புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
11 Posts - 50%
heezulia
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_m10ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 02, 2019 5:18 am

ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரம்; இன்று காஞ்சிப்பெரியவர் ஸித்தி தினம் Tamil_News_large_2181977
காஞ்சிப்பெரியவரை மகாசுவாமிகள் என்றும் பரமாச்சாரியார்
என்றும் ஜகத்குரு என்றும் என அனைவரும் கொண்டாடினர்.

''ஜகத்குரு என்றால் இந்த ஜகத்திற்கு நான் குரு என்பதல்ல
பொருள்; இந்த ஜகமே எனக்கு குரு என்பதாக பொருள்
கொள்கிறேன். நான் வாழும் இந்த உலகம் எத்தனையோ
விஷயங்களை எனக்கு போதிக்கிறது'' என அடக்கத்துடன்
தெரிவித்தவர் மகாசுவாமிகள்.

1894 வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் சுப்பிரமணிய சாஸ்திரிகள்,
மகாலட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவர்,
13 வயதில் துறவியானார். அதன் பின் 87 ஆண்டுகள் துறவியாக
வாழ்ந்தார்.

தெரியாத விஷயமே இல்லை என பிரமிக்கும் அளவுக்கு
ஏராளமான விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார்.
பெரும் பரதக் கலைஞர்கள் நாட்டியத்தில் வரும் கரணங்கள்
தொடர்பாக அவரிடம் விளக்கம் பெற்றதுண்டு.

எந்தெந்தக் கோயில் சிற்பங்களில் எந்தெந்த அபூர்வக்
கரணங்கள் சிலை வடிவில் செதுக்கப்பட்டுள்ளன என விளக்கி,
அங்கு சென்று அவற்றைப் பார்த்துக் கற்குமாறு
நெறிப்படுத்தினார்.

சிற்பக்கலைஞர்களிடம் கைதேர்ந்த ஸ்தபதி போல அவர்
உரையாடியதுண்டு.

இசைக் கலைஞர்கள் வந்தால் அவர்களைப் பாடச் சொல்லி,
அவர்கள் பாடும் பாட்டின் ராக நுணுக்கங்களை விவாதிப்பார்.
இவ்வளவு சங்கீத ஞானம் இவருக்கு எப்படி வாய்த்தது என
பாடகர்கள் வியப்பார்கள்

. 'இசையரசி' எனப் போற்றப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி
மகாசுவாமிகளின் தீவிர பக்தையாக இருந்தார். அவர் ஐக்கிய
நாடுகள் சபையில் பாடச் சென்ற போது சுவாமிகளிடம் ஆசி
பெற வந்தார்.

அங்கு பாடுவதற்காக 'மைத்ரீம் பஜதாம்' என்ற ஸ்லோகத்தை
எழுதி தந்தார் சுவாமிகள். அதன் மையக் கருத்து

'உலகில் யுத்தம் வேண்டாம்,
நாடுகள் எல்லாம் நேசமாக இருந்து
எங்கும் அமைதி தழைக்கட்டும்'


என்பது தான்.
--
நன்றி-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 02, 2019 5:18 am


விஞ்ஞானத்திலும் சுவாமிகளுக்கு ஆர்வம் இருந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் அவரிடம் ஆசி பெற வந்ததுண்டு. அவர்களிடம் கேள்வி கேட்டு விண்வெளி ஆய்வு தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்வார். தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் அவரின் இலக்கிய அறிவு மட்டுமல்ல, இலக்கண அறிவும் கூட வியக்க வைப்பதாகும். அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியைத் தம் வறுமை தீர்வதன் பொருட்டுப் பாராயணம் செய்யலாமா என தமிழறிஞர் ஒருவர் கேட்ட போது, பாராயணம் செய்யலாம் எனச் சொன்ன சுவாமிகள், அதற்கான அகச்சான்று இருக்கிறது என விளக்கினார். 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்பதில் 'வருவாய்' என்ற சொல் வருகிறது. அதை 'வா' என்னும் பொருளில் மட்டுமல்லாமல் 'வருவாய் அருள்வாய்', அதாவது செல்வம் தருவாய் என்பதாக பொருள் கொள்ளலாம் என விளக்கியது கேட்டு வியந்தார் தமிழறிஞர்.

கால்நடை போல பண்பாடின்றி வாழ்ந்த மக்களை மனிதர்களாக மாற்றி உயர்த்திட, கால்நடையாகவே தேசம் முழுவதும் நடந்தார். காலடியில் பிறந்த ஆதிசங்கரரின் மரபில் வந்த சுவாமிகளின் காலடி படாத இடம் பாரதத்தில் இல்லை. தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் பேசும் மக்களிடம் அவரவர் மொழிகளில் உரையாடி வழிநடத்தினார். அன்பே ஆன்மிகம் என்று நம்பிய அவர், அன்பின் காரணமாக அனுஷ்டானங்களைத் தளர்த்திக் கொள்ளத் தயங்கியதில்லை. மாதத்தில் ஒரு நாள் மவுனம் இருப்பார். மவுனம் அனுசரித்த ஒருநாளில், தரிசிக்க வந்த பார்வையற்ற மாணவர்களுக்காக மவுனவிரதத்தைக் கைவிட்டார்.

மந்திரங்களின் மகிமை குறித்து நிறையப் பேசியிருக்கிறார். விஷ்ணு சகஸ்ரநாமம் செல்வம், ஆரோக்கியத்தை தரும் என்றும், காயத்ரி மந்திரம் இம்மை, மறுமை நலன்களைத் தரும் என்றும் சொல்லி பக்தர்கள் ஜபிக்க ஊக்குவித்தார். தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்றவற்றின் மகத்துவம் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறார். பணத்தை ஒரு பொருட்டாக அவர் மதித்ததில்லை. நாடி வரும் செல்வந்தர்கள் பெரும் தொகையை சமர்ப்பித்தால் அப்படியே ஒதுக்கி விட்டுச் சிரிப்பார். யாராவது ஏழைகள் தமது பெண் திருமணத்திற்குப் பணமில்லை எனக் கண்ணீர் வடித்தால் அப்பணத்தை எடுத்துச் செல்லுமாறு கூறி விடுவார். இப்படி தேவையானவர்களுக்கு அவர் வழங்கிய சந்தர்ப்பம் ஏராளம்.

ஏழை, பணக்காரர் என சுவாமிகள் யாரையும் பேதம் பாராட்டியதில்லை. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்த்தார் அவரைப் பொறுத்தவரை அனைவரும் கடவுளின் குழந்தைகள். அந்த சமநோக்கு காரணமாக மக்கள் அவரை ஆன்மிக வானில் ஒரு நட்சத்திரமாக, நடமாடும் தெய்வமாக போற்றப்பட்டார். வேண்டுதல் வேண்டாமை இல்லாத குணம் கடவுளின் குணம் அல்லவா?
----
திருப்பூர் கிருஷ்ணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக