புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
3 Posts - 2%
jairam
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
2 Posts - 1%
Poomagi
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%
சிவா
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%
Manimegala
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
17 Posts - 4%
prajai
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
7 Posts - 2%
Jenila
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
jairam
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_m10சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரஞ்சீவியாக இருக்க முடியுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 4:37 am


முதுமையோ மரணமோ தள்ளிப்போடக் கூடியவைதான், ஆனால் தவிர்க்க முடியாதவை.

ஒரு தொண்டு கிழவி காட்டில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தாளாம். சிரமம் தாளாத ஆற்றாமையில் “எமனே, நீ வர மாட்டாயா!” என்று புலம்பினாளாம். சடாரென்று எமன் அவள் முன் தோன்றி, “என்ன பாட்டி, என்னை எதற்குக் கூப்பிட்டாய்?” என்று கேட்டானாம். ஒரு விநாடி திகைத்த கிழவி உடனடியாகச் சுதாரித்து, “இந்த சுள்ளிக்கட்டைத் தூக்கி என் தலையில் வைக்கத்தான் கூப்பிட்டேன்…” என்றாளாம்.

வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முடிந்தவரை மரணம் தள்ளிப்போக வேண்டும் என்றே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். அறிவியல் மற்றும் மருத்துவத்தின் சாதனைகள் மூலம் மனிதரின் சராசரி வாழ்நாள் அதிகரித்து உலகில் முதியவர்களின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது. ஆயினும் மிகச் சிலரே 90 வயதைக் கடக்கிறார்கள். கடந்த 150 ஆண்டுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எதிர்பார்ப்பு ஆயுட்காலம் ஓரிரு ஆண்டுகளே அதிகரித்துள்ளது. முதுமையையோ அதன் பாதிப்புகளையோ வராமல் தடுக்க முடியவில்லை.

மனித உடலில் இதயமும் தமனிகளும் அடங்கிய ரத்த ஓட்ட மண்டலம்தான் முதுமையின் காரணமாக முதலில் பாதிக்கப்படுகிறது. ரத்தக்குழல் இறுக்கம் 25% மரணங்களுக்குக் காரணமாகிறது. ரத்தக்குழல்களின் உட்பரப்பில் கொழுப்பு படிந்து அவற்றின் குறுக்களவைக் குறைப்பதே இந்த இறுக்கத்துக்குக் காரணம். அதன் விளைவாக இதயத்தின் பணிச்சுமை அதிகரித்து ரத்த அழுத்தம் அதிகமாகும். அழுத்தம் காரணமாக மூளையிலுள்ள ரத்தக்குழல்கள் வெடித்து மரணமோ, பக்கவாதமோ ஏற்படலாம். இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்கிற தமனிகளில் இறுக்கம் அதிகமாகி அடைப்பும் ஏற்பட்டுவிட்டால் இதயத்துக்கு ஆக்சிஜன் (பிராண வாயு) வழங்கல் தடைபட்டு இதயவலி ஏற்படும். அது முற்றினால் இதயச் செயலிழப்பும் மரணமும் விளையும்.

கொலஸ்ட்ரால் அபாயம்

ரத்தக்குழல்களில் கொழுப்புப் படிவதில் ஏதோ ஒரு வகையில் கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்டிருக்கிறது. ரத்தத்தின் பிளாஸ்மாவில் பல கொழுப்புப் புரத வகைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றுடன் கொலஸ்ட்ரால் இணைந்துள்ளது. சில கொழுப்புப் புரதங்களின் செறிவு நிலையாக இருக்கும். வேறு சிலவற்றின் செறிவு உணவு உண்டபின் ஏறி, சில மணி நேரத்துக்குப் பிறகு இறங்கும். உடல் பருமனாக இருப்பவர்களின் ரத்தத்தில் சிலவகைக் கொழுப்புப் புரதங்களின் செறிவு கூடுதலாயிருக்கும். கொலஸ்ட்ரால் இணைந்த ஒரு வகை, உடல் பருமனான வர்களின் ரத்தத்தில் அதிகமாயிருப்பதால் ரத்தக்குழ லிறுக்கக் கோளாறுகளை உண்டாக்கும். ஒல்லியானவர் களைவிட உடல் பெருத்தவர்களுக்கும் நீரிழிவு நோயுள்ளவர்களுக்கும் இதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே ஒல்லியானவர்களும், சிறிய உடலுள்ளவர்களும் நீண்ட காலம் வாழ்வது தற்செயலானது அல்ல. உணவை ஒழுங்குபடுத்தினால் ரத்தக்குழலிறுக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று ஆய்வுகளில் சில முடிவுகள் தெரிவிக்கின்றன. பால், முட்டை, வெண்ணெய் போன்ற விலங்குக் கொழுப்புகளில் கொலஸ்ட்ரால் அதிகம். தாவரக் கொழுப்புகளில் அது இல்லவேயில்லை. அவற்றிலுள்ள கொழுப்பு அமிலங்களில் தெவிட்டாத வகையைச் சேர்ந்தவையே அதிகம். அவை ரத்தக்குழல்களில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுப்பதாகத் ஆய்வுகளில் சில முடிவுகள் தெரிவிக்கின்றன. உணவு மூலம் கிடைப்பது தவிர மனித உடலே கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்துகொள்கிறது. எனவே கொலஸ்ட்ரால் இருப்பது மட்டுமே ஆபத்தானது அல்ல. பாரம்பரியம் காரணமாகச் சில உடல்களுக்கு அதை ரத்தக்குழல்களின் உட்பரப்பில் வண்டலைப் போலப் படிய வைக்கிற தன்மையிருப்பதால்தான் சிக்கல் தோன்றுகிறது. உடலில் உபரியாகக் கொலஸ்ட்ரால் உற்பத்தியாவதையும் அது ரத்தக்குழல்களின் உட்பரப்பில் படிவதையும் தடுக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரத்தக்குழல் முழுமையாக அடைபட்டுவிட்டால்கூட, உடலின் வேறு பகுதியிலிருந்து ஒரு தமனியை எடுத்து மாற்றுப் பாதையாகப் பொருத்திவிட முடியும். இத்தகைய சிகிச்சைகள் மூலம் ஒருவரது ஆயுளை நீட்டித்துவிட முடியாது. எனினும் இறுதிக் கட்டத்தில் இதய வலியின் சித்திரவதையைத் தடுக்கலாம். அதை அனுபவித்தவர்களுக்கு இந்த சிகிச்சை பெரிய ஆசீர்வாதம் என்பது தெரியும்.

நீண்ட ஆயுளின் ரகசியம்

வேறு எந்த வியாதி வந்தாலும் வராவிட்டாலும் முதுமை வந்தே தீரும். சில பேருக்கு வேகமாக வரும், சிலருக்கு மெதுவாக வரும். பொதுவாகப் பாலூட்டிகளின் ஆயுள் அவற்றின் உடல் பரிமாணத்தைப் பொறுத்திருக்கிறது. மூஞ்சூறுகள் ஒன்றரை ஆண்டுகளே வாழ்கின்றன. பெரிய எலிகள் நாலைந்து ஆண்டுகளுக்கும், முயல்கள் 15 ஆண்டுகளுக்கும், நாய்களும் பன்றிகளும் 20 ஆண்டுகளுக்கும், குதிரை 40 ஆண்டுகளுக்கும், யானை 70 ஆண்டுகளுக்கும் சராசரியாக உயிர் வாழ்கின்றன.

பொதுவாக இதயம் 100 கோடி முறை துடிக்க ஆகிற காலத்துக்குத்தான் பாலூட்டிகள் உயிர் வாழ்கின்றன. மூஞ்சூறின் இதயம் நிமிஷத்துக்கு 1,000 முறை துடிக்கிறது. அதன் காரணமாக அது அற்ப ஆயுளில் போய்விடுகிறது. யானையின் இதயம் நிமிஷத்துக்கு 20 முறைதான் துடிக்கிறது, அது அதிக ஆயுளுடன் உள்ளது.

இந்த விதிக்கு விலக்கு மனிதன்தான். யானையையும் குதிரையையும்விடச் சிறிய உடம்பைப் பெற்றிருந்தாலும் அவன் எல்லாப் பாலூட்டிகளையும்விட அதிகமான சராசரி ஆயுளைப் பெற்றிருக்கிறான். சில வகை ராட்சத ஆமைகள்தான் மனிதனைவிட அதிக காலம் வாழ்கின்றன. அவை மிகவும் மெதுவாக நடமாடுவதால் அவற்றின் இதயத் துடிப்பு வீதம் குறைவாயிருக்கிறது. மனிதரின் இதயம் நிமிஷத்துக்கு 72 முறை துடிக்கிறது. ஜப்பானியர் ஒருவர் 115 ஆண்டுகள் வாழ்ந்து உலக சாதனை படைத்திருக்கிறார். அவருடைய இதயம் ஏறத்தாழ 400 கோடி முறை துடித்திருக்கும்.

மனிதனுக்குப் பரிணாமப் படியில் நெருங்கிய உறவான சிம்பன்சீக்கள்கூட மனிதரின் அளவுக்கு உயிர் வாழ்வதில்லை. மனிதரைவிடக் கணிசமாகப் பெரிய உடலைக் கொண்ட கொரில்லாவுக்கு 50 வயதிலேயே முதுமை வந்துவிடுகிறது.

மற்றெல்லா விலங்குகளினுடையதையும்விட மனித இதயம் சராசரியில் அதிக முறை துடிக்கிறது. அப்படியும் மனிதருக்கு இவ்வளவு அதிக ஆயுள் இருப்பது இயற்கை தந்திருக்கிற சலுகை. இருந்தாலும் மனிதர்கள் மட்டுமே இன்னும் அதிகமான ஆண்டுகளுக்கு வாழ முடியாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

முதுமைக்கு காரணம் என்ன?

முதுமை ஏன் வருகிறது என்பதற்குப் பலரும் பல ஊகங் களை வெளியிட்டிருக்கிறார்கள். நோய் எதிர்ப்புத் திறன் மழுங்குதல், செல்களில் புரத மூலக்கூறுகள் படிந்து அவற்றின் இரட்டிப்புத் திறன் தடைபடுதல் போன்றவை முதுமையின் அடையாளங்கள். ஒற்றை செல்லிலிருந்து தொடங்கினால் செல் பிரிதல் சுமார் 50 படிகளுடன் நின்றுவிடுகிறது. செல்லின் ஆக்கக்கூறுகளில் திருத்த முடியாத பிழைகள் ஏற்பட்டுவிடுவதே இதற்குக் காரணமாயிருக்கலாம். அது செல்லின் மரணம் எனலாம்.

அதைத் தடுக்க முடிந்தால் முதுமையையும் மரணத்தையும் சிறிது காலம் தள்ளிப்போட முடியும். பறவைகள் தமக்குச் சமமான உடல் பரிமாணமுள்ள பாலூட்டிகளைவிட அதிக காலம் உயிர் வாழ்கின்றன. இத்தனைக்கும் விலங்குகளைவிடப் பறவைகளின் உடலில் வளர்சிதை மாற்ற வேகம் அதிகம். அவற்றின் உடலமைப்பில் முதுமையைத் தாமதப்படுத்துகிற கூறுகள் இருக்கக்கூடும் என ஆய்வர்கள் கருதுகிறார்கள்.

மனிதருக்கு மரணமே வராமல் தடுத்துவிட முடிந்தால் அதைவிடப் பெரிய சிக்கல் வரும். ஜனத்தொகையைக் கட்டுப்படுத்தப் புதிதாகக் குழந்தைகள் பிறப்பதைத் தடை செய்ய வேண்டியிருக்கும். முதியவர்களே தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பார்கள். பழைய சிந்தனைகளும் பழைய வாழ்க்கை முறைகளுமே நீடிக்கும். புதிய குழந்தைகள் வந்தால்தான் புதிய மூளைகள், புதிய மரபியல் அமைப்புகள், புதிய பரிணாம வளர்ச்சிகள் வந்து மனித இனம் மேம்படும். குழந்தைகளில்லாத ஓர் உலகத்தைக் கற்பனை செய்து பார்க்கவே கஷ்டமாயிருக்கிறது.

சிரஞ்சீவித்தன்மை உண்மையில் மரணத்தைவிட மோசமானதாகத்தானிருக்கும்.

கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).



சிரஞ்சீவியாக இருக்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Mar 07, 2015 4:57 am

நல்ல பதிவு அன்பரே..................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக