புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_m10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10 
62 Posts - 57%
heezulia
உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_m10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_m10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_m10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_m10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10 
104 Posts - 59%
heezulia
உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_m10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_m10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_m10உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா?


   
   
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Thu Dec 21, 2017 5:35 pm

உயிர் காக்கும் ரத்தம் வீணாகலாமா?

கு. கணேசன்
தமிழ் இந்து


ரத்தம் நம் உயிர் காக்கும் திரவம். விபத்துகளுக்கு மட்டுமல்ல, அறுவைச் சிகிச்சை, உறுப்பு மாற்று சிகிச்சை, பிரசவம், தீக்காயங்கள், கடுமையான ரத்தசோகை, தலசீமியா, புற்றுநோய் போன்ற பலதரப்பட்ட மருத்துவப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தேவைப்படுவது ரத்தம்தான்.

அகில இந்திய அளவில் தலசீமியா பிரச்சினை உள்ளவர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் பேர் புதிதாக இந்த நோயுடன் பிறக்கின்றனர். இவர்களுக்கு ரத்தமாற்று சிகிச்சை ஒன்றுதான் உயிர் பிழைக்க உதவும் ஒரே வழி. வாழ்வின் இறுதிநாள் வரைக்கும் இவர்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. மாதம் இருமுறை புதிய ரத்தம் செலுத்தப்பட வேண்டும். இவர்களுக்கு ரத்தம் கிடைப்பது பெரிய சவாலாக உள்ளது.

ரத்தப் பற்றாக்குறை

ஒரு ரத்த வங்கியிலிருந்து ரத்தத்தைத் தானமாகப் பெறுபவர்கள், பதிலுக்கு தங்கள் உறவினர்கள் மூலம் அந்த வங்கிக்கு ரத்ததானம் செய்ய வேண்டும். ஒருசில முறை அவசரத்துக்கு ரத்தம் தேவைப்படும்போது ரத்த வங்கிகள் கொடுத்துவிடுகின்றன. ஆனால், மாதம் இருமுறை வீதம் ரத்தம் நிரந்தரமாகத் தேவைப்படும் தலசீமியா நோயாளிகளுக்கு ‘பதில் ரத்தம்’ கொடுக்க உறவினர்கள் கிடைக்காதபோது, புதிய ரத்தம் கிடைக்காது. இதனால், இவர்களில் பாதிப் பேர் 25 வயதுக்குள் இறந்துவிடுகின்றனர். மீதிப் பேர் ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய்வரை செலவழித்து, வெளிச்சந்தையில் தகுதியற்றவர்களைப் பணம் கொடுத்து அழைத்துவந்து ‘பதில் ரத்தம்’ வழங்க வைக்கின்றனர். இது பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இதுபோன்ற நிலைமை ரத்தப் புற்றுநோயாளிகளுக்கும் ஏற்படுகிறது.

மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத் துறை கொடுத்துள்ள புள்ளிவிவரப்படி நாட்டில் ஆண்டுதோறும் 1.2 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. (ஒரு யூனிட் என்பது 350 மி.லி. ரத்தம்). ஆனால், 90 லட்சம் யூனிட் ரத்தம் மட்டுமே ரத்ததான முகாம்கள் வழியாகவும் தன்னார்வம் கொண்டவர்கள் மூலமாகவும் கிடைக்கிறது. இன்னும் 30 லட்சம் யூனிட்டுகள் தேவைப்படுகிறது.

என்ன பிரச்சினை?

ரத்தச் சேமிப்பைப் பொறுத்தவரை நாம் இரண்டு விதப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். நம் தேவைக்குத் தரமான ரத்தத்தைத் தரமானவர்களிடமிருந்து பெறுவது முதல் பிரச்னை. கூலிகள், வேலை இல்லாதவர்கள், போதை அடிமைகள், குடிகாரர்கள், வறுமையில் வாடுபவர்கள் போன்றோரிடம்தான் ரத்தம் பெறுவது நடைமுறையில் இருக்கிறது. இப்படிப் பணத்துக்காக ரத்ததானம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் வந்த பிறகு இந்த வழியில் ரத்தம் கிடைப்பது குறைந்துவிட்டது.

2015-ல் எடுத்த கணக்குப்படி, இந்தியாவில் 1,024 அரசு ரத்த வங்கிகளும், 1,684 தனியார் ரத்த வங்கிகளும் உள்ளன. இந்திய மக்கள்தொகையின் அடிப்படையில் பார்த்தால் இந்த எண்ணிக்கை குறைவு. நாட்டில் 17 மாநிலங்களில் 81 மாவட்டங்களில் ஒரு ரத்த வங்கிகூட இல்லை. இருக்கும் ரத்த வங்கிகள்கூட தங்களுக்குத் தேவையான ரத்தத்தைப் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னார்வத்துடன் தரும்போது மட்டுமே பெறமுடிகிறது. இதனால், விடுமுறைக் காலங்களிலும், தேர்வுக் காலங்களிலும் ரத்தம் கிடைப்பது குறைந்துவிடுகிறது. அதுமட்டுமல்ல, கிராமப்புறங்களில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், கிராமங்களை ஒட்டியுள்ள சிறுநகரங்களில் இயங்கும் ரத்த வங்கிகள் ரத்தம் கிடைக்காமல் வற்றிப்போகின்றன.

தரமான ரத்தம் கிடைப்பது ஒரு பிரச்சினை என்றால், சில மாநிலங்களில் தேவைக்கு அதிகமான ரத்தம் சேமிக்கப்பட்டும்கூட, அதைப் பயன்படுத்த முடியாமல் வீணாவது இரண்டாவது பிரச்சினை. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 6 லட்சம் லிட்டர் ரத்தம் இவ்வாறு வீணாகியுள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் அதிகபட்ச ரத்தம் வீணாகியுள்ளது. ஒருமுறை சேகரிக்கப்பட்ட ரத்தத்தை ஒரு மாதத்துக்கு மேல் பாதுகாக்க முடியாது என்பதுதான் ரத்தம் வீணாவதற்கு முக்கியக் காரணம்.

இந்தியாவின் பல பகுதிகளில் ரத்தத்தின் தேவை இருந்தும், தேவைக்கு அதிகமாக உள்ள ரத்த வங்கியிலிருந்து தேவையுள்ள ரத்த வங்கிக்கு எந்த ஓர் அவசரம் என்றாலும் அதை எடுத்துச் செல்வதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. எனவேதான் இவ்வாறு ரத்தம் வீணாகும் அவலம் தொடர்கிறது.

ஒருங்கிணைப்பு அவசியம்!

நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கிகள் மற்றும் தனியார் ரத்த வங்கிகளை ஒருங்கிணைத்து, அந்த வட்டாரத்தின் தேவைக்கேற்ப ரத்தச் சேமிப்பை முறைப்படுத்தி, ரத்தம் வீணாவதைத் தடுக்க வேண்டும். அதற்கான ஒருங்கிணைப்பு மையங்களை உடனடியாக ஏற்படுத்த இரு அரசுகளும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், தேவைப்படும் மையத்துக்கு ரத்தம் கொண்டு செல்லவும் புதிய சட்ட விதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

வளர்ச்சி அடைந்த மேலை நாடுகளில் ரத்தம் வழங்குவது என்பது சமூகக் கடமையாகக் கருதப்படுகிறது. பிறந்தநாள், மணநாள், பெற்றோர் நினைவுநாள், பண்டிகை தினங்கள் போன்றவற்றை நாம் கோயிலுக்கும் உணவு விடுதிகளுக்கும் சென்று கொண்டாடுவதுபோல், அவர்கள் அந்தத் தினங்களில் ரத்ததானம் வழங்குவதைக் கடமையாகக் கருதுகிறார்கள். ஓர் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டாலோ, தீவிரவாத தாக்குதல் நடந்தாலோ உடனே பலரும் தாங்களாகவே முன்வந்து ரத்ததானம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுபோன்ற சமூக உணர்வு நம்மிடமும் உருவாக வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

தலசீமியா நோயாளிகள் போன்ற நிரந்தமாக ரத்தம் தேவைப்படுபவர்களுக்குத் தாராளமாக ரத்தம் கிடைப்பதற்கு வழிசெய்யும் மசோதாக்கள் தேவை. அவர்களுக்கு ஆகும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் உதவலாம். இதன் மூலம் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தரலாம்.

18 வயது நிரம்பியவர்கள், 45 கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்டவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராம்/டெ.லி.க்குக் குறையாமல் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் இயல்பாக உள்ளவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் மஞ்சள் காமாலை, ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லாதவர்கள் ரத்த தானம் செய்யலாம். ஒருவர் ஒருமுறை தானம் செய்யும் ரத்தம் மூன்று உயிர்களைக் காப்பாற்றும்.

பொதுமக்கள் தன்னார்வத்துடன் ரத்தம் வழங்க முன்வருவதற்குப் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் மூலம் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். ரத்தக் கொடையாளர்களின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பணி வாய்ப்பு/பணி உயர்வில் முன்னுரிமை கொடுப்பது, அவர்களின் வாரிசுகளுக்குக் கல்வி/வேலை வாய்ப்பில் சலுகைகள் அளிப்பது போன்ற ஆக்கபூர்வமான திட்டங்களை அரசுகள் செயல்படுத்தினால் இன்னும் பலரை ஈர்க்கும். அப்போது ரத்தம் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக நாட்டில் உயிர்கள் இழப்பது தடுக்கப்படும்!

கு. கணேசன்,

பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக