புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_m10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10 
62 Posts - 57%
heezulia
அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_m10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_m10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_m10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_m10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10 
104 Posts - 59%
heezulia
அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_m10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_m10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_m10அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 8:32 am

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய் 201808170422503152_Conducting-the-atomic-test-Vajpayee-who-exposed-Indias_SECVPF
-
புதுடெல்லி,

வாஜ்பாய் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1926-ம்
ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி (கிறிஸ்துமஸ் நாளில்) பிறந்தார்.
அவருடைய தந்தையின் பெயர்
பண்டிட் கிருஷ்ணபிகாரி வாஜ்பாய். அவர் பள்ளி ஆசிரியர்.

குவாலியரில் தொடக்கக்கல்வி பயின்ற வாஜ்பாய் பின்னர்,
விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார்.
முதுகலைப்படிப்பிற்காக கான்பூரில் உள்ள பல்கலைக்
கழகத்தில் சேர்ந்து அரசியல் விஞ்ஞானத்தில்
முதுகலைப்பட்டம் பெற்றார்.

பின்னர், சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். பதவியில் இருந்து
ஓய்வுபெற்ற அவருடைய தந்தையும், சட்டம் பயில விரும்பி
அதே கல்லூரியில் சேர்ந்தார்.

தந்தையும், மகனும் விடுதியில் ஒரே அறையில் தங்கி,
ஒரே வகுப்பில் படித்தனர். எனினும் சட்டப்படிப்பை வாஜ்பாய்
பூர்த்தி செய்யவில்லை. மாணவராக இருக்கும் போதே
ஆர்.எஸ்.எஸ். இயக்க நிறுவனர் கேசவராவுடன் பழகும்
வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் வாஜ்பாய் அரசியலில்
நுழைந்தார்.

1941-ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
1942-ல் மகாத்மாகாந்தி நடத்திய ‘வெள்ளையனே வெளியேறு’
போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

1946-ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்திய ‘ராஷ்டிரீய தர்மா’
என்ற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் புதிதாகத்தொடங்கிய
சில பத்திரிகைகளின் ஆசிரியரானார்.
அவர் எழுதிய கட்டுரைகள் மூலம் அவருடைய எழுத்தாற்றல்
வெளிப்பட்டது.

1950-ல் ‘ஜனசங்கம்’ கட்சியை உருவாக்குவதில் முக்கிய
பங்கெடுத்து கொண்டார்.

1951-ம் ஆண்டு லக்னோ தொகுதியில் நடந்த நாடாளுமன்ற
இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டார்.
அதில் தோல்வி அடைந்தார்.
எனினும் பிறகு அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.

1962, 1986-ம் ஆண்டுகளில் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 8:42 am

இந்திரா காந்தி ‘நெருக்கடி நிலை’ அறிவித்தபோது,
1975 முதல் 1977 வரை சிறையில் இருந்தார். நெருக்கடி
நிலை தளர்த்தப்பட்டு நாடாளுமன்றத்தேர்தல் நடை
பெற்றபோது, ஜெயப்பிரகாசரின் யோசனைப்படி
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ‘ஜனதா’
என்ற கட்சியை உருவாக்கின.

வாஜ்பாய் தன்னுடைய ‘ஜனசங்கம்’ கட்சியை,
ஜனதாவுடன் இணைத்தார்.

1977 தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. இந்திராகாந்தியும்
தோல்வி அடைந்தார். மொரார்ஜி தேசாய் தலைமையில்
அமைக்கப்பட்ட ஜனதா அரசில், வெளி விவகார மந்திரியாக
வாஜ்பாய் பொறுப்பு ஏற்றார்.

வெளிவிவகார மந்திரியாக இருந்தபோது, ஐ.நா. சபை
கூட்டத்தில் கலந்து கொண்டு, இந்தியில் உரை நிகழ்த்தினார்.
பல சர்வதேச மாநாடுகளிலும் பங்கு கொண்டார்.

ஜனதா கட்சி உடைந்த பின், ‘பாரதீய ஜனதா’ கட்சியை
உருவாக்கினார். 1992-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு
‘பத்மபூஷண்’ விருது வழங்கி கவுரவித்தது.

1996-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக்
கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனினும்,
பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று
இருந்ததால், மந்திரிசபை அமைக்குமாறு ஜனாதிபதி
அழைப்பு விடுத்தார்.

1996-ம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதி பிரதமராக வாஜ்பாய்
பதவி ஏற்றார். பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில்
நிரூபிக்க இயலாமல் போனதால் 13 நாட்களில் ராஜினாமா
செய்தார்.

1998-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி 2-வது முறையாக
பிரதமராக பதவி ஏற்றார். பாரதீய ஜனதா கூட்டணியில்
இடம்பெற்று இருந்த ஜெயலலிதா, வாஜ்பாய்க்கு கொடுத்து
வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், 1999 ஏப்ரல் 17-ந்தேதி
வாஜ்பாய் அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்ந்தது.

அதன் பின்னர் அதே ஆண்டு நடந்த தேர்தலில் அமோக
வெற்றி பெற்று, அக்டோபர் 13-ந்தேதி இந்தியாவின்
பிரதமராக 3-வது முறையாக வாஜ்பாய் பதவி ஏற்றார்.

1999-ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியை
கைப்பற்ற பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்த போது,
நமது படை வீரர்களை கொண்டு கடுமையான போர் நடத்தி
அவர்களை விரட்டி அடித்த பெருமை வாஜ்பாயை சாரும்.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 8:43 am


அரசியலுக்காக மட்டுமே வாழ்க்கையை அர்ப்பணித்துக்
கொண்ட வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளவில்லை.
வாஜ்பாய், ஆங்கிலத்திலும், இந்தியிலும் அற்புதமாக
பேசக்கூடிய ஆற்றல் படைத்தவர்.

கவிதைகள் எழுதுவதிலும் வாஜ்பாய் வல்லவர்.
இவருடைய கவிதைகளும், சொற்பொழிவுகளும் இந்தியிலும்,
ஆங்கிலத்திலும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

பாரதீய ஜனதா தலைவர்களில், எல்லா கட்சித்தலைவர்களின்
நன்மதிப்பையும் பெற்றவர் வாஜ்பாய்.

நாடாளுமன்றத்தில் வாஜ்பாயின் விவாதங்களை நேரில்
கண்ட நேரு, அவருடைய பேச்சாற்றலை பலமுறை பாராட்டி
இருக்கிறார். “எதிர் காலத்தில் நீங்கள் பெரிய தலைவராக
வருவீர்கள்” என்று கூறினார்.

அவர் வாக்கு பலித்தது. காங்கிரஸ் அல்லாத தலைவர் ஒருவர்,
இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாக பதவி ஏற்றார்.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1998-ம் ஆண்டு மே மாதம்
11 மற்றும் 13-ந்தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில்
அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தப்பட்டது.

இதனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியா மீது
பொருளாதார தடை என மிரட்டின. ஆனால் அதையெல்லாம்
பொருட்படுத்தாமல் இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக
அரங்கில் நிலை நாட்டியவர் வாஜ்பாய்.

அமெரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களை
முன்மாதிரியாக கொண்டு, கடந்த 2001-ம் ஆண்டு, தங்க
நாற்கர சாலை திட்டத்தை வாஜ்பாய் தொடங்கினார்.
டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய 4 மெட்ரோ
நகரங்களை நான்கு மற்றும் ஆறு வழிச்சாலைகளால்
இணைப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இதன்படி, வடக்கு தெற்காக, ஸ்ரீநகரில் இருந்து கன்னியாகுமரி
வரையும், கிழக்கு மேற்காக சில்சாரில் இருந்து போர்பந்தர்
வரையும் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன.

இந்த நெடுஞ்சாலைகள் மூலம் அமெரிக்கா போன்று
இந்தியா வளர்ச்சி அடையும் என்று வாஜ்பாய் கணித்தார்.

தனது ஆட்சிக்காலத்தில் வாஜ்பாய் மேற்கொண்ட மிகப்
பெரிய சீர்திருத்தங்களில் ஒன்று, தனியார்மயமாக்கல்
ஆகும். 5 ஆண்டுகளில், 32 அரசு நிறுவனங்களும்,
ஓட்டல்களும் தனியார்மயம் ஆக்கப்பட்டன.

பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு வாஜ்பாய் தீவிர
அரசியலில் ஈடுபடவில்லை. 2009-ம் ஆண்டு பக்கவாத
நோய் தாக்கியதை தொடர்ந்து அரசியலில் இருந்து அ
வர் முழுமையாக விலகினார். உடல் நலக்குறைவு காரணமாக
அவர் வீட்டிலேயே தங்கி இருந்தார்.

அவருடைய வளர்ப்பு மகள் அவரை கவனித்து வந்தார்.
2015-ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா
விருது வாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 8:44 am



47 ஆண்டுகள் எம்.பி. பதவி வகித்த வாஜ்பாய்

இந்திய அரசியல் தலைவர்களில் 12 முறை எம்.பி. பதவி
வகித்த தலைவர் வாஜ்பாய். இவர் மக்களவை எம்.பி.யாக
10 முறையும், மாநிலங்களவை எம்.பி.யாக 2 முறையும் பதவி
வகித்து இருக்கிறார்.

மொத்தம் கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் எம்.பி. பதவியில்
இருந்து உள்ளார். 2 மற்றும் 4-வது மக்களவையில்
பல்ராம்பூர் தொகுதியில் இருந்தும், 5-வது மக்களவைக்கு
குவாலியர் தொகுதியில் இருந்தும், 6 மற்றும் 7-வது
மக்களவைக்கு புதுடெல்லியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு
உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் இருந்து
10, 11, 12, 13, 14-வது மக்களவைக்கு (1991-ம் ஆண்டு முதல்
2009-ம் ஆண்டு வரை) தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஒரே ஒரு முறை மக்களவை தேர்தலில் அவர் தோல்வியை
தழுவி இருக்கிறார். 1984-ம் ஆண்டு, மத்திய பிரதேச மாநிலம்,
குவாலியர் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ்
சிந்தியாவிடம் சுமார் 2 லட்சம் ஓட்டில் தோல்வி அடைந்தார்.

மாநிலங்களவைக்கு 1962 மற்றும் 1986 ஆண்டுகளில்
தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம்,
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வாஜ்பாய்
அறிவித்தார்.

சீர்திருத்தங்களை அறிமுகம் செய்த வாஜ்பாய்

வாஜ்பாய், பிரதமர் பதவி வகித்தபோது, நாட்டின்
பொருளாதாரத்திலும், உள்கட்டமைப்பிலும் சீர்திருத்தங்களை
அறிமுகம் செய்தார். தனியார் துறையை ஊக்குவித்தார்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கினார்.

அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கியதால் பல்வேறு
தொழிற்சங்கங்களின் கோபத்தை மட்டுமல்லாது, அரசு
துறையினரின் கோபத்தையும் சம்பாதித்தார்.

நரசிம்மராவ், பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த தொழில்
சார்ந்த சீர்திருத்தங்கள், தாராளமய சந்தை சீர்திருத்தங்களை
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக வாஜ்பாய்
புத்துயிரூட்டினார்.

ஆனால் அதற்கு சோதனை வந்தது. 1996-ம் ஆண்டு நிலையற்ற
அரசியல் சூழலாலும், 1997-ம் ஆண்டு ஆசிய பொருளாதார
நெருக்கடியாலும் அவை யாவும் முடங்கிப்போயின.

ஜவகர்லால் நேருவை தொடர்ந்து பள்ளி குழந்தைகளால்
அன்புடன் ‘மாமா’ என அழைக்கப்பட்ட வாஜ்பாய்

மகாத்மா காந்தியை ‘தாத்தா’ என்றும், ஜவகர்லால் நேருவை
‘மாமா’ என்றும் பள்ளி குழந்தைகள் நேசத்துடன் குறிப்பிட்டு
வருகின்றனர். இந்நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு
இன்னொரு ‘மாமா’ கிடைத்து உள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒருமுறை இமாசல பிரதேச
மாநிலம் மணாலியில் ஓய்வு எடுத்து வந்தார். அப்போது
அங்குள்ள பள்ளி விழாவில் அவர் பங்கேற்றார். விழாவில்
வாஜ்பாயை பாராட்டி பேசிய ஒரு குழந்தை,
ஜவகர்லால் நேருவை தொடர்ந்து உங்களையும் ‘மாமா’
என்று அழைக்க விரும்புகிறோம் என்று கூறியது.

அந்த குழந்தை அன்புடன் வழங்கிய ‘மாமா’ பட்டத்தை
மகிழ்ச்சியுடன் வாஜ்பாய் ஏற்றுக்கொண்டார்.
மேலும் அவர் அந்த பள்ளிக்கு ஆயிரம் ரூபாயை நன்கொடையாக
வழங்கினார். அப்போது வாஜ்பாய் பேசுகையில், நான் உங்கள்
‘மாமா’ ஆகிவிட்டதால் என் உள்ளம் மகிழ்ச்இ சியில் திளைக்கிறது
என பூரிப்புடன் தெரிவித்தார்.
-
-----------------------------

தின தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 2:36 pm

சூப்பருங்க சூப்பருங்க



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 17, 2018 2:44 pm

வாஜ்பாய் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1926-ம் 
ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி (கிறிஸ்துமஸ் நாளில்) பிறந்தார். 

1924



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக