புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
21 Posts - 64%
heezulia
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
148 Posts - 55%
heezulia
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
9 Posts - 3%
prajai
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
முருகன் கை வேல் Poll_c10முருகன் கை வேல் Poll_m10முருகன் கை வேல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் கை வேல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 26, 2015 5:23 am

முருகன் கை வேல் Yxl5eiFQuOTKWsSu4lo9+images
-
முருகன் கை வேலின் செயல்கள் பற்றி ஒரு புலவர் இப்படிப்
பாடுகிறார்:

அன்பர் பயம் கெடுக்கும்; அத்தி கிரியைத் துளைக்கும்;

இன்ப வள்ளி கண்ணுக்கு எதிராகும்; மின் பரந்த

வாகு தோளில் ஏறி மீறி வாகுசாரி ஓடி ஆடி

வேக சூரன் மார்பிடந்த வேல்!

“முருகப்பெருமானின் கை வேலானது ஒளியுடைய வீரவாகுவின்
தோள்களிலே அமர்ந்து, பின் அங்கிருந்து மேலே மேலே உயர்ந்து,
அழகாக இடமாகவும், வலமாகவும் சென்று வாயு வேகம் கொண்ட
சூரபன்மனின் மார்பைப் பிளந்த வேலானது அடியார்களின்
மனத் துன்பத்தை ஒழிக்கும். அந்தக் கிரௌஞ்ச மலையைத்
துளைத்துப் பிளக்கும். இன்பக்கொடியைப் போன்ற, முருகனுக்கு
வேல் தந்த அன்னை பார்வதி தேவியின் முன் சென்று நிலைபெறும்’
என்கிறார்.

அது மட்டுமா? ஆறுமுகம் என்றளவில் அச்சம் தவிர்க்கும் வேலின்
வல்லமை பற்றி இன்னொரு புலவர் பாடுகிறார்.

ஆறுமுகம் என்றளவில் அச்சம் தவிர்க்குமே;

வேறு வினை வந்தால் விலக்குமே – கூறுபுகழ்

மாரிஒத்த சூரபன்மன் மார்பிளக்க வேதொடுத்த

வீரசக்தி யான் மிகுத்த வேல்!

எல்லோராலும் போற்றிக் கூறப்படும் புகழையுடைய இடியைப்
போன்ற சூரபன்மனின் அகன்ற மார்பைப் பிளந்திடுமாறு வீசிய
வீரம் மிக்க வேலானது, “ஆறுமுகம்’ என்று சொன்னாலே நமது
அச்சத்தை நீக்கும். நம் நலனுக்கு மாறான தீவினைகள் துன்பம்
தர வந்தால் அவற்றையெல்லாம் விலக்கிவிடும்’ என்கிறார்.

வாழ்வுக்கு வித்தான வேலின் திறத்தைப் பற்றி மற்றொரு புலவர்,
“இடிபோன்று “தடபட’ என்ற ஒலியுண்டாகுமாறு கடலின் அலைமீது
செலுத்த, கடலைக்கூட தூளாக ஆகும்படிச் செய்யும் வன்மையுடைய
முருகப்பெருமானின் வேலானது தன்னை வழிபடும் அடியாரின்
முன் செய்த தீவினையைப் போக்க வல்லது.
உள்ளத்தில் அறிவொளியை உண்டாக்கி, நல்ல வாழ்க்கைக்கு
அடிப்படையாக இருந்து அதனை வளரச் செய்யும் பெரும் பேற்றை
அளிப்பது முருகனின் வேல்’ என்கிறார்.

இப்படிப் புலவர் பெருமக்களால் போற்றப்படுகின்ற முருகப்
பெருமானின் கை வேல், சூரபன்மனைச் சம்ஹாரம் செய்து பெருமை
சேர்த்தது. இப்படி திருச்செந்தூர் பதியில் நடைபெறும் ஈடு இணை
இல்லாத கந்த சஷ்டி விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
கண்டுகளிக்கும்போது மழை பொழியலாமா?

“கூடாது’ என்று மற்றொரு புலவர் பாடியுள்ளார். பக்தர்கள் மழை
பொழிவதற்கு திருவருளை வேண்டுவது போன்று, அதே திருவருளை
மழையை நிறுத்துவதற்கும் வேண்டுவது அவர்களது பக்தியின்
ஈடுபாடாகும்.

முன்பெல்லாம் “கந்த சஷ்டி’ அன்று வேல் வாங்கும்போது,
அந்த ஊரில் மழை பொழிவது வழக்கம். ஆறுமுகக் கடவுளைக்
காண்பதற்கு இடையூறாக இருக்கின்ற மழையை நிறுத்த வேண்டும்.
அதற்கும் அவனை வணங்குதலே வழியாகும். செந்தில் ஆண்டவன்
திருவிழாவான கந்த சஷ்டி நடந்த சமயம் மழை பெய்தது.
பக்தர்களின் குரலாக நின்றார் பக்தியுள்ள புலவர் ஒருவர். மழை
நிற்க வேண்டி மனமுருகி இப்பாடலைப் பாடினார்.

வந்து மழை பொழியும் வானே, வெஞ்சூர் தடிந்த

கந்தர் திருவிழாக் காலத்தில் தொந்தரையாம்

நீர்த்துளியை யூற்றிவிடல் நேர்த்தியல;

– மாற்றிவிடு; நேரான

கீர்த்தி வரும் நாட்டில் இதைக்கேள்!

தக்க காலத்தில் தோன்றி மழையைப் பொழியும் மேகமே!
கொடிய அசுரனான சூரபன்மனை வென்ற முருகப்பெருமானின்
திவ்வியமான “கந்த சஷ்டி’ விழா நடைபெறும் இக்காலத்தில்
தொந்தரவு தரும் நீர்த்துளியை ஊற்றாதே! தாரை தாரையாகப்
பொழியும் மழையை மாற்றிவிடு. வேறு எங்காவது போய் இதே
மழை பொழியட்டும்.
இதனால் அருள் வடிவான கந்தப் பெருமானால் உனக்குக் கீர்த்தி
உண்டாகும். உனக்குப் புகழை உண்டாக்கக்கூடிய என் பேச்சைக்
கேள்!” என்கிறார் புலவர்.

மேற்குறித்த பாடல்கள் எல்லாம் “தனிப்பாடல்’ திரட்டு தொகுப்பில்
உள்ளவை. இந்தப் பாடல்களையெல்லாம் இன்னார் பாடினார்கள்
என்ற குறிப்பு இல்லை. இவற்றை “பல புலவர்கள் பாடிய பாடல்கள்’
என்ற அளவிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.

—————————————–
டி.எம். இரத்தினவேல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 26, 2015 1:34 pm

முருகன் கை வேல் 3838410834 முருகன் கை வேல் 103459460 முருகன் கை வேல் 1571444738
ayyasamy ram wrote:
அன்பர் பயம் கெடுக்கும்; அத்தி கிரியைத் துளைக்கும்;

இன்ப வள்ளி கண்ணுக்கு எதிராகும்; மின் பரந்த

வாகு தோளில் ஏறி மீறி வாகுசாரி ஓடி ஆடி

வேக சூரன் மார்பிடந்த வேல்!

டி.எம். இரத்தினவேல்
மேற்கோள் செய்த பதிவு: 1176877

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக