புதிய பதிவுகள்
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
49 Posts - 41%
mohamed nizamudeen
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
3 Posts - 3%
rajuselvam
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 1%
Kavithas
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 1%
prajai
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
280 Posts - 42%
heezulia
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
24 Posts - 4%
sugumaran
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
5 Posts - 1%
prajai
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
4 Posts - 1%
manikavi
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி மன்ற செய்திகள்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 03, 2019 8:34 pm

புதடில்லி:'அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஊழியர்களுக்கு, நிறுவனம் வழங்கும் அடிப்படை சம்பளத்தில், சிறப்பு படியையும் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகை, மாதம்தோறும் பிடித்தம் செய்ய வேண்டும்' என, வருங்கால வைப்பு நிதி கமிஷனர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து சில நிறுவனங்கள், மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ஊழியருக்கு நிறுவனம் வழங்கும் சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடிக்கக் கூடாது' என உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.பல நிறுவனங்கள் சார்பிலும், சிறப்பு படியை, அடிப்படை சம்பளத்தில் சேர்த்து, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றின் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன் நடந்தது.விசாரணை முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்:ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கும் சிறப்பு படியையும் சேர்த்தே, வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். சிறப்பு படி என்பதை, சம்பளத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.ஊழியருக்கு, சிறப்பு படிகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்பதை, மனு தாக்கல் செய்த நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை. எனவே, அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. அடிப்படை சம்பளத்துடன், சிறப்பு படியைச் சேர்த்து, அதன் அடிப்படையில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும்இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 03, 2019 8:42 pm

சென்னை:மாநிலம் முழுவதும், தொழிலாளர் நலத்துறையினர் நடத்திய ஆய்வில், 236 கடைகளில், விதி மீறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தொழிலாளர் நலத்துறை கமிஷனர், நந்தகோபால் உத்தரவுப்படி, துறை அதிகாரிகள், பிப்ரவரியில், மாநிலம் முழுவதும், 609 எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் சோதனை நடத்தினர். இவற்றில், 96 கடைகளில் விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல, அனைத்து மாவட்டங்களிலும், சாலையோரத்தில் உள்ள, பழம், பூ மற்றும் காய்கறி விற்பனை செய்யும், 851 கடைகளில், சோதனை நடத்தினர்.
சோதனையில், 140 கடைகளில் விதிமீறல் இருந்தது கண்டறியப்பட்டது.சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆய்வின்போது, மறு முத்திரையிடப்படாத எடை அளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 04, 2019 10:18 am

மின் வினியோக செய்தி, தினசரி செய்திகளுக்கு மாற்றப்பட்டுள்ளது [You must be registered and logged in to see this link.] 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Mar 04, 2019 9:06 pm

நல்லது அய்யா .நன்றி.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 06, 2019 7:50 pm

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில், சட்டவிரோத சுரங்க வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட, காங்., எம்.எல்.ஏ., பகவான் பாரத் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக, அம்மாநில சட்டசபை சபாநாயகரும், பா.ஜ., கட்சியை சேர்ந்தவருமான, ராஜேந்திர திரிவேதி,தெரிவித்தார்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 06, 2019 7:53 pm

மதுரை: தமிழகத்தில் எத்தனை மதுபான ஆலைகள் உள்ளன என்பது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆலைகள் தயாரிக்கும் மதுபானங்களில் எவ்வளவு மதுபானங்கள், டாஸ்மாக்கிற்கு விநியோகம் செய்யப்படுகிறது எனவும் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 06, 2019 7:55 pm

புதுடில்லி: அயோத்தி வழக்கில் நிரந்தர தீர்வு காண்பதற்கு மத்தியஸ்தர்களையோ அல்லது பேச்சுவார்த்தை குழுவையோ நியமித்தால் உத்தரவு பிறப்பிக்க தயாராக உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தெரிவித்து, உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த உத்தரவில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வே இந்த வழக்கை விசாரிக்க போதுமானது என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது. இதனை எதிர்த்து 3 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.இதனையடுத்து இவ்வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாகதெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அமர்வு, இது மக்களின் மத உணர்வுகள் தொடர்பான வழக்கு. இது கோயிலா, மசூதியா என்பது பற்றி நாங்கள் தலையிட முடியாது. தற்போதைய நிலையின் அடிப்படையிலேயே வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க முடியும். மத்தியஸ்தர்கள் அல்லது மத்தியஸ்தர் குழுவில் இடம்பெறுபவர்களின் பெயர்களை வழக்கில் தொடர்புடையவர்கள் தெரிவிக்க வேண்டும். மத்தியஸ்தர் பெயர்களை அளித்தால் இவ்வழக்கில் நிரந்த தீர்வு காண்பதற்கான உத்தரவை விரைவில் பிறக்க முடிவு செய்துள்ளோம்.கோர்ட் உத்தரவை ஏற்க தயாராக இல்லாததால், மத்தியஸ்தம் செய்ய வாய்ப்பு வழங்குகிறோம். பிரச்னையை நிரந்தமாக தீர்க்க மத்தியஸ்தம் செய்வதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தாலும் அதற்காக நாங்கள் முயற்சிக்கிறோம். கடந்த கால வரலாறு குறித்து நாங்களும் படித்துள்ளோம். இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 07, 2019 8:48 pm

சென்னை:கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்ட, இருவரது ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மறைந்த முதல்வர், ஜெ., தங்கும் கோடநாடு எஸ்டேட்டில், காவலாளியை கொலை செய்து, கொள்ளை அடிக்கப்பட்டது இதன் பின்னணியில், தமிழக முதல்வரை தொடர்புபடுத்தி, 'தெஹல்கா' இணையதள பத்திகையின் முன்னாள் ஆசிரியர், மாத்யூ சாமுவேல், ஆவணப்படம் வெளியிட்டு இருந்தார்.இதையடுத்து, முதல்வரை அவதுாறு செய்வதாக அளித்த புகாரில், மாத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்டோருக்கு எதிராக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், சயன், மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமினை, நீலகிரி நீதிமன்றம், ரத்து செய்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், இருவரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன்,விசாரணைக்கு வந்தது.போலீஸ் தரப்பில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ.நடராஜன், ''வழங்கப்பட்ட ஜாமினை, இருவரும் தவறாக பயன்படுத்தி உள்ளனர். மிரட்டல் விடுத்ததாக, இரண்டு சாட்சிகள் அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மனுதாரர்களின் செயல், நீதி நிர்வாகத்தில் குறுக்கிடுவதாக உள்ளது. ஜாமின் ரத்து சரி தான்,'' என, வாதாடினார்.ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட இருவரது மனுவையும், தள்ளுபடி செய்து, நீதிபதி, இளந்திரையன் நேற்று உத்தரவிட்டார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 07, 2019 8:50 pm

சென்னை:'திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரிக்க, 'டிவி' மெகா தொடர்கள் காரணமா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை, அயனாவரத்தில், ஜோசப் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கொலை பின்னணியில், கள்ள தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட சிலர், குண்டர் சட்டத்தின் கீழ், காவலில் வைக்கப்பட்டனர்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அஜித்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள், கிருபாகரன், அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. தாமதமாக, குண்டர் சட்டத்தில் கைதுக்கான உத்தரவு பிறப்பித்ததற்கு, காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என கூறி, அஜித்குமாரை விடுதலை செய்தது.திருமணத்தை மீறிய உறவுகளால் ஏற்படும் குற்றங்களை தடுக்க, இவ்வழக்கில், மத்திய, மாநில அரசுகள் சேர்க்கப்பட்டன. வழக்கு, மீண்டும், டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஜி.கார்த்திகேயன், போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், முகமது ரியாஸ் ஆஜராகினர்.விசாரணைக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:திருமணம் தாண்டிய உறவு, ஆபத்தான சமூக தீங்காக மாறி விட்டது. இதனால், கொலைகள், கடத்தல், தாக்குதல் குற்றங்கள் நடக் கின்றன. தவறான உறவுகளால், மனைவியை கணவனோ அல்லது கணவனை மனைவியோ, கொலை செய்யும் குற்றங்கள் நடக்கின்றன.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, முதலில், அதற்கான காரணங்களை அறிய வேண்டும். எனவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு, அரசு பதில் அளிக்க வேண்டும்:* திருமணத்தை மீறிய உறவால், 10 ஆண்டுகளில், சென்னை, தமிழகம், இந்தியாவில், எத்தனை கொலைகள் நடந்து உள்ளன; தற்கொலை, கடத்தல், தாக்குதல் சம்பவங்கள் எத்தனை நடந்துள்ளன; ஆண்டுக்கு ஆண்டு, குற்றங்கள் அதிகரிக்கின்றனவா?*அத்தகைய உறவுகள் அதிகரிக்க, 'டிவி' தொடர்கள், சினிமாக்கள், முக்கிய காரணமா; கொலைகள், கடத்தல் சம்பவங்களுக்கு, 'டிவி' மற்றும் சினிமாக்களில் வரும் காட்சிகள் வித்திடுகின்றனவா?* வாழ்க்கை துணையை கொலை செய்ய, கூலிப்படையை ஏற்பாடு செய்வது அதிகரித்துள்ளதா?
* திருமணத்தை மீறிய உறவுகளுக்கு, பொருளாதார சுதந்திரம் காரணமா? கணவன் - மனைவி, இருவரில் ஒருவருக்கு, செக்ஸ் ஆர்வ குறைவு அல்லது குறைபாடுகள் காரணமா; மேற்கத்திய கலாசாரம், இணையதளங்கள் காரணமா?
* ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், உளவியல், நரம்பியல், சமூக ஆர்வலர்கள் அடங்கிய நிபுணர்கள் குழுவை அமைத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய, மாநில அரசுகள், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?
* ஒவ்வொரு மாவட்டத்திலும், குடும்ப நல ஆலோசனை மையங்களை அமைத்து, கணவன், மனைவிக்கு, ஆலோசனை ஏன் வழங்கக் கூடாது?இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கு விசாரணை, ஜூன் மூன்றாம் வாரத்துக்கு, ஒத்திவைக்கப்பட்டது.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 07, 2019 8:52 pm

சென்னை : வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக