புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
26 Posts - 39%
prajai
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
1 Post - 2%
Jenila
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
6 Posts - 5%
prajai
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
5 Posts - 4%
Rutu
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
3 Posts - 2%
Jenila
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வரலாற்றின் வேர்கள்  Poll_c10வரலாற்றின் வேர்கள்  Poll_m10வரலாற்றின் வேர்கள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றின் வேர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Dec 28, 2016 6:26 pm

அன்புடையீர் ,
எனக்கு சமீபத்தில் நடைபெற்ற இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருக்க நேர்ந்த கட்டாய ஓய்வுக்குப் பிறகு உடலுக்கும் மனதிற்கும் வல்லமைப் பெறவேண்டி இடை இடையே எழுதிய இந்தத் தொடர் வல்லமை மின் இதழில் தொடர்ந்து ஒவ்வொரு புதன் அன்றும் வெளிவரும் .
நண்பர்களுடன் பகிர ஈகரையில் பதிவிடுகிறேன் படித்துத் தங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகிறேன் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

வரலாற்றின் வேர்கள் -1
-அண்ணாமலை சுகுமாரன்



கடந்த காலத்தின் இரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகளைப் பற்றியும் , அவ்வப்போது நடைபெற்ற போர்கள், அதில் அடைந்த வெற்றிகள் ,ஆக்கிரமித்த நாடுகள் இவைகளைப்பற்றி விவரிப்பதும் , வெற்றிபெற்ற மன்னர்களின் கீர்த்தியை சொல்வதும்தான் வரலாறு என்ற பொதுவான புரிதல் இருந்தாலும், வரலாறு (History) என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் விவரிப்பது என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது.

ஆயினும் வரலாறு என்பது மன்னர்களைப்பற்றி மட்டும் இல்லாமல், அது அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களைப்பற்றியும், அவர்களின் பொருளாதாரம், வாழ்வியல் முறைமைகள், கல்வி, இலக்கியம், பண்பாடு, மொழி என அனைத்தையும் விளக்குவதாக இருக்கவேண்டும். இந்த வரலாற்றை கணிக்க தக்க சான்றுகள் வேண்டும் .

ஆதாரங்கள் எனும் உறுதியான கற்களால் கட்டமைக்கப்பட்டதே வரலாறு .

வரலாறு தற்போது தொல்லியல் என அறிவுப்பூர்வமானதொரு விஞஞானம் போல் ஆகிவிட்டது . அதன் ஆய்வுக்கு இப்போது பல்வேறு துறைசார்ந்த அறிவும் அவசியமாகிவிட்டது .

தொல்லியல் என்பது, வரலாறு ,மானிடவியல், கலாச்சாரம் , பொருளாதாரம் இனவரலாறு, நீரடி தொல்லியல்,என பல்வேறு துறைகளின் அறிவு தேவைப்படுகிறது .

தொல்லியல் எதிர்கால மனித வாழ்க்கைக்கு ஒரு செய்தியை எப்போதும் கூறிவருகிறது. கடந்த காலத்தைப் பொறுத்தே வருங்காலம் அமைகிறது .

இப்போது வாழும் வாழ்க்கையின் விதை கடந்த காலத்தில்தான் இருக்கிறது .வரலாற்றை நிர்ணயிக்க சான்றுகள் மிக அவசியம் .

நமது நாட்டைப்பொறுத்தவரை சான்றுகளை போற்றிப்பாதுக்காக்க நாம் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை .

மேலும் இந்தியாவின் வரலாறு என்பது முகமதியர்களின் படையெடுப்பிலிருந்துதான் அறியப்பட்டிருந்தது. அதற்கு முன் இந்தப் பகுதியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.

அலெக்சாண்டர், 326 BCயில் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தார் என்ற ஒரு குறிப்பு மட்டுமே இருந்தது. அதற்கு முன்னும் பின்னும் ஒன்றும் தெரியாது. தமிழ் நாட்டிலோ இன்னமும் மோசம் தஞ்சை பெரியக்கோயிலே கரிகால் சோழன் கட்டியது என்று ஒரு கதை நிலவிவந்ததாக பொன்னியின் செல்வன் எனும் ஒரு குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி விவாதத்தில் இருந்தது நினைவிருக்கிறது .

ஒவ்வொரு கோவிலுக்கும் பின்புலத்தில் ஒரு புராணக் கதை நம்ப முடியாதபடி இருக்கும் . வரலாற்று செய்தி அதில் மறைந்து கிடக்கும் .நெல் மணியை சேர்க்க ஆரபித்த குதிரில் நெல்லை விட பதர்கள் அதிகம் ஆனது போல் புராண கற்பனையில் வரலாற்று உண்மைகள் மறைந்து போயின .நெல் மணிகள் காணாமல் மறைந்து போயின .

திருப்பணி என்றபெயரில் நமது கோவில்களில் இடம்பெற்றிருந்த வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டு வீசியெறியப்பட்டன .இன்னமும் தமிழ் நாட்டில் இதே நிலைதான் தொடருவது தான் வேதனைக்குரியது. மற்றொரு புறம் வேறு பலர் அறியாமையால் அவற்றை அழித்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். இந்த அழிப்பு, ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. இந்தியாவிற்குள் நுழைந்த முகமதியர்கள், நிறைய சேதங்கள் ஏற்படுத்தினார்கள். குதூப் மினார் இருந்த இடத்தில் 27 கோயில்கள் இருந்தனவாம். மதுராவில் நிறைய சிற்பங்கள் இருந்ததாகச் சீனப் பயணி சொல்லியிருக்கிறார். 1857இன் சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் தங்கள் பங்கை அழிவில் செய்திருக்கிறார்கள். பல பழைய கோட்டைகள் ராணுவக் கிடங்காகவும், சில ராணுவ மருத்துவமனையாகவும், ராணுவ பேக்கரியாகவும், பயன்பட்டிருக்கின்றன. தாஜ் மஹால் விருந்து நடத்தும் இடமாக இருந்திருக்கிறது . தாஜ் மஹாலின் ஒரு பகுதி, தேன்நிலவுக்கு வந்தவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றுவரை இந்த சேதப்படுத்துதல்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன?

இன்றும் பல கோட்டைகள் சுற்றுலா விடுதிகளாக சுதந்திர இந்தியாவிலும் இருக்கின்றன. (உதயகிரி) தரங்கம்பாடியில் இருக்கும் டேனிஷ் கோட்டை 30 ஆண்டுகளுக்கு முன் அரசாங்க ஒய்வு விடுதியாகப் பயன்பட்டதை நானே பார்த்திருக்கிறேன். பல அரண்மனைகள் தமிழ் நாட்டில் இன்னமும் அரசு அலுவலகங்களாக இருந்து வருகிறது .

இந்த நிலையில்தான் இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் சிலர், இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்வதில் தீவிரம் காட்டினர். அவர்கள் வந்தது என்னவோ வேறு வேலைக்கு ஆயினும் கம்பெனியின் ஆதரவு என்பதெல்லாம் இத்தகைய ஆய்வுகளுக்கு இல்லை; என்றபோதிலும் , இவர்கள் தங்களுடைய சொந்த ஆர்வத்தின் பேரில் இந்திய வரலாற்று சான்றுகளைப் பற்றிய ஆராய்ச்சியைச் தொடர்ந்திருக்கிறார்கள்.

அப்போது இருந்த காலகட்டத்தில் இந்தியர்களுக்கு நாகரீகம் எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகுதான் எல்லாமே என்று எழுதிவைத்ததோடு , இந்தியர்கள் மனதில் ஒருவகை தாழ்வு மனப்பான்மையை குடி கொள்ளச் செய்தார்கள்.

அந்த நிலையில் சில கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் உள்ள மனசாட்சியுள்ள சிலர் தொல்லியல் சான்றுகளை மேலும் அழிவிலிருந்து காத்து இந்தியாவின் வரலாறு எனும் கட்டிடம் எழ உதவி செய்தனர் .

அத்தகையோரை பரவலாக அறியச் செய்வது வரலாற்றை அறிவதில் மிக முக்கியமானதாகும்.
முதலில் வரலாறு உருவாக உதவி செய்த அயல் நாட்டினரைப் பற்றியும், அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற முக்கிய தொல்லியல் நிகழ்வுகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்தியா முழுவதும் இருந்த வரலாற்று ஆர்வலர்களைப் பற்றியும் அறிஞர்களையும் அறிமுகம் செய்யும் விதமாகவும் முக்கியமாக தமிழ் நாட்டில் வாழ்ந்த திருவாளர்கள் நீலகண்ட சாஸ்திரி அவர்கள் ,க. அப்பாதுரை அவர்கள் சதாசிவ பண்டாரத்தார் முதல் ஐராவதம் மகாதேவன் அவர்கள் ,நாகசாமிஅவர்கள், ராஜமாணிக்கனார்அவர்கள், புலவர் ராசு அவர்கள் ,நடன காசிநாதன் அவர்கள் ,தியாக சத்தியமூர்த்தி அவர்கள் குடவாசல் பாலசுப்ரமணியன் அவர்கள் , குடந்தை காசிநாதன் அவர்கள், பத்மாவதி அவர்கள் போன்ற இன்னுமும் உழைத்துக் கொண்டிருக்கும் பலரையும், சொல்லாமல் விடுபட்ட இன்னமும் பலரை அறிமுகப்படுத்தும் தொடர் இது .

வாசகர்களாகிய உங்கள் ஆதரவு இருக்கும்வரை இத்தொடர் தொடர்ந்து வரும் .

பகுதி 1- அயல் நாட்டு அறிஞர்கள்

சர் வில்லியம் ஜோன்ஸ்

1746 இல் பிறந்த சர் வில்லியம் ஜோன்ஸ் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று வக்கீலானார். வாரன் ஹேஸ்டிங் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 1783இல் கல்கத்தா உச்சநீதிமனறத்திற்கு நீதிபதியாக இந்தியா வந்தார், அவர் கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு அரேபிய மொழிகளை சிறிய வயதிலேயே கற்றறிந்தார். இந்தியாவிற்கு வந்தபின் இந்தியாவின் பழம் மொழிகளில் ஒன்றான சம்ஸ்கிருதத்தைப் பற்றி அறிந்த பின்பு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது.

தனக்கு சம்ஸ்கிருதம் போதிக்க ஓர் வங்காள பிராமண சம்ஸ்கிருத ஆசிரியர் ராம் லக்‌ஷ்ன் கவிபூசன் என்பவரை தேர்ந்தெடுத்தார். அந்த கவிபூசன் கல்கத்தாவில் நெருக்கடியான மக்கள் குடியிருப்பில் வசித்துவந்தார். அங்கே சென்று சர்.வில்லியம் ஜோன்ஸ் சம்ஸ்கிருதம் கற்றுவந்தார் . தினமும் வகுப்பு முடிந்ததும் ‘மிலேச்சன்’ உட்கார்ந்த இடத்தை தண்ணீர்விட்டு சுத்தம் செய்வாரம் அந்த ஆசிரியர். இதைப் பார்த்த வில்லியம் ஜோன்ஸ்க்கு அது பெரிய விஷயமாகப்படவில்லையாம் ஆசிரியர்கள் செய்யும் ஒரு சடங்கு என்று நினைத்துக்கொண்டாராம்.

பின்னர் சம்ஸ்கிருதத்தில் அவர் தேர்ச்சி பெற்றபின்பு பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதில் அபிக்ஞான சாகுந்தலம் என்பது முக்கியமானது. அவருக்கு ஏற்கனவே கிரேக்கம் இலத்தீன் மொழி ஞானம் இருப்பதால் சம்ஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் மொழிகளுக்குள்ள ஒற்றுமையை ஆராய்ச்சி செய்தார். இலத்தீன் மொழியைவிட சம்ஸ்கிருதம் கிரேக்க மொழியுடன் நிறைய ஒற்றுமையிருக்கிறது, இந்த மூன்று மொழிகளிலும் ஒன்றிலிருந்து பிரிந்தவை என்று ஆய்வின் முடிவில் கண்டறிந்தார்.

வங்காளத்திற்கு நீதிபதியாக வந்த ஜோன்ஸ், அங்கே வந்த பதினாராவது வாரத்தில் 1784இல் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்குகிறார். சொசைட்டியின் நோக்கம், இந்தியாவில் இருக்கும் சகல விஷயங்களைப் பற்றியும் பதிவு செய்வது. மொழி, வானவியல் சாஸ்திரம், அறிவியல், மருத்துவம், நீதி, வரலாறு, புவியியல், விவசாயம், வணிகம், இசை, கட்டிடக்கலை, கவிதை இப்படி பல விஷயங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை திரட்டுவதே அவர்களுடைய எண்ணம். மனிதனின் கால் பதியாத நாகரீகம் இல்லாத வனம் போன்ற ஒரு அடர்த்தியான இருட்டில் இருந்த பிரதேசமாக அவர்கள் இந்தியாவை நினைத்திருந்தார்கள் . எனவே கிடைத்த அத்தனையையும் ஆவணப்படுத்த – இந்தியாவெங்கும் அங்கங்கே இருந்த வெள்ளையர்கள் தாங்கள் கண்டதை ஏசியாட்டிக் சொசைட்டிக்கு கட்டுரைகளாக அனுப்பினார்கள். ஜோன்ஸ் இதையெல்லாம் தொகுத்து, முதல் தொகுப்பை 1789இல் வெளியிட்டார்.

ஜோன்ஸின் தனிப்பட்ட ஆர்வம் சமஸ்கிருத மொழியில் இருந்தது. அவர் சமஸ்கிருதத்தை இலத்தீன் கிரேக்க மொழிகளோடு ஒப்பிட்டார். சமஸ்கிருதக் கடவுளர்களையும் அவர் கிரேக்க கடவுளர்களுக்கு ஒப்பிட்டார். சமஸ்கிருத காப்பியங்களை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்தார். காளிதாஸரின் சாகுந்தலத்தை 1788இல் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்தியாவுக்கு அவர் கொடுத்த கொடை, மெகஸ்தனிஸின் இந்தியாவைப் பற்றிய குறிப்பை ஆராய்ந்து இந்தியாவின் நீண்ட வரலாற்றை எழுதத் துவங்குவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியைக் கொடுத்தது.

அலெக்ஸாண்டரின் படையெடுப்புக்குப்பின் மெகஸ்தனிஸ் இந்தப் பக்கம் வந்திருக்கிறார். அவர் தன்னுடைய குறிப்பில், கங்கையை எர்ரானாபொஸ் (Erranaboas) சந்திக்கும் இடமான பாலிபொத்ராவில் சாண்ட்ராகோட்டஸ் என்ற அரசன் இருந்தான் என்று எழுதியிருக்கிறார். இதில் உடனடியாகத் தெரிந்த விஷயம் கங்கை மட்டுமே. ஆனால், அதில் கலக்கும் எர்ரானாபொஸ் என்ற நதி பற்றி எந்தக் குறிப்பும் இந்தியாவில் இல்லை. வேறு ஏதோ ஒரு நதியை அப்படிக் குறிப்பிடுகிறார்.

ஒருவேளை அது சரஸ்வதி போல் தடம் இல்லாமல் போன ஒரு நதியாக இருக்கலாமோ ?

அடுத்தது, பாலிபொத்ரா: அந்தப் பெயருக்கு நெருக்கமான பெயராக இருப்பது பாடலிபுத்திரா என்ற தற்போதைய பாட்னா. ஒருவழியாக அந்தப் பக்கம் முன்பொரு காலத்தில் ஓடிய நதியைத்தான் கிரேக்க மொழியில் எர்ரானாபொஸ் என்று சொல்கிறார் என்று கண்டுபிடித்தாயிற்று. ஆனால், சாண்ட்ராகோட்டஸ்? சமஸ்கிருத மொழியிலிருந்து எடுக்கப்பட்ட அரசர்கள் பட்டியலில் அப்படி ஒரு பெயர் இல்லை. ஆனால் சந்திரகுப்தர் என்ற பெயர் நெருக்கமாக இருப்பதைக் கண்டு, கிரேக்க பயணி சந்திரகுப்தரின் பாடலிபுத்திரத்திற்குத்தான் வந்திருக்க வேண்டும் என்று முடிவாகிறது. ஆசியாவில் அலெக்சாண்டருக்கு பின்னால் வந்த செலூக்கஸின் அரசவையில் இருந்தவர் மெகஸ்தனிஸ். செலூக்கஸ் 312BCயில் பாபிலோன் திரும்பிச் சென்றதாக குறிப்பிருக்கிறது. ஆகவே, சந்திர குப்தரின் காலம் அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கும் (326 BC), 312 BCக்கும் இடைப்பட்டதாகும் என்று முடிவாகிறது. வரலாறே தெரியாத இடத்தில் இதுவொரு பெரிய முன்னேற்றம்.

இவ்வாறு இந்திய வரலாறுக்கு சர் வில்லியம் ஜோன்ஸ் ஒரு நல்ல துவக்கத்தையும் , உலகின் கவனத்தை இந்திய வரலாற்றின்மேல் திருப்ப ஒரு முக்கிய காரணமாகவும் இருந்தார் .
அவரைத்தொடர்ந்து பல ஐரோப்பியர்களுக்கு இந்திய வரலாற்றின் மேல் ஒரு ஆர்வம் தோன்றியது வரலாற்றின் ஆய்வில் பலருக்கு ஆர்வம் எழ சர் வில்லியம் ஜோன்ஸ் முக்கிய காரணமாக விளங்குகிறார்

2) சார்லஸ் வில்கின்ஸ்

சார்லஸ் வில்கின்ஸ் ஒரு சிறந்த சம்ஸ்கிருத அறிஞர் இவர் வில்லியம் ஜோன்ஸ்அவர்களின் நண்பர் இவர் கல்கத்தாவுக்கு 1770 ஆம் ஆண்டு இந்தியா வந்தார் .

சமஸ்கிருதம் பற்றிய ஆழமான புலமை பெற்ற ஆங்கிலேயர்களின் இவரே முதன்மையானவர் எனலாம். குப்தர்களின் கால எழுத்தைக் கண்டுபிடித்ததில் இவரது பணி முக்கியமானது . இது இந்தியாவின் கல்வெட்டு இயலில் மிக முக்கியமானதாக அமைந்தது .

அந்தக்காலகட்டத்தில் உலகில் ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக இருந்தது அது உலகின் அனைத்து மொழிகளும் ஹீப்ரு மொழியில் இருந்து தோன்றியது என்பதே .

இந்தியாவில் வந்து இவர் செய்த ஆய்வுகளுக்குப்பின் பாரசீகமும் ஐரோப்பிய மொழிகளும் ஒரே மூதாதையரிடம் இருந்து தோன்றியது என நிறுவினார் .

அடுத்து சென்னையில் பல்லாவரத்தில் கிடைத்த மிகப்பழைய தடயத்தைப் பற்றிய செய்திகளைக் காணலாம் .

தொடர்ச்சியாக இன்னமும் பல தகவல்களை அறியலாம் – அடுத்த வாரத்தில்.

அண்ணாமலை சுகுமாரன்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 28, 2016 6:45 pm

எனக்கு தெரிந்தது இதுவேன்னு எங்களுக்கு தெரியாத பல தகவல்களை எழுதிய உங்களின் எழுத்து பனி தொடர வேண்டும் சார்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Dec 28, 2016 6:56 pm

தொடருங்கள் ...வரலாற்றின் வேர்கள்  3838410834




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Dec 30, 2016 10:41 am

வரலாறு உருவாகிய வரலாறு -2

-அண்ணாமலை சுகுமாரன்


மனித இனம் இந்த பூவுலகில் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன.என மானிடவியலார்கள் கூறிவருகின்றனர் தமிழர்களைப் பற்றி நமது இலக்கியவாதிகள் கூறும்பொழுது, ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி’ என்று குறிப்பிடுகின்றனர் இதை வெறும் கற்பனைக்கூற்று என்றே பலரும் எண்ணிவந்தனர் இதற்க்குகொஞ்சமாவது வலு சேர்த்தவர்கள் ஐரோப்பியர்களே என்பதுதான் உண்மை . தமிழ் வரலாறு ஆய்வுகளில் இடம்பெறும் தமிழர் மானிடவியல் துறையில் முன்னோடியாக விளங்கி யோர் ஐரோப்பியர்களே ஆவர். 1910 க்கு முன்பு வரை ஐரோப்பியர்கள்
இந்தியாவில் எங்குபார்த்தாலும் கேட்ப்பாரற்று கிடைத்த பழம் கலைப்பொருள்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினர். ஆரம்பத்தில் இந்த ஆய்வு, பொழுது போக்காகவே அமைந்தது. இந்தியாவிலோ இந்தப்பொருள்களை பாழடைந்த பழமைப்பொருள்களை வீட்டில் வைத்துக்கொள்வது சாபம் என்று எண்ணி அத்தகைய பொருள்களில் இருந்து ஒதுங்கியே இருந்தனர் எனவே நமது வரலாற்றை விவரிக்கும் சான்றுகள் அப்போதும் ஏன் இப்போதும் உதாசீனம் செய்யப்பட்டு வந்தது வருகிறது .


மனிதன் தோன்றிய காலம் முதலாக அவர்கள் பெற்ற பரிணாம வளர்ச்சிகளையும், அவர்களது ஆரம்பக் காலத்தில் முதன்முதலாகப் தங்களதுஉணவைத்தேடிவிலங்குகளைவேட்டையாட பயன்படுத்திய கல் ஆயுதங்கள் அவர்களால் தயாரிக்கப்பட்டன என்பதையும், அவர்கள் அவற்றை எவ்வாறு தயாரித்தார்கள் , எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதுவே மனித குலத்தின் ஆரம்ப நாகரீக வளர்ச்சியாகக் கருதப்பட்டது .
உலகின் மானுடவியல் ஆய்வில் நியாண்டதால் போன்ற மனித இனங்கள் கிடைத்த ஆதாரங்களினால் அப்போது வெகுவாக பேசப்பட்டு வந்தது .
இத்தகைய நிலையில் இந்தியாவில் அதிலும் தமிழ் நாட்டில் அதுவும் சென்னைக்கருகில் பல்லாவரத்தில் கிடைத்த ஒரு கல் ஆயுதம் இந்திய சரித்திரத்தையே புரட்டிப்போட்டது .

ராபர்ட் புரூஸ்புட்

மண்ணூல் வல்லுநர் ஆன ராபர்ட் புரூஸ்புட் இந்திய மண்ணியல் அளவாய்வுத துறையில் ( GEOLOGICAL SURVEY OF INDIA) 1858 முதல் 1891 வரை பணிபுரிந்தார் அவர் சென்னைக்கு அருகில் இருக்கும் பல்லாவரம் வந்து தங்கி அங்கே தனது ஆய்வைத் தொடங்கினார். அங்கே கல்லாலான ஒரு கருவியைக் கண்டெடுத்தார் அந்தக்கண்டுபிடிப்பு வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வுகளை தொடங்கி வைத்தது பல புதிய முடிவுகளை எடுக்க வைத்தது .
ராபர்ட் புரூஸ் புட்டின் கண்டுபிடிப்பின் மூலம், தமிழகத்தின் வரலாறு, பல்லாண்டு கால தொன்மை வாய்ந்தது என்றஉண்மைநிரூபிக்கப்பட்டது, வரலாற்றுக்கு முன்காலத்திலேயே ஆதிமனிதர்கள் சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கு முன் இந்தப்பகுதியில் வாழ்ந்து வந்தனர் என உறுதி செய்யப்பட்டது .
ஆதி மனிதர்கள் தென்னகத்தின் இந்தப்பகுதியில் வாழ்ந்து வந்திருந்தார்கள் என்பது ஒரு ஆங்கிலேயர் மூலமே உறுதிசெய்யப்பட்டது . கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடிஎன்ற வரிகள் ஒன்றும் வெற்றுகோஷம் இல்லை ,
இப்போது தமிழகம் என்று அழைக்கபடும் இந்தப்பகுதியில் வாழ்ந்த முந்தய மூத்த தமிழர்கள் சுமார் 1,50,000 முன்பே இந்தப்பிராந்தியத்தில் வாழ்ந்தனர் என்பது ,ஒரு வரலாற்றை புரட்டிப்போட்ட செய்தியாகும்
இந்தியத் தொல்லியல் ஆய்வில்முதல்முறையாக வேறு எங்கும் கிடைக்காத சான்று ஒன்றை இந்தியாவிலேயே சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில்தான், பழைய கற்காலக் கருவியை, 1863-ம் ஆண்டு மே மாதத்தில், இந்தியத் தொல்பழங்காலத்தின் தந்தை எனப் போற்றப்படும் இராபர்ட் புரூஸ்புட்கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார்
இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இவரையே சாரும்.

அதன்பின், அதே ஆண்டு, செப்., 28ல், ராபர்ட் புரூஸ் புட் மற்றும் டபிள்யூ கிங் ஆகியோர் மீண்டும் ஒரு கல் கைக் கோடாரியை, திருவள்ளூருக்கு அருகில் உள்ள, அதிரம்பாக்கத்தில் கண்டு பிடித்தனர். இவை, "மதராசியன் கற்கருவிகள்' என, அழைக்கப்படுகின்றன. இவை, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் ஆகும். இதனால், தமிழகத்தின் தொல் பழங்கால வரலாறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னோக்கி சென்றது.
.
ராபர்ட் புரூஸ் புட், கண்டுபிடித்ததன் மூலம், தமிழகத்தின் வரலாறு, பல்லாண்டு கால தொன்மை வாய்ந்தது என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது,வரலாற்றுக்கு முன்காலத்திலேயே ஆதிமனிதர்கள் சுமார் 1500000 ஆண்டுகளுக்கு முன் இந்தப்பகுதியில் வாழ்ந்து வந்தனர் என உறுதி செய்தார்
.
. இதனைத் தொடர்ந்து, அவரும் அவரது அலுவலர் வில்லியம் கிங் என்பவரும் சேர்ந்து,கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கில் தீவிரமான கள ஆய்வில் ஈடுபட்டனர். கொசத்தலை ஆறு என்று இப்போது அறியப்படும் அந்த ஆறு இன்றைய வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் பாலாற்றில் இருந்து கிளை பிரிந்து செல்லும் ஒரு நதியே கொற்றலையாக உருமாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது
இந்த ஆற்றங்கரை ஆதி மனிதர்களின் முந்தய வாழ்விடமாக இருந்தது என்பது அங்கே கிடைத்த கல் ஆயுதக் குவியல்கள் ராபர்ட் புரூஸ்புட் மூலம் நிரூபிக்கப்பட்டது .இத்தகைய கல் ஆயுதங்கள் தமிழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்கவில்லை என்பதும் ஒரு முக்கிய செய்தியாகும் .

தற்போது அத்திரம்பாக்கம் என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கருவிகளை. ஆய்வு செய்ததில் இவை சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு குறையாத தொன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்தது. மேலும் இவ்வளவு தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆய்வு செய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் ‘Early Pleistocene presence of Acheulian hominins in South India’ என்ற ஆய்வு அறிக்கையில் இதை வெளியிட்டார்.
ஆயினும் இந்த ஆய்வு இதுவரை எதோ காரணங்களால் தொடர்ந்து
அரசினரால் மறைக்கப்பட்டே வருகிறது .
பூண்டி அருகே அமைந்திருந்த ஒரு அருங்காட்சியகம் இப்போது செயல்படவில்லை .
நான் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஓலைச் சுவடிகளைத்தேடிச் சென்றபோது அந்த அருங்காட்சியகம் இயங்காததைக்கண்டேன் .இவ்வாறே பாண்டியரின் பழைய துறைமுகமான கொற்க்கை யில் இருந்த காட்சியகம் மூடப்பட்டு பண்டைய தொல் பொருள்கள் வீதியிலே கிடக்கக்கண்டேன் .
அங்கிருந்து நான் கூட சுமார் 5000 வருட தொன்மை வாய்ந்த ஒரு பண்டைய சங்கை அதை கழிவு நீர் கால்வாய்க்கு கரையாக போட்டு வைத்திருந்த ஒரு பெரியவரிடம் இருந்து பெற்று வந்தேன் .
இன்றும் அது என்னிடம் உள்ளது .
தமிழர் வரலாறு ஏன் இவ்வாறு மதிப்பிழந்துக்கிடக்கிறது ?
மேலும் பார்ப்போம் அடுத்த வாரம்

ஆதாரம்
http://www.antiquity.ac.uk/projgall/pappu297/

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Dec 30, 2016 7:26 pm

அன்பு தளபதி wrote:எனக்கு தெரிந்தது இதுவேன்னு எங்களுக்கு தெரியாத பல தகவல்களை எழுதிய உங்களின் எழுத்து பனி தொடர வேண்டும் சார்
மேற்கோள் செய்த பதிவு: 1230018

அன்பின் நண்பர் ,
நிச்சியம் தொடரும் ,உங்கள் அன்பிற்கு நன்றி .
நான் முன்பு எழுதி வந்த எனக்குப்புரிந்தது இதுவே ,மற்ற சித்த மருத்துவ சங்கதிகள் போன்றவையும் இப்போது தொடரும் எண்ணம் உண்டு .
கடந்த ஆண்டுகளில் நான் சற்று வேறுவகையான அலுவல்களில் ஈடுபட்டிருந்ததால் இவைகளைத் தொடர இயலவில்லை எனினும், புரிதல் என்பது தொடர்ந்து நிகழ்வதால் எனக்குப் புரிந்தது இதுவேயும் தொடரும் .
உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Dec 30, 2016 7:27 pm

Hari Prasath wrote:தொடருங்கள் ...வரலாற்றின் வேர்கள்  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1230019
உங்கள் அன்பிற்கும் நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 30, 2016 9:12 pm

1 .
sugumaran wrote:நமது நாட்டைப்பொறுத்தவரை சான்றுகளை போற்றிப்பாதுக்காக்க நாம் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை

முற்றிலும் உண்மை.

2 .
திருப்பணி என்றபெயரில் நமது கோவில்களில் இடம்பெற்றிருந்த வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டு வீசியெறியப்பட்டன .இன்னமும் தமிழ் நாட்டில் இதே நிலைதான் தொடருவது தான் வேதனைக்குரியது.

ஆம்

3 .
அங்கிருந்து நான் கூட சுமார் 5000 வருட தொன்மை வாய்ந்த ஒரு பண்டைய சங்கை அதை கழிவு நீர் கால்வாய்க்கு கரையாக போட்டு வைத்திருந்த ஒரு பெரியவரிடம் இருந்து பெற்று வந்தேன் .
இன்றும் அது என்னிடம் உள்ளது .
தமிழர் வரலாறு ஏன் இவ்வாறு மதிப்பிழந்துக்கிடக்கிறது ?

தலை குனிய வேண்டிய விஷயங்கள் பல படிக்கையில் வருகிறது . வெட்கம்தான் மிஞ்சுகிறது.

தொடருங்கள் சுகுமாரன் அவர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 30, 2016 10:04 pm

sugumaran wrote:அன்புடையீர் ,
எனக்கு சமீபத்தில் நடைபெற்ற இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு  இருக்க நேர்ந்த கட்டாய ஓய்வுக்குப் பிறகு உடலுக்கும் மனதிற்கும் வல்லமைப் பெறவேண்டி இடை இடையே எழுதிய இந்தத் தொடர் வல்லமை மின் இதழில்  தொடர்ந்து ஒவ்வொரு புதன் அன்றும் வெளிவரும் .
நண்பர்களுடன் பகிர ஈகரையில் பதிவிடுகிறேன் படித்துத் தங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகிறேன் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1230016

உடல் நலம் இப்பொழுது தேவலாமா ஐயா?...அதிகம் ஸ்ட்ரைன் செய்யாதீர்கள் புன்னகை.........நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் !

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

( இன்று தான் உங்கள் திரியை பார்த்தேன், படித்து பின்னூட்டம் போடுகிறேன் புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Dec 31, 2016 9:49 pm

அன்பின் திருமதி கிருஷ்ணாம்மா

தங்கள் அன்பிற்கு நன்றி .
CABG செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது .
இப்போது ஓரளவு நன்றாக இருக்கிறேன் .
வெளியில் போவது மட்டும் தனியே செல்லக்கூடாது என மருத்துவர் அறிவுரை .

அளவுடனேயே வேலை செயகிறேன் .

மலரும் புதிய ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியை
மட்டுமே அளிக்க வாழ்த்துகிறேன்
அன்புடன்
சுகுமாரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 01, 2017 12:56 am

sugumaran wrote:அன்பின் திருமதி கிருஷ்ணாம்மா

தங்கள் அன்பிற்கு  நன்றி .
CABG  செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது .
இப்போது ஓரளவு  நன்றாக இருக்கிறேன் .
வெளியில் போவது மட்டும் தனியே செல்லக்கூடாது என மருத்துவர்  அறிவுரை .

அளவுடனேயே வேலை செயகிறேன் .

மலரும் புதிய ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியை
மட்டுமே அளிக்க வாழ்த்துகிறேன்
அன்புடன்
சுகுமாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1230260

மிக்க நன்றி ஐயா, தாங்கள் நலமுடன் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி...........தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் அன்பான, புத்தாண்டு நல் வாழ்த்துகள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வரலாற்றின் வேர்கள்  48YP4LXYRfeelgViIoDs+HappyNewYear2017AnimatedPictures



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக