கு வேலை இருக்காது.

158. தண்ணீரின் மேல் நடப்பதும் ஒரு மென்பொருளை அதன் தேவைக்கேற்ப (Features) உருவாக்குவதும் எளிது தான். அது உறைந்திருக்கும் வரை. (Frozen)

159. உங்கள் இ-தபால் பெட்டியின் அளவும் உங்களுக்கு வரும் அனாமதேய தபால்களின் அளவும் எதிரெதிர் விகிதத்தில் இருக்கும்.

160. ஒரு கணிணி அதை உபயோகிப்பாளரின் அறிவினை நிகர்த்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 11, 2009 5:21 pm

161. ஒரு வைரசு உங்கள் கணிணியைத் தாக்கிய பின்னரே அதை வைரசு நீக்கி கண்டறியும்.

162. மூளை * அழகு * வாய்ப்பு = மாறிலி (இதில் மாறிலியின் மதிப்பு எப்போதுமே 0 ஆகும்)

163. உங்கள் காதலி உங்கள் மேல் வைத்திருக்கும் காதலின் அளவு நீங்கள் அவள் மேல் வைத்திருக்கும் காதலின் அளவுக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்.

164. பணத்தால் காதலை வாங்க முடியாது தான். ஆனால் அது உங்களை ஒரு பேரம் பேசும் நிலையில் (bargaining position) வைத்திருக்கும்.

165. உங்கள் மனைவி உங்களை முழுவதும் புரிந்து கொண்ட நாள் முதல் உங்கள் சொல்லை காதில் வாங்குவதே இல்லை.

166. காதலை விட மோசமான விஷயங்கள் இருக்கின்றன. காதலை விட நல்ல விஷயங்களும் இருக்கின்றன. ஆனால் காதலுக்கு சமமாய் எதுவுமே இல்லை.

167. காதல் புத்திசாலித்தனத்தை கற்பனை எப்போது மிஞ்சுகின்றதோ அப்போது தான் ஏற்படும்.

168. பின் வரும் விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும். 1. மது 2. மாது 3. இசை. முக்கியமாக இசையிடம் புன்னகை

169. அழகு தோல் வரை (skin deep). அழகின்மை எலும்பு வரை.

170. அறிவாளிக்கும் முட்டாளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை காதல் வந்து விட்டால்.

171. ஒரு பெண்ணின் உள்ளத்தை திறக்கும் திறவுகோல் எதிர்பாராத பரிசை எதிர்பாராத நேரத்தில் கொடுப்பதாகும்.

172. எப்பொதும் நடந்து கொண்டே இருக்கும் காதல் போரில் பெண்கள் ஏற்கனவே வென்று விட்டனர்.

173. எந்த ஒரு ஆணும் தான் தொடங்கி வைத்த விவாதத்தில் வெற்றி பெறுவதில்லை.

174. காதலுக்கு கண் இல்லை. திருமணம் தான் அந்த கண்ணைத் திறந்து வைக்கும்.

175. உங்கள் காதலி "விலையுயர்ந்த பொருள் எதையும் வாங்காதீர்கள்" என்று கூறி அதை நீங்கள் கடைப்பிடித்தால் தாடியுடன் அலைய வேண்டியது தான்.

176. நீங்கள் சரியான நேரத்துக்கு போய் சேர்ந்தீர்களேயானால் உங்கள் காதலி 20 நிமிடம் முன்னதாக வந்திருப்பாள். 20 நிமிடம் முன்னதாக நீங்கள் போய் சேர்ந்தால் 1 மணி நேரம் தாமதமாக வருவாள்.

177. ஒருவன் திடீரென முட்டாள்தனமாக நடந்து கொண்டால் காதலில் விழுந்து விட்டான் என்று பொருள்.

178. இப்போது (உங்கள் காதலியிடம்) எது ஆர்வமூட்டுகிறதோ அதுவே பின்னாளில் எரிச்சலூட்டும்.

179. நீங்கள் ஒரு பெண்ணை அழகாக இருக்கிறாளே என்று பார்த்தால் அதை நிரூபிப்பதற்கு ஒரு நண்பன் அவளுடன் கண்டிப்பாக இருப்பான்.

180. இரண்டு பேர் காதலில் விழுவதற்கு (falling in love) புவிஈர்ப்பு விசையை குற்றம் சொல்ல முடியாது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக