புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_m10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10 
64 Posts - 50%
heezulia
இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_m10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_m10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_m10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_m10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_m10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_m10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_m10இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Mar 10, 2009 3:02 pm

-மு. சத்தீஸ்

இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் 3d62d34c88ef3e9d4e7c5c2bfb17421fஇலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டிக்காத உலக நாடுகளை, குறிப்பாக இந்தியாவை, கடுமையாக சாடினார் கர்பால் சிங்.

“தமிழக முதல்வர் கருணாநிதி எங்கே போய்விட்டார்? இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார்?”, என்று அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பட்டர்வொர்த்தில் நடந்த கூட்டத்தில் கர்ஜித்தார்.

முதல் முறையாக நடந்தது



மார்ச் 7 ஆம் தேதி, பட்டவொர்த் ஹஜி அகமாட் படாவி மண்டபத் திடலில் நடைபெற்ற, “இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்” என்ற நிகழ்வில் ஏறக்குறைய சுமார் 3,000 தமிழர்கள் கலந்துக்கொண்டு தமது ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர்கள், மூத்த மாற்றசுக் கட்சித் தலைவர், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசினர்.


பெரும்பான்மை இனத்தவர்களின் முதலாளித்துவப் போக்கு


முதலாவதாகப் பேசிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சோவ் கோன் இயோ (Chow Kon Yeow), பெரும்பான்மை இனத்தவர்களின் முதலாளித்துவ போக்கால் வரும் இனச் சிக்கல்களே பிற்காலத்தில் இன நெருக்கடிக்கு இட்டு சென்று பின்னாளில் உள்நாட்டு போருக்கு வழியமைப்பதாக கூறினார்.

இலங்கையில் நடக்கும் போர் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றாரவர்.

சிங்களவர்களின் இனவெறி போக்குதான் தமிழர்களை ஆயுதம் தூக்கச்செய்தது என்பதை ஈழ வரலாறு காண்பிப்பதாக கூறினார்.

மலேசியாவில் இந்தியர்களைப் பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்வோரால் செய்ய முடியாத ஒரு மாபெரும் காரியத்தை பினாங்கு மாநில ஜசெக செய்துள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம். பினாங்கு மாநில ஜசெக தலைவர் என்ற முறையில், ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவினரை இவ்வேளையில் பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்று சோவ் கோன் இயோ கூறினார்.

அடுத்து, பாகான் டலாம் சட்டமன்ற உறுப்பினர் அ. தனசேகரன் ஜசெக ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவின் முயற்சியை பாராட்டியதோடு, தனது சட்டமன்ற சேவை மையம் சார்பாக 5,000 ரிங்கிட்டை நிதியாக வழங்கினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Mar 10, 2009 3:03 pm



உலக மக்களின் இரட்டை வேடம், மலேசியாவும் விலக்கல்ல



இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Guanபினனங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் இனவெறி என்பதை மனித சரித்திரத்தில் இருந்து விரட்டப்படும் வரை உலக மக்கள் ஓயக்கூடாது என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

“உலக நாடுகள் காசா பிரச்சனையில் காட்டிய முனைப்பை இலங்கை விவகாரத்தில் காட்டாததை சுட்டிக்காட்டி, உலக நாடுகள் மனிதாபிமான பிரச்சனைகளில் இரட்டை வேடம் போடக்கூடாது”, என்று வலியுறுத்தினார்.

“மலேசியா அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல”, என்றும் அவர் கூறினார்.

மாநிலத்தில் ஆட்சி அமைத்த ஒரு வருடத்தில் பினாங்கு மாநில அரசு செய்த பல சாதனைகளை பட்டியிலிட்ட அவர், அச்சாதனைகளில் மேலும் முத்தாய்ப்பு வைப்பதை போல் இந்த ஈழத்தமிழர்கள் ஆதரவு நிகழ்வு அமைகிறது என்றார்.

“உலகின் எந்த மூலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும், அது காசாவாகட்டும், ஈழமாகட்டும் பினாங்கு மாநில அரசு தயங்காமல் அம்மக்களுக்காக குரல் எழுப்பும்”, என்றார் முதல்வர்.

அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமா உலகில் நிலவும் போர்களுக்கு, குறிப்பாக பாலஸ்தீன, ஈழப்பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை முன்வைப்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்தார் லிம். ஐநா சபை இப்பிரச்சனையில் தலையிட ஜசெக வலியுறுத்தும் என்றும் அவர் அறிவித்தார்.

பினாங்கு மாநில அரசின் சார்பாக ஈழத்தமிழர் துயர்துடைப்பு நிதிக்கு 15,000 ரிங்கிட் வழங்குவதாகவும் லிம் அறிவித்தார்.

இவ்வேளையில், நிதி சேகரிப்பு நிகழ்வு தொடங்கியது. அனித்தா சாரி சென்டர் உரிமையாளர் அழகர்சாமி 1,500 ரிங்கிட் கொடுத்து நிதி சேகரிப்பை தொடக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பல தமிழுள்ளங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்காக நிதி வழங்கினர். பிரபல தொழிலதிபர் ஹென்றி பெனெடிக்ட் அவர்கள் 10,000 ரிங்கிட்டை இந்நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Mar 10, 2009 3:03 pm


மகிந்த ராஜபக்சே, கனவு காணாதே!




மூத்த தலைவர் கர்ப்பால் சிங் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டிக்காத உலக நாடுகளை, குறிப்பாக இந்தியாவை, கடுமையாக சாடினார்.

“தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார்?; இந்தியா பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார்?”, என்று கர்ஜித்தார்.

“இலங்கையில் நடக்கும் படுகொலையைத் தடுக்காத இவ்விருவரும் உலக தமிழிர்களிடம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். இலங்கையில் நடக்கும் இனவெறியாட்டத்தைக் கண்டிக்கக்கூடத் தயங்கும் இந்தியாவை நினைத்து வேதனையடைவதாக”, அவர் குறிப்பிட்டார்.

மலேசிய நாடாளுமன்றத்தில் பல முறை ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக கொண்டு வந்த தீர்மானங்களை நிறைவேற்றாத மலேசிய அரசாங்கத்தையும் கர்ப்பால் சாடினார்.

மலேசிய இந்தியர்களின் மன ஓட்டத்தை மலேசிய நாடளுமன்றத்தில் பல முறை வெளியிட்டு தம்மோடு சிறை சென்ற அமரர் பி.பட்டுவையும், அமரர் வி.டேவிட்டையும் தமதுரையில் கர்ப்பால் நினைவு கூர்ந்தார்.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

“இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்து விடலாம் என்று கனவு காணும் மகிந்த இரஜபக்சே அரசாங்கத்திற்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன்: பிரபாகரனை உங்களால் அசைக்கக்கூட முடியாது. பிரபாகரன் ஓடிவிட மாட்டார். தமிழீழம் மலரும் வரை அவர் போராடுவர். தமிழீழம் மலர்ந்தே தீரும்.”

“பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும் நாளைய சரித்திரம் போராட்டவாதி எனவும், தேசியவாதி எனவும் போற்றுமே தவிர தீவிரவாதி என்று ஒரு போதும் கூறாது”, என்றாரவர்.

“இந்த வேளையில் மஇகா சேகரித்த ஈழத்தமிழர்களின் சுனாமி நிதியில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அறிகிறோம். ஈழத்தமிழரின் மறுவாழ்வுக்காக சேகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் நிதியை தவறாக பயன்படுத்தியதாக சாமிவேலு மீது புதிய குற்றசாட்டு எழுந்துள்ளது. ஈழத்தமிழரின் இன்னலில் கூட குளிர்காயும் சாமிவேலையும், மஇகாவையும் மலேசிய தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.

புக்கிட் செலாம்பாவில் மஇகாவிற்கு சரியான பாடம் காத்திருக்கிறது.

நண்பர்களே, இன்று ஈழத்தமிழர் இன்னல் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம், அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது கொடுப்போம் என்று கேட்டுக்கொண்டார்.

ஈழத்தமிழர் துயரை பற்றி நாம் அக்கறை கொள்கிறோம் என்று கூறிய வெளியுறவு அமைச்சர் இராயிஸ் யாத்திமின் வாக்குறுதி என்ன ஆனது? நிச்சயம் இந்த பிரச்சனையை ஜசெக நாடாளுமன்றத்தில் எழுப்பும்”, என்றார் கர்பால் சிங்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Mar 10, 2009 3:04 pm

இலங்கையில் நடப்பதையும் கண்டிக்க வேண்டும்



இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Fairusபினாங்கு துணை முதல்வர், பைருஸ் கைருடின், பாலஸ்தீன பிரச்சனையைப் போல் தமிழீழ பிரச்சனையும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று குறிப்பிட்டார்.

செஞ்சோலை சம்பவம் உட்பட இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தமதுரையில் சரித்திர பின்னணியோடு எடுத்துக்கூறி, இலங்கை அதிபர் மகிந்த இரஜபக்சே ஒரு கொலை வெறியன் என்று அவர் கூறினார்.

“காசாவில் நடந்த கொடுமைகளை கண்டித்ததைப் போல் இலங்கையில் நடக்கும் படுகொலைகளையும் மலேசியர்கள் கண்டிக்க வேண்டும்”, என்று கேட்டுக்கொண்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Mar 10, 2009 3:05 pm


பூப்பந்தில் தமிழன் உள்ள வரையில்…




இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டம்: கருணாநிதி எங்கே? மன்மோகன் எங்கே?, கர்பால் சிங் Ramaஇறுதியில், ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதியின் ஆலோசகர், பினாங்கு மாநில துணை முதல்வர் ப.இராமசாமி, “பிரபாகரன் என்ற தலைவன் உள்ள வரை தமிழீழ போராட்டம் ஓய்ந்து விடாது”, என்று குறிப்பிட்டார்.

இலங்கை அரசு, போரில் வெற்றிகளை ஈட்டிக் கொண்டிருப்பதுபோல் பொய் பிராச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. உண்மையில் புலிகள் இன்னும் வலுவுடன் உள்ளனர். புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில் அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவிக்கிறது. புலிகளுடன் நேருக்கு நேர் போரிட வக்கில்லாத இலங்கை இராணுவம், குழந்தைகளையும், பெண்களையும் கொன்று குவிக்கிறது என்றாரவர்.

புலிகளை ஒரு வாரத்தில் அழித்து விடுவோம், ஒரு மாதத்தில் பிடித்துவிடுவோம் என்று பூச்சிக்கட்டுகிறது சிறீ லங்கா. ஆகக்கடைசியாக, துரோகி கருணா சொல்லியுள்ளார் 18 மாதங்களில் புலிகளை அழித்துவிடலாம் என்று.

“தமிழன் இந்த பூமிப்பந்தில் உள்ள வரை புலிகளை அழிக்க முடியாது. தமிழீழம் மலர்ந்தே தீரும். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இந்தியாவே நினைத்தாலும் அதை தடுக்க முடியாது”, என்று சூளுரைத்தார் ராமசாமி.

“அண்மைய எனது இந்திய பயணத்தில் முதல்வர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தேன், ஈழ பிரச்சனையை பற்றி பேசினேன். ஈழபிரச்சனையை விட வாரிசு பிரச்சனைதான் அவர்களுக்கு இப்பொழுது முக்கியமாக உள்ளது.

இந்தியத் தலைவர்கள், குறிப்பாக தமிழக தலைவர்கள் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவர்களுக்கு அவரவர் பதவி, நாற்காலிதான் முக்கியம்”, என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

அவர்களை விட மோசமான நிலையில் இருக்கிறது நமது முன்னாள் அமைச்சரின் நிலை. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாகி விட்டது.

மலேசிய தமிழர்கள் ஏற்கனவே மைக்கா ஹோல்டிங்க்ஸ், கேபிஜெ, டெலிகம்ஸ், தெனகா நேசனல் பங்குகள் என்று ஏமாந்து விட்டனர். அண்மையில் வெளிவந்த எம்ஐஇடி கதையும் அப்படித்தான். அதிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி என்னவென்றால், இலங்ககையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியிலும் முறைகேடாம்.

“மலேசிய தமிழர்களைத்தான் ஏமாற்றினார்கள் என்று பார்த்தால், பாவம் ஈழத்தமிழர்கள், போரோடு தினம், தினம் போராடிக் கொண்டிருக்கும் அவர்கள் வயிற்றிலும் அடிக்கலாமா?”, என்றவர் வினவினார்.

“இதைக்கேட்டால், இராமசாமி ஒரு ஜீரோ என்று என் மேல் பாய்கிறார். ஆம், நான் ஜீரோதான், ஊழலில் நான் ஜீரோ; நீர் எதில் ஹீரோ என்பதை மக்கள் அறிவார்கள்.

ஒரு வருடத்தில் என்ன சாதித்தாய் என்று கேள்வி கேட்கும் நண்பரே, என்னோடு நேரடி விவாதத்திற்கு தயாரா? நீர் தந்த சோதனையையும், நான் செய்த சாதனையையும் பட்டியலிடுகிறேன். ஈழத்தமிழரின் சுனாமி நிதி முறைகேடுக்கு பதில் சொல்லும் வரை உம்மை விடப்போவதில்லை.

புக்கிட் செலம்பாவிற்கு நான் வேட்டையாடச் செல்கிறேன். உம்மை எங்கும் சந்திக்க நான் தயார், நீர் தயாரா? ஆப்ரிக்கா சென்றாலும் சரி, அர்ஜென்டினா சென்றாலும் சரி எமக்கு பதில் சொல்லும் வரையில் உம்மை விடப்போவதில்லை”, என்றார் ராமசாமி.

மலேசிய தமிழர்களின் மீது, ஈழத்தமிழர்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளனர்.

பிரபாகரனே பல முறை இதை கூறியுள்ளார். “எங்களை யார் மறந்தாலும், மலேசியத் தமிழர்கள் எங்களை மறக்க மாட்டார்கள்”, என்று அடிக்கடி அவர் கூறுவார்.

அந்த கூற்றை இன்று மீண்டும் நாம் நீருபித்துள்ளோம். ஈழத்தமிழரின் துயர் துடைக்க ஒன்றிணைந்த தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் துணை முதல்வர் நன்றி கூறினார்.



RM73,960.40 நிதி



“இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்” கண்டன, நிதி சேகரிப்பு ஒன்றுகூடலில் சேகரிக்கப்பட்ட நிதி 73,960 ரிங்கிட் 40 சென் என்று அறிவிக்கப்பட்டது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக