புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
16 Posts - 55%
heezulia
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
1 Post - 3%
rajuselvam
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
17 Posts - 3%
prajai
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
9 Posts - 1%
jairam
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நிமோனியா  Poll_c10நிமோனியா  Poll_m10நிமோனியா  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிமோனியா


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Wed Dec 06, 2017 1:19 pm



நிமோனியா இனி நெருங்காது!
டாக்டர் கு.கணேசன்,

பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் கொடிய நோய், நிமோனியா. 'ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே’ (Streptococus Pneumoniae) என்ற பாக்டீரியா, காற்றின் மூலமாகப் பரவி நுரையீரலைப் பாதிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது. நிமோனியா நோயாளி இருமும்போதும், தும்மும்போதும், சளியைக் காறித் துப்பும்போதும் இந்தக் கிருமி, சளியுடன் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் நபருக்கும் தொற்றிக்கொள்ளும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கும், நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம்.

சரியாகத் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், புகை அடுப்பில் இருந்து வரும் புகையைச் சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, குறிப்பாக வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை நிமோனியா எளிதில் தாக்கும். நிமோனியா நம்மை நெருங்கவிடாமல் தடுக்க 'நீமோகாக்கல்’ என்ற தடுப்பூசி உள்ளது.

அறிகுறிகள்:

இந்த நோய்த் தொற்று உள்ள குழந்தைக்குப் பசி இருக்காது. சாப்பிட மறுக்கும். காய்ச்சல், கடுமையான இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம் பூத்துப்போதல் போன்ற அறிகுறிகளும் தென்படும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால், குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; சோர்வாகக் காணப்படும்.

நோய்ப் பாதிப்பு:

நிமோனியா நோய் இருப்பதைக் கவனிக்காமல்விட்டால், நோய்க் கிருமிகள் நுரையீரலைத் தாண்டி, ரத்த ஓட்டத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவும் ஆபத்து ஏற்படும். அதிலும் குறிப்பாக, முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளை உறை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும்.

சிகிச்சை:

நிமோனியாவை அதன் தாக்கத்தின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்பநிலை நிமோனியா முதல் வகையைச் சேர்ந்தது. இதற்கு வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்துக்குச் சிகிச்சை பெற்றால் போதும். தீவிர நிமோனியா இரண்டாம் வகை. இதன் தாக்குதலுக்கு உள்ளானவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களின் சிரை ரத்தக்குழாய்களில் தகுந்த 'ஆன்டிபயாடிக்’ மருந்துகள் மற்றும் குளுக்கோஸை செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்சிஜனைச் செலுத்தியும் சிகிச்சை தரப்படும்.

தடுப்பூசி வகை:

நிமோனியாவைப் பரப்பும் கிருமியின் செல் உறையிலிருந்து சர்க்கரைப் பொருளைப் பிரித்து எடுத்து, ஒரு புரதப் பொருளுடன் இணைத்து, 'நீமோகாக்கல் இணைப்பொருள் தடுப்பூசி’ (Pneumococcal Conjugate Vaccine) (சுருக்கமாக பி.வி.சி) என்ற தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள். இதில் 'பி.சி.வி 10’, 'பி.சி.வி 13’ என்று இரண்டு வகை உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றை, பச்சிளம் குழந்தைகள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள்வரை அனைவரும் போட்டுக்கொள்ளலாம்.

'நீமோகாக்கல் கூட்டுச் சர்க்கரைப் பொருள் தடுப்பூசி’ (Pneumococcal Polysaccharide Vaccine) (சுருக்கமாக பி.பி.எஸ்.வி23) என்பது மற்றொரு வகை. இந்தக் கிருமியின் செல் உறையிலிருந்து சர்க்கரைப் பொருளைப் பிரித்து, புரதப்பொருளுடன் இணைக்காமல், அப்படியே அதை ஒரு தடுப்பூசியாகத் தயாரிக்கிறார்கள்.

'பி.சி.வி’ தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முறை:

குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்கள் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதற்கு முதன்மைத் தடுப்பூசி என்று பெயர். அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக ஒரு தவணை போட வேண்டும். ஒருமுறை தரப்படும் தடுப்பூசியின் அளவு அரை மில்லி. இந்தத் தடுப்பூசியை மற்ற தடுப்பூசிகளுடன் ஒரே நேரத்தில் போட்டுக்கொள்ளலாம். ஆனால், மருந்தைத் தனித்தனி சிரிஞ்சில் எடுத்து, தொடையில் தனித்தனி இடங்களில் தசைஊசியாகப் போட வேண்டும்.

குழந்தைக்கு 6 மாதங்களுக்குள் இது போடப்படவில்லை எனில், ஒரு மாத இடைவெளியில் 3 முதன்மைத் தடுப்பூசிகளும், 15 மாதங்கள் முடிந்ததும் ஓர் ஊக்குவிப்பு ஊசியும் போடப்பட வேண்டும். 6 மாதம் முதல் ஒரு வயதுக்குள் இது போடப்படவில்லை என்றால், அதற்குப் பிறகு ஒரு மாத இடைவெளியில் 2 முதன்மைத் தடுப்பூசிகளும், 2வது வயதில் ஓர் ஊக்குவிப்பு ஊசியும் போடப்பட வேண்டும். ஒரு வயதிலிருந்து 2 வயதுக்குள்ளும் இது போடப்படவில்லை என்றால், ஒரு முதன்மைத் தடுப்பூசியும் ஓர் ஊக்குவிப்பு ஊசியும் போடப்பட வேண்டும். இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையில் இரண்டு மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும். இரண்டு வயது முதல் 5 வயதுக்குள் இந்தத் தடுப்பூசியைப் போடவில்லை என்றால், ஒருமுறை மட்டும் இதைப் போட்டுக்கொண்டால் போதும்.

'பி.பி.எஸ்.வி 23’ தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முறை:

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இது போடப்பட வேண்டும். சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், புற்றுநோய், மண்ணீரல் நோய், எய்ட்ஸ் நோய், ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், உறுப்பு மாற்றறு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிற குழந்தைகள், பி.சி.வி13 தடுப்பூசியை ஒருமுறையும், 2 மாதங்கள் கழித்து பி.பி.எஸ்.வி23 தடுப்பூசியை ஒருமுறையும் போட்டுக்கொள்ள வேண்டும். இதன் அளவு அரை மில்லி. இதை இடது புஜத்தில் தசை ஊசியாகப் போட வேண்டும்.

ஊசி போடப்பட்ட பகுதியில் லேசாக வலி, வீக்கம், தோல் சிவப்பது போன்ற தொல்லைகள் ஏற்படலாம். மிதமான காய்ச்சல் வரலாம். இவை எல்லாமே தானாகச் சரியாகிவிடும்.

யார் போட்டுக்கொள்ளக் கூடாது?

இந்தத் தடுப்பூசிகளுக்கும், டி.டி.ஏ.பி (DTap) ஊசிக்கும் அலர்ஜி உள்ளவர்கள் இவற்றைப் போட்டுக்கொள்ளக்கூடாது. டைபாய்டு, மலேரியா போன்ற கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், நோய் குணமான பிறகு போட்டுக்கொள்ளலாம். குழந்தைக்குத் தடுமம், சளி போன்ற சிறிய தொந்தரவுகள் இருந்தாலும், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

முதியோரின் உயிர் காக்கும் தடுப்பூசி!

நிமோனியா சில சமயம் வயதில் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகமிகக் குறைவாகவே இருப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் நிமோனியா அவர்களைத் தாக்கினால், உடனடியாக உயிரிழப்பும் நேரிடலாம். இதைத் தவிர்க்க, 50 வயதைக் கடந்தவர்கள் பி.பி.எஸ்.வி23 தடுப்பூசியை ஒருமுறை போட்டுக்கொள்வது நல்லது.

தடுப்பூசியின் முக்கியத்துவம்

நிமோனியாவை ஏற்படுத்துகின்ற நீமோகாக்கல் கிருமிக் குடும்பத்தில் 90 வகையான துணை இனங்கள் (Sero Types) உள்ளன. இவற்றில் பல, நிமோனியாவுக்குத் தரப்படும் மருந்துகளையே எதிர்த்து நிற்கும் குணமுள்ளவை என்பதால், உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது. ஆண்டுதோறும், உலகம் முழுவதும் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிர் இழக்கின்றனர். இதில் 25 சதவீகிதம் பேர் இந்தியக் குழந்தைகள். ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இந்தத் தடுப்பூசியை முறைப்படி போட்டுக்கொள்பவர்களுக்கு நிமோனியா வருவது இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

'பி.சி.வி10’ தடுப்பூசி என்பது, நீமோகாக்கல் கிருமிகளில் மொத்தமுள்ள 90 துணை இனங்களில், 10 வகைகளால் ஏற்படும் நிமோனியாவைத் தடுக்கும் தடுப்பூசி. பி.சி.வி13 தடுப்பூசி, 13 வகைகளால் ஏற்படும் நிமோனியாவைத் தடுக்கிறது. பி.பி.எஸ்.வி23 தடுப்பூசி, 23 வகைகளால் ஏற்படும் நிமோனியாவைத் தடுக்கிறது. இந்தத் தடுப்பூசிகள் நவீனத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுவதால், இவற்றின் விலை அதிகம். எனவே அரசாங்கம் இந்தத் தடுப்பூசிகளைப் போடுவது இல்லை. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இவை போடப்படுகின்றன.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக