புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
3 Posts - 6%
Baarushree
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
2 Posts - 4%
prajai
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
2 Posts - 4%
viyasan
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
1 Post - 2%
Rutu
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
1 Post - 2%
சிவா
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
2 Posts - 15%
Rutu
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதாசிவம் சுவாமிகளின் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 4:44 pm

சதாசிவம் சுவாமிகளின் கதை KOdu93jNTWK5B1qTCX5o+amman-arul
-

ஒரு பெரிய ஞானி இருந்தார். அவர் பெயர் சதாசிவம். முன்பெல்லாம் பால்ய வயதிலேயே விவாகம் நடந்துவிடும். பெண்ணுக்கு ஏழெட்டு வயதிலும் பையனுக்கு பத்துப் பதினொரு வயதிலும் திருமணம் நடப்பது அன்று இயல்பான விஷயம்.

திருமணம் முடிந்ததும் பெண்ணை தாய்வீட்டுக்கே அழைத்துச் சென்றுவிடுவார்கள். அவள் பெரியவளானதும் அழைத்துவந்து கணவன் வீட்டில் விட்டுச்செல்வார்கள். அவ்வகையில் சதாசிவத்துக்கும் இளமையில் திருமணம் முடிந்திருந்தது. அவர் பாடசாலையில் பயின்றுகொண்டிருந்தார்.

இப்படியே சில வருடங்கள் போனது. ஒருநாள் அவர் வழக்கம்போல் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசலில் நிறைய பேர் இருந்தார்கள். அனைவரும் அவரை நலம் விசாரித்தார்கள். அவர் கூச்சத்துடன் தலையாட்டியபடியே வீட்டுக்குள் நுழைந்தார்.

வடை சுட்டுக்கொண்டிருந்த அவரது தாயார், ""எல்லாரையும் வாங்கனு சொன்னியா?'' என விசாரித்தார். அவரோ, ""சாப்பாடு கொடும்மா, பாடசாலைக்குப் போறேன்'' என்றார். அம்மாவும் விடாமல், ""ஏண்டா, இவ்வளவுபேர் வந்திருக்காங்க. ஏன்னு கேட்டியா'' என்றாள். அவர் ""ஏன்?'' என்றார்.

""உன் மனைவி பெரிய மனுஷி ஆயிட்டாளாம். இங்க எப்ப கொண்டுவந்து விடறதுனு நாள், நட்சத்திரம் பார்க்க வந்திருக்காங்க.''

""சரி, சாப்பாடு போடு. நான் பாட சாலைக்குப் போகணும்.''

மகன் இப்படிச் சொன்னதைக்கேட்டு தாய்க்கு கோபம் வந்துவிட்டது. "மனைவி பெரிய மனுஷியாகிவிட்டாள் என்று சொல்கிறேன். இதைக்கேட்டு சந்தோஷப்பட வேண்டாமா இவன்? அதை விட்டுவிட்டு சோறு சோறு என்கிறானே' என்ற கோபத்தில், ""அப்படிப் போய் உட்காரு, கூப்பிடுறேன்'' என்றாள்.

அவரும் ஒரு ஓரமாகப் போய் அமர்ந்து யோசித்தார். "வழக்கமா எனக்கு சரியா பன்னிரண்டு மணிக்கு சாப்பாடு கிடைக்கும். மழைபெய்யுதோ வெயிலடிக்குதோ,

அம்மாவுக்கு உடம்பு நல்லாயிருக்கோ இல்லையோ- எப்படியிருந்தாலும் சோறு கிடைச்சுடும். ஆனால் மனைவி வரப்போறாங்கிற தகவல் வந்ததுக்கே, கிடைக்கவேண்டிய நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கவில்லை. மனைவி வந்துவிட்டால் நிலைமை என்னாகும்?'

இந்த எண்ணம் வந்ததும் யாரிடமும் சொல்லாமல் வீட்டின் பின்பக்கமாக நழுவியவர் சந்நியாசியாகப் போய்விட்டார். ஞானம் அவருக்கு ஒரு கணத்தில் வந்தது. பின்னாளில் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்த அவர் எப்போதும் படித்துக்கொண்டே இருப்பார். தன்னுடைய சந்தேகங்களையெல்லாம் தெளிவுபடுத்திக்கொள்வார். நம்மைப் போலதானே எல்லாருக்கும் சந்தேகமிருக்கும் என்றெண்ணிய அவர், எல்லாரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு சொல்லித் தருவார்.

அவரது அக்கறையைப் புரிந்துகொள்ளாத சீடர்கள் அனைவரும் குருநாதரிடம் போய், ""குருநாதா, இந்த சதாசிவம் எந்நேரமும் பேசிக்கொண்டேயிருக்கிறார். சற்றுநேரமும் வாய் ஓய்வதில்லை. அவரை நீங்கள்தான் கொஞ்சம் கண்டிக்கவேண்டும்'' என்றார்கள்.

குருநாதருக்கு வருத்தம். ரொம்பவும் நல்ல பையன் சதாசிவம். அவனைப் பற்றி குறைகூறுகிறார்களே என்று சற்று கோபமும் வந்தது. சதாசிவத்தைக் கூப்பிட்டார். ""ஏண்டா சதாசிவம்... தொணதொணன்னு பேசிக்கிட்டிருக்கியாமே, உன் வாய் மூடாதா?'' என்றார்.

அன்றைக்கு வாயை மூடியவர்தான்; இறுதிவரை அவர் வாயே திறக்கவில்லை. மௌனியாகிவிட்டார்.

அன்ன ஆகாரம் தவிர்க்கும் விரதத்தைவிட சிரமமான விரதம் மௌன விரதம். ஒருநாள் மௌன விரதமிருந்து பாருங்கள். அன்று மனது மிகவும் அமைதியாக இருக்கும்.

விரதத்தின் மேன்மையைப் பற்றிக் கூறுகையில் வாரியார் சுவாமிகள், ""நாம எந்த விரதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திருக்கார்த்திகை தீபத்திருநாளன்று மௌன விரதமிருந்தால் ஆண்டுமுழுவதும் விரதமிருந்த பலன் கிடைக்கும்'' என்கிறார்.

சரி, சதாசிவம் சுவாமிகளின் கதைக்கு வருவோம்.

குருநாதரின் உத்தரவையேற்று சதாசிவம் வாழ்நாள் முடியும்வரை பேசவேயில்லை. குருநாதரே அவரிடம், ""உன் பெருமை தெரியாமல் பேசிவிட்டேன். வாய் திறந்து பேசு'' எனக் கூறினார். ஆனால் அவர் தன் முடிவிலிருந்து மாறவேயில்லை.

சதாசிவம் சுவாமிகள் நாளாக ஆக ஒவ்வொன்றாகத் துறந்துவந்தார். பேச்சைத் துறந்தார். பின் ஒருநாள் உடையைத் துறந்து திகம்பரராகிவிட்டார். கடைசியில் உணவையும் துறந்தார். நாளைக்கு ஒருவேளைதான் உணவு. யார் வீட்டு வாசலிலாவது போய்நிற்பார். அவர் நிற்பதைப் பார்த்து யாராவது உணவிட்டால் மட்டும் சாப்பிடுவார்.

அதுவும் மூன்று கவளம் உணவு மட்டுமே.

அத்தகைய சதாசிவம் சுவாமிகளுக்கு ஒரு சந்தேகம். நமக்கு அடுத்த பிறவி உண்டா, இல்லையா- இதுதான் அவரது சந்தேகம். யாரிடமும் கேட்கவும் முடியாது. அவரைவிட பெரிய ஞானிகளும் அங்கில்லை. தன் கேள்விக்கு விடைதெரியாமல் கடவுளிடம் முறையிட்டார்.

ஒருநாள் அவர் ஒரு வீதிவழியாக வந்தார். அந்த வீதியில் அவர் பெயருள்ள குடும்பஸ்தர்- அதாவது சதாசிவம் என்பவர் இருந்தார். அவர் திண்ணையில் அமர்ந்திருந்தார். சதாசிவத்தை தூரத்திலேயே பார்த்த அவர் தன் மனைவிக்கு குரல் கொடுத்தார் ""அம்மா, சதாசிவம் தெருமுனை திரும்பிட்டது. ஆகாரம் கொண்டா''.

அவரது மனைவியும் வெள்ளிக் கும்பாவில் பச்சரிசி சோறிட்டு, பருப்பு ஊற்றி, நெய்யிட்டுப் பிசைந்து உருட்டிக்கொண்டு வாசல் வந்தாள். அன்றைக்கு சதாசிவம் அவள் வீட்டு வாசலிலேயே வந்துநின்றார். அவள் அவரை வணங்கி, உணவுருண்டையை அவர் கையில் எடுத்துவைத்தாள். ஒன்று, இரண்டு, மூன்று....

வழக்கம்போல மூன்றாவது கவளத்துடன் கையைத் துடைக்கப்போனார். சாப்பிட்டபின் கையை அவர் தன்மேலேயே துடைத்துக்கொள்வதுதான் வழக்கம். அந்தப் பெண்மணி, ""நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடுறீங்க. அதுவும் என்னைக்கு, எங்க சாப்பிடுறீங்களோ தெரியாது. இன்னைக்கு எனக்காக இன்னுமொரு உருண்டை சாப்பிடுங்க'' என்றபடி இன்னொரு கவளம் சோற்றை வைத்தாள். அவரும் அதை வாங்கி சாப்பிட்டார்.

அப்போது திண்ணையில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணியின் கணவன், ""டேய் சதாசிவம், உனக்கு அடுத்த ஜென்மம் இருக்கு, போடா'' என்று சொன்னார்.

சந்நியாசி சதாசிவம் அவரைப் பார்த்தார். ""என்னடா பார்க்கிற? ஏன் இன்னொரு ஜென்மானுதானே? உன் கணக்கு மூணுதானே. முடிஞ்சதும் கிளம்பிப் போகவேண்டியதுதானே. அவளுக்காக ஒரு உருண்டைச் சோறு ஏன் வாங்கிச் சாப்பிட்ட? இந்த ஒரு உருண்டைக்கு அவளுக்கு நீ கணக்கு சொல்லணும். அதனால உனக்கு இன்னொரு ஜென்மா இருக்குடா'' என்றார்.

ஒரு உருண்டைச் சோற்றுக்கே ஒரு ஜென்மம் என்றால் நமக்கெல்லாம் எத்தனை ஜென்மம்?

ஞானமென்பது ஒரு மனிதனுக்கு எப்படி, எந்த நிமிடத்தில் வருமென்று தெரியாது.

-

நன்றி-நக்கீரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 4:55 pm

ஒரு உருண்டைச் சோற்றுக்கே ஒரு ஜென்மம் என்றால் நமக்கெல்லாம் எத்தனை ஜென்மம்?

பயம் பயம் பயம் .
.
.
.
.
நல்ல பகிர்வு அண்ணா ! புன்னகை............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 27, 2017 7:01 pm

அறியாத தகவல்.
மிக்க நன்றி.
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 7:26 pm


தேச.மங்கையர்க்கரசி
-
பிறப்பு -19 மே 1984
-
இவர் பெற்ற விருதுகள்
-
தமிழ் நாட்டின் மிக உயரிய விருதான “கலைமாமணி” விருதை
தமிழ் நாடு அரசு இவருக்கு அளித்து சிறப்பித்துள்ளது.

சமய சொற்பொழிவாளர் வரிசையில் மிகவும் குறைந்த
வயதில் இந்த விருதினை பெற்றவர் என்ற பெருமை
தேச மங்கையர்க்கரசி அவர்களையே சாரும்.


ராஜீவ் காந்தி-மூப்பனார் நினைவு விருதினை 2011 ஆம் ஆண்டு
பெற்றார்.

செந்தமிழ் நாவுக்கரசி என்கிற பட்டத்தினை திருவாவடுதுறை
ஆதீனம் 2017 ஆம் ஆண்டு அளித்து சிறப்பித்தது .
--

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக