புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் பார்வை: அறம் -உன்னத சினிமா!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியும், போராட்டமுமே 'அறம்'.
விவசாயக் கூலியான ராமச்சந்திரன் துரைராஜ் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் கிராமத்துவாசி. மகன் விக்னேஷுக்கு நீச்சலில் சாதிக்க ஆசை. முன்னாள் கபடி வீரரான ராமச்சந்திரன் படித்தால் சம்பாதிக்கிறோமோ இல்லையோ, மரியாதையாவது கிடைக்கும் என்று அறிவுரை சொல்கிறார். பொருளாதாரப் பிரச்சினை வாட்டி எடுக்கும் சூழலிலும் பாசமும், அன்பும் இவர்கள் வாழ்க்கையை அழகாக்குகிறது. இந்த சூழலில் ராமச்சந்திரனின் மனைவி சுனுலக்ஷ்மி தன் நான்கு வயது மகளுடன் முள்ளு மரம் வெட்டச் செல்கிறார். அந்தப் பகுதியில் இருக்கும் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் சிறுமி மகாலட்சுமி எதிர்பாராவிதமாக விழுந்துவிடுகிறார். அதற்குப் பிறகு என்ன ஆகிறது, சிறுமி மகாலட்சுமி என்ன ஆனார், மாவட்ட ஆட்சியரான நயன்தாரா என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பது மீதிக் கதை.
உயிரோட்டமான கதைக்களத்தில் உணர்வுபூர்வமான காட்சிகள் மூலம் தரமான சினிமாவைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். இவரின் வரவால் தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆரோக்கியமான முயற்சிகள் தொடரும் என்று தாராளமாக நம்பலாம்.
நன்றி
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பார்க்கின்ற படங்களில் எல்லாம் கொலை, கொள்ளை, வெட்டுக்குத்து போன்ற குற்றச்செயல்களுக்காக ஸ்கெட்ச் போட்டு கெத்து காட்டும் ராமச்சந்திரன் துரைராஜ் இதில் முற்றிலும் வித்தியாசமாக, பொறுப்பான தந்தையாக பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரின் சொல்லும், செயலும் நம்மை கலங்கடிக்க வைக்கின்றன. ராமச்சந்திரன் துரைராஜின் நடிப்புக்காகவே இன்னும் பல பட வாய்ப்புகள் வாசலில் வரிசை கட்டி நிற்கும்.
மனம் முழுக்க பிள்ளைகளைச் சுமக்கும் ஒப்புயர்வற்ற தாயாக சுனுலக்ஷ்மி இயல்பான நடிப்பால் கவர்கிறார். குழந்தையை நினைத்து ஏங்குவதும், மருகுவதும், அழுது புலம்புவதுமாக தன் இருப்பை மிகச் சரியாக உணர்த்துகிறார்.
நான்கு வயது சிறுமி மகாலட்சுமியின் நடிப்பு தகுதிவாய்ந்தது. காக்கா முட்டை ரமேஷ், விக்னேஷ், வேல ராமமூர்த்தி, முத்துராமன், டி.சிவா, கிட்டி, வினோதினி வைத்தியநாதன் என்று படத்தில் வரும் துணை கதாபாத்திரங்கள் அனைவரும் தத்தம் பாத்திரம் உணர்ந்து தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். ராமச்சந்திரனின் நண்பனான பழநி பட்டாளம் அரசாங்கத்துக்கு எதிராக கேள்வி கேட்டு ஆவேசமாகப் பேசும் நடிப்பில் தனித்துத் தெரிகிறார்.
மனம் முழுக்க பிள்ளைகளைச் சுமக்கும் ஒப்புயர்வற்ற தாயாக சுனுலக்ஷ்மி இயல்பான நடிப்பால் கவர்கிறார். குழந்தையை நினைத்து ஏங்குவதும், மருகுவதும், அழுது புலம்புவதுமாக தன் இருப்பை மிகச் சரியாக உணர்த்துகிறார்.
நான்கு வயது சிறுமி மகாலட்சுமியின் நடிப்பு தகுதிவாய்ந்தது. காக்கா முட்டை ரமேஷ், விக்னேஷ், வேல ராமமூர்த்தி, முத்துராமன், டி.சிவா, கிட்டி, வினோதினி வைத்தியநாதன் என்று படத்தில் வரும் துணை கதாபாத்திரங்கள் அனைவரும் தத்தம் பாத்திரம் உணர்ந்து தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். ராமச்சந்திரனின் நண்பனான பழநி பட்டாளம் அரசாங்கத்துக்கு எதிராக கேள்வி கேட்டு ஆவேசமாகப் பேசும் நடிப்பில் தனித்துத் தெரிகிறார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நயன்தாராவின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு இந்தப் படம் உறுதுணை புரிகிறது. நேர்மை, துணிச்சல், உண்மை என மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நயன்தாராவின் கம்பீரம் பளிச்சிடுகிறது. சிறுமியை மீட்கப் போராடும் தருணத்தில் நயன்தாரா எடுக்கும் முயற்சிகளும், அதை வெளிக்காட்டும்போது உணர்வைக் கட்டுப்படுத்துவதும், அதற்குப் பிறகான விளைவுகளில் நிலைமையின் தீவிரம் உணர்ந்து உடைந்து அழுவதுமாக தன் ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். 'அரசாங்கம்னா நான் மக்கள்னு நினைக்கிறேன்' என்று மக்களுக்காகவே யோசித்து செயல்படும் ஆட்சியராக நிமிர்ந்து நிற்கிறார்.
இயக்குநர் கோபி நயினார் கதைக்களம், காட்சி அமைப்பு, கதாபாத்திரத் தேர்வு, திரைக்கதை என அத்தனையிலும் மிகுந்த கவனம் எடுத்து செதுக்கி இருப்பது படத்தில் பிரதிபலிக்கிறது. சமுதாயப் பிரச்சினைகளை அலசும்போது ஒட்டுமொத்த அரசாங்கத்தையும், நிர்வாகத்தையும் குறை சொல்லாமல் அடுக்குகளின் எந்த மட்டங்களில் பிரச்சினை நிலவுகிறது என்பதை நடுநிலை தவறாமல் பதிவு செய்திருக்கிறார். இதனாலேயே சமரசம் செய்துகொள்ளாத படைப்பாளியாக கோபி நயினார் அழுத்தமாக முத்திரை பதிக்கிறார்.
இயக்குநர் கோபி நயினார் கதைக்களம், காட்சி அமைப்பு, கதாபாத்திரத் தேர்வு, திரைக்கதை என அத்தனையிலும் மிகுந்த கவனம் எடுத்து செதுக்கி இருப்பது படத்தில் பிரதிபலிக்கிறது. சமுதாயப் பிரச்சினைகளை அலசும்போது ஒட்டுமொத்த அரசாங்கத்தையும், நிர்வாகத்தையும் குறை சொல்லாமல் அடுக்குகளின் எந்த மட்டங்களில் பிரச்சினை நிலவுகிறது என்பதை நடுநிலை தவறாமல் பதிவு செய்திருக்கிறார். இதனாலேயே சமரசம் செய்துகொள்ளாத படைப்பாளியாக கோபி நயினார் அழுத்தமாக முத்திரை பதிக்கிறார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வாட்டர் பாட்டில் வந்த பிறகு வந்த தண்ணீர் பஞ்சம், விவசாய பூமியில் விவசாயம் பொய்த்துப் போனதால் மாற்று வேலைக்கு பழக்கப்படுத்திக் கொள்ளும் நடைமுறை யதார்த்தம், அறிவியல் வளர்ச்சியின் பயன் எளிய மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற உண்மை என எல்லாம் மனசாட்சியை உலுக்குகிறது.
செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு ஆழ்துளைக் கிணற்றில் தவறுதலாக விழும் குழந்தைகளை மீட்க, அதற்கான உபகரணங்களை தயாரிக்க சில ஆயிரங்கள் கூட செலவு செய்யவில்லை என்ற அவலத்தை முகத்துக்கு நேராக சொல்லும் விதம் உறைய வைக்கிறது.
ஓம் பிரகாஷின் கேமரா ஆழ்துளைக் கிணற்றின் ஆழத்தையும், சிறுமியின் போராட்டத்தையும் பதற்றத்துடன் நமக்குக் கடத்துகிறது. ஜிப்ரானின் உயிர் உருகும் பின்னணி இசை படத்துக்கு மிகப் பெரிய பலம் சேர்க்கிறது. வலுவான பல காட்சிகள் ஜிப்ரானின் இசையால் ஜீவனுள்ளதாக மாறுகிறது. ரூபனின் எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது. ஆழ்துளை கிணறு தொடர்பான காட்சிகளில் பீட்டர் ஹெய்னின் உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது.
இந்தப் படத்துக்கு இடைவேளை தேவையா? விவாத நிகழ்ச்சியை ஏன் கத்தரி போடாமல் நீட்டித்துக்கொண்டே செல்கிறார்கள் என்ற கேள்விகளும் எழுகின்றன.இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் 'அறம்' உன்னத சினிமாவாக உயர்ந்து நிற்கிறது.
நன்றி
தி இந்து
செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு ஆழ்துளைக் கிணற்றில் தவறுதலாக விழும் குழந்தைகளை மீட்க, அதற்கான உபகரணங்களை தயாரிக்க சில ஆயிரங்கள் கூட செலவு செய்யவில்லை என்ற அவலத்தை முகத்துக்கு நேராக சொல்லும் விதம் உறைய வைக்கிறது.
ஓம் பிரகாஷின் கேமரா ஆழ்துளைக் கிணற்றின் ஆழத்தையும், சிறுமியின் போராட்டத்தையும் பதற்றத்துடன் நமக்குக் கடத்துகிறது. ஜிப்ரானின் உயிர் உருகும் பின்னணி இசை படத்துக்கு மிகப் பெரிய பலம் சேர்க்கிறது. வலுவான பல காட்சிகள் ஜிப்ரானின் இசையால் ஜீவனுள்ளதாக மாறுகிறது. ரூபனின் எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது. ஆழ்துளை கிணறு தொடர்பான காட்சிகளில் பீட்டர் ஹெய்னின் உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது.
இந்தப் படத்துக்கு இடைவேளை தேவையா? விவாத நிகழ்ச்சியை ஏன் கத்தரி போடாமல் நீட்டித்துக்கொண்டே செல்கிறார்கள் என்ற கேள்விகளும் எழுகின்றன.இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் 'அறம்' உன்னத சினிமாவாக உயர்ந்து நிற்கிறது.
நன்றி
தி இந்து
நெட்டிசன் நோட்ஸ்: 'அறம்'- வெல்லட்டும்!
-
நயன்தாரா நடிப்பில் கோபி நயினாரின் இயக்கத்தில் தண்ணீர்ப் பிரச்சினைகளை அதன் வேர் வரை அலசி இருக்கும் படம் 'அறம்'. சமூக வலைதளங்களிலும் சினிமா உலகிலும் 'அறம்' பெரிதும் பேசப்பட்டு வரும் நிலையில், படம் குறித்த நெட்டிசன்களின் கருத்து உங்களுக்காக...
Raja Sundararajan
தாகத்துக்கு தண்ணீர் கேட்ட இடத்தில், 'ஸாப்ட் ட்ரிங்ஸ்' தரவா என்னும் ஒற்றை வசனம் குடிநீர்க் கொள்ளையைச் சட்டென உணர்த்திவிடுகிறது.
நயனைப்போல நல்ல கலெக்டர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அறம் என்பது ராக்கெட்டுக்கும் ஆழ்துளைக் கிணற்றுக்கும் பொது. இதை அறியாத நிர்வாகத்தால் ஒரு பயனும் இல்லை நாட்டுக்கு. நமக்கும்.
Kavitha Bharathy
அறம் வெல்லும் அஞ்சற்க.. வாழ்த்துகள் தோழர் கோபி..
கரிகாலன்
பார்ப்பது திரைப்படம் எனத் தெரிந்தும் அச்சமும் பதற்றமும் கண்ணீரும் கையறு நிலையுமென உணர்வுக் கொந்தளிப்பை அளிக்கிறது அறம். மிக முக்கியமான தீவிர அரசியலைப் பேசுகிற படம். தமிழ் திரைக்கு அற்புதமான புது இயக்குநர். #அறம்.. வெல்லட்டும்!
Chandru
பொழுது போக்குவதற்காக மட்டுமே சினிமா அல்ல, அவ்வப்போது மக்களின் பிரச்சனைகளை ‘பொட்டிலடித்தாற்போல்’ பேசுவதும் சினிமாதான் என்பதை அழுத்தமாக ‘அறம்’ மூலம் நிரூபித்திருக்கிறார் கோபி நயினார்.
கிடைக்கும் இடங்களிலெல்லாம் வசனங்களால் இன்றைய அரசியல், அதிகார வர்க்கங்களின் போலி முகத்திரையை கிழிக்க முயன்றிருக்கிறார் கோபி. அறம்... அவசியம் பார்க்க வேண்டிய படம்!
Kalpana Pandarinathan
அறம், அழவைக்கும்: ஆழமாகச் சிந்திக்க வைக்கும்; எளிய மக்களின் வாழ்க்கையை நெஞ்சில் அறைந்து உணர்ந்து உறையவைக்கும். மக்களுக்கான சினிமா அறம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உடன் நடித்த கலைஞர்கள் அனைவரும் நெஞ்சில் நிற்கிறார்கள். அன்றாடக் கூலிகளின் வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். நயன்தாராவின் வேறொரு முகம் இப்போதுதான் எனக்குத் தெரிந்தது. வாழ்த்துகள். #அறம் வெல்லும்.
Jeyanthan Jesudoss
# அறம்.. அபூர்வம்.
பல ஆயிரம் அடி ஆழத்தில் மீத்தேனும் நிலக்கரியும் இருந்தால் அதை எடுக்கத் தொழில்நுட்பம் வைத்திருக்கும் ஆளும் அரசியல்வாதிகளின் தூர்ந்துபோன மனதைத் தூர் அள்ளியிருக்கிறார் ‘அறம்’ கோபி. இன்னும் பல ‘புறக்கணிக்கப்பட்ட இந்தியா’க்களை மீட்டெடுப்பார் என நம்புவோம்!
முடிந்தால் நம் ஆட்சியாளர்களை ஒரு திருமண மண்டபத்துக்குள் அடைத்துவைத்து அறம் படத்தை அவர்களுக்கு திரையிடுங்கள்.
Arun Chandhiran
#அறம் -தமிழ் சினிமாவின் தரம், இந்திய சினிமாவிற்கு வரம்!
S Ganeshkumar
'அறம்' படத்தை கொண்டாடித் தீர்ப்பதே அறம்!
சிறந்த படத்தைக் கொடுத்துள்ள ஒட்டுமொத்த அறம் படக் குழுவுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்!
Saraa Subramaniam
'சமூக - அரசியலை துளியும் உறுத்தாமல் பேசும் அறம், ஆரம்பம் முதல் இறுதி வரை உணர்வுபூர்வ சிலிர்ப்பனுபவத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்தும்.
#அறம்_காண_விரும்பு.
Murugan Manthiram
இதுவரை நான் பார்த்த தமிழ் படங்களில் நயன்தாரா போல இத்தனை திடமாக தெளிவாக துல்லியமாக எந்த நடிகையும் அரசியல் பேசவில்லை. #அறம் #ஆளுமை #நயன்தாரா
அலார்ட்_ஆறுமுகம் MBA @taraoffcl
அறம் - ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை பலி....என்று செய்தியாய் பார்த்து கடந்து சென்றவர்களுக்கு, அதன் பின் இருக்கும் வலிகளையும் , வேதனைகளையும் , சூழ்ச்சிகளையும் தெளிவாய் வெளிக்காட்டிவிட்ட படம் #அறம்.
Bramma Nathan
அறம். தமிழ் சினிமாவில் இதுவரை தொட்டிராத கரு. பார்த்திராத காட்சிகள். உணரப்படாத உணர்ச்சிகள். எளிய மக்களின் ஓங்கியக் குரலாக, நீண்ட நாள் தவமாக உயர்ந்து நிற்கும் உன்னத படைப்பு. அடிப்படை அரசியலை, மிகச் சரியான தருணத்தில் நடுப்பொட்டில் அறைந்து, உயர்ந்து நிற்கிறது அறம்.
அதனினும் உயர்ந்து நிற்கிறார் இயக்குனர் கோபி நய்யனார். ஜிப்ரானும் ஓம்பிரகாஷும் பிரம்மாண்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள். ராமசந்திரன் துரைராஜ், சுனு லட்சுமி, காக்கா முட்டை சிறுவர்கள், சிறுமி, அற்புத நடிப்பு. வேறென்ன? நயன்தாராவின் பாதையில் அழுத்தமான மைல்கல்...
பிரியா @devil_girlpriya
தண்ணீர் ஒரு நாட்டின் வெள்ளை இரத்தம்- அறம் இயக்குனர் #கோபிநயினார்.
DirectorNavaneethaKrishnan @dirnavaneetkris
மிகச் சரியான நேரத்தில் மிகவும் தேவையான ஒரு கதையை எடுத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்ததற்கு நன்றி. அறம் - கூர்மை!
திவாகரன் @divakarantmr
அறம்- மாற்றத்தை விரும்பும் சமூகப் பார்வை கொண்ட அதிகாரிக்கும் - எதுவும் மாறக்கூடாது என மார்தட்டும் ஒரு கூட்டத்திற்குமான அறப்போர்.,
meenakshisundaram @meenadmr
நயன்தாரா இதுவரை நடித்த படங்களில் பெஸ்ட் எனலாம். இயக்குனர் கோபி ஆழமான சமூக பிரச்னையைச் தொட்டிருக்கிறார். அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பலரை தோலுரிக்கிறார். அறம்...சிறந்த தமிழ் படைப்பு.
Niyas Ahmed
விபரம் தெரிந்த நாளிலிருந்து 'அறம்' இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதில்லை!
இன்னும் இன்னும் கொண்டாடுவோம்!
Murugan
அறம் பார்த்தலே அறம்!
Nanda Periyasami
அறம்... பதை பதைக்க வைக்கும் முக்கியமான தமிழ் சினிமா ...நொடிக்கு நொடி பதட்டமாக... உண்மைக்கு நெருக்கமாக... அழுத்தமாக... நம்மை அந்த இடத்திற்கே அழைத்து சென்றிருக்கிறார்கள். தவிர்க்க முடியாத தமிழ் சினிமா.
Arun Bhagath
அறம் - செவ்வணக்கங்கள் தோழர் இயக்குனர் கோபி நயினார். மக்கள் சினிமாவை வெறும் பிரச்சாரமாக இல்லாமல், கச்சிதமான திரைக்கதையுடன் கொடுத்துள்ளீர்கள் . தமிழின் முக்கிய சினிமாக்களில் ஒன்று அறம்.
Ganeshan Gurunathan
வெறுமனே அறம் பற்றி, அதன் வழியான கோபங்களை வெளிப்படுத்தும் அதேவேளையில், அரசியலில் இதை எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.
இதன் வழியாக, யாரெல்லாம் வேறுவித அரசியல் கூட்டுக்கு தயாராகிறார்கள், அவர்கள் நிகழ்த்த இருக்கும் அரசியல் மாற்றங்கள் எவை என்பதையும் கவனியுங்கள்.
வெறுமனே, அப்பாவித்தனமாக அறம் மட்டும் பேசாமல், அரசியலையும் கவனியுங்கள்.
Anthanan Shanmugam
அறம் - படம் துவங்கிய இருபதாவது நிமிஷத்தில் ஆரம்பிக்கிற நடுக்கம் உடலெங்கும் பரவி ஒவ்வொரு நரம்பாக ஊடுருவி மண்டைக்குள் இறங்குகிறது. ஒரு கட்டத்தில் திரையை நோக்குகிற தைரியம் இல்லாமல் நான் சீட்டுக்கு கீழே குனிந்து கொண்டது என் 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இதுவரை நடக்காதது.
இதுநாள் வரை ஆழ்துளைக் கிணற்றுக்குள் கிடந்த கோபி நைனார் என்ற படைப்பாளி ‘அறம்’ மூலம் மீட்கப்பட்டிருக்கிறார். மீட்டெடுத்த கலெக்டர் நயன்தாராவுக்கு நல்ல சினிமா ரசிகர்கள் கடமைப்பட்டவர்கள்!
-
தி இந்து
-
நயன்தாரா நடிப்பில் கோபி நயினாரின் இயக்கத்தில் தண்ணீர்ப் பிரச்சினைகளை அதன் வேர் வரை அலசி இருக்கும் படம் 'அறம்'. சமூக வலைதளங்களிலும் சினிமா உலகிலும் 'அறம்' பெரிதும் பேசப்பட்டு வரும் நிலையில், படம் குறித்த நெட்டிசன்களின் கருத்து உங்களுக்காக...
Raja Sundararajan
தாகத்துக்கு தண்ணீர் கேட்ட இடத்தில், 'ஸாப்ட் ட்ரிங்ஸ்' தரவா என்னும் ஒற்றை வசனம் குடிநீர்க் கொள்ளையைச் சட்டென உணர்த்திவிடுகிறது.
நயனைப்போல நல்ல கலெக்டர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அறம் என்பது ராக்கெட்டுக்கும் ஆழ்துளைக் கிணற்றுக்கும் பொது. இதை அறியாத நிர்வாகத்தால் ஒரு பயனும் இல்லை நாட்டுக்கு. நமக்கும்.
Kavitha Bharathy
அறம் வெல்லும் அஞ்சற்க.. வாழ்த்துகள் தோழர் கோபி..
கரிகாலன்
பார்ப்பது திரைப்படம் எனத் தெரிந்தும் அச்சமும் பதற்றமும் கண்ணீரும் கையறு நிலையுமென உணர்வுக் கொந்தளிப்பை அளிக்கிறது அறம். மிக முக்கியமான தீவிர அரசியலைப் பேசுகிற படம். தமிழ் திரைக்கு அற்புதமான புது இயக்குநர். #அறம்.. வெல்லட்டும்!
Chandru
பொழுது போக்குவதற்காக மட்டுமே சினிமா அல்ல, அவ்வப்போது மக்களின் பிரச்சனைகளை ‘பொட்டிலடித்தாற்போல்’ பேசுவதும் சினிமாதான் என்பதை அழுத்தமாக ‘அறம்’ மூலம் நிரூபித்திருக்கிறார் கோபி நயினார்.
கிடைக்கும் இடங்களிலெல்லாம் வசனங்களால் இன்றைய அரசியல், அதிகார வர்க்கங்களின் போலி முகத்திரையை கிழிக்க முயன்றிருக்கிறார் கோபி. அறம்... அவசியம் பார்க்க வேண்டிய படம்!
Kalpana Pandarinathan
அறம், அழவைக்கும்: ஆழமாகச் சிந்திக்க வைக்கும்; எளிய மக்களின் வாழ்க்கையை நெஞ்சில் அறைந்து உணர்ந்து உறையவைக்கும். மக்களுக்கான சினிமா அறம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உடன் நடித்த கலைஞர்கள் அனைவரும் நெஞ்சில் நிற்கிறார்கள். அன்றாடக் கூலிகளின் வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். நயன்தாராவின் வேறொரு முகம் இப்போதுதான் எனக்குத் தெரிந்தது. வாழ்த்துகள். #அறம் வெல்லும்.
Jeyanthan Jesudoss
# அறம்.. அபூர்வம்.
பல ஆயிரம் அடி ஆழத்தில் மீத்தேனும் நிலக்கரியும் இருந்தால் அதை எடுக்கத் தொழில்நுட்பம் வைத்திருக்கும் ஆளும் அரசியல்வாதிகளின் தூர்ந்துபோன மனதைத் தூர் அள்ளியிருக்கிறார் ‘அறம்’ கோபி. இன்னும் பல ‘புறக்கணிக்கப்பட்ட இந்தியா’க்களை மீட்டெடுப்பார் என நம்புவோம்!
முடிந்தால் நம் ஆட்சியாளர்களை ஒரு திருமண மண்டபத்துக்குள் அடைத்துவைத்து அறம் படத்தை அவர்களுக்கு திரையிடுங்கள்.
Arun Chandhiran
#அறம் -தமிழ் சினிமாவின் தரம், இந்திய சினிமாவிற்கு வரம்!
S Ganeshkumar
'அறம்' படத்தை கொண்டாடித் தீர்ப்பதே அறம்!
சிறந்த படத்தைக் கொடுத்துள்ள ஒட்டுமொத்த அறம் படக் குழுவுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்!
Saraa Subramaniam
'சமூக - அரசியலை துளியும் உறுத்தாமல் பேசும் அறம், ஆரம்பம் முதல் இறுதி வரை உணர்வுபூர்வ சிலிர்ப்பனுபவத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்தும்.
#அறம்_காண_விரும்பு.
Murugan Manthiram
இதுவரை நான் பார்த்த தமிழ் படங்களில் நயன்தாரா போல இத்தனை திடமாக தெளிவாக துல்லியமாக எந்த நடிகையும் அரசியல் பேசவில்லை. #அறம் #ஆளுமை #நயன்தாரா
அலார்ட்_ஆறுமுகம் MBA @taraoffcl
அறம் - ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை பலி....என்று செய்தியாய் பார்த்து கடந்து சென்றவர்களுக்கு, அதன் பின் இருக்கும் வலிகளையும் , வேதனைகளையும் , சூழ்ச்சிகளையும் தெளிவாய் வெளிக்காட்டிவிட்ட படம் #அறம்.
Bramma Nathan
அறம். தமிழ் சினிமாவில் இதுவரை தொட்டிராத கரு. பார்த்திராத காட்சிகள். உணரப்படாத உணர்ச்சிகள். எளிய மக்களின் ஓங்கியக் குரலாக, நீண்ட நாள் தவமாக உயர்ந்து நிற்கும் உன்னத படைப்பு. அடிப்படை அரசியலை, மிகச் சரியான தருணத்தில் நடுப்பொட்டில் அறைந்து, உயர்ந்து நிற்கிறது அறம்.
அதனினும் உயர்ந்து நிற்கிறார் இயக்குனர் கோபி நய்யனார். ஜிப்ரானும் ஓம்பிரகாஷும் பிரம்மாண்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள். ராமசந்திரன் துரைராஜ், சுனு லட்சுமி, காக்கா முட்டை சிறுவர்கள், சிறுமி, அற்புத நடிப்பு. வேறென்ன? நயன்தாராவின் பாதையில் அழுத்தமான மைல்கல்...
பிரியா @devil_girlpriya
தண்ணீர் ஒரு நாட்டின் வெள்ளை இரத்தம்- அறம் இயக்குனர் #கோபிநயினார்.
DirectorNavaneethaKrishnan @dirnavaneetkris
மிகச் சரியான நேரத்தில் மிகவும் தேவையான ஒரு கதையை எடுத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்ததற்கு நன்றி. அறம் - கூர்மை!
திவாகரன் @divakarantmr
அறம்- மாற்றத்தை விரும்பும் சமூகப் பார்வை கொண்ட அதிகாரிக்கும் - எதுவும் மாறக்கூடாது என மார்தட்டும் ஒரு கூட்டத்திற்குமான அறப்போர்.,
meenakshisundaram @meenadmr
நயன்தாரா இதுவரை நடித்த படங்களில் பெஸ்ட் எனலாம். இயக்குனர் கோபி ஆழமான சமூக பிரச்னையைச் தொட்டிருக்கிறார். அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பலரை தோலுரிக்கிறார். அறம்...சிறந்த தமிழ் படைப்பு.
Niyas Ahmed
விபரம் தெரிந்த நாளிலிருந்து 'அறம்' இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதில்லை!
இன்னும் இன்னும் கொண்டாடுவோம்!
Murugan
அறம் பார்த்தலே அறம்!
Nanda Periyasami
அறம்... பதை பதைக்க வைக்கும் முக்கியமான தமிழ் சினிமா ...நொடிக்கு நொடி பதட்டமாக... உண்மைக்கு நெருக்கமாக... அழுத்தமாக... நம்மை அந்த இடத்திற்கே அழைத்து சென்றிருக்கிறார்கள். தவிர்க்க முடியாத தமிழ் சினிமா.
Arun Bhagath
அறம் - செவ்வணக்கங்கள் தோழர் இயக்குனர் கோபி நயினார். மக்கள் சினிமாவை வெறும் பிரச்சாரமாக இல்லாமல், கச்சிதமான திரைக்கதையுடன் கொடுத்துள்ளீர்கள் . தமிழின் முக்கிய சினிமாக்களில் ஒன்று அறம்.
Ganeshan Gurunathan
வெறுமனே அறம் பற்றி, அதன் வழியான கோபங்களை வெளிப்படுத்தும் அதேவேளையில், அரசியலில் இதை எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.
இதன் வழியாக, யாரெல்லாம் வேறுவித அரசியல் கூட்டுக்கு தயாராகிறார்கள், அவர்கள் நிகழ்த்த இருக்கும் அரசியல் மாற்றங்கள் எவை என்பதையும் கவனியுங்கள்.
வெறுமனே, அப்பாவித்தனமாக அறம் மட்டும் பேசாமல், அரசியலையும் கவனியுங்கள்.
Anthanan Shanmugam
அறம் - படம் துவங்கிய இருபதாவது நிமிஷத்தில் ஆரம்பிக்கிற நடுக்கம் உடலெங்கும் பரவி ஒவ்வொரு நரம்பாக ஊடுருவி மண்டைக்குள் இறங்குகிறது. ஒரு கட்டத்தில் திரையை நோக்குகிற தைரியம் இல்லாமல் நான் சீட்டுக்கு கீழே குனிந்து கொண்டது என் 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இதுவரை நடக்காதது.
இதுநாள் வரை ஆழ்துளைக் கிணற்றுக்குள் கிடந்த கோபி நைனார் என்ற படைப்பாளி ‘அறம்’ மூலம் மீட்கப்பட்டிருக்கிறார். மீட்டெடுத்த கலெக்டர் நயன்தாராவுக்கு நல்ல சினிமா ரசிகர்கள் கடமைப்பட்டவர்கள்!
-
தி இந்து
-
-
இந்தப் படத்தை, சென்னை கே.கே.நகர் காசி திரையரங்கில்
இன்று, 11-11-17 ரசிகர்களுடன் நடிகை நயன்தாரா பார்த்தார்.
நயன்தாராவைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள்.
பின்னர், நயன்தாரா உதயம் திரையரங்கிற்குச் சென்று,
அங்கும் சிறிது நேரம் ரசிகர்களுடன் 'அறம்' படத்தைப் பார்த்தார்.
-
நயன்தாராவின் அறம் படத்தில் அவர் பெயருக்குள்
மறைந்திருக்கும் ரகசியம்
நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து
ஒட்டு மொத்த திரையுலகமே தலையில் தூக்கி
கொண்டாடும் படம் அறம்.
இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை
பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா ஒரு கம்பீரமான IAS
அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார்,
இதில் இவர் பெயர் மதிவதனி.
இந்த பெயரை இதற்கு முன் பலரும் அறிந்திருப்பீர்கள்,
தெரியாதவர்களுக்காக இதோ, LTTE-யின் தலைவர்
பிரபாகரனின் மனைவியின் பெயரும் மதிவதனி தான்.
அவரை போல் ஒரு தைரியமான பெண்ணின் பெயரை
மக்களுக்கு தெரியப்படுத்தவே இயக்குனர் இந்த பெயரை
தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
-
சினி உலகம்
மறைந்திருக்கும் ரகசியம்
நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து
ஒட்டு மொத்த திரையுலகமே தலையில் தூக்கி
கொண்டாடும் படம் அறம்.
இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை
பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா ஒரு கம்பீரமான IAS
அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார்,
இதில் இவர் பெயர் மதிவதனி.
இந்த பெயரை இதற்கு முன் பலரும் அறிந்திருப்பீர்கள்,
தெரியாதவர்களுக்காக இதோ, LTTE-யின் தலைவர்
பிரபாகரனின் மனைவியின் பெயரும் மதிவதனி தான்.
அவரை போல் ஒரு தைரியமான பெண்ணின் பெயரை
மக்களுக்கு தெரியப்படுத்தவே இயக்குனர் இந்த பெயரை
தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
-
சினி உலகம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|