புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_c10சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_m10சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_c10சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_m10சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_c10சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_m10சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_c10சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_m10சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_c10சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_m10சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_c10சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_m10சிவபுராணம்- பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபுராணம்- பாடல் வரிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 04, 2019 11:57 am

சிவபுராணம்- பாடல் வரிகள் 201903041119314875_Shivaratri-shiva-puranam_SECVPF

சிவராத்திரி அன்று பாட வேண்டிய சிவபுராணம்
--------------------------
-
நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி!
தேசன் அடிபோற்றி7 சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி!
மாயப் பிறப்பறுக்கம் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன், அவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச்சிவபுரா ணந்தன்னை
முந்தை விளை முழுதும் ஓய உரைப்பன்யான்,

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்கி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலிறைஞ்சி,
விண்ணிறைந்து, மண்ணிறைந்து மிக்காய் விளக்கு ஒளியாய்
எண் இறந்து எல்லையிலாதானே! நின்பெறுஞ்சீர்
பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்றறியேன்.

புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகிப்
பல்விருகம், ஆகி, பறவையாய்ப் பாம்பாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்,
வல்அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்,
செல்லா அநின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்!
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்!
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்
‘ஐயா’ எனவோங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே!

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம்விமலா!
பொய்ஆயின எல்லாம் போய் அகல வந்தரளி,
மெஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே!

ஆக்கம், அளவு, இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்,
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம்கழிய நின்ற மறையோனே!

கறந்தபால், கன்னலொடு, நெய்கலந்தாற் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று,
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்7
நிறங்கள்ஓர்ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய் யெம்பெருமான்
வல்வினையேன் தன்னை!

மறைந்திட மூடிய மாய இருளை
அறம், பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி,
புறம்தோல் போர்த்து, எங்கும் புழுஅழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகி, கசிந்துஉள் உருகும்
நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே! தேன்ஆர்! அமுதே! சிவபுரனேஷ
பாசம்ஆம் பற்றுஅறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம்கெடப்

பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே அளவுஇலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர்உயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே!

அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையுமாம்
சோதியனே! துன்இருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே!, அந்தம், நடுஆகி, அல்லானே!
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார்
தம் கருத்தின்

நோக்கிய நோக்கே! நுணக்குஅரிய நுண்உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும் இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பரிய பேர் ஒளியே!
ஆற்றுஇன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர்ஒளி ஆய், சொல்லாத நுண்உணர்வுஆய்.

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள்!
ஊற்றுஆன உண்ஆர் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன், ‘என்ஐயா’ அரனே ‘ஓ?’ என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு, மெய்ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப்புறவி சாராமே,
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே!
நள் இருளில் நட்டம் பயின்றுஆடம் நாதனே!
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே!

அல்லல் பிறவி அறுப்பானே! ‘ஓ’ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்
பல்லோரும் ஏத்தப் பணிந்து

-
---------------------------------------------
திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசக சுவாமிகள் திருவடிகளே சரணம்.
-
---------------------
நன்றி-மாலைமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக